Thursday, July 22, 2010

“ கனவு “ இலக்கிய இதழ் தொகுப்பு நூல் வெளியீடு

கனவு இலக்கிய இதழ் 23 ஆண்டுகளாய் வெளிவந்து கொண்டிருக்கிறது. 1987ல் செகந்திராபாத்தில் சுப்ரபாரதிமணியனால் ஆரம்பிக்கப்பட்ட கனவு இதழ் தற்போது அவர் வசித்து வரும் திருப்பூரில் இருந்து தொடர்ந்து காலாண்டு இதழாக வெளிவந்து கொண்டிருக்கிறது. கடந்த் 20 ஆண்டுகளில் கனவு இதழில் வெளிவந்த தேர்ந்தெடுக்கப்பட்ட படைப்புகளின் தொகுப்பு நூல் வெளியீட்டு விழா சமீபத்தில் திருப்பூரில் நடைபெற்ற சாகித்திய அகாதமியின் ” எழுத்தாளர்களுடன்ஒரு மாலை ”என்ற
நிகழ்ச்சியின் போது வெளியிடப்பட்டது. கனவு தொகுப்பு நூலை சாகித்திய அகாதமியின் தமிழ் ஆலோசனைக்குழு ஒருங்கிணைப்பாளர் கவிஞர் சிற்பி பாலசுப்ரமணியன் வெளியிட்டார். விழாவில் எழுத்தாளர்கள் பிரபஞ்சன், பொன்னீலன் , பாரதிகிருஸ்ணகுமார், சிங்கப்பூர் எழுத்தாளர் டாக்டர்லக்சுமி சுப்ரபாரதிமணியன், ஆகியோர் உரையாற்றினர்.கனவு தொகுப்பு நூலை காவ்யா பதிப்பகம், சென்னை வெளியிட்டுள்ளது. 700 பக்கங்கள் விலை ரூ 350/.
இடம் பெற்றிருக்கிற சில படைப்பாளிகள்:க நா சுப்ரமணியன், பசுவையா, நகுலன், பிரம்மராஜன், கல்யாண்ஜி, புவியரசு, ஜெயமொகன், எஸ் ராமகிருஸ்ணன், பாவண்ணன், பெருமாள் முருகன், இந்திரன், காலசுப்ரமணியன், அ மார்கஸ், சுஜாதா, அசோகமித்திரன், சா கந்தசாமி, ஜெயந்தன், தமிழவன், நாஞ்சில் நாடன், அ முத்துலிங்கம், ரெ பாண்டியன், சுதேசமித்திரன், ஜி முருகன், எஸ் சங்கரநாராயணன், காலசுப்ரமணியன், நா கண்ணன்.கனவு 64 ம் இதழ் சமீபத்தில் வெளிவந்துள்ளது. கனவு ஆண்டு சந்தா ரூ 50/. மட்டும், ஆயுள் சந்தா ரூ 1000/, காசோலை, வரைவோலை அனுப்ப:
கனவு, 8/2635 பாண்டியன் நகர் , திருப்பூர் 641 602. (09486101003) * கனவு இதழ் இணைய தளத்தில் காண: கீற்று.காம்*
சுப்ரபாரதிமணியனின் இணைய தளம்; rpsubrabharathimanian.blogspot.com


செய்தி: Issundarakannan7@gmail.com