சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




செவ்வாய், 12 ஏப்ரல், 2022

வடகிழக்கு இந்திய பயணம் 7 சுப்ரபாரதிமணியன் மேகாலயா என்பது மேகங்களின் கூடாரம் என்று சமஸ்கிருதத்தில் அர்த்தம்.பேபே நீர்வீழ்ச்சி, கிராங்க் சூரி நீர்வீழ்ச்சி ஆகியவை அடர்ந்த மலைகளின் மத்தியில் அமைந்துள்ளவை . எங்கும் குளிக்க இயலாது குற்றாலம் அல்லது கோவைக்குற்றாலம், திருமூர்த்தி மலை போன்ற நீர்வீழ்ச்சிகள் தரும் குளியல் இன்பத்தை இவைதரவில்லை. பார்வையில் பிரமாண்டமும் வியப்பும் பயமும் தரக்கூடியவை பயம் தந்த இன்னொரு விசயம் குளிர்.இவை கடந்து ஷில்லாங்கின் பகுதிகளைக் குளிரூடே அடைந்த இரவு நேரத்தில் சரியானகுளிர் பாதுகாப்பு உடை இல்லாததால் உடம்பு நடுங்க ஆரம்பித்துச் சிரமம் தந்தது எனக்கு . 9டிகிரி சி யில் உடம்பு நடுங்க ஆரம்பித்தது.குளிர் மட்டுமா நம்மைப் பிரிக்கிறது , எல்லைப் பிரச்சினை எப்போதும் இங்கு மனிதர்களைப் பிரித்து வைத்திருக்கிறது என்றார் வாகன ஓட்டுனர். மேகாலயா எல்லைப்பிரச்சினை சக மனிதர்களையும் இடம் பெயர்ந்தவர்களையும் கூறு போட்டுத் தனியே பிரித்து வைத்திருப்பதையும் நான் மொழிபெயர்த்த சாகித்ய அகாதமி வெளியிட்ட “ பூமியின் பாடல்கள்” நூலில் மூன்று கதைகள் வெளிப்படுத்துகின்றன அசாம் மாநிலத்திலிருந்த நாகாலாந்து 1963லும், மேகாலயா 1972லும், அருணாச்சலப் பிரதேசம் 1975லும், மிசோரம் 1987லும் புதிய மாநிலங்களாக அமைக்கப்பட்டது.[2] மணிப்பூர் மற்றும் மேகாலயாப் பகுதிகள் மாநில அங்கீகாரம் பெறும் வரை, 1956 முதல் 1972 முடிய இந்திய ஒன்றியப் பகுதிகளாக செயல்பட்டது. இவர்களுக்கான எல்லைப் பிரச்சினை தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கிறது. அஸ்ஸாம், மேகாலயா முதல் அமைச்சர்களைக்கொண்டு மத்திய அமைச்சர் அமித்ஷா நடத்திய மாநில எல்லைகள் சார்ந்த பிரச்சினைகள் பற்றியச் செய்திகளை அங்கிருக்கும் போது பத்திரிக்கைகளில் படித்தேன். காங்கிரஸ் கட்சியினரும் மேகலாயா அரசாங்கம் எல்லைப்பிரச்சினைகளைப் பற்றி தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியாது . அதைக்கண்டிப்போம் என்று தீர்மானம் நிறைவேற்றி ஆர்ப்பாட்ட்த்தில் ஈடுபட்டிருந்த்தைக் காண முடிந்தது. கொரானா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்பு இந்த மாநிலங்களில் இடம் பெயரும் தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகமாகியிருப்பதையும் அவர்களின் அடையாளங்கள்- அடையாள அட்டைகள், உரிமங்கள் சார்ந்து- எதுவுமில்லாமல் இருப்பதையும் கண்டித்தும் குரல்கள் எழுப்பியதைப்பார்க்க முடிந்தது. உக்ரேனிலிருந்து போர் சூழலில் தப்பித்து வந்த இரண்டு மாணவர்கள் கவுகாத்தி வருவதற்குப் பணமின்றி சிரமப்பட்டுக்க்கொண்டிருப்பதாக சில செய்திகள் செய்தித் தாள்களில் வெளியாகியிருந்தன.