சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




வெள்ளி, 17 மார்ச், 2023

சிறுகதை ஆறுதல் ... சுப்ரபாதி மணியன் கண்களிலிருந்து நீர் வழிந்தது ஜெயலட்சுமிக்கு . தலையில் ஊற்றிய நீர் கன்னத்தில் வழிந்து கொண்டிருந்தது .கண்ணீரும் குளியல் நீரும் கலந்து உடம்பு முழுக்க ப் பரவியது. குளியல் அறைக்கு வந்து விட்டால் ஜெயலட்சுமிக்கு எல்லா கவலைகளும் வந்துவிடும். அழுது த்தீர்ர்ப்பாள். கண்களிலிருந்து நீர் வழிய வழிய மனதின் கவலைகளை இறக்கி வைப்பாள் . இந்தச் சுற்றுலாப் பயணத்தில் கூட அவளுக்கு விருப்பமில்லை .மூட்டு வலி தொடர்ந்து இருந்து கொண்டே இருந்தது ..சரியாக நடக்க முடியவில்லை .அதுவும் இப்படியான இடத்தில் வந்து செங்குத்தான இடத்தில் ஏறுவது என்பது மிகவும் சிரமமாக இருந்தது .. ஆகவே உணவு விடுதிக்குச் செல்லாமல் மகளே உணவைக்கொண்டு வந்தாள் .. அவளும் சிரமப்பட்டு உணவை எடுத்து வரவேண்டியிருந்தது. வெளியில் போகும் போது பேருந்து வண்டி இங்கு வந்து ஜெயலட்சுமியை ஏற்றிக் கொண்டு போனது. கால்களில் அவ்வப்போது தென்படும் சிறு அடர்ந்த மயிர் போன்ற பகுதிகள் அவருக்கு பயமூட்டும். .நரம்புகள் சுருண்டு கொள்கின்றன என்று சொல்லிக் கொள்வார் .. நெடுநேரம் நிற்பவர்களுக்கு அப்படி நரம்புகள் சுற்றிக் கொள்ளும் ஆனால் ஜெயலட்சுமிக்கும் அப்படி நரம்புகள் சுற்றி சிரமப்படுத்தும்.இந்த மூட்டு வலிக்கு காரணம் அந்த நரம்புகள் தான். ஏதோ ஒரு வகையில் அந்த நரம்புகள் மூட்டுகளைப் பாதிக்கின்றன. மூட்டுவலி இருந்துகொண்டே இருக்கின்றது. எண்ணை ய் தடவுவது ,ஒத்தடம் கொடுப்பது என்று பல விதங்களில் அதற்கு நிவாரணம் தந்து இருக்கிறார் ,. இரவுகளில் வலி நீக்கி மாத்திரைகளை சாப்பிட்டால் அடுத்து வரும் ஓரிரு நாட்களுக்கு கொஞ்சம் ஆறுதலாக இருக்கும், ஆனால் தொடர்ந்து மாத்திரைகளை சாப்பிடுவது நல்லதல்ல என்று வலியைத் தாங்கிக்கொள்ள ஆரம்பித்திருந்தார் , அவரின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து கண்ணீரையும் குளிர் நீரையும் சேர்ந்து கீழே இறக்கிக் கொண்டிருந்தார். உடம்பை மறைத்து , உடம்பைக் கல்லாக்க முயன்று வாசுகி இன்னும் எத்தனை காலத்திற்கு இப்படியேத் தனியாக இருப்பாள் அவளின் கணவன் ஒரு விபத்தில் மரணமடைந்துவிட்டார் .காலம்பூராவும் அவள் இப்படி இருக்க முடியுமா . .