சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




வியாழன், 26 செப்டம்பர், 2019

* புவியரசு 89 வயதில்.....வாழ்த்துவோம்

கண்மணி சோபியா : நாவல் புவியரசு
யதார்த்தத் களத்திலிருந்து  அறிவியலுக்கு நாவல் சென்றடைவது இந்நாவலின் சிறப்பம்சம். நவீன யுகத்தை அது கொண்டு வந்துக்காட்டி அதிர்சியடையவும் செய்கிறது. 
ஒரு பெண்ணின் பழிவாங்கல் நடவடிக்கை என்ற அளவில் ஆரம்பப் பக்கங்கள் நகரும் போது ஏற்படும் அலுப்பு அது விஞ்ஞானம் சார்ந்த நாவலுக்கான தன்மையுடன் மாறும் போதும் தவளைப்பாய்ச்சலில்  வேறு தளத்தை எட்டி சுவாரஸ்யமாகிவிடுகிறது .குறைந்த கதாபாத்திரங்கள் மற்றும்  . மரபு நாவல் மொழிக்கான இறுக்கம் போன்றவை தாண்டி விஞ்ஞான நாவலுக்கான எளிமையான மொழியுடன் செல்கிறது .கதை சொல்லலில் வெகுஜனத் தன்மை வந்து விடுவது எல்லோரின் வாசிப்பிற்கும் உகந்ததாக்கிவிடுகிறது.. அறம் , பொது நீதி பற்றிய பல விவாதங்களை கதாபாத்திரங்கள் மூலம் முன்வக்கிற நேரத்தில் அதே விவாதங்களை வாசகர்கள் மத்தியிலும் கிளப்புவது வெற்றியாகும். இயந்திரம் வெற்றி கொள்வதோ, மனிதம் மனிதனிடம் மிஞ்சுவதோ சிறப்பசம்.
அதிஷா புவியரசை பெருமளவில் பாதித்திருப்பதை பல கூட்டங்களில் புவியரசின் பேச்சிலிருந்து தெரிந்து கொண்டேன்.அதை இந்நாவலிலும் கண்டேன் .. கவிஞர் உரைநடையாளராக  மாறும் போது  ஏற்படும் அதீத கவித்துவம் என்பதெல்லாம் இதில் இல்லாமல் இருப்பது புவியரசு நல்ல உரைநடைக்காரர் கூட என்பதையும் சொல்கிறது.அவரின் மொழிபெயர்ப்புப் பணிகள், உரைநடையில் தொடர்ந்த வாசிப்பு என்பதெல்லாம்  அதற்கு முக்கிய காரணிகள் எனலாம். நாவல், வெகு இறுக்கம், நீளமானது  என்று தள்ளிபோகும் புதிய தலைமுறையையும் ஈர்க்கும்  உரைநடையில் ஒரு நாவல் என்பது பலம் . இது போன்ற அறிவியல் எழுத்து புது பலம்.
படைப்பிலக்கியம், மொழிபெயர்ப்பு என் இரு முறை சாகித்ய அகாதமி விருது பெற்றவர் புவியரசு அவர்கள். இப்போது அவருக்கு வயது 89 .அவரின் மொத்த நூல்களின் எண்ணிக்கை 100 யைத்தாண்டிவிட்டது 5 ஆண்டுகளுக்கு முன்பே           . - ( சுப்ரபாரதிமணியன் )                                ( ரூ150 நந்தினி , கோவை  9942232135)