நாங்கள் அங்கிருந்த மார்ச் மாத்த்ஹ்டின் இரண்டாம் வாரம் வரி சுமார் 110 பேர் உக்ரேனிலிருந்ஹ்டு தப்பித்து வந்து ஊர் சேர்ந்திருந்தார்கள் . கடைசியாக வந்தவர்கள் டெல்லி, காசியாபாத்தில் அடக்கலமாகியிருப்பதையும் அஸ்ஸாம் வர அரசின் உதவியை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருப்பதையும் செய்திகள் சொல்லின. உக்ரேனில் சாப்பாட்டு வசதியில்லாமல் குண்டு போடும் சத்தங்கள் கேட்டபடி இருந்தவர்கள் தங்கள் நிலைகளை வீடியோ மூலம் சமூக ஊடகங்களுக்குத் தர அவர்கள் வெளியேற சமூக ஊடகங்கள் உதவியதை அவர்கள் குறிப்பிட்டிருந்தார்கள் டெல்லி, காசியாபாத் கூட அவர்களுக்கு நெடுந்தொலைவு ஆகி விட்டது பொதுவாகவே, வடகிழக்குப் பிராந்தியம் மலைப் பாங்கானதால் சாலைப் பயணம் சிரமமானது. தூரம் குறைவாய் இருந்தாலும் மலைப் (மழைப்?) பாதையில் நேரம் அதிகம் எடுக்கும். தவிர, மேற்கு வங்கத்தில், உதாரணமாக, கொல்கத்தாவிலிருந்து சாலை மார்க்கமாகச் செல்ல வேண்டுமென்றால், இடையில் பெருமளவுக்கு வங்க தேசம் வந்து விடுகிறது. எனவே நீங்கள் மிகவும் சுற்றித்தான் குவாஹாத்தியை அடைய முடியும்.இவற்றை விட மிக எளிதானது, சிக்கனமானது விமானப் பயணம் என்று முன்பே முருகன் வேம்பு தெரிவித்திருந்தார். நியூஜல்பைகுரி…அப்புறம்…கவுஹாத்தி..திமாபூர்..நியூடின்சுகியா.அத்தோடு இந்தியா பார்டர்.ஒரே இரயில் செல்லும் பாதை (கிழக்கு-மேற்காக) தவிர மற்ற அனைத்தும்(வடக்கு, தெற்கு)மலைப்பிரதேசங்கள் வளைந்து வளைந்து சாலை செல்லும்.ஒரு மலையில் ஏறி இறங்கி அடுத்த மலையில்…ஏற வேண்டும். பொழுதுபோக விரும்புபவர்களுக்கு மகிழ்ச்சி. மற்றவர்களுக்கு….. சாலை போடுவது, பராமரிப்பது கடினம். இரண்டு சமயங்களிலும் அதிக நேரம் காத்திருந்து செல்லவேண்டும். ஆனால் இயற்கையின் அழகை ரசிக்க இதை விட அருமையானச் சந்தர்ப்பம் கிடைக்காதல்லவா. மேகாலயா : 30 லட்சத்திற்கும் கீழ் தான் இங்கு மக்கள் தொகை. பேசப்படுகிற மொழி காசி மற்றும் காரோ. இங்கு ஒரு 1% மக்கள்தான் ஹிந்தி பேசுகிறார்கள். சிறப்புஞ்சி இந்த மாநிலத்தின் சிறப்பம்சம். இம்மாநிலத்தின் ஒரு சிறப்பு மனிதரைப் பற்றி கண்டிப்பாக கூற வேண்டும் அவர் பெயர் ராம் சிங் இவர் ஒரு ஐஏஎஸ் அதிகாரி. இவர் தினமும் 10 கிலோ மீட்டர் நடந்து சென்று உள்ளூர் விவசாயிகளின் பொருட்களை