சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




செவ்வாய், 16 மே, 2017

அரிமா குறும்பட விருது, அரிமா சக்தி விருது         ( பெண் எழுத்தாளர்களுக்கான விருது ) வழங்கும் விழா 2017
---------------------------------------------------------
*14/5/17   ஞாயிறு,. மத்திய அரிமா சங்கம், , காந்திநகர்,              திருப்பூர்  நடைபெற்றது மத்திய அரிமா சங்கம் தலைவர் ஸ்ரீகாந்த் தலைமை வகித்தார்.
* சிறப்பு விருந்தினர்கள்: - கவிஞர் இந்திரன் , சென்னை
(
சாகித்ய அகாதமி பரிசு பெற்றவர்.,  ) ., - கவிஞர் சின்னசாமி  IPS., PhD.                 ( Deputy Commissioner of Police , Tirupur )

கவிஞர் இந்திரன் , சென்னை (( சாகித்ய அகாதமி பரிசு பெற்றவர் ) உரையில்:
உலகமயமாக்கலும் தொழில் துறை வளர்ச்சிக் காலத்தின் நெருக்கடிகளும் துயரப்படவே வைத்திருக்கிறது. இந்த பெரும் செல்வத்தை விட்டுவிட்டு செத்துப் போவதற்கு நான் என்ன முட்டாளா? என்ற கேள்வி மனிதனை நகைப்புக்குள்ளாகுகிறது. கைவினை கலைஞர்கள் சமகாலத்தில் புறக்கணிக்கப்படுவது சாபமாய் உயர்கிறது. இந்த பூமியின் மீது மாசடையாமலிருக்கட்டும் என்ற ஆசையின் விஸ்வரூபம்தான் செல்வத்தை நோக்கிய எங்களது பேராசை/ எங்கே முடியுமென்றுஆதங்கத்துடன் கேள்வியை முன்நிறுத்துகிறது. .சாதி இன வேறுபாட்டைக் கடந்த  கலாச்சாரம் முன் வைக்கும்  நிபந்தனைகள் பற்றி உரக்கவே இன்றைய கவிதை உலகில்  காணலாம். .மொழியின் சிக்கல்களை மீறி, கலாச்சார சுதந்திரம் பற்றி விரிவாய் இவை பேசுகின்றன...கவிதை என்றைக்கும் காலத்தின் குரல் .

சுப்ரபாரதிமணியனின் உரையில்.. பெண்கள் மீதான வன்முறை தொடர்ந்து கொண்டிருக்கிறது. ஒரு சமூகம் மோசமான திசையை நோக்கிச் சென்று கொண்டிருப்பதன் அடையாளம் இந்த பெண்கள் மீதான வன்முறை. இதை நல்ல படைப்புகளை வாசிப்பதன் மூலம்மாற்றுச்சிந்தனைகளை உருவாக்குவதம் மூலம் குறைக்கலாம்.
 உலகமயமாக்கல் பெண்களையும் குழந்தைகளையும் வெகுவாக பாதித்து விட்டது. பெண்களை வேலைக்குப் போய் பணம் சம்பாதிக்கிறவர்களாகவும், பாலியல் சுரண்டலுக்கு பலியாகிறவர்களாகவும் மாற்றி விட்டது. குழந்தைகள் கல்வியை வன்முறையாகவே பார்க்கிறார்கள்,பெண்கள் பற்றியச் சிந்தனைகள் பகுத்தறிவின் துணை கொண்டே மாற்றியமைக்க முடியும்  .சமரசமற்ற சுயமரியாதை கொண்ட பெண்களின் உலகமே முன்னேறிய சமூகத்தின் அடையாளமாக இருக்கும்.

1.அம்சப்ரியா , பொள்ளாச்சி, 2.இளஞ்சேரல், கோவை  3. சூரியநிலா , சேலம்
4. சந்திரகுமார் , கோவை     5. பன்னீர்செல்வம், மதுரை 6.பேரா. ராம்கோபால், கோவை 7.பேரா. ஆர்.பாலகிருஷ்ணன் , கோவை 8. செ.இராசு , ஈரோடு
9. இடைப்பாடி அமுதன் , நாமக்கல் 10.சி.ஆர்.ரவீந்திரன், கோவை  இவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விருது பெற்றவர்கள் உரை நிகழ்த்தினர்  :
பெண் எழுத்தாளர்களுக்கான சக்தி விருது: விருது பெற்றவர்கள்
மனுஷி ,பாண்டிச்சேரி
ஜெயஸ்ரீ , திருவண்ணாமலை( மொழிபெயர்ப்பாளர் )
நித்யா ( மகிழினி ), கோவை
ஜெயந்தி  , பெங்களூர் ( மொழிபெயர்ப்பாளர் )
உமா ஜானகிராமன் ., பெங்களூர்
நர்மதா, சென்னை
செங்கவின், பொள்ளாச்சி
கீதா பிரகாஷ், பொள்ளாச்சி
பேரா.சுஜாதா , குன்னூர்
பேரா. தி.சாந்தி திண்டுக்கல்
ஜெயந்தி சங்கர் ( சிங்கப்பூர் )
வத்சலா ரமேஷ் ( லண்டன் )
கீதா சச்சின் ( திருப்பூர் )
கவிதா மெய்யப்பன் ( திருப்பூர் )
குக்கூ அழகேசுவரி ( ஊத்துக்குளி )
சாந்தா மாணிக்கம் ( திருப்பூர் )

குறும்படம்:
அரவிந்தன் , கோவை
மணிவண்ணன், ஊட்டி
விக்னேஷ், தஞ்சை
மு.இளங்கோவன் , பாண்டி

                    



 .