சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




செவ்வாய், 10 மார்ச், 2020

1. ” சுப்ரபாரதிமணியன் படைப்புக்கலை
என்ற ஒருநாள் கருத்தரங்க கட்டுரை தொகுப்பு திருநெல்வேலி பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற சுப்ரபாரதிமணியன் படைப்புகள் பற்றிய கருத்தரங்க  விழாவில் வெளியிடப்பட்டது. .அதில் 36 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன
 இந்நூலில் சிங்கப்பூர் சீனா மலேசியா கனடா இலங்கை போன்ற வெளிநாட்டைச் சேர்ந்த எழுத்தாளர்கள் பேராசிரியர்கள் ஆய்வாளர்கள் ஆய்வாளர்கள் என ஏழு பேரின் கட்டுரைகள் சிறப்பம்சமாக இடம்பெற்றுள்ளன. தமிழகத்திற்கு வெளியே டெல்லி ஆந்திரா புதுச்சேரி ஆகிய இடங்களில் இருந்து நான்கு பேராசிரியர்களின்  கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இவ்வாறு ஒரு பரந்த நிலப்பரப்பில் இருந்து கட்டுரையாளர்கள் சுப்ரபாரதிமணியனின் படைப்புகளை வெவ்வேறு கோணத்தில் திறம்பட அணுகியிருக்கிறார்கள் .நெசவாளர்கள், குழந்தைத் தொழிலாளர்கள், புலம்பெயர் தமிழர்கள் நகரமயமாதல் உலகமயமாதல் சுற்றுச்சூழல் கேடு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டம், முதிர்கன்னி போன்ற பெண்ணியச் சிந்தனைகள், மணல் கொள்ளை கனிமக் கொள்ளை போன்றவை இந்நூலில் இடம்பெற்றுள்ளன. கட்டுரைகள் ஆய்வு தளங்களாக அமைந்துள்ளன
சுப்ரபாரதிமணியன் என்ற ஒரு படைப்பாளியின் பன்முகப் பரிமாணங்களை ஒரே இடத்தில் காண்பதற்கான வாய்ப்பை தந்த ஒரு சிறந்த நூலாக இது விளங்குகிறது .பேராசிரியர் ராமபாண்டி அவர்கள் தொகுத்திருக்கிறார்

2.
புதினங்கள் கோட்பாட்டியல் அணுகுமுறை எனும் பேராசிரியர்  ராம பாண்டி அவர்களிண் நூலில் 12 கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. அக்கட்டுரைகள் சடங்கியல் கோட்பாடு ,ஆவியுலக கோட்பாடு கலவர கோட்பாடு போன்ற கோட்பாடுகளை கொண்டு விரிவாக ஆராய்ந்துள்ளார்.
 இது ஒரு புதிய ஆய்வு முறையை தமிழ் இலக்கிய தளத்திற்கு அறிமுகப்படுத்தியுள்ளது, கோட்பாட்டு அணுகுமுறையில் ஆய்வு மேற்கொள்ளும் இளம் ஆய்வாளர்களுக்கு இந்த நூல் பயன்தரக்கூடிய ஒரு சிறந்த நூலாகும், பேராசிரியர் அவர்களின் இலக்கிய முயற்சிகளில் இது முக்கியமான நூலாகும்
சுப்ரபாரதிமணியன்