வாங்கிக்கொள்வார் தன் தேவைக்கேற்ப. கூடவே நாட்டிற்கு தேவையான விழிப்புணர்வு பிரசாரத்தையும் மேற்கொள்கிறார். சிறிய மாநிலங்களின் சாபக்கேடு என்னவென்றால் மத்திய அரசின் கவனத்தை அவர்களால் ஈர்க்க முடியாது. காரணம் அவர்களின் ஓட்டு வங்கி மிக மிக குறைவு. பெரிதான அடிப்படை வசதிகள் இல்லாத காரணத்தால் அங்கு விளையாட்டு வீரர்களும், கலைத்துறை சார்ந்தவர்களும் அங்கு வளர்வது அரிது. வடகிழக்கு மாநிலங்களில் பெரிய பலவீனம் அவர்களுக்கு துறைமுகங்கள் கிடையாது. அதனாலேயே பெரிய தொழிற்சாலைகள் ஏற்றுமதிக்கு ஏதுவாக இருப்பது இல்லை. அதனால் விவசாயத்தை மட்டும் நம்பி அங்கு மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சிறப்பான சீதோசன நிலை எப்போதும் அங்கு காணப்படுகிறது. அதனால் சுற்றுலாத்துறை அங்கு சிறப்பாக செயல்படுகிறது. மெத்த படித்தவர்கள் அம்மாநிலத்தை விட்டு வெளியேறி மற்ற மாநிலங்களில் குடியேறும் அவலநிலை தொடர்ந்து கொண்டே தான் இருக்கும், இது போல் உள்ள சிறிய மாநிலங்களில். லாட்டரி சீட்டு நாடு முழுதும் தடை செய்யப்பட்டாலும் 13 மாநிலத்தில் இன்றும் லாட்டரி தொழில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அந்த 13 மாநிலங்களில் மேகாலயாவும் ஒன்று. செந்தில்நாதன் அவர்கள் தெரிவித்த தகவலையொட்டி லாட்டரி சீட்டு வாங்கி விடுவது , அதிஷ்ட்த்தைப் பரிசோதித்து விடுவது என்று முடிவு செய்திருந்தேன். ஆனால் லாட்டரி சீட்டுகள் கண்ணில் படவில்லை • எப்போதும் மேகங்கள் சூழ்ந்து காணப்படுவதால் மேகங்களின் ஆலயம் 'மேகாலயா" என அழைக்கப்படுகிறது. • மேகாலய மாநிலத்தில் காரோ மொழி மற்றும் காசி மொழி பேசப்படுகிறது. • மேகாலயா ஆரம்பத்தில் அஸ்ஸாம் மாநிலத்தின் ஒரு பகுதியாகவே இருந்தது. 21 ஜனவரி 1972 ல் தனிமாநிலமாக உருவாக்கப்பட்டது. மேகாலயா முழு மாநிலத் தகுதியை அடைவதற்கு முன், 1970 இல் அரை தன்னாட்சித் தகுதி வழங்கப்பட்டது. • 1947 இல் இந்தியா சுதந்திரம் அடைந்த நேரத்தில், இன்றைய மேகாலயா அசாமின் இரண்டு மாவட்டங்களாக அசாம் மாநிலத்தில் சட்டப்பூர்வமாக வரையறுக்கப்பட்ட சுயாட்சியை அனுபவித்து. • பண்பாட்டு அடிப்படையில், சனத்தொகையில் பெரும்பாலானவர்கள், "காசி"கள், "சைந்தியா"க்கள், "காரோ"க்கள் என்னும் இனத்தவர்களாவர். • மேகாலயாவின் தெற்கெல்லையில் வங்காள தேசமும், வடக்கு எல்லையில் பிரம்மபுத்திரா ஆறும் உள்ளது. • மலைகளாலும் காடுகளாலும் சூழ்ந்த இம்மாநிலத்தின் பொருளாதாரம் வேளான்மைத் தொழிலையே நம்பியுள்ளது. தகவல் தந்த அஜய் சாய்க்கு நன்றி 0 பிரம்மபுத்திரா