சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




வெள்ளி, 17 மார்ச், 2023

சுற்றுச்சூழல் : கோடரி வெட்டுகள் : சுப்ரபாரதி மணியன் ” கோடரி வெட்டு விழப் போகிறது.. ஏற்கனவே தாமதமாகிவிட்டது “ சுற்றுச்சூழல் பற்றி நினைக்கிற போதெல்லாம் மலையாள கவிஞர் சூழியல் களப்போராளி சுகுதகுமாரி அ வர்கள் கவிதைகளிலும் மக்கள் போராட்டங்களிலும் முழங்கிய வார்த்தைகள் ஞாபகம் வரும். அதுவும் அமைதி பள்ளத்தாக்கு பகுதிக்கு போகிற போதெல்லாம் தவிர்க்க முடியாமல் அது ஞாபகம் வரும் கோடாரி வெட்டு விழுந்து காயங்கள் அழுத்தமாகத்தான் இருக்கிறது உலகம் வெப்பமயமாய் மாறிக் கொண்டிருக்கும் இந்த சூழலில் . கொரோனா காலத்திற்குப் பிறகு சமீபத்தில் அமைதி பள்ளத்தாக்கிற்கு சென்ற போது உலகம் சூடாகிக் கொண்டிருக்கிற இயல்பிலேயே அந்தப் பகுதியும் வந்து விட்டது தெரிந்தது . அந்த பள்ளத்தாக்கு கேரளாவின் அட்டப்பாடி பகுதியில் 300 ஏக்கர் பரப்பில் அமைந்திருக்கிறது. . அமைதி பள்ளத்தாக்கு நுழைவு கட்டணம் 750 ரூபாய் ஆயிருப்பதை கவனித்த என் மனைவி இந்த கட்டணம் விகிதம் தலையை சூடேற்றுகிறது என்றார்.. முன்பெல்லாம் 350 ரூபாய், 500 ரூபாய் என்ற வகையில் இருந்து இப்போது 750 ரூபாய்க்கு அந்த கட்டணம் வந்துவிட்டது. தலை சூடாகிக் கொண்டிருப்பதை அவர் சொன்ன போது பக்கத்தில் இருந்த அந்தப் பகுதியைச் சார்ந்த ஒருவர் அந்த அமைதிப்பள்ளத்தாக்கு பகுதியிலும் சூட்டின் தன்மை, வெப்பநிலை அதிகமாக ஆகி கொண்டு இருப்பதாக சொன்னார். .உலகம் முழுக்க குளோபல் வார்மிங் எனப்படும் சூட்டின் தன்மை அதிகமாகிக் கொண்டிருப்பதற்கு அமைதி பள்ளத்தாக்கும் இலக்காகி இருக்கிறது. அதன் காரணமாக ஒரு சதுர கிலோ மீட்டரில் 2000-க்கும் மேற்பட்ட நுண்ணுயிர்கள் வாழக்கூடிய அந்தப் பகுதியில் அவற்றில் சில மறைந்து வருவதையும் அறிய முடிந்தது. பல நுண்ணிய தாவரங்கள் காணாமல் போயிருக்கின்றன என்றார்கள். அபூர்வமான பல மரங்கள் வறட்டு தன்மைக்கு வந்துவிட்டன. 1970 இல் சுமார் 300 ஏக்கர் பரப்பளவு உள்ள அமைதி பள்ளத்தாக்கு பகுதியில் நீர் மின் சக்திக்காக கட்டப்படவிருந்த அணை கவிஞர் சுகுதகுமாரி தலைமையிலான போராட்டத்தால் தடுத்து நிறுத்தப்பட்டது. அப்போது அந்த அணை கட்டப்பட்டு இருந்தால் இந்த 50 ஆண்டுகளில் அந்த காட்டுப்பகுதி பெரும்பாலும் நீரில் மூழ்கி இருக்கும். அதன் வெப்பநிலையும் தாறுமாறாக போயிருக்கும் .அதிலிருந்து காப்பாற்றப்பட்டாலும் உலகம் முழுக்க சூடாகிக் கொண்டிருக்கிற தன்மையால் அமைதி பள்ளத்தாக்கும் தன் இயல்பை இழந்து வெப்பநிலையைக் கூட்டிக் கொண்டிருக்கிறது. உலக மக்கள் தொகை 800 கோடியை எட்டிவிட்ட தருணத்தில் இந்த பூமியானது மனிதனுக்கு எந்த அளவுக்கு உரிமை உள்ளதோ அந்த அளவுக்கு எறும்பு முதல் யானை வரை வரம் செடி புழு பூச்சிகளுக்கும் உரிமை உடையது.. பூமியில் இப்போது வெப்ப அலை காரணமாக நிகழும் அழிவுகள் பற்றி தொடர்ந்து பயமுறுத்திக் கொண்டே இருக்கிறார்கள். அன்னப்பறவை இல்லை. அனிச்சமலர் இல்லை சிட்டுக்குருவி இல்லாமல் போய்விடுமா என்ன பயம் வந்துவிட்டது. பூச்சிக்கொல்லி ரசாயன மருந்துகளின் உபயோகமும் அமைதி பள்ளத்தாக்கு சுற்றியுள்ள பகுதிகளில் காணப்படுகிறது. பசுமை குடி வாயு தான் பூமி வெப்பமடைய காரணமாக இருக்கிறது அதன் காரணமாக தாக்கத்தால் 34,000 தாவரங்களும் 52 ஆயிரம் விலங்கினங்களும் அழிவை நோக்கி போய்க் கொண்டிருக்கின்றன .பூச்சிகள் எண்ணிக்கையும் குறைகிறது. கடல் வாழ் உயிரினங்களும் செத்து மடிகின்றன .இந்த 52 ஆயிரம் உயிரினங்களில் 20 ஆயிரம் உயிரினங்கள் விரைவாக அழிந்து விடும் ஆபத்தில் உள்ளன. பசுமை பள்ளத்தாக்கு போன்ற காடுகளில் வசிக்கின்ற பழங்குடியினர் வனத்தின் பாதுகாவலர்களாக உள்ளார்கள் கேரளா வனத்துறை அக்காட்டுப்பகுதியில் செல்ல பயன்படுத்தும் வாகனங்களில் பொறிக்கப்பட்ட பெரிய கே. எப். என்ற எழுத்துக்கள் சற்றே பயம் கொள்ள வைக்கின்றன. கே. எப். – கேரளா பாரஸ்ட் டிபார்ட்மெண்ட். காரணம் கே.எப் என்ற ஆங்கில எழுத்துக்கள் பொறிக்கப்பட்ட எல்லை கோடுகளை நிர்ணயிக்கும் மாநில எல்லை கற்கள் சமீப மாதங்களில் கோவை மாவட்டங்களிலும் திருட்டுத்தனமாக அவ்வப்போது நகர்ந்து வருகிறது என்று சொல்கிறார்கள். தமிழ்நாடு கேரளா எல்லை கிராமங்களில் கணினி முறையிலும் சிரோன் மூலமும் அளவீடு செய்யும் திட்டத்தை கடந்த இரண்டு மாதங்களாய் கேரளா அரசு செய்து வருகிறது . ஏற்கனவே 1956 ஆம் ஆண்டு மாநில சீரமைப்பு நடத்தப்பட்டபோது தமிழகத்தின் பல பகுதிகளில் கேரளத்தோடு இணைக்கப்பட்டன முல்லைப் பெரியாறு, கண்ணகி கோயில்கள் போன்றவை கேரளா எல்லை கோட்டுக்குள் கொண்டுவரப்பட்டன. தமிழ்நாடு கேரளா எல்லைப் பகுதியில் 230 கிலோ மீட்டர் தொலைவு மட்டுமே கூட்டு அளவிடும் முறையில் பார்க்கப்பட்டுள்ளது. மீதி உள்ள சுமார் 700 கிலோ மீட்டர் எல்லை பகுதி இன்றுவரை அளவிடல் செய்யப்படவில்லை. இந்த கேரளா அரசின் போக்கினால் எல்லைக் கற்கள் நகர்ந்து வருவது எச்சரிக்கையாக கூட இருக்கிறது ஓவியர் தூரிகை சின்னராஜ் அவர்கள் அமைதி பள்ளத்தாக்கு பகுதியில் காணப்படும் பட்டாம்பூச்சி கூட்டங்களைக் குறிப்பிட்டு பட்டா பூச்சிகளின் இடம்பெயர்வும் அவை இந்த பகுதியில் அதிகமான காணப்படும் செப்டம்பர் மாதத்தில் இன்னும் ஒரு முறை வந்து பார்க்க வேண்டும் என்றார். பட்டாம்பூச்சிகளை பார்ப்பதற்காக இவ்வளவு தூரம் வர வேண்டி இருக்கிறது என்றார் . ஆனால் என் மனைவி எங்கள் வீட்டு மாடித் தோட்டத்தில் வந்து போகும் பட்டாம் பூச்சிகள், சிட்டுக்குருவிகள் போன்றவர்களை பற்றி சொல்ல ஆரம்பித்தார். . மாடி வீட்டு தோட்டங்கள் இருந்தாலே இவை சாதாரணமாக நகரமென்றாலும் எங்கிருந்தோ வந்து போகும் என்றார். . நாம் பட்டாம்பூச்சிகளை பார்க்க இவ்வளவு தூரம் வர வேண்டி இருக்காது .ஆனால் அவற்றை கூட்ட கூட்டமாக பார்ப்பதற்கு இங்கு வரவேண்டியிருக்கும். அதுவும் பல நாட்டு பட்டாம்பூச்சிகள் இடம் பெயர்ந்து வரும் அபூர்வமான சூழலாக அது இருக்கும். உலக வெப்பம் மயமாதல் சூழலில் சுலபமாக தற்கொலைக்கு போய்விடும் பட்டாம்பூச்சிகளின் சில வகைகளை பற்றி உள்ளூர் ஆதிவாசி ஒருவர் குறிப்பிட்டார்.. உலகம் வெப்பமாகி கொண்டிருக்கும் சூழலை காட்டும் விதமாய் அமைதி பள்ளத்தாக்கில் பல மாற்றங்களை காண முடிந்தது ஆதிவாசி குடியிருப்பு பகுதியில் காணப்பட்ட ஆதிவாசிகள் வறண்டு போன மரத்தின் பாகங்களை கொண்டு போகிற காட்சிகள் உறுத்திக் கொண்டே இருந்தன. . அட்டப்பாடி ஆதிவாசிப்பாடகர் நஞ்சம்மாவின் “ காடு எரியுதே . மனம் பதறுதே “ என்ற பாடல் வரிகள் இவற்றிலிருந்து மீள்வது குறித்த காப் 27 சுற்றுச்சூழல் மாநாடு கூட தீர்க்கமான முடிவுகளை இந்த முறை எட்ட இயலாமல் போய்விட்டதைக்குறித்து ஞாபகப்படுத்தியது