சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




திங்கள், 14 ஜூலை, 2025

குறும்படங்கள் திரைப்படத்துறையில் நுழைவதற்கான விசிட்டிங் கார்டு அல்ல “ ” குறும்படங்கள் திரைப்படத்துறையில் நுழைவதற்கான விசிட்டிங்க் கார்டு அல்ல . வணிக நோக்கமின்றி எடுக்கப்படுவதால் அவை கேளிக்கை மீறி செய்திகளையும் முன் வைக்கின்றன. வாழும் காலத்திலேயே சாதனை மனிதர்களைக் கொண்டாட ஆவணப்படங்கள் அவசியம்” என்று 17ஆம் ஆண்டின் திருப்பூர் குறும்பட விருதுகள் வழங்கும் விழாவில் பேசிய குறும்பட , ஆவணப்பட இயக்குனர்கள் குறிப்பிட்டார்கள். தமிழ்நாடு முழுவதும் இருந்து தேர்வு செய்யப்பட்ட பதினாறு பேருக்கு விருதுகளை எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் வழங்கினார். நிகழ்வுக்கு தூரிகை சின்னராஜ் தலைமை தாங்கினார்.நூலகர் இந்துமதி, சமூக ஆர்வலர் ராஜேந்திர பாபு, கவியரசன் உட்பட பலர் முன்னிலை வகித்தனர். நன்றியுரை : முத்துபாரதி வழங்கினார் முன்னதாக ” குறும்படங்களும், திரைப்படங்களும் “ என்றத் தலைப்பில் நடந்த கருத்தரங்கினை எழுத்தாளரும் வழக்கறிஞருமான ஜீவன் நடராஜன் தொடக்கி வைத்து திரைப்படப் பயிற்சிகளுக்காக இந்தியா முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பயிற்சிக்கல்லூரிகளின் செயல்பாடுகளை விவரித்தார். குறும்பட அனுபவங்களை விருது பெற்றவர்கள் கருத்தரங்கில் பகிர்ந்து கொண்டனர். கருத்தரங்கில் கீழ்க்கண்டோர் விருதுக்கள் பெற்றனர். திருவாளர்கள் எம்.கவுரிசங்கர் சென்னை கவின் ஜெரோம் கோவை இயக்குனர் எஸ். ஸ்ரீராம் , திருப்பூர் இயக்குனர் வி சீதாராமன் நடிகர் கோவை மூர்த்தி, நடிகர் பி கே சூர்யா இயக்குனர் ஜான்சி, நடிகை திருப்பூர் ம. அசோக் , கோவை ரமேஷ் ராதாகிருஷ்ணன், நடிகர் கோவை வி. இளைய பாரதி, நடிகர் நவீன் சந்தர், இயக்குனர் கோவை க.விசுவன், ஊட்டி சிக்கந்தர் பாட்சா ,இயக்குனர், மேட்டுப்பாளையம் ஆர். ஆனந்த், இயக்குனர் மேட்டுப்பாளையம் அய்யாறு ச புகழேந்தி இயக்குனர் அரவிந்தன் தஞ்சை இயக்குனர் 0 - கனவு / திருப்பூர் முத்தமிழ்ச்சங்கம்/டாப் லைட் நூலகம் ஆகியவை இணைந்து இந்த விருது விழாவை பல்லடம் சாலை டாப்லைட் நூலகத்தில் நடத்தின திருப்பூர் குறும்பட விருதுகள் 2025 விழா 17ஆம் ஆண்டில்.. 13/7/25 ஞாயிறு காலை 10 மணிக்கு. முன்னிலை: சுப்ரபாரதிமணியன் ( கனவு ) , தூரிகை சின்னராஜ் , இந்துமதி (டாப் லைட் நூலகம் ) 0 ” குறும்படங்களும், திரைப்படங்களும் “ உரைகளும் உரையாடல்களும் : கருத்தரங்கில் பங்கு பெற்று பேசுவோர் விருது பெறும் படைப்பாளிகள் : திருவாளர்கள் எம்.