ஆறு (Brahmaputra River) 2900 கிலோ மீட்டர்கள் பிரம்மபுத்ரா ஆறு சீனா, இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய 3 நாடுகள் வழியாக பாய்கிறது. திபெத்திலுள்ள கயிலாய மலையில் ‘ஸாங்-போ’ என்ற பெயரில் ஆரம்பித்து நாம்சா- படுவா மலையருகே, தெற்கு தென்மேற்காக வளைந்து அருணாசல பிரதேசத்தில் சியாங் என்ற பெயரில் நுழைந்து சமவெளிப் பகுதியில் 35 கிமீ தொலைவு கடந்தபின், திபங் மற்றும் லோகித் என்ற ஆறுகளோடு சேர்ந்து மிகவும் அகன்ற ஆறாக ஆகி, பிரம்மபுத்திரா என்று பெயர் மாற்றமடைந்து அசாம் மாநிலத்தில் நுழைகிறது. அசாமிலுள்ள துப்ரி நகர் அருகே சந்கோசு ஆறு இதனுடன் கூடுமிடத்தில் தெற்கு நோக்கி வங்காள தேசத்தில் பாய்கிறது. வங்காளதேசத்தில் இந்த ஆறு ஜமுனா என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. கடைசியில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது. இதன் மொத்த நீளம் 2900 கிலோ மீட்டர். பிரம்மபுத்திரா ஆற்றின் அழகை பல படகுப் பயணங்களில் கண்டேன் . எங்கு போனாலும் அக்ண்ணில் படும் அதன் அழகு மன்திற்கு இதம் தருவது. அது தரும் வெள்ளம், அழிவு சார்ந்த விசயங்கள் மீறி பிரம்மபுத்திரா ஆற்றின் அழகை கவிதைகளால், ஓவியங்களால் சரியாகச் சொல்லி விடமுடியும் வங்கதேசத்தின் எல்லை ஓரத்தில் இது தூய்மையானதாக ஓடி வியப்புகளை அள்ளி வழங்குகிறது வடகிழக்கு இந்தியப் பயணம் : 8 சுப்ரபாரதிமணியன் ஷில்லாங்கில் தேசிய அளவிலான செர்ரி மரங்கள் பூப்பூக்கும் திருவிழா நடக்கும் போது வந்தால் நன்றாக இருக்கும். இயற்கையை இன்னும் அனுபவிக்கலாம் என்று எங்கள் சுற்றுலா குழு மேலாளர் கிறிஸ்டோபர் குறிப்பிட்டார். சாலையின் இருப்பக்கத்திலும் இளஞ்சிவப்பு நிறத்தில் பூத்துக் குலுங்கும் செர்ரி பூக்களை பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கும். வசந்தக்காலம் தொடங்குவதற்கான அடையாளமாக அது இருக்குமாம்.. இந்தியா மற்றும் அயல்நாட்டைச் சேர்ந்தவர்கள் மேகாலாயாவின் அழகை காண வர வேண்டும். செர்ரி பூக்களை காண விரும்பும் சுற்றுலா பயணிகள் ஜப்பான், அமெரிக்கா போன்ற அயல்நாடுகளுக்கு செல்ல வேண்டாம். இந்தியாவிலே செர்ரி மரங்கள் பூப்பூக்கும் திருவிழா ஷில்லாங்கில் நடைபெறுகிறது. சமீபமாய் சில ஆண்டுகளாய் இந்தியாவில் செர்ரி மரங்கள் பூப்பூக்கும் திருவிழா நடைபெற்று வருகிறது ஈரப்பதம் கொண்ட பகுதிகளில் செர்ரி பூக்கள் அபரிமிதமாய் பூத்து அழகு தருமாம்..