சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




திங்கள், 2 ஏப்ரல், 2018

எழுத்தாளர் திருப்பூர் சுப்ரபாரதிமணியனுக்கு தமிழக அரசு விருது
எழுத்தாளர் திருப்பூர் சுப்ரபாரதிமணியனுக்கு தமிழக அரசின்                    “ தமிழ்ச்செம்மல் “  விருது  5/4/18. காலை  சென்னை தலைமைச்செயலகத்தில் நடக்கும் விழாவில் தமிழக முதலமைச்சர் வழ்ங்குகிறார் .

Theekathir –Sunday review
சுப்ரபாரதிமணியனின்  மறைந்து வரும் மரங்கள் 
அழிவிலிருந்து மீட்கப்பட வேண்டிய மரங்கள்

அழிந்து வரும் நிலையில் உள்ள தாவரங்கள் விலங்குகளை, அருகிவரும் அல்லது மறைந்து வரும் உயிரினங்கள் என்கிறோம். அவற்றைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நம்மிடம் தான் உள்ளது.மருத்துவ குணம் உள்ள 400க்கும் மேற்பட்ட தாவரங்கள் அழிந்து வரும் நிலையில் உள்ளன என உலகின் முன்னணி பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த 600ஆய்வாளர்கள் ஆய்வு செய்து வெளியிட்டுள்ளனர். மேலும் இந்தியாவில் 365 விலங்கினங்களும் 1236 தாவர இனங்களும் அழியும் நிலையில் உள்ளன என இந்நூலின் முன்னுரையில் குறிப்பிட்டிருப்பது தாவரங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி அவற்றைப் பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்து, விளக்கும் பொருட்டாக வேண்டிய அவசியம் மறைந்து வரும் மரங்கள்என்ற தலைப்பில் இந்நூலைப் படைத்துள்ளார்.இந்நூலில் தமிழகத்தை சூழிடமாகக் கொண்ட அருகிவரும் 30 வகையான மரங்களின் விவரங்களைத் தொகுத்து வருத்தம் மிகுந்த தொனியில் வழங்கியுள்ளார்.சந்தன வேங்கை என்றதொரு அற்புதமான மரம். இது அணுக்கதிர் எதிர்ப்பு சக்தி கொண்ட மரம் என்கிறார்கள். இந்தப் பண்பைக் கொண்ட காரணத்திற்காகவே இம்மரம் ஜப்பான் போன்ற நாடுகளுக்கு பெருமளவில் வெட்டி கடத்தப்படுகின்றன. அதன் மறுபெயர் செம்மரம். அண்டைமாநிலமான ஆந்திராவில் இது அதிகம் காணப்படும் மரம். சிறிய அளவு மரத்துண்டை தங்களது சட்டைப்பைகளில் வைத்தக் கொண்டு அணுக்கதிர் வீச்சிலிருந்து பாதுகாத்துக் கொள்வதாக சொல்லப்படுகிறது. இதுபோன்ற அரிய குணம் கொண்ட மரம் அழிவிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும்.ஆணைப்புளி அல்லது பொந்தன்புளி என்று அழைக்கப்படும் மரம், ஆப்பிரக்காவில் இருந்து குதிரை வியாபாரிகள் மூலம் தமிழகத்திற்கு பரவியதாக சொல்லப்படும் மரம்.அஜீரணம், வாயுத்தொல்லை போன்றஉள்பிரச்சனைகளுக்கு மருந்தாக்கப்படுகிறது. இதன் அடிப்பாகம் மட்டும் பதினொரு மீட்டர் விட்டம் கொண்டது என்றும் 5000லிட்டர் தண்ணீரை இம்மரத்தின் பொந்துகளில் சேகரிக்கக்கூடிய தண்ணீர் தொட்டியாகவும் உள்ளது என வித்தியாசமான பயன்பாடுள்ள மரம்.

கடுக்காய்

காலை இஞ்சி கடும்பகல் சுக்குமாலை கடுக்காய் மண்டலம் உண்டால்விருத்தனும் பாலனாமேஎன்ற சித்தர் பாடலைக் கேட்டாலே உடல் ஆரோக்கியத்திற்கு கடுக்காய் எவ்வளவு முக்கியத்துவம் பெற்றுள்ளது என்பதை அறிய முடியும். அதாவது காலையில் இஞ்சியும் பகலில் சுக்கும் இரவில் கடுக்காயும் 48 நாட்கள் (1 மண்டலம்) உண்டால் கிழவனும் குமரனாகலாம் என்பதாகும் அப்பாடல்.திரிபலா சூரணம் (கடுக்காய் , நெல்லி, தான்றிக்காய்) சர்க்கரை நோயைக் குணப்படுத்தும்). இது போன்ற நல்ல பல மருத்துவ குணங்களைக் கொண்ட கடுக்காய் நம் அனைவர் வீடுகளிலும் இருக்க வேண்டிய தாவரக் கனியாகும்.

அலையாத்தி:

இதில் கண்டல், வெண்டல், நரிக்கண்டை, நல்லமாடா உள்ளிட்ட 18க்கும்மேற்பட்ட இனங்கள் உள்ளதாக குறிப்பிடுகிறார். இது ஒரு சூழலியல் மண்டலமாக விளங்குவதால் பல்வேறு உயிரினங்கள், பறவைகள், விலங்குகளின் வாழ்விடமாக விளங்குகின்றன. இக்காடுகள் ஆறும் கடலும் கலக்கும் சதுப்புநிலப் பகுதியில் வளர்கிறது. தமிழகத்தில் சிதம்பரம், முத்துப்பேட்டை போன்ற பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் அமைந்துள்ளன. கடல்சீற்றத்தைத் தடுத்து சுற்றுச்சூழலை பாதுகாக்கும் இக்காடுகள் அழிவை நோக்கி செல்வதை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியம்.மேலே சொல்லப்பட்ட மரங்கள் அல்லாது ஏராளமான தாவரங்களும், பறவைகளும், விலங்கினங்களும் இப்பூவுலகின் சொந்தங்கள் என்பதை நினைவில் நிறுத்தி, உணர்வு பெற்று காக்கும் கரங்களாக இருந்து காத்திட அரசு, பொதுவில் உள்ள இயற்கை ஆர்வலர்களும் முன்வருவது உடனடி தேவை என்பதை இந்நூல் பேசுகிறது.