கவுரிசங்கர் சென்னை கவின் ஜெரோம் கோவை இயக்குனர் எஸ். ஸ்ரீராம் , திருப்பூர் இயக்குனர் வி சீதாராமன் நடிகர் கோவை மூர்த்தி, நடிகர் பி கே சூர்யா இயக்குனர் ஜான்சி, நடிகை திருப்பூர் ம. அசோக் , கோவை ரமேஷ் ராதாகிருஷ்ணன், நடிகர் கோவை வி. இளைய பாரதி, நடிகர் நவீன் சந்தர், இயக்குனர் கோவை க.விசுவன், ஊட்டி சிக்கந்தர் பாட்சா ,இயக்குனர், மேட்டுப்பாளையம் ஆர். ஆனந்த், இயக்குனர் மேட்டுப்பாளையம் அய்யாறு ச புகழேந்தி இயக்குனர் அரவிந்தன் தஞ்சை இயக்குனர் 0 மாலை 4 மணிக்கு.. விருது வழங்கும் விழா 0 தலைமை: கே. பி. கே. செல்வராஜ் ( திருப்பூர் முத்தமிழ்ச் சங்கம் ) 0 நன்றியுரை : முத்துபாரதி ஒருங்கிணைப்பு / தொடர்புக்கு : 96882 63329 / 95667 11643 - வரவேற்கும்: கனவு / திருப்பூர் முத்தமிழ்ச்சங்கம்/டாப் லைட் நூலகம்
இலக்கியக் கருத்தரங்கம் 29/6/25 ” விஞ்ஞானம் கற்பனையை ஓரளவு அடிப்படையாகக் கொண்டது.விஞ்ஞானக் கதைகளை படிப்பதன், எழுதுவதன் மூலம் இளைஞர்கள் கற்பனையை விரித்துக் கொண்டு புதிய சிந்ததைகளை உருவாக்கலாம். படைப்புத்தளத்தில் மட்டுமல்ல தனிப்பட்ட வாழ்க்கைக்கும் இந்த வகையில் விஞ்ஞானக் கதைகள் வாசிப்பு இளைஞர்களுக்கு உதவும் “ என்று விஞ்ஞானக்கதை நாவலாசிரியர் ஆர்னிகா நாசர் ஞாயிறு நடைபெற்ற திருப்பூர் பல்லடம் சாலை டாப்லைட் நூலகத்தில் நடைபெற்ற இலக்கியக் கருத்தரங்கில் பேசுகையில் குறிப்பிட்டார். “ விஞ்ஞானக்கதைகள் விஞ்ஞானசெய்திகளை அடைப்படையாகக் கொண்டு எழுதப்படுபவை ஒருவகை… இன்னொரு வகை பேண்டசியும் கேளிக்கையும் கொண்டது. அது மனதை குதூகலிக்கச் செய்யும் “ என்று அவர் குறிப்பிட்டார். ராஜேந்திர பிரபு கருத்தரங்கைத் துவக்கிப் பேசுகையில் தத்துவங்கள் வாழ்க்கைக்கு வழிகாட்டும் என்றார். நூலகர் இந்துமதி நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். கவிதையியல் வாழ்வில் செய்யும் மாயங்கள் பற்றி கவிஞர் அம்சப்ரியா பேசினார். சிறார் இலக்கிய எல்லைகளை எப்படி நாங்கள் மீறினோம் என்பது பற்றி பூங்கொடி பாலமுருகன் , சரிதா எஸ் ஜோ ஆகியோர் பேசினர். தரவுகளும் தொல்லியலும் சரித்திர கதைகளை இயக்குவது எப்படி சரித்திர நாவலாசிரியர் பவுசியா இக்பால் தன் உரையில் குறிப்பிட்டார். பயணநாவல் வகையில் சுப்ரபாரதிமணியன் அவரின் சில நாவல்கள் எழுதிய அனுபவத்தைச் சொன்னார். கனிணியும் இயந்திரங்களும் ஓவியனை முடக்கி விட முடியுமா . ஓவியர்கள் உலகம் படைப்பிலக்கியத்தோடு இணைந்தது என்று ஓவியர் தூரிகை சின்ன ராஜ்தன் உரையில் குறிப்பிட்டார்.முத்துபாரதி இலங்கை அகதியியல் சார்ந்த நாவல் அனுபவங்களைப் பற்றிப் பேசினார். யாழி இந்துமதி எழுதிய இரு வாழ்வியல் அனுபவ நூல்கள் வெளியிடப்பட்டன. கனவு இலக்கிய இதழின் 39ஆம் ஆண்டு மென்னிதழ்- 120 வெளியிடப்பட்டது. தூரிகை சின்னராஜ் எழுதிய வானவில் வாழ்க்கை -ஓவியர்கள் உலகம் நூல் வெளியிடப்பட்டது கவிஞர் மதுராந்தகன் நன்றி கூறினார்.கனவு இலக்கிய அமைப்பும் டாப் லைட் நூலகமும் இணைந்து இந்த நிகழ்வை நடத்தின
திரை நாவல் ஓரு பார்வை. *** ஞாயிறன்று பல்லடம் டாப்லைட் நூலகத்தில் நடைபெற்ற இலக்கிய உரையாடல் நிகழ்வில் கலந்து கொண்டேன். தோழர் சுப்ரபாரதி மணியன் அவர்கள் தனது குறுநாவலை வழங்கினார். இது திரை நாவல். 50 பக்கங்கள். எளிய கதை. ஆனால் வலுவான கதை. வியாபாரத்தை விரிவாக்க பெண்களின் முகம் எவ்வாறான பயன்பாட்டற்கு உள்ளாகிறது என்பதைத் தெளிவாக எடுத்துரைக்கிறது. பெரும் உணவு விடுதிகளுக்கு முன் நின்று கொண்டு. படும் சிரமங்கள், மற்ற வேலை செய்யும் பெண்கள் படும் துன்பங்கள் எனக் களம் பாரட்டும் வகையில் அமைந்துள்ளது. வித்தியாசமான கதைக் கரு. பாராட்ட வேண்டிய நூல் வெளியீடு ; நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் 044-26251968 - fb amsapriya வணக்கம்
உரத்தசிந்தனை வணக்கம் இனியநண்பரேஇந்தமாதஉரத்தசிந்தனையில்உங்களைப்பற்றியும் kanavu என்னைப்பற்றியும் கட்டுரைகள் வந்து ள்ளன,மிகவும் மகிழ்ச்சி!நீங்களும் நானும்(82+)தொடர்ந்து இலக்கிய பணிகள்செய்துவருகிறோம்,பெருமை வளர்ச்சீ!ஆனால் நமதுஇலாக்காதேய்ந்துவருவதுவருத்தம் சென்றவாரம்கடலூருக்குபாவண்ணன் வந்திருந்தார், kadal nagarajan , kadaloor
கோவை சொல் முகம் சந்திப்பு 6/7/25 கோவை விஷ்ணுபுரம் பதிப்பகம் சிற்றரங்கில் நடைபெற்றது. சுப்ரபாரதிமணியன் சிறுகதைகள் பற்றிய நான்கு அமர்வுகள் நாவல்கள் பற்றிய நான்கு அமர்வுகள் நடைபெற்றன.சிறப்பான ஆய்வுகள். விகரம், பூபதி, சுஷில்குமார், சுதா சீனிவாசன்,நவீன், அருணா, , உமா பாலாஜி, நரேன் ஆகியோர் உரையாற்றினர். நுணுக்கமான இளைஞர்களின் பார்வைகள் . பெண்களின் பார்வையில் மீட்சி தேடும் விடுதலை என்று அமைந்தது. 2 சொல்முகம் கருத்தரங்கில் பலரும் பேச்சில் அசோகமித்திரன் பற்றியும் சுஜாதா பற்றியும் குறிப்பிட்டார்கள் பலரும் என்னுடைய ஒவ்வொரு ராஜகுமாரிகளுககுள்ளும் சிறுகதைகளை பற்றி குறிப்பிட்டார்கள் அந்த கதை வெளிவந்து 40 ஆண்டுகள் ஆகிவிட்டன அண்ணன் மீரா அவர்கள் அன்னம் இதழில் வெளியிட்டார் . அந்த கதை வந்த போது ஜெயமோன் அவர்கள் சுமார் 40 நண்பர்களுக்கு கடிதங்கள் மூலமாக அந்தக் கதையை சிபாரி செய்து எழுதி இருப்பதை பலமுறை அவர் குறிப்பிட்டு இருக்கிறார் அதை அவரே மலையாளத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டார் கதா இதழில் வெளிவந்தது பிறகு என்னுடைய முதல் நாவல் மற்றும் சிலர் வெளிவந்த போது அதைப் பற்றி விரிவான ஒரு கட்டுரை எழுதினார் அந்தக் கட்டுரையில் சுப்ரபாரதி மணியனுக்கான வடிவம் நாவல் தான் என்று ஜானகிராமனை போன்றவரை குறிப்பிட்டு எழுதி இருந்தார். அப்போது நான் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை ஆனால் என் இலக்கிய பயணத்தில் 29 நாவல்கள் எழுதிய பிறகு அவருடைய கணிப்பு ஆரம்பத்திலேயே சரியாக இருக்கிறது இருந்திருக்கிறது என்பதை கண்டு கொண்டேன் என்பதை பற்றியும் குறிப்பிட்டேன் சிறப்பாக அமைந்தது.நன்றி சொல் முகம் குழுமம் நண்பர்களே 3 நரன் அவர்கள் சிலுவை நாவலைப் பற்றி விரிவாக பேசினார் மிகவும் சிறந்த உரையாக இருந்தது அவருடைய படைப்புகளை சொல்வனம் போன்ற இதழ்களில் படித்திருக்கிறேன் 300 ஆண்டுகால கோவை பகுதி சரித்திரத்தில் சோமனூர் கருமத்தம்பட்டி மேட்டுப்பாளையம் திருப்பூர் உட்பட பகுதிகளில் மாந்தர்கள் இடம்பெற்று இருப்பதும் ஒரு கிறிஸ்துவ விதவைப் பெண்ணை மையமாக வைத்து எழுதப்பட்டிருந்த நாவலில் அவள் விதவை என்பதை நாலு தலைமுறைகளுக்குப் பின்னாலும் சிலர் குறிப்பிட்ட பேசி கொச்சைப்படுத்துவதையும் அந்தப் பெண்ணின் வாழ்க்கை தொடர்ந்து இயேசுவின் மேல் கொண்ட அக்கறையால் இயேசுவின் மேற்கொண்ட அக்கறையால் முழுமையடைந்திருப்பதையும் ஆனால் அவருடைய மகன்களில் ஒருவர் பொதுவுடமைக் சார்ந்த அக்கறையில் வாழ்க்கையக்கொள்வதும் உலகமயமாக்கலின் தாக்கத்தால் இன்றைக்கு ஜிஎஸ்டி தாக்கம் வரைக்கும் குறிப்பிட்ட கதாபாத்திரங்களும் கொங்கு மண்டலத்தின் பொருளாதார வீழ்ச்சியும் பனியன் சார்ந்த தொழில் அமைப்புகளும் இன்னும் அந்த நெசவுக்குடும்பங்கள் பாதாளத்தில் இருந்து மீள முடியாமல் இருக்கிற துயரமும் தனியார் மயமாக்கப்பட்ட சூழலில் துயருறும் புதிய தலைமுறை பற்றியும் இந்த நாவலில் பல்வேறு படிமங்களாக வந்திருப்பதும் பல்வேறு தொன்மக்கதைகள் இந்த நாவலில் இடம்பெற்றதும் மிகச் சிறப்பாக இருக்கிறது என்று குறிப்பிட்டார் ..அட்டையில் உள்ள ரெம்ப ரண்ட் ஓவியம் வெளிப்படுத்தும் உணர்வுகளை பற்றி விரிவாகச் சொன்னார் அவருக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் வணக்கம் மிகவும் நன்றி நெகிழ்வான தருணங்கள்.. நுணுக்கமான அலசல்.. படைப்பாளி பெருமை கொள்ள நல்ல சந்தர்ப்பம் .. நன்றி.. கோவை சொல் முகம் நண்பர்களே. 6/7/25 எனக்கு மகிழ்ச்சி தந்த நாள். .. subrabharathi@gmail.com

புதன், 18 