வழக்கமாய் செர்ரி மரங்களைத் தேடித்தான் பார்க்க வேண்டியிருந்தது. ஷில்லாங்கில் தேசிய அளவிலான செர்ரி மரங்கள் பூப்பூக்கும் திருவிழா நடைபெறும் சமயத்தில் மேகாலயாவின் விசேசமான உணவு வகைகள் கிடைக்கும் அவற்றில் அரிசி உணவு ஜடோ, நகாம் பிச்சு சூப், அசைவ சாலட் டோலி, அசைவ உணவு துங்கிரிம்பை ஆகியவை முக்கியமானவை மேகாலயாவின் காலநிலை மிதமானது, ஆனால் அதிக ஈரப்பதன் கொண்டது. ஆண்டுக்கான மழை வீழ்ச்சி இம் மாநிலத்தில் சில இடங்களில் 1200 சமீ வரை காணப்படுவதால், இந்தியாவின் அதிக ஈரமான மாநிலமாக இது உள்ளது. தலை நகர் ஷில்லாங்குக்குத் தெற்கேயுள்ள நகரமான சேராப்புஞ்சி, ஒரு மாதத்தில் உலகிலேயே மிக அதிகமான மழை பெற்றுச் சாதனை படைத்துள்ளது. இதன் அண்மையிலுள்ள மௌசின்ரம் என்னும் கிராமம் ஓராண்டில் உலகிலேயே அதிக மழை பெற்ற சிறப்பைப் பெற்றுள்ளது. மாநிலத்தின் 1/3 பகுதி காடாகும். மேற்கிலுள்ள காரோ குன்றுகளும், கிழக்கிலமைந்துள்ள காசி மலைகள், சைந்தியா குன்றுகள் போன்றனவும், உயரமானவை அல்ல. இங்கே ஷில்லாங் சிகரம், 1965 மீ உயரத்துடன் அதியுயர்ந்ததாக உள்ளது. தனித்துவமான சுண்ணாம்புக்கள் அமைப்புக்களோடு கூடிய பல குகைகள் இங்கே இருப்பதாக அறியப்பட்டுள்ளது. பண்பாட்டு அடிப்படையில், சனத்தொகையில் பெரும்பாலானவர்கள், "காசி"கள், "சைந்தியா"க்கள், "காரோ"க்கள் என்னும் இனத்தவர்களாவர். இம்மாநிலத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை (11.53 %) ஆகவும் இசுலாமிய சமய மக்கள் தொகை (4.40 %) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள் தொகை (74.59 %) ஆகவும் மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள் (0.32 %) ஆகவும் உள்ளது. இம்மாநிலத்தில் பட்டியல் பழங்குடி மக்கள் பெரும்பான்மையினராக உள்ளனர். அவர்களில் காசி பழங்குடிகள் 45% ஆகவும், கோச் பழங்குடிகள் 2.8% ஆகவும், ஜெயந்தியா பழங்குடி மக்கள் 2.5% ஆகவும், ஹஜோங் பழங்குடிகள் 1.8% ஆகவும், வங்காளிகள் 18% ஆகவும், நேபாளிகள் 8.26% ஆகவும், பிற இன மக்கள் 4.7% ஆக உள்ளனர். இம்மாநிலத்தில் ஆட்சி மொழியான ஆங்கில மொழியுடன் நேபாள மொழி, வங்காள மொழி, அசாமிய மொழி, போடோ மொழி மற்றும் முதன்மை பழங்குடி மக்களின் மொழியான காசி மொழி மற்றும் கரோ மொழி கள் அதிகம் பேசப்படுகிறது. அத்துடன் பிற வட்டார பழங்குடி மக்களின் மொழிகளும் பேசப்படுகிறது.