சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




திங்கள், 20 ஏப்ரல், 2015

நீண்ட கனவும், அறச்சீற்றமும்:
------------------------------சுப்ரபாரதிமணியன் கதைகள்
       சுப்ரபாரதிமணியனின் பிரசுரமான சிறுகதைகள் எண்ணிக்கையில்  250 இருக்கும் என்று தோன்றுகிறது. அவை 15 தொகுப்புகளாகவும் இன்னும்  இரு புதிய  தொகுப்புகளுக்கான கதைகளாகவும் உள்ளன.இரண்டு ஆண்டுகளுக்கு முன் அவரின் தேர்ந்தெடுக்கப்பட்ட  15 கதைகளின் தொகுப்பு “ விமோசனம்காவ்யா வெளியிட்டுள்ளது. 1978 அவரின்  முதல் சிறுகதை திருப்பூரிலிருந்து வந்த யுக விழிப்பு இலக்கிய இதழில் வெளிவந்தது. அப்புறம் 1984ல் “ நாலு பேரும் பதினைந்து கதைகளும் “ நூல் ...அவரின் முதல் தொகுப்பு  அப்பா.
இரண்டாம் தொகுப்பு “ மாறுதடம் “ முதற் கொண்டு “ ஓலைக்கீற்று “ தொகுப்பு வரை காவ்யாவே  வெளியிட்டுள்ளது.  அவரின் ஏழு நாவல்களில்
 “ சாயத்திரைமுதற்கொண்டு “ தேனீர் இடைவேளை “ வரையும்  கூட காவ்யா வெளியீடே..
      இவரின் ஆரம்ப காலக் கதைகளில்  வெகு யதார்த்தமான  அவரின் குடும்பம் சார்ந்தவர்கள் பற்றின சித்தரிப்புகளாய் அமைந்திருந்தன, அப்பா என்ற ஆளுமையும் கிராமச் சூழலும், சேவற்கட்டு வாழ்க்கையும்  குறிப்பிடதக்கதான குடும்ப நிகழ்வுகளும்  சிறுகதைகளாயிருந்தன.  அவற்றையெல்லாம்  அவரின் அனுபவக் கதைகளாக்க்  கொள்ளலாம். அனுபவ விஸ்தரிப்பே கதைகள் என்ற வரையறையை விட்டு வெளியே வந்த போது இவருக்குத் தென்பட்ட உலகம் பரந்திருந்தது. அந்த பரந்த உலகத்தை கூர்ந்து அவதானித்து கதைகளுக்குள் கொண்டு வந்த போது  நிறைய எழுத ஆரம்பித்தார்.
     செகந்திராபாத் வாழ்க்கையை இவர் மற்றும் சிலர் , சுடுமணல், நகரம் போன்ற நாவல்களில் வெளிப்படுத்தியிருந்தாலும் அந்த நாவல்களில் அகப்படாதவற்றை சிறுகதைகளாக எழுதியுள்ளார். ஒரு தமிழன் அந்நிய மொழி பேசும் மாநிலத்தில் வாழும் போது அவன் அந்நியமாக்கப்படுகிற சூழலும், மதக்கலவரங்களால் மனிதர்கள் சிதறுண்டு கிடப்பதும், அந்த பிரதேசத்திற்குரிய விசேச மனிதர்களும் இடம் பெற்றார்கள். அசோகமித்திரனின் எல்லைகள் கூட செகந்திராபாத் வாழ்க்கை பற்றி எழுதும் போது குறுகியிருந்தது என்று சொல்லலாம். அவர் இன்னும் செகந்திராபாத் வாழ்க்கை பற்றி எழுதிக் கொண்டேயிருக்கிறார். அவரைப் போலவே சுப்ரபாரதிமணியனும் செகந்திராபாத்தில் இருந்த எட்டாண்டு கால  வாழ்க்கை அனுபவங்களையும், கவனிப்பையும் தொடர்ந்த சிறுகதைதகளுக்குள் கொண்டு வந்திருக்கிறார்.  நகரம் தரும் பல்வேறு பரிமாண அனுபவங்களையும்  கதைகளில் தந்திருக்கிறார். அதிலும் குமுதம் ஏர் இந்தியா இலக்கியப் போட்டியில் பரிசு பெற்று  இங்கிலாந்து, அய்ரோப்பிய  நாடுகளுக்கு  பயணம் மேற் கொள்ள் ஆதாரமான “நகரம்சிறுநாவல் கூட செகந்திராபாத்தை மையமாகக் கொண்டதே.( அவரின் அந்த வெளிநாட்டு பயண் அனுபவங்களை “ மண் புதிது “என்று காவ்யா வெளியிட்டுள்ளது.)
