சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




சனி, 14 நவம்பர், 2020

ஒரு எழுத்தாளரின் ஒரு வேண்டுகோள் சுப்ரபாரதிமணியன் திருப்பூர் பாண்டியன் நகர் அறிவுத்திருக்கோவிலில் சமீபத்திய உடற்பயிற்சி மற்றும் அகத்தாய்வு முதல் நிலை பயிற்சிக்குச் சென்றேன். அவர்களின் வழக்கில் ஏன் இத்தனை சமஸ்கிருத வார்த்தைகள் தெரியவில்லை. அகத்தாய்வில் தரும் விளக்கங்களில் –பவர் பாயின் பிரசண்டேசனில் -PPpஏகப்பட்ட ஏகப்பட்டத் தமிழ்ப்பிழைகள். கொஞ்சம் ஆங்கிலப்பிழைகள். அதில் இடம் பெறும் படங்களில் பெரும்பாலும் காணப்படும் முகங்கள் வடநாட்டுஅய்ரோப்பிய முகங்கள். இந்திய தமிழ்நாடு முகங்கள் வெகு சொற்பம். சில செயலுக்கானப் படங்கள் பொருத்தமாக இல்லை. அறிவுத்திருக்கோவிலில் ஓரளவுக்கு விஞ்ஞான முறைகள் இருந்தன என்பது ஆறுதல். இறைத்தன்மை, சடங்குகளை என்பவற்றை நிராகரித்தே பயிற்சியில் இருந்தேன். இந்த விசயங்களை நிர்வாகிகளுக்குச் சொன்னேன். தலைமை அலுவலகத்திற்கும் மின்னஞ்சல் மூலம் தெரிவித்தேன் . பலவற்றில் நல்ல தமிழ்ப்பிரயோகங்கள் இருந்தன. இவ்வளவு கலப்பாய் தமிழைக்கண்டதால் அவதியுறும் மனநிலைக்கு ஆளானேன். அறிவுத்திருக்கோவில் ஒரு சர்வதேச நிறுவனம், அதன் பாட்த்திட்டங்களில் தமிழை வளர்க்கும் முயற்சிகள், பிழையில்லாமல் தமிழில் பாடங்கள் இருந்தால் நல்லது. இவற்றைப் பரிசீலிக்கலாம் தாங்கள், --------- - சுப்ரபாரதிமணியன், திருப்பூர்