சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




செவ்வாய், 29 டிசம்பர், 2020

தோழியர் தென்றலின் இலக்கிய முயற்சிகளுக்கும்.. சுப்ரபாரதிமணியன் ( நீசமாக எண்ணாதே நீச்சலடிக்க கற்றுக்கொடு : பா தென்றல் கட்டுரைகள் ரூ 150 இனிய நந்தவனம், திருச்சி வெளியீடு ) கட்டுண்டு கிடக்கிறார்கள் பெண்கள். தங்களை விடுவித்துக் கொண்டு முன்னேறி சாதனையாளர்கள் ஆகிறார்கள் .அப்படி சாதனை புரிந்த பெண்மணிகள் கட்டுகளிலிருந்து தங்களை விடுவித்துக்கொண்ட அனுபவங்கள் இதில் . அந்த வகையில் நூற்றுக்கணக்கான பெண்களைப் பற்றிய பதிவாக இந்த நூல் இருக்கிறது இலக்கியம் சார்ந்த சில முன்னெடுப்புகளும் முயற்சிகளும் சாதனை மூலமாக தோழியர் தென்றல் அவர்களின் நடவடிக்கைகள் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து கொண்டு இருக்கின்றன. தாத்தாவின் திண்ணை பள்ளியினை விரிவாக்கி 100 ஆண்டுகளுக்கு மேலாக கல்விப் பணி செய்து வரும் அந்தப் பள்ளியை நிர்வகித்து அதில் ஒரு ஆசிரியையாக பணிபுரிந்து குழந்தைகளின் உலகத்தோடு எப்போதும் ஒன்றி இருப்பவர் . அதைத்தவிர பள்ளி வகுப்பறையிலேயே ஒரு நூலகம் உருவாக்கியவர். வகுப்பறை நூலகத்தை பள்ளி மாணவ-மாணவிகளின் மட்டுமில்லாமல் பெற்றோர்களும் இலக்கிய ஆர்வலர்களும் கூட பயன்படுத்தும் விதமாக அதை ஒரு பொது நூலகம் ஆகியிருப்பதில் அப்படி ஒரு சாதனை செய்திருக்கிறார் . சமீப காலங்களில் புதிய தலைமுறை, தினமணி, மலேசிய பத்திரிக்கைகள் மற்றும் முகநூல் களிலிருந்து அவரைப் பற்றி தெரிந்து கொண்டபோது பெருமிதமாக இருந்தது. திருப்பூரில் இருக்கும் பாண்டி நகர் தாய்த்தமிழ்ப் பள்ளியில் நூலகத்தை இப்படி பொதுமக்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் என்று பொதுவானதாக நூலகத்தை அமைக்கவேண்டும் என்று அப்பள்ளி தொடங்கப்பட்ட காலத்தில் எடுத்த முயற்சிகள் வெற்றி பெறவில்லை. ஆனால் அதே முயற்சியை ஒரு பெரிய சாதனை ஆக்கிக் கொண்டிருக்கிறார் தென்றல் அவர்கள். தொடர்ந்து இலக்கிய முயற்சிகளில் ஈடுபடுவதும் நேரத்தை செலவழித்து வெளியூர் கூட்டங்களில் கலந்துகொண்டு இலக்கியம் சார்ந்த உரையாடல்களில் பங்கு பெறுவதும் தென்றலை ஒரு முக்கிய எழுத்துப் பணியாளர் என்ற அளவில் உயர்த்தியிருக்கிறது .அவரின் ஆதர்சமாக பலநூறு பெண்மணிகள் இருந்திருக்கிறார்கள் அந்தப் பெண்மணிகளை எல்லாம் இந்த நூலில் அடையாளம் காட்டுகிறார் . அவர்களெல்லாம் ஏதாவது ஒரு துறையில் சாதனை செய்தவர்கள் .இலக்கியத்துறையில் சாதனையாளர்கள் பற்றி குறிப்பிடும்போது இயல்பிலேயே அவர் மனம் குதூகலித்தது விரிவாய் எழுதுகிறார். தங்களின் கூண்டுகளிலிருந்து பெண்கள் முற்படுவதையும் சாதனை புரிவதும் இந்தப் புத்தகம் சொல்கிறது. இலக்கிய நூல்களும் படைத்தவர்களும் ஒருபுறம் இந்த நூலுக்கு பலம் சேர்க்கிறார்கள் . தென்றலின் இலக்கிய முயற்சிகளுக்கு இந்த நூலும் ஒரு படிக்கல்லாக அமையும் சுப்ரபாரதிமணியன் ( நீசமாக எண்ணாதே நீச்சலடிக்க கற்றுக்கொடு : பா தென்றல் கட்டுரைகள் ரூ 150 இனிய நந்தவனம், திருச்சி வெளியீடு ) thendralbala2011 Tue, Dec 22, 7:29 PM (11 hours ago) to me Tamil English Translate message