வட்டார மொழிகளோடு வட்டார உணவுகளும் முக்கியம் \வடகிழக்கு மாநிலங்களின் கலாசாரம் மட்டுமல்லாமல் உணவு வகைகளும் உணவு முறைகளும்கூட இந்திய பெருநிலத்திலிருந்து வேறுபட்டவை. மேகாலயா மாநிலம் அளவில் சிறியது என்றாலும் தனக்கென தனித்த உணவு முறைகளைக் கொண்டது. மேகாலயா மக்கள் பெரும்பாலும் பழங்குடி இனத்தவர்களாகவே உள்ளனர். மலை மற்றும் காடுகள் சூழ்ந்துள்ள மேகாலயாவில் வேளாண்மையே பிரதான தொழிலாக உள்ளது. அரிசி, சணல், இஞ்சி, மஞ்சள், வெற்றிலை, மிளகு ஆகியவை இங்கு விளைவிக்கப்படுகின்றன. பழத்தோட்டங்கள் மற்றும் மூங்கில் மரங்கள் மேகாலயாவில் அதிகம் காணப்படுகின்றன. அரிசி, மீன் மற்றும் இறைச்சிகள் மேகாலயா மக்களின் முதன்மையான உணவுகள். இவர்களில் பெரும்பாலானவர்கள் அசைவ உணவுகளை சாப்பிடுகின்றனர். இவை இல்லாமல் சோளம், கிழங்கு மற்றும் சிறுதானியங்களையும் விரும்பி உண்கின்றனர். மேகாலயாவில் உள்ள வெவ்வேறு இன மக்களின் உணவு முறைகளின் அடிப்படையில், அவர்களின் உணவுகள் மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அவை கரோ, காசி மற்றும் ஜெயின்டியா. கரோ வகை உணவுகள் சமைப்பதற்கு மிகவும் எளிமையானவை. காய்ந்த மீன் கொண்டு தயாரிக்கப்படும் நகாம் பிட்சி மிகவும் புகழ்பெற்ற கரோ வகை உணவாகும். அரிசியினால் தயாரிக்கப்படும் பல்வேறு வகையான உணவுகள் காசி என அழைக்கப்படுகின்றன. ஜடோ, ஜஸ்டெம் ஆகியவை பிரபலமான காசி உணவுகள். காளானில் இருந்து தயாரிக்கப்படும் உணவு வகைகள், ஜெயின்டியா எனப்படுகின்றன. ‘டிட் துங்’ மேகாலயாவில் விரும்பி உண்ணப்படும் ஜெயின்டியா வகை உணவு. சாதத்தை புளிக்கவைத்து தயாரிக்கப்படும், கியாத் எனும் பானம் மேகாலயாவில் மிகவும் பிரபலம். மேகாலயாவில் உள்ள காசி எனும் குறிப்பிட்ட சமூகத்து மக்களால் தயாரிக்கப்படும் அரிசி உணவு ஜடோ. அரிசி, இறைச்சி, பச்சை மிளகாய் சேர்த்து மிகுந்த காரத்துடன் ஜடோ உணவு சமைக்கப்படுகிறது. மேகாலயா செல்பவர்கள் ஜடோ உணவை சுவைக்காமல் திரும்ப மாட்டார்கள். இந்த உணவு பிரியாணியின் சுவைச் சாயலைக் கொண்டது. ஆனால் பார்ப்பதற்கு பிரியாணியைவிட ரொம்ப கலர்ஃபுல்லாக இருக்கும். மேகாலயா மக்களின் விசேஷங்கள் மற்றும் கொண்டாட்டங்களை கியாத் பானம் இல்லாமல் பார்க்க முடியாது; முழுமையும் பெறாது. அந்த அளவுக்கு அவர்களின் வாழ்வோடு ஒன்றியது மேகாலயா கியாத். சோற்றைப் புளிக்கச் செய்து அதிலிருந்து கியாத் பானம் தயாரிக்கப்படுகிறது. பல்வேறு சுவைகள் மற்றும் பிளேவர்களில் தயாரிக்கப்படும் இந்தப் பானத்தை, வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் இருந்துவரும் சுற்றுலா பயணிகள் விரும்பி அருந்துகின்றனர். மற்ற மேகாலயா உணவு வகைகளைவிட நகாம் பிட்சி சூப்பை தயாரிப்பது மிகவும் எளிதானது. மேகாலயாவில் மிகவும் புகழ்பெற்ற இந்த சூப், நன்றாக சாப்பிட்ட பின்பு அருந்த வேண்டியது. நகாம் பிட்சி