சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




வெள்ளி, 8 நவம்பர், 2019

                                   *  சுப்ரபாரதிமணியன்
அன்புடையீர் ..
வணக்கம். நலம் குறித்த விருப்பம்.
சிங்கப்பூர்  தற்காலப் பெண் எழுத்தாளர்கள் சிறுகதைகள் என்றத் தொகுப்பினை 20 சிறுகதைகளைக் கொண்டு வரும் முயற்சிக்கு  உங்களின் சிறுகதை ஒன்றை மின்னஞ்சலில் அனுப்பி வையுங்கள் . நன்றி.
தங்களின் ஒரு சிறந்த வெளிவந்த சிறுகதையையும், உங்கள் படைப்புப் பணி பற்றிய 10 வரிகளில் ஒரு குறிப்பையும்  அனுமதி கடிதத்தையும் கூட அனுப்பி உதவுங்கள்.இன்னும் சில தோழிகளின்  மின்னஞ்சல்கள் தந்தாலும் அவர்களைத் தொடர்பு கொள்வேன்.
தற்போதைய சிங்கப்பூர் தமிழ்ச்சூழலை பிரதிபலிக்கும் வகையிலானக் கதைகளை இத்தொகுப்பில் இடம் பெறச் செய்ய எண்ணம்.கடந்த 5 ஆண்டுகளுக்குள் வந்த கதையாக  இருக்கலாம்.
அன்புடன்,
சுப்ரபாரதிமணியன், திருப்பூர் தமிழ்நாடு

.. subrabharathi@gmail.com  Fb:  Kanavu Subrabharathimanian Tirupur  :                                                                      blog: www.rpsubrabharathimanian.blogspot.com 
Kanavu –Tamil quarterly., Home : 8/2635 Pandian nagar, Tirupur 641 602 /India -094861 01003, 9442350199, 0421 2350199
( சுப்ரபாரதிமணியனின் மலேசியா பின்னணியிலான சில நூல்கள் :
1. மாலு –நாவல் ( உயிர்மை பதிப்பகம், சென்னை )
2. கடவுச்சீட்டு - நாவல் ( முன்னேற்றப் பதிப்பகம் , சென்னை )
3.ஓ..மலேசியா –கட்டுரைகள் (பழனியப்பா பிரதர்ஸ்  பதிப்பகம், சென்னை )
4. தோட்டக்காடு –மலேசியா பின்னணிச் சிறுகதைகள் (பழனியப்பா பிரதர்ஸ்  பதிப்பகம், சென்னை )
மற்றும்
1. ஓ..சிங்கப்பூர் ( கதைகளும் , கட்டுரைகளும் )
2. பெண்மை -மலேசியா-  தற்காலப் பெண் எழுத்தாளர்களின் சில  சிறுகதைகள்
இரண்டும் கவிநிலா பதிப்பகம், திருப்பூர்



சுப்ரபாரதிமணியன்

 16 நாவல்கள், 15 சிறுகதைத் தொகுப்புகள் உட்பட 65 நூல்களை வெளியிட்டிருக்கும்  சுப்ரபாரதிமணியன் தொடர்ந்து சுற்றுச்சூழல் சார்ந்து இயங்கி வருபவர்.    திருப்பூரில் வசித்து வருகிறார் . சாயத்திரை “ என்ற சுற்றுச்சூழல் மாசுபாடு பற்றிய  நாவலுக்கான தமிழக அரசின் பரிசு,,  சிறந்த சிறுகதையாளருக்கான இந்திய சனாதிபதி வழங்கிய “கதா விருது
          உட்பட பல முக்கிய விருதுகளைப் பெற்றவர்.இவரின் நாவல்கள், சிறுகதைகள் பல இந்திய மொழிகளிலும் ஆங்கிலத்திலும்   வெளிவந்துள்ளன.குறிப்பாக                “ சாயத்திரை “ என்ற  திருப்பூர் சுற்றுசூழல் சார்ந்த நாவல் ஆங்கிலம், இந்தி, மலையாளம், வங்காளம், கன்னட மொழிகளில் வெளிவந்திருக்கிறது. “ தண்ணீர் யுத்தம் “,             “ நீர்ப்பாலை   போன்ற இவரின் நூல்கள் சுற்றுச்சூழல் பிரச்னைகள் பற்றிப் பேசுகின்றன.பல நூல்கள் பல முக்கிய  பல்கலைக்கழகங்களில் பாட நூல்களாக இருக்கின்றன. திருப்பூரைச் சார்ந்த இவர்  கனவு ‘ என்ற இலக்கியச் சிற்றிதழையும் 31 ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.பாண்டியன் நகர் தாய்த்தமிழ்ப் பள்ளியோடும் இணைந்து செயலாற்றி வருகிறார். .