சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




வியாழன், 22 ஜூலை, 2010

பழமலையும், ப க பொன்னுசாமியும்....

சமீபத்தில் சில தமிழ் நூல்களின் ஆங்கில மொழிபெயர்ப்புகளைப் பார்க்க நேர்ந்த்து. விழுப்புரம் பழமலையின் “ ஜனங்களின் கதை “ கவிதை நூல் ஆங்கில வடிவம் பெற்றுள்ளது. மொழிபெயர்த்துள்ளவர் தில்லியில் வசிக்கும் ராஜா அவர்கள். தலைப்பை அப்படியே வைத்துள்ளது இது ஆங்கில வாசகர்களுக்கு உரியது அல்லவே என்ற எண்ணத்தை உருவாக்கியது. ஆனால் கவிதைகளின் மொழிபெயர்ப்பும் , பழமலை வெளிக்கொணர்ந்த நுணுக்கமான அவர் பகுதி சார்ந்த மக்களின் அனுபவங்களும் சரியாகவே மொழிபெயர்பில் படிக்கக் கிடைத்திருப்பது ஆங்கில வாசகனிடம் சரியாகப் போய் சேரும் என்ற நம்பிக்கையைத் தருகிறது. பழமலையின் மொத்தக் கவிதைகள் “ காவ்யா “ பதிப்பகத்தினரால் முழுத் தொகுப்பாக வெளிவந்திருக்கும் இந்த நேரத்தில் இந்த ஆங்கில மொழிபெயர்ப்பும் மகிழ்ச்சி தருகிறது.
உடுமலையில் வசிக்கும் முந்நாள் துணை வேந்தர் ப க பொன்னுசாமியின் ”படுகளம்” நாவல் கொங்கு பகுதி பற்றிய குறிப்பிடத்தக்கதாகும் ( மணிவாசகர் பதிப்பகம், சென்னை, ரூ 300)
.இதன் ஆங்கில மொழிபெயர்ப்பின் தட்டச்சுப் பிரதியின் சில பகுதிகளை சமீபத்தில் படிக்க வாய்ப்பு கிடைத்தது. தலைப்பு ” அவைட்டிங் காடஸ் “
கொங்கு பிரதேச வழக்குகளும், பேச்சும் ஆங்கில வாசகனுக்கு புதிது போல தோற்றம் கொள்ள செய்தாலும், மக்களின் அனுபவங்கள் நேரடியாக புரிந்து கொள்ளும்படி மொழிபெயர்ப்பு அமைந்திருந்தது. பொன்னுசாமியின் இயற்பியல் சார்ந்த ஆங்கிலக்கட்டுரைகளை வாசிக்கிற போது இந்த நாவலின் மொழிபெயர்ப்பையும் அவரே செய்திருக்கலாம் என்று தோன்றியது.
”படுகளத்” தை அடுத்து அவர் எழுதி வரும் முந்தின நாவலின் தொடர்ச்சியான நாவலை ஆங்கிலத்திலும் அவரே எழுதலாம்.
பொள்ளாச்சி சிற்பிபாலசுப்ரமணியனின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூலில் டாக்டர் கே எஸ் சுப்ரமணியனின் மொழிபெயர்ப்பு ஆங்கில வாசகனை மனதில் கொண்டு நுணுக்கமாக உருவாக்கப்பட்டிருந்தது.இந்த்த் தேர்ச்சியை அவர் மொழிபெயர்த்துள்ள ஜெயகாந்தனின் நாவல்களிலும் காணலாம்
எனது “ பிணங்களின் முகங்கள் “ நாவல் கோவை கஸ்தூரி சீனிவாசன் அறக்கட்டளையின் 2003 ம் ஆண்டிற்கான சிறந்த நாவல் பரிசு பெற்றது பரிசு பெற்றது.( இப்பரிசை பிரபஞ்சன், நாஞ்சில் நாடன், சிவசங்கரி, சோலைசுந்தரப்பெருமாள், பாவைச்சந்திரன் போன்றோரும் பெற்றிருக்கின்றனர் )இது சமீபத்தில் கோவையைச் சார்ந்த பேராசிரியர்
ஆர். பாலகிருஸ்ணனின் மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ளது. நவீன இலக்கியத்தோடு பரிச்சயம் கொண்டவர் என்ற வகையில் அவரின் மொழிபெயர்ப்பில் காணப்படும் உற்சாகம் கவனிக்க வேண்டியதாக இருக்கிறது. இவர் இளம் வயது பேராசிரியர் என்பதால் , ஓய்வு பெற்ற பேராசிரியர்களின் வழமையான மொழிபெயர்ப்பில் இருந்து மாறுபட்டிருக்கிறது எனபது ஆறுதலானது.

*சுப்ரபாரதிமணியன்