சூப், காய்ந்த மீன் (கருவாடு) கொண்டு தயாரிக்கப்படுகிறது. சூப் தயாரிப்பதற்கென்றே பிரத்யேகமாக மீன்களைத் தேர்ந்தெடுத்து காய வைக்கின்றனர். அதிக அளவு காரம் சேர்த்து மிகவும் சுவையாக இந்த சூப் தயார் செய்யப்படுகிறது. மிகவும் புகழ்பெற்ற அசைவ சாலட் டோக்லி. இறைச்சி, வெங்காயம் மற்றும் மிளகாய் சேர்த்து இந்த சாலட் தயார் செய்யப்படுகிறது. சருமத்துக்கு நன்மை தரக்கூடியது என நம்பப்படுவதால், டோக்லி மீது ஈர்ப்பு அதிகம். பீன்ஸ், தக்காளி, கேரட் ஆகியவற்றையும் சாலட்டில் சேர்த்துக் கொள்ளலாம். வேகவைத்து பதமாகத் தயாரிக்கப்படும் உணவு என்பதால், உடலுக்கு ஆரோக்கியம் தரக்கூடியது. மேகாலயாவில் தினந்தோறும் சாப்பிடும் உணவுகளில் சேர்த்து கொள்ளப்படும் புகழ்பெற்ற அசைவ உணவு, துங்கிரிம்பை. இறைச்சி, பீன்ஸ் மற்றும் எள் சேர்த்து தயாரிக்கப்படும் இந்த உணவு, உடலுக்கு மிகுந்த ஆரோக்கியத்தைத் தருகிறது. இறைச்சி, பீன்ஸ் இரண்டையும் வேக வைத்துக்கொள்ள வேண்டும். எண்ணெய் சேர்க்காமல் எள்ளை வறுத்து, அதை அரைத்து எடுத்துக்கொண்டு, வேக வைத்துள்ள பீன்ஸ் உடன் சேர்த்து, கடைசியாக இஞ்சி சேர்த்து சிறிது நேரம் வேக வைக்க வேண்டும். இஞ்சி சேர்ப்பதால் கூடுதல் சுவையுடன் இருக்கும். ( விக்கிபீடியா/ இணைய தள தகவல்கள்) எங்கள் குழுவில் மூன்று சமையல் பணியாளர்கள் கோவையிலிருந்து கூட வந்திருந்தனர். ( அதில் ஒருவர் முதல் விமானப் பயணம் என்பதால் கையில் வைத்திருந்த பையில் கரண்டி, கத்தி உட்பட பல சமையல் சாமான்கள் இருக்க ஸ்கேனரில் சோதித்த விமான நிலைய அதிகாரிகள் அலறி விட்டனர். விமானத்திற்குள் நுழைய அதனால் தாமதமாகி விட்டது) அவர்கள் சமைக்கும் சமையலில் வீட்டுச்சமையல் தன்மை இருக்கும்.வயிறு கெடாமல் இருக்கும். காலையில் பேருந்து கிளம்பும்போதே மதியம் உணவும் தயாரிக்கப்பட்டு நாங்கள் செல்லும் வாகனத்திலேயே வந்து விடும். சில இடங்களுக்குச் செல்லும் போது சமையல் பொருட்கள், பாத்திரங்கள் என்று சகலத்தையும் கொண்டு செல்வோம் .சமைப்போம். அப்படி நோகலிகை நீர்வீழ்ச்சிக்கு சென்று போது அங்கு சமைத்து உண்ணலாம் என்றத்திட்டம் சாலை சிரம காலதாமதத்தால் சாம்பார், ரசம், கூட்டு, பொறியல் என்ற திட்டத்திலிருந்து நழுவி வெறும் ரசம், கத்திரிக்காய் பொறியல் . அப்பளம் என்ற அளவில் சுருங்கி பசிக்கு அமிர்தமாக இருந்தது. அதனால் மேகாலயாவின் உணவுகளை ஆசைக்குத் தேடிப் போய் உண்ண வேண்டியிருந்தது. கண்ட இடத்தில் மேய வேண்டியிருந்தது. அப்படி கொஞ்சம் மீனும், துங்கிரிம்பையும் எனக்குச் சுவைக்கக் கிடைத்தன.