மகள் வாசுகி எப்படித்தான் காலம் தள்ளப் போகிறாள் என்பது அவளுடைய கவலையாக எப்போதும் இருந்திருக்கிறது.. இன்னொருபுறம் வர்ஷினிஅவளுக்கு நிறைய சங்கடங்களை கொடுத்துக் கொண்டே இருந்தாள். இப்படி ஏதாவது சுற்றுலா பயணம் போய்க் கொண்டே இருக்க வேண்டும் ..அவள் ஆன்லைன் வகுப்புகளில் கூட அக்கறை எடுத்துக் கொள்வதில்லை. ஏதோ கைபேசியை பார்த்து பாடத்தை கவனிப்பதாக தோன்றினாலும் படிக்கையில் தரையிலும் சோபாவில் உட்கார்ந்து புரண்டு கொண்டும் அவள் கவனம் சிதறி இருப்பதை ஜெயலட்சுமி கண்டிருக்கிறார் .. குளியல் அறையில் இருந்த டப்பில் தண்ணீரை நிரப்பி சுடு நீரையும் சரியாக நிரப்பி குளிக்க வாசுகி அவளுக்கு உதவுவாள் .வர்ஷினி அதில் கால் மணி நேரத்திற்கு மேலாக படுத்து இருந்து கொண்டு மெல்ல குளிப்பாள். செல்லமே செல்லமே என்று ஏதாவது பாட்டை பாடி கொண்டிருப்பாள்..அவள் டயப்பர் ரோடும் இருந்தக் காலத்தில் கூட அந்த பாட்டை தான் பாடிக் கொண்டிருந்தாள். சமீபமாய் விளையாட்டாய் ஆரம்பித்த அவளின் .டிக் டாக் வீடியோக்கள் ஜெயலட்சுமியைச் சங்கடப் படுத்தவே செய்தன யாராவது ஒரு ஆணுடன் சேர்ந்து இன்னொரு பகுதியாக வீடியோவை ஆடுவது .அதை பதிவிடுவது என்று வர்ஷினி செய்துகொண்டிருந்தாள் .. இதெல்லாம் நல்லா இருக்கா என்று வர்ஷினியிடம் ஜெயலட்சுமி புலம்பித் தீர்ப்பார் .’பாட்டி பொழுது போகனும் இல்ல ” என்று அதற்கு பதில் சொல்வாள் .அதைப் பகிரிந்து கொள்ளும் ஆண்கள் யார் என்று தெரியவில்லை .ஆனால் இணைப்பில் அவர்கள் வந்துவிடுகிறார்கள் . அவளுக்கு தேவையான விஷயங்கள் அதில் வந்துவிடுகின்றன. .பாடவும் ஆடவும் யாராவது கிடைத்து விடுகிறார்கள். அவளுக்கு பியர்லெஸ் கேர்ல் என்றப்பட்டமும் வந்துவிட்டது .விறுவிறுவென்று ஏணியில் ஏறுவாள் .குழந்தையாக நினைத்துக்கொண்டே ஏதாவது பெரிய பொம்மையை எடுத்துக் கொண்டு தூக்கி எறிவாள். அதை மீண்டும் பிடிப்பதற்காக எக்கிக்குதிப்பாள் .” பாட்டி உனக்கு வயதாகிவிட்டது. நீ சுமுகமாக இருக்க வேண்டும் .நீ இன்னும் எங்களையெல்லாம் இதற்கெல்லாம் அனுமதிக்க வேண்டும் “என்று கூட ஒருதரம் பாட்டியிடம் சொன்னாள் . மெத்தையில் இருந்தால் கால்களை எம்பி எம்பி குதிப்பதும் சிரமம் தரும். அதை அதில் ஒரு செய்வதும் வரிஷினிக்கு சாதாரணமாக இருக்கும் . அப்போதெல்லாம் அதே மெத்தையில் ஜெயலட்சுமி இருந்தால் அவருக்குப் பயம் வந்துவிடும் . இப்படி குதிக்கிற பெண் தன்னை அலற வைத்து விடுவாள் என்று நம்பினார். ..அதுவே பயத்துக்கு காரணமாக இருந்தது ..