சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




வெள்ளி, 14 நவம்பர், 2014

எஸ். இராமகிருஷ்ணனின் “ நிமித்தம் “ நாவலுக்கு 

திருப்பூரில் விருது 

சுப்ரபாரதிமணியன்


எஸ். இராமகிருஷ்ணனின் “ நிமித்தம் “ நாவலுக்கு ( உயிர்மெய் பதிப்பக வெளியீடு, சென்னை  )  திருப்பூரில்” யாதும் ஊரே. யாவரும் கேளிர்” விருது   இன்று தரப்பட்டது.  காது கேளாதோர் பள்ளி சார்பில் தரப்பட்டது இவ்விருது… இப்பள்ளி முன்பு நம்மாழ்வார், ஜெயமோகனுக்கும் விருது வழங்கியுள்ளது.

புதன் மாலை திருப்பூர் கோதபாளையம் காது  கேளாதோர் பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் பள்ளி தாளாளர் முருகசாமி பரிசு வழங்கினார், பள்ளி அறக்கட்டளைத் தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

காது கேளாத ஒருவைன் வாழ்க்கையை மையமாகக் கொண்ட்து ” நிமித்தம்”  நாவல்.

விருதைப் பெற்றுக்கொண்டு எஸ். ராமகிருஷ்ணன் பேசினார்: “ யாரைப் பற்றி நான் எழுதினேனோ அவர்களே என்னை அங்கீகரித்து விருது தருவது பெரிய கவுரவமாகும். சின்ன கிராமத்து அரசு பள்ளியில் படித்து எழுத்தாளன் ஆனதற்கு நல்ல ஆசிரியர்கள், நண்பர்கள் வழிகாட்டிகளாக இருந்தனர்..  ” யாதும் ஊரே. யாவரும் கேளிர்” என்பது உலகளவிலான மானுடத்தத்துவம். அந்தப் பெயரில் விருது வழங்கப்படுவது சிறப்பானது தங்கள் உடல் குறையை மீறி இப்பள்ளி மாணவர்கள்  சாதனை புரிந்து வருவது முன்னுதாரணமாக்த் திகழ்கிறது .என் எழுத்துலகப் பயணத்தில் துணை நிற்கும் மனைவி, மகன்கள், தோழர் எஸ்.ஏ. பெருமாள் ஆகியோருக்கு நன்றி..புகைப்படத்துறையில் இங்குள்ள மாணவர்களுக்கான படிப்புப்பிரிவு அவர்களுக்குப் பெரிய கொடை.   ‘ என்றார்

.       எஸ். இராமகிருஷ்ணனின் படைப்புகள் பற்றி சுப்ரபாரதிமணியன் பேசினார். ”  நாவல் பரப்பில் விரிந்த களன்களைக் கொண்டவை அவரின் நாவல்கள்.யதார்த்தமும், புனைவின் உச்சமும்  கொண்டு வெவ்வேறு பரிமாணங்களில் தமிழுக்கு பெரும் கொடையாக அவரின் படைப்புகள்  விளங்குகின்றன. விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கை குறித்தப் படைப்புகளில் அக்கறை கொண்டவர் என்பதை காது கேளாதவர் உலகம் பற்றி “ நிமித்தம் ” நாவலில் அவர்  எழுதியிருப்பது நிரூபிக்கிறது “ என்றார்.

தரணிதரன் இயக்கிய சிலப்பதிகாரம் காவிய நாடகம் , வேற்று கிரகவாசி, வகுப்பு ஆகிய நாடகங்களை காது கேளாதோர் பள்ளி மாணவ மாணவியர் நடத்தினர்.

( நிர்வாகி காது கேளாதோர் பள்ளி 9488871537 , 9965631066 )