சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




ஞாயிறு, 10 செப்டம்பர், 2017

கதை சொல்லி நிகழ்ச்சி ..



பாண்டியன் நகர் தாய்த்தமிழ்ப்பள்ளியில் கதை சொல்லி நிகழ்ச்சி.. “ சனியன்று நடைபெற்றது. ஆசிரியை கோகுலப்ரியா தலைமை தாங்கினார். நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராகக்  கலந்து கொண்ட சிவகாசியைச் சார்ந்த எழுத்தாளர் கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி குழந்தைகள் பழைய கதைகளை மறு வாசிப்பு செய்ய வேண்டிய அவசியம் பற்றிப் பேசினார். பழைய காக்கா நரி கதை , ஆமை முயல் கதைகளை மறுவாசிப்பு முறையில் சொன்னார்.

பொதுப்பாடத்திட்டம் பலவகைகளில் இன்றைய பள்ளிக்கல்வியில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது.அதுபோல் பொதுப் பள்ளி முறை அமுல்படுத்த அரசு அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும்   பொதுப்பள்ளி முறையே சமத்துவத்தை உருவாக்கும்”  என்று எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன்               நிகழ்ச்சியை ஆரம்பித்து வைத்துப் பேசும்போது சொன்னார்.

கல்வி இன்றைக்கு வியாபாரம் ஆகி விட்டது. நாம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருள், சேவைக்காக, கல்விக்கென கூடுதல் வரி ( செஸ்) 3% செலுத்துகிறோம். இதனால் அரசுக்கு ஆண்டுக்கு வரும் செஸ்வரி சுமார் 20,000 கோடி ரூபாய் அப்படியிருக்க நம் குழந்தைகளின் கல்விக்காக நாம் ஏன் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற கேள்வி இன்றைக்கு பல தளங்களில் இன்றைக்கு எழுப்பப்படுகிறது. கட்டணமில்லாக் கட்டாயக்கல்வி தருவது நம் அரசின் கடமையாக இருப்பதை தொடர்ந்து நாம் வலியுறுத்த வேண்டும். பாடத்திட்டங்கள் தொடர்ந்த வன்முறைகளாக மாறி உள்ளன,தொடர்ந்து கற்பித்தலும், கற்றலிலும் ஆசிரியர்கள் அக்கறை கொண்டு குழதைகளை முன்னேற்ற வேண்டும் என்று குறிப்பிட்டார்.


சமூக சேவை ஆர்வலர் சேவ ஆர். பிரான்சிஸ்  குழந்தைகளுக்கான கல்வியும் குழ்ந்தைத் தொழிலாளர் முறை ஒழிப்பும் பற்றிப் பேசினார். ராஜேஷ்லால் குழந்தைகளின் கைத்திறனை வளர்த்துக் கொள்ளும் முறைகள் பற்றி செய்முறை விளக்கங்கள் தந்தார்.