சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




செவ்வாய், 22 மார்ச், 2011

அண்டை வீடு: பயண அனுபவம்

கவி நஸ்ருல் இஸ்லாம்
-----------------------


டாக்கா பல்கலைக்கழக வளாகத்திலுள்ள மசூதிக்கருகில் கவி நஜ்ரூல் இஸ்லாமின் கல்லறை தென்பட்டது. அவரின் விருப்பமாக அந்த மசூதிக்கருகில் புதைக்கப்பட்டிருக்கிறார். ரவீந்திரநாத் தாகூர் மிகவும் நேசித்த கவி நஜ்ரூல் இஸ்லாம்.

‘வசந்தம்’ என்ற இசை நாடக நூலை தாகூர் நஜ்ரூலுக்கு சமர்ப்பணம் செய்திருந்தார். 1923ல் அலிபூர் சிறையில் அவர் இருந்தபோது தாகூர் அந்நூலின் பிரதியைக் கொடுத்தனுப்பி யிருக்கிறார். அதன் பின் அவரைப்பற்றி அறிந்து சிறையே கொண்டாட்டமாக, தாகுரின் பிரதி வந்ததை ஒரு மாபெரும் கவி தங்களுடன் இருப்பதை நிகழ்த்தியிருக்கிறது. 1922ல் நஜ்ரூல் " தூமேது" என்ற பத்திரிகையைத் தொடங்கினார். அதில் தாகூர் எழுதிய ஆங்கிலேயர் எதிர்ப்புக் கவிதையை எழுதியதற்காகவே ராஜ துரோகக் குற்றத்திற்காக கைது செய்யப்பட்டார்.

சிறையில் நஜ்ரூ லின் கைகளிலும் கால்களிலும் விலங்கிடப்பட்டு நடத்தப்பட்டிருக்கிறார். அதை எதிர்த்து நஸ்ரூல் உண்ணாவிரதமிருந்தார். உடல்நலமும் மோசமானது. நாற்பதுநாள் உண்ணாவிரதத்தை ஷில்லாங்கில் இருந்து ரவீந்திரநாத் தாகூர் தந்த தந்திக்குப் பின்னால் நிறுத்திக் கொண்டார்.


சிறையிலிருந்து வெளிவந்த பின் ஓர் இந்துப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். விஷக் குழல், அழிவுகீதம் என்ற இரு கவிதைநூல்களை அரசாங்கம் பறிமுதல் செய்தது. ‘கலப்பை’ என்ற பெயரில் விவசாயத் தொழிலாளர்களுக்காக ஒரு பத்திரிககையை நடத்தினர். அவரின் இலக்கியப் பணி இருபது ஆண்டுகளில் முடங்கிவிட்டது. இருபது கவிதைத் தொகுதிகள், பதினைந்து இசை நூல்கள், மூன்று வீதம் நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள், நாடகங்கள், ஜந்து கட்டுரைத் தொகுப்புகளை வெளிக்கொணர்ந்திருக்கிறார்.

1942ல் ஜூ லையில் கல்கத்தா வானொலி நிலையத்தில் கவிதை வாசிப்பில் ஈடுபட்டிருந்தபோது பேச்சுத் திறன் நின்றுபோனது. அது 34 ஆண்டுகள் பின்னரும் நீடித்தது. இளம் வயதிலேயே (8ம்) தந்தையை இழந்து வாழ்நாள் முழுவதும் வறுமையில் வாடியவர். அவரின் இரண்டு குழந்தைகள் அகால மரணமடைந்தபின. பள்ளி, மசூதி, புரோகிதம், ரொட்டிக்கடை என பணிபுரிந்திருக்கிறார். மனைவிக்கு முடக்கு நோய்.. தனிப்பட்ட வாழ்க்கையின் சோகத்தை மீறி வாய்திறந்து உரக்கச் சிரிக்கிற தன்மைகொண்டவராயிருந்தவர் பேசும் திறனில்லாத உணர்ச்சியற்ற ஜடமாக வாழ்க்கையைக் கழிக்க வேண்டியிருந்தது. முஸ்லிமாக இருந்தாலும் இராமாயண, மகாபாரத இதிகாசங்களில் அக்கறை கொண்டு படித்து அந்த இதிகாசப் பாத்திரங்களை தனது படைப்புகளில் கொண்டு வந்தவர்.

விடுதலைப் போராட்டக் கட்டங்களில் அவரின் பாடங்கள் இளைஞர்களுக்கு ஊக்கம் தந்திருக்கின்றன. அவரின் எழுபதாம் ஆண்டு நிறைவை வங்கதேசமும், மேற்கு வங்க அரசும் கொண்டாடின. இந்தியா, பாகிஸ்தான் அரசுகள் ஒரு சேர பென்சன் அளித்தது இவருக்கே. வங்கதேசம் விடுதலை பெற்றபின் 1972 மே மாதம் அவரின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக வங்கதேச அரசு டாக்கா அழைத்தது. மாடிவீடும், காரும், உடல்நிலையைக் கவனிக்க மருத்துவ


வசதியும் தரப்பட்டன. 1973ம் ஆண்டு கவுரவ டாக்கா பட்டம் வழங்கப்பட்டது. அந்நாட்டின் மிக உயர்ந்த விருதான "21ம் நாள் பதக்கம்" 1975ம் ஆண்டில் அவருக்கு அளிக்கப்பட்டது. அதன்பின் ஓராண்டுதான் உயிருடன் இருந்தார்.

அவரது பாடல் "சல் சல் சல்.." வங்கதேச ராணுவ அணிவகுப்புப் பாடலாக இன்னும் உள்ளது. 3000க்கும் மேற்பட்ட அவரின் பாடல்களில் ஒன்று அது.நஸ்ரூலை தாகூர் போற்றிக் கொண்டாடினார். நஸ்ரூல் கவிதைகளின் போராட்ட உணர்வும், உணர்ச்சி வேகமும் சர்ச்சைக் குள்ளாகியிருக்கிறது. விடுதலைப் போராட்டம் கவிதைகளின் அடிநாதமாக இருந்திருக்கிறது. ஆனால் தாகூர் அவரை வெகுவாகப் புகழ்ந்து மெச்சியதும் சர்ச்சைக்குள்ளானபோது போரும், வீரமுழக்கமும் கவிதைக்கு அவசியம் சுதந்திர எழுச்சிக்கு அவசியம், என்றார்.

டாக்கா நகரின் பல இடங்களில் தாகூர் பெயர் காணப்படுகிறது. அவரின் 150ம் ஆண்டு கொண்டாட்டம் பற்றிய பேனர்களை நகரில் பார்த்தேன். 12 வயது முதல் எழுதத் தொடங்கிய தாகூர் இங்கிலாந்து சென்றபோது ‘கீதாஞ்சலி’ என்ற தலைப்பில் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து எடுத்துச் சென்றது அவருக்கு பலத்த வரவேற்பைத் தந்தது. நோபல் பரிசும் பெற்றார். 1905ம் ஆண்டு வங்கதேசப் பிரிவினை எதிர்ப்பு இயக்கத்திற்குத் தலைமை தாங்கினார். 1919ல் ஜாலியன் வாலாபாக் படுகொலையைக் கண்டித்து ‘சர்’ பட்டத்தை துறந்தார். அரசாங்கம் தயாரித்த புரட்சியாளர்கள் பட்டியலில் அவர் பெயரும், அவரின் அரசியல் போராட்ட ஆதரவு விஷயங்களில் இடம் பெற்றது. சாந்தி நிகேதனில் பள்ளி ஆரம்பித்தபின் பணக்கஷ்டம் இருந்தது.

நஸ்ரூலை வித்ரோஹி " புரட்சிக்காரன்" என்றே தாகூ ர் பல இடங்களில் குறிப்பிட்டு அழைத் திருக்கிறார். டாக்காவாசிகளுக்கு நஸ்ரூல் தாகூர் அளவு விருப்பமானவராக இருந்திருப் பதை அவரின் பாடல்கள் டாக்கா கடைகளில் ஆடியோ கேசட்டுகளாகக் கிடைப்பதன் மூலம் அறிந்தேன்.