அவரின் சித்தப்பா மகள் ஒருவர் அமெரிக்காவிலிருந்து ஸ்கைப்பில் கூப்பிட்டு பேசிக்கொண்டு இருப்பாள் . அப்போது வர்ஷினி அவர்களிடம் தனது டிக்டாக் பற்றியும் அதற்கு வருகிற ஆண்கள் பற்றியும் நிறையச் சொல்வாள் . அதெல்லாம் ஜெயலட்சுமிக்கு மிகுந்த மனவருத்தத்தை தந்திருக்கிறது. முகநூலில் வேறு மேய்ந்து கொண்டிருப்பாள் ..இதெல்லாம் தேவைதானா என்றால் ஒரு நாளை எப்படிக் கழிப்பது என்று சொல்லிக் கொண்டிருப்பாள் .எப்படித்தான் வாசுகியைக்கரை ஏற்றுவது , வர்ஷினி எப்படி டிக்டாக்கிலிருந்து மீண்டு வருவாள் இதெல்லாம் ஜெயலட்சுமிக்கு கவலையாகவே இருந்தது . அவளின் உயர்நிலைப்படிப்பு பிறரிடமிருந்து அந்நியமாக்கியிருந்தது.. தலையில் தண்ணீரை ஊற்றி ஊற்றி அவளின் கண்ணீரை க்குறைத்துக் கொள் வார். . இப்போதும் அதைத்தான் செய்து கொண்டிருந்தார் . “ரூம்ஓட்டை வழியா யாரோ பார்க்கிறார்கள் அந்த ஓட்டைகளை அடைக்க மாட்டீங்களா ..ரூம்ல ஓட்டை இருக்கு “என்று யாரோ சத்தம் போடுவது தெரிந்தது. தலையை துவட்டிக்கொண்டு வெளியே வந்தார் சுற்றுலாப் பயணம் தன்னுடன் வந்த. பக்கத்து அறையில் இருந்த ராம் அதிர்ச்சியுடன் அவரது மகனைப் பார்த்துக் கொண்டிருந்தார் “ இந்த ரூமில் இருந்து அந்த ரூமுக்கு வேடிக்கை பார்க்க ஏதோ இடம் இருக்கு . ஓட்டை இருக்கு .அத அடக்கச் சொல்லுங்க “ என்றான். ராம் பதட்டத்துடன் கதிரின் கைகளைப் பிடித்துக்கொண்டார் ” .” அதெல்லாம் ஒன்னும் இல்லடா .சும்மா இருடா .சும்மா இருடா ” ஜெயலட்சுமி கதவின் அருகில் சென்று நின்று கொண்டார் “ தம்பி சும்மா இரு அதெல்லாம் ஒன்னும் இல்ல ” “ இல்ல ரூம்ல வேடிக்கை பார்க்கிற மாதிரி ஏ தோ ஓட்டை இருக்கு ஜன்னலில் இருக்கா , செவுத்துல இருக்கான்னு தெரியல “ ” ரொம்பவும் பயப்படாத தம்பி ஆமாம்மா ” “இவ ன் எப்ப பார்த்தாலும் எதைப் பார்த்தாலும் பயத்தை க் காட்டிட்டே இருக்கான்.” “ கயிறு கட்டுவது கோயிலுக்கு போற து..இதெல்லாம் பண்றீங்களா ” “பண்ணி தான் இருக்கம்.” எதிரில் தென்பட்ட மர சட்டங்களால் உருவாக்கப்பட்ட கண்ட்ரி காட்டேஜை ஜெயலட்சுமி பார்த்தார். அவரின் அப்பாவிற்கு இது போன்ற மர பொருட்களால் செய்யப்பட்ட வீடுகள் ,காட்டேஜ்கள் மிகவும் பிடிக்கும். கேரளா போன்ற பகுதிகளுக்கு ஜெயலட்சுமியை கூட்டிக்கொண்டு போகிறபோது அது போன்ற வீடுகளை த் தேடிப்பிடித்து தங்கலாம் என்பார் ...சில சமயங்களில் அதற்கு வாய்த்திருக்கிறது. இந்தக் காட்டேஜை யாராவது பயன்படுத்துகிறார்களா அல்லது சும்மா கிடக்கிறதா . .மெல்ல நடந்து சென்று பார்க்க வேண்டும் என்ற ஆசை ஜெயலட்சுமிக்கு வந்தது . தெற்கு பக்கம் பார்த்த போது அங்கிருந்த ஒரு திருஷ்டி பொம்மை அவளை திரும்ப திரும்ப பார்த்து செய்தது. ” இது எ துக்கு மாட்ட இருக்காங்க இதெல்லாம் பார்க்க பயமா இருக்குது ” “ பயப்படக்கூடாது .அதுக்குத்தான் மாட்டி இருக்காங்க. பயப்படாதே ” “இல்ல எதுக்கு இங்க மாட்டியிருக்காங்க ஜன்னலுக்கு வெளியே கசகசன்னு இந்த சாயங்கால நேரத்துல சத்தம் வருதே “ “ அப்படி எல்லாம் ஒன்னும் வராது .அப்படி எல்லாம் வந்தா இந்த பொம்மை விரட்டிவிடும் அதுக்கு தான் இருக்கு ” இரண்டாயிரம் மீட்டர் கடல் மட்ட உயரத்தில் இருந்த அந்த மலைப்பகுதியில குளிர்ந்த காற்றை அந்தப் பக்கம் கொண்டு சென்றது .ராம் தனது உடம்பை குறுக்கிக் கொண்டார்.. குளிரால் மட்டுமல்ல. கதிர் செய்யும் செயலாலும் அவனின் பயப்படுகிற தன்மையும் அவரை உடம்பை க் குலைக்கச் செய்தது ஜெயலட்சுமி கதிரைப் பார்த்து ” தம்பி பயப்படாத எல்லாம் சரியாயிடும் .இங்க பக்கத்திலெ இருக்கற கோயிலுக்குப் போகலாம் அந்த சாமி எல்லாத்தையும் பாத்துக்கும் “ என்றார் “எப்ப போறது சாயங்காலம் ஆச்சு இல்ல “ “ நாளைக்கு போலாம் வெளிய கூட்டிட்டு போகும்போது அதுக்கு சேத்துக் கூட்டிட்டு போவாங்க ” “அப்படியா அப்ப இந்த திருஷ்டி பொம்மை வேடிக்கை பார்க்கிறது ..இதுக்கு எல்லாம் வந்து பரிகாரம் கிடைச்சிடுமா ” “ஆமா கிடைச்சுடும். பரிகாரம் கிடைக்கிற வரைக்கும் வேற எதுவும் செய்யத் தேவையில்லெ “ “மாத்துங்க அப்பா .ரூம்மெ.. உடனே மாத்த முடியுமா ” “ தம்பி அந்த மேனேஜரைக் கூப்பிட்டு வேற ரூம் வேணும் ன்னு சொல்லுங்க “ ஜெயலட்சுமி வடக்கு பக்கம் பார்த்தபோது அங்கிருந்த மூன்று மாடிக் கட்டடத்தில் ஓடிக்கொண்டிருந்த குழந்தைகள் பரபரவென்று மூன்றாவது மாடி படிக்கட்டுகளில் இருந்து இரண்டாவது மாடி க்கு இறங்கிக் கொண்டிருந்தார்கள் . வர்ஷினி எங்கே போயிருப்பாள் அவளுக்குப் புது நட்பு என்று ஏதாவது கிடைத்துவிட்டதா. .ரொம்ப நேரம் அவள் கண்ணில் படவில்லை என்பது ஞாபகம் வந்தது ஜெயலட்சுமிக்கு அந்த நினைப்பு விசூவரூபித்து உடம்பை நடுங்கச் செய்தது ஜெயலட்சுமிக்கு . அவளுக்கே நிறைய பிரச்சினைகள். ஆனால் அவள் ராமிற்கு ஆறுதல் சொன்னதை நினைத்துப் பார்க்கிறபோது வியப்பு மேலிட்டது. ஒவ்வொருவருக்கொருவர் ஆறுதல் சொல்லிக் கொள்வதுதான் வாழ்க்கை என்று சொல்லிக் கொண்டாள். 0 SUBRABHARATHIMANIAN 8/2635 Pandian Nagar, Tiruppur 641602 , subrabharathi@gmail.com.. 0948610100