சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




திங்கள், 18 டிசம்பர், 2023

திருப்பூர் சுற்றுச்சூழல் பற்றிய ” சாயத்திரை” நாவல் 25வது ஆண்டு நிகழ்வு திருப்பூர் சுற்றுச்சூழல் பற்றிய சுப்ரபாரதிமணியனின் ” சாயத்திரை “ நாவல் வெளிவந்து 25 ஆண்டுகள் ஆவதை ஒட்டி நடைபெற்ற நிகழ்வில் ” சாயத்திரை” நாவலின் ஆங்கிலம், மலையாளம், கன்னடம், வங்காளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வந்திருக்கிற பிரதிகள் அறிமுகப்படுத்தப்பட்டன 56வது தேசிய நூலக வார விழாவில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் தலைமை நூலகர்கள் தர்மராஜ், கார்த்திகேயன் திருப்பூர் மாவட்ட நூலக வாசகர்வட்டத் தலைவர் புருஷோத்தமன், வாசகர் வட்ட நிர்வாகிகள் தங்கவேலு, மோகன்ராம் உட்பட பலர் கலந்து கொண்டார்கள் தங்கவேல் அவர்கள் தலைமை வகித்தார். முனைவர் ரங்கசாமி அவர்கள் வாசிப்பின் அவசியம் பற்றி எடுத்துரைத்தார்.. நூலகர்கள் பொன்மணி, பாக்யலட்சுமி, நடராஜன் ஆகொயோர் விருது பெற்றவர்களைப் பாராட்டிப் பேசினார்கள்.தமிழக அரசின் சிறந்த நூலகர் விருது பெற்ற தர்மராஜ் மற்றும் கலைச்செல்வன் ஆகியோருக்கு பாராட்டு நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம் சார்ந்த நூலகர்கள், எழுத்தாளர்கள் பெருமளவில் கலந்து கொண்டார்கள். கலைஞர் நூற்றாண்டை ஒட்டி எல்லா நூலகங்களிலும் வாசிப்பு இயக்கம் நடத்துவது மற்றும் மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்கு சுற்றுலா செல்வது போன்ற அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. புத்தகம் பேசுது இதழின் நவம்பர் மாத இதழ் அறிமுகம் திருப்பூரில் 56வது தேசிய நூலக வார விழாவில் இடம் பெற்றது புத்தகம் பேசுது இதழ் சென்னையில் இருந்து கடந்த 30 ஆண்டுகளாக வெளிவந்து கொண்டிருக்கும் இதழாகும் புத்தக அறிமுகங்கள், விமர்சனம் கட்டுரைகள் என்று புத்தங்களுக்காக பிரத்தியேகமாக வடிவைக்கப்பட்டு வெளிவரும் இதழாகும் இந்த மாத இதழில் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியனின் நீண்ட பேட்டியும் இடம் பெற்று இருக்கிறது. இந்த இதழின் அறிமுகம் திருப்பூர் மத்திய நூலகத்தில் நடைபெற்றது. 56வது தேசிய நூலக வார விழாவில் இடம் பெற்ற இந்த நிகழ்வில் தலைமை நூலகர்கள் தர்மராஜ், கார்த்திகேயன் திருப்பூர் மாவட்ட நூலக வாசகர்வட்ட்த் தலைவர் புருஷோத்தமன், வாசகர் வட்ட நிர்வாகிகள் தங்கவேலு, மோகன்ராம் உட்பட பலர் கலந்து கொண்டார்கள் தங்கவேல் அவர்கள் தலைமை வகித்தார். முனைவர் ரங்கசாமி அவர்கள் வாசிப்பின் அவசியம் பற்றி எடுத்துரைத்தார். தமிழக அரசின் சிறந்த நூலகர் விருது பெற்ற தர்மராஜ் மற்றும் கலைச்செல்வன் ஆகியோருக்கு பாராட்டு நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம் சார்ந்த நூலகர்கள், எழுத்தாளர்கள் பெருமளவில் கலந்து கொண்டார்கள். கலைஞர் நூற்றாண்டை ஒட்டி எல்லா நூலகங்களிலும் வாசிப்பு இயக்கம் நடத்துவது மற்றும் மதுரை கலைஞர் நூற்றாண்டு நூலகத்திற்கு சுற்றுலா செல்வது போன்ற அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.