சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




வியாழன், 1 ஜூன், 2017

*        subrabharathi@gmail.com  Fb:  Kanavu Subrabharathimanian Tirupur  :                                                                      blog: www.rpsubrabharathimanian.blogspot.com 
Home : 8/2635 Pandian nagar, Tirupur 641 602 /094861 01003 


கலை இலக்கியப் பெருமன்றம் நடத்திய  “ சுற்றுச்சூழல் முகாம்-சூழலியல் “
--------------------------------------------------------------------------
 திண்டுக்கல்லில் சுற்றுச்சூழல் முகாமினை  இருதினங்கள் 27,28 மே- கலை இலக்கியப் பெருமன்றம் நடத்தியது   பத்திரிக்கையாளர்  ஜெயப்பிரகாஷ் ஒருங்கிணைத்தார். ஈரோடு பசுமை இயக்கம் டாக்டர் ஜீனானந்தம், பாமயன், அமைதி அறக்கட்டளை பால்பாஸ்கர் போன்றோர்  நாம் எதிர்கொள்ளும் சூழலியல் நிலைகள் பற்றிப் பேசினர் .   படைப்பிலக்கியத்தில் சுற்றுச் சூழல்  என்ற தலைப்பில் சுப்ரபாரதிமணியன் பேசினார்
திண்டுக்கல் சுற்றுச்சூழல் முகாமில் சுப்ரபாரதிமணியன் பேசியதில்..சுற்றுச் சூழல் படைப்பிலக்கியத்தில்..
----------------------------------------------------------------------------
என் சுற்றுச்சூழல்  நாவல்கள் ( சாயத்திரை, புத்துமண் )  முன் வைக்கும் உள்ளீடான தார்மீகக் கேள்விகள் உலகளாவில் சுற்றுச் சூழல் பிரச்சனைகளாக வடிவெடுத்துவிட்டன என்பது இன்னும் துயரமானது.  சிறப்புப் பொருளாதார மண்டலங்களாய் திருப்பூர் போன்ற தொழில் நகரங்கள் அறிவிக்கப்படவேண்டும் என்ற கோரிக்கைகள் பயமுறுத்துகின்றன.  அடிப்படை மனித உரிமைப்ப்பிரச்சினைகளாக சுற்றுச்சூழல் பிரச்சினைகள்  உலகெங்கிலும் வடிவெடுத்துள்ளன. கார்பரேட் சமூகப் பொறுப்புணர்வு, நியாய வணிகம் போன்றவை உலக அளவில்  முதலாளித்துவதின்  கருணை முகங்களாய் காட்டப்படும் இந்நாளில்  நவீனக்கொத்தடிமைத்தனமும் புதிய பரிணாம விசுவரூபங்களைக்  கொண்டிருக்கிறது.மனிதர்களின் பேரசைக்காக மண்ணை நாசமாக்குவதும், ஆறுகளை மாசுபடுத்துவதும், நிலத்தடி நீரை மாசுபடுத்துவதும் தொடர்ந்த தொழில் முன்னேற்றம் என்ற பெயரில் நடைபெற்றுவருவது கவலை கொள்ள வைக்கிறது. அதற்கான எதிர்ப்புக்குரல் சுற்றுச் சூழல் படைப்புகள்

    கடந்த 20 ஆண்டுகளாக நானும் படைப்பிலக்கியவாதிகளும் எழுதிவரும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள், குழந்தைத் தொழிலாளர் பிரச்சினைகள், குழந்தைத்தொழிலாளர் நலன்கள் குறித்த அக்கறையை  அக்கறைகொண்டு அவை பற்றிய படைப்புகளை முன்னிருத்துகிறது. கார்ப்பரேட் உலகம் பற்றிய பல விமர்சனங்களையும் அக்கறையுடன் வெளியிட்டு வருகிறது.கார்ப்பரேட்டுகள் முதலீடு செய்யலாம்.லாபம் சம்பாதிக்கலாம். அதே சமயம் நதியைப் பாழாக்குவதற்கோ, நிலத்தடி நீரைமண்ணை பாழாக்குவதற்கோ அவர்களுக்கு உரிமை இல்லை. சம்பாதிக்கும் லாபத்தில் ஒரு பகுதியை தொழிலாளர் நலனுக்காக  கார்ப்பரேட்  சமூக நலத்திட்டத்தின் கீழ் செலவு செய்ய வேண்டும்  என்று விதிகளும், பாராளுமன்ற மசோதாக்களும் இருந்தாலும் அவை நடைமுறைபடுத்தப்படுவதில்லை. பேர் டிரேடு -நியாய வணிகம் சார்ந்து அவர்கள் இயங்க வேண்டிய அவசியத்தை  என் கட்டுரைகள் ஒரு வகையில் வலியுறுத்துகின்றன. கார்ப்பரேடுகளுக்கு எதிரான குரலாக இல்லாமல் கார்ப்பரேட்டுகளின் சமூகப் பொறுப்புணர்வு பற்றிய அக்கறையை தொடர்ந்து வலியுறுத்துகிறது.
உலக அளவில் மனித உரிமைப்பிரச்சினைகளாக   முன்வைக்கப்படும் பல்வேறு பிரச்சினைகள் பற்றிய விவாதங்களை முன்னெடுப்பது ஆரோக்கியமானதாகும்.  சமூகத்தின் மனச்சாட்சியின் குரலாக, ஒருவகையில் எழுத்தாளர்களின் குரலாக   அது இலக்கிய ஆளுமைகள், கலைத்துறையினர், அறிவுத்துறை முன்னோடிகளை இளைய தலைமுறைக்கு அறிமுகப்படுத்துகிறது.உலக மயமாக்கலால் கிராமங்களிலிருந்து துரத்தப்படும்  மக்கள் திருப்பூர் போன்ற தொழில் நகரங்களுக்கு இடம்பெயர்கிறார்கள். இங்கு அவர்கள் தொழிலாளிகளின் உரிமையற்று, வெறும் கூலிகளாக, கொத்தடிமைகளாக, சுமங்கலித்திட்டத்தின கீழான அடிமைகளாக, குழந்தைத் தொழிலாளர்களாக தொடர்ந்து இயங்கி வருகிற அவலத்திலிருந்து மீட்டெடுக்கிற பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்களை நுணுக்கமாகவும், பூடகமாகவும்  சமீப்ப் படைப்புகள் வெளிவருவது ஆரோக்கியமானதாக இருக்கிறது. இது இலக்கிய தர்மத்தின் குரலாக ஊடகங்களுக்கு முன் உதாரணங்களை முன்வைக்கும் முயற்சியாகும்