     செகந்திராபாத் வாழ்க்கைகுப் பின்னால் அவர் தன் சொந்த ஊரான திருப்பூர் வந்த பின்  பெரிய தொழில் நகரான திருப்பூரை மையமாகக் கொண்டு  “சாயத்திரையைஎழுதினார்.  அது ஆங்கிலம், இந்தி., கன்னடம், மலையாளம், வங்காளம் என மொழிபெயர்ப்பாகியுள்ளது.  அவரின் “ சாயத்திரைமுதற் கொண்டு “ தேனீர் இடைவேளை “ வரை காவ்யா வெளியிட்டுள்ளது. இந்த நாவல்கள் தரும் திருப்பூர்  வாழ்க்கையின் அனுபவங்களை மீறிய அவதானிப்புகளை இவரின் சிறுகதைகளின் பரப்பில் காணலாம்.  தொழில் நகரம் காட்டும்  உழைக்கும் விளிம்பு நிலை  மனிதர்களைப் பற்றிப் பேசுகிறார். உலகமயமாக்கல்  ஒரு பெரும் தொழில் நகரத்தை பாதித்து பெண்களையும், குழந்தைகளையும்  சிதைத்து வருவதை விரிவாகச் சொல்லியிருக்கிறார்.சுற்றுச்சூழல் பிரச்சினைகளும், மனித உரிமை பிரச்சினைகளும் அவர்களுள் எப்படி வடிவெடுத்திருக்கின்றன என்பதையும் விரிவாகச் சொல்லியிருக்கிறார்.  வாழ்க்கையையும், இலக்கியத்தையும் ஒரு சேர  கவனிக்கிற காரணத்தாலே சுப்ரபாரதிமணியனின் எழுத்துக்கள் காலத்தின் கட்டாயமாக வெளிப்பட்டிருப்பதில்  அவருக்கு இணை யாருமில்லை.அவ்வளவு  விரிவான வகையில்  அவதானிப்பும் வாழ்க்கையின் மீதும்,பிரச்சினைகள் மீதும். கொண்டுள்ளார். அவற்றை சமூகம் மீதான எதிர்வினையாகவும், விமர்சனமாகவும் படைப்பை உருவாக்கியிருக்கிறார். பிரச்சினைகள் பற்றி பேசுவதற்காக எழுதப்பட்டவை  அல்ல அவை. வாழ்க்கையை விவரிக்கும் போது  கதை மாந்தர்கள் எதிர் கொள்ளும்  பிரச்சினைகள் வெளிப்படுகின்றன, அவை இன்றைய காலத்தின் தொழில் நகரம்  சார்ந்த விஸ்வரூபங்களாக பரிமாணம் பெற்று விடுகின்றன. நகரம் சார்ந்த விளிம்பு நிலை பாட்டாளி வர்க்கத்தினர் பற்றி இவ்வளவு விரிவாயும், அதிகபட்சமான சிறுகதைகளையும் வேறு யாரும் தமிழ் சூழலில் எழுதி இருப்பதாகத் தெரியவில்லை. சுற்றுச்சூழல் அக்கறை பற்றி நிறையவே சிறு கதைகளில் விவாதித்திருக்கிறார். இவரின் சாயத்திரை  நாவல் வெளிவந்து பத்து ஆண்டுகள் ஓடி விட்டன. அந்நாவலில் அவர் எழுப்பின சுற்றுச்சூழல் பற்றினக் கேள்விகள் இன்னும்  தீர்வில்லாதவையாக உள்ளன. திருப்பூர் சாயப்பட்டறை பற்றிச் செய்திகள் வேள்விப்படுகிற ஒவ்வொருவரும் சாயத்திரையை மறந்து விட முடியாதபடிக்கு ஒரு படிமமாகவே அது நிலைத்து விட்டது.பயணங்கள் பற்றிய இவரின் கட்டுரைகள், நூல்கள் தவிர்த்து வெளிநாட்டு அனுபவங்களை மையமாக்க் கொண்ட இவரின் கணிசமான கதைகளும்  குறிப்பிட்தக்கவை.இவரின் கனவு இலக்கிய இதழ் இவ்வாண்டு வெள்ளி விழாவைத் தொட்டுள்ளது.செகந்திராபாத்தில் இருந்த போது அவர் ஆரம்பித்த்து. கடந்த 25 ஆண்டுகளில் கனவில் இவர் பல புதிய  படைப்பாளிகளுக்கு  இடம் அமைத்துக் கொடுத்திருக்கிறார்.. கனவில் வெளிவந்த இவரின் சிறுகதைகள் சொற்பமே.ஆனால் அவையும் ஏதோவொருவகையில் முக்கியத்துவம் வாய்ந்தவை. ( கனவு இதழில் முதல் இருபது ஆண்டுகளில் வெளிவந்த தேர்ந்தெடுக்கப்பட்டப் படைப்புகளின் தொகுப்பை காவ்யா  வெளியிட்டு பெருமை சேர்த்தது.)
      அயலகத்தமிழர்களின் வாழ்க்கையைப் பற்றி இவரின் பயண அனுபவக்கட்டுரைகளைத்தவிர இடம் பெற்றுள்ள சிறுகதைகளும் குறிப்பிடத்தக்கவை.செகந்திராபாத் சூழலில் அந்நியப்பட்ட தமிழன்களைப் போலவே இவர்களும் அன்னியப்பட்டே வாழ்க்கையைக் கடத்துகிறார்கள்.
 பெண் பாத்திரங்களின் உருவாக்கத்தில் அவர் கொள்ளும் அக்கறையும், தேர்ச்சியும் ஆச்சர்யப்படுத்துபவை. கஸ்ட அனுபவங்களுக்குள் இவர் தன்னைத் தோய்த்துக் கொண்டதுதான் இதற்குக் காரணம் என்று தோன்றுகிறது. செகந்திராபாபாத்தோ, திருப்பூரோ அவர் வெவ்வேறு களங்களுக்குள்ளும், இடங்களுக்குள்ளும் பயணிக்கிறார். போராடும் மனிதர்களின் ஆன்மாவைத் தொட்டுக் கொண்டே போகிறார். சொல்முறை உத்தி சாதாரண உரையாடல்களாலும், இறுக்கமான வாக்கிய அமைப்புகளாலும்  நிறைந்திருக்கிறது. சமூக மனிதர்களின் உளவியலுக்கேற்ப அவை நகர்ந்து செல்கின்றன.   வெவ்வேறு மையங்களுகு செல்வதாக்த் தோன்றினாலும் அவை மனிதம், அன்பு, சமூக விமர்சனம் என்ற வகையிலேயே அடைக்கலம் கொள்கின்றன. எழுத்தாளன் அவனின் அரசியலை வெளிப்படுத்தாமல் எங்கும் ஒளிந்து கொள்ள இயலாது.  தன் அரசியல் முகத்தை சுப்ரபாரதி மணியன் என்றைக்கும் ஒளித்து வைத்துக் கொண்டதில்லை. மாற்று அரசியல் குறித்த அக்கறையைஅவை சுட்டுகின்றன. அவரின் மார்க்சியம் சார்ந்த சார்பை அவரின் கட்டுரைகளில் இனம் கண்டு கொள்ளலாம். ஆனால் படைப்பாக்கத்தில் அவை கோரும் தத்துவ சார்பை எப்போதும் உரக்கத் தொனித்ததில்லை யதார்த்தம்  மீறிய மாயத்தன்மையை அவரின் சில கதைகளில் அடையாளம் கண்டு கொள்ளலாம்.   அவை பெரும் பாலும் கனவு நிலைகளில் வெளிப்படுகிறது. எந்த முன் தீர்மானமும் இன்றி கதைகள் நகரும் போது சொடுக்கப்படும் சாட்டையின் வீச்சை  சுலபமாகக் கண்டு கொள்ளலாம். மனிதத்துவத்திற்கு எதிராக நடக்கும் எல்லா விதமானக் கொடூரங்களையும் , அதீத செயல்களையும் அடையாளம் கண்டு கொள்கிறார். அடையாளப் படுத்துகிறார்.விளிம்புநிலை மக்களில் பொறுக்கிகள், எளிய பெண்கள், விலைமாதர்கள், ஆதிவாசிகள், சுற்றுச்சூழல்வாதிகள் என்று பலரை அடையாளம் கண்டு கொள்ளலாம். மையங்களைக் தகர்த்தெரிந்த  விளிம்பு நிலை மனிதர்கள் இவரின் கதைகளில் தென்படுகிறார்கள். குழந்தைகளின் அபூர்வ உலகத்தை  சரியாக மனதில் பிடித்துக் கொள்ளலாம்.  சாயம் அப்பிய முகங்களோடு அலையும் மனிதர்களும், தனியார் மையத்தை சகித்துக் கொள்ள முடியாமல் திணறுபவர்களும், பெரும்நகரத்தில் கை விடப்பட்டவர்களும், நகரம் உருவாக்கும்  உதிரித்தொழிலாளர்களும் கூட இக்கதைகளில் அழுத்தமாக இடம் பெற்றிருக்கிறார்கள்.    நம்முடன் உறவாட இவ்வளவு மனிதர்கள் இருக்கிறார்களா என்ற எண்ணமும் , நம்பிக்கையும் இவரின் கதாபாத்திரங்களோடு பயணிக்கும் போது  தென்படுகிறது. வாழ்க்கை எவ்வளவு வகையான  மனிதர்களை நம்மோடு இணைத்துக் கொண்டு செல்கிறது என்பது விசித்திரமானது.        ஒரு முதிய மனிதனின் அனுபவத்தோடும், இளைஞனின் துடுப்போடும்  உள்ள இக்கதைகளை  படிக்கும் எந்த வாசகனும் தமிழ்ச் சிறுகதை வாசகப் பரப்பின் விரிவை அடையாளம்  கண்டு கொள்வான்.சிறுகதைகள் மூலம் பிரமாண்டமாய் வெளிப்படும் ஆளுமை சுப்ரபாரதிமணியனுக்குள் இருப்பதை சரியாக உணர்ந்து கொள்வான்.      
                                                             -காவ்யா

(  விலை ரூ 950 / 1200 பக்கங்கள். வெளியீடு  : காவ்யா, செ