சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




செவ்வாய், 10 மார்ச், 2020

கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி ’’எங்கள் ஊர்; எங்கள் பெருமை’’ திருப்பூர்
* ஆனந்த விகடனில் வெளிவந்த  என் ஒரு கேலிச்சித்திரத்தை சுப்ரபாரதிமணீயனிடம் காட்டினேன். அவர் பிற கார்டூன்களையும் கொண்டுவரச்சொல்லி மத்திய அரிமா சங்கத்தில் ஒரு வாரம் ஒரு கண்காட்சி நட்த்திய போது பலர் எனக்கு அறிமுகம் ஆனார்கள். அங்கு சுப்ரபாரதிமணியன் குறும்படங்கள், உலக்த்திரைப்படங்கள் திரையிட்டு வந்ததைத் தொடர்ந்தேன்.  என் கலைப்பயணம் திருப்பூர் சபாபதி புரம் மத்திய  அரிமா சங்கத்தில் தொடங்கியது
முண்டாசுப்பட்டி - ராட்சசன் ஆகிய திரைப்படங்களின் இயக்குநர் ராம்குமார் உரையில்

* நொய்யலில் உப்பு அளவு 17000 ஆக இருந்தது ,முன்பு . இப்போது 900 க்கு குறைந்து விட்டது. திருப்பூர் பனியன் உற்பத்தியாளர்களின் இவ்வகை சேவை சிறப்பானது. சேனாபதி காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி மைய நிறுவனர் கார்த்திகேய சிவசேனாபதி உரையில்
*
திருப்பூர் நொய்யல் சீராகுமா.. கவலை குறைந்தது. திருப்பூர் ஏற்றுமதி யாளர்களின் சமீபத்தில் நடவடிக்கைகளால் என்றார் ராம்குமார்

* தொழில் வளர்ச்சியில் அறியமையால்தான் சுற்றுச்சூழல் கேடும் நொய்யல் மாசுபாடும் ஏற்பட்டது. அதை சீர்செய்து வருகிறோம்.. கிளாசிக் போலோ சிவராமன் உரை.
* ..சுற்றுச்சூழலா. வளர்ச்சியா. . என் உரை...வனத்துக்குள் திருப்பூர் அமைப்பிற்கு விருதை வழங்கினேன்.
கலைஞர் செய்திகள் தொலைக்காட்சி ’’எங்கள் ஊர்; எங்கள் பெருமை’’ என்ற பிரமாண்ட நிகழ்ச்சியை தமிழகத்தின் முக்கிய நகரங்களிலெல்லாம் நடத்த திட்டமிட்டுள்ளது.
முதல் நிகழ்ச்சி தொழில் நகரமான திருப்பூரில் 27/12 /19 lநடைபெற்றது. ஐ.கே.எப்.ஏ அரங்கில் .
இதில் பாப்பீஸ் நிறுவனத் தலைவர் சக்திவேல், திரைப்பட வினியோகஸ்தர் திருப்பூர் சுப்பிரமணியன், கிளாஸிக் போலோ இயக்குநர் சிவராம், எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன், சேனாபதி காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி மைய நிறுவனர் கார்த்திகேய சிவசேனாபதி உள்ளிட்ட திருப்பூரின் முன்னோடிகள் உரையாற்றினர் .
மேலும், திருப்பூருக்கு பல்வேறு வகைகளில் புகழ் தேடித்தருவோரை கவுரவிக்கும் வகையில், தி சென்னை சில்க்ஸ் நிறுவனத்தினர், ’’வனத்திற்குள் திருப்பூர்’’ என்கிற சூழலியல் அமைப்பு, லக்ஸ் பின்னலாடை நிறுவன இயக்குநர் ராகுல் டோடி, முண்டாசுப்பட்டி - ராட்சசன் ஆகிய திரைப்படங்களின் இயக்குநர் ராம்குமார், தடகள வீரர் தருண் அய்யாசாமி ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டன..
இந்த நிகழ்ச்சியில் திருப்பூரைச் சேர்ந்த கல்லூரி மாணவ - மாணவியரின் கண்கவர் கலை நிகழ்ச்சிகளும் இடம் பெற்றது..
Reply
Forward