சுப்ரபாரதிமணியன்
நீ யாராக மாற விருப்பம்
ஒருவரையொருவர் கேட்டுக் கொண்டனர்.
நான் புலியாக
வீரத்தின் சின்னமாக
ஆணின் ஆகுருதியாக…
நான் தென்றலாக
பூவாக எங்கும் உலாவி…
ஆடை களைந்து
ஆடிய ஆட்டத்தில்
உடம்பு சோர்ந்து விடவில்லை
என் பிரிய மீனே என்று கொஞ்சினான்
என் பிரிய காற்றே என்றாள் அவள்.
உடம்புகள் பிரிந்து
தனித்தனியாக்க் கிடந்த போது
புலியாக இருந்த்தாக அவன் சொன்னான்.
இன்னும் சிங்கமாக, காட்டுக்குருவியாகவும் கூட.
நானும் தென்றலாக உலவி வந்தேன்
அப்புறம் புறாவாகவும், காடையாகவும் கூட.
வெவ்வேறு உருவங்களில்
திரிந்து விளையாடி
சுயம் பெற்றதாகச் சொல்லினர்.
தந்த முத்த்த்தில்
மீண்டும் விளையாட்டுக்கு திரும்பினர்
இன்னும் புலியாகவும், பூவாகவும்.
வேறு வேட்த்தில் திரும்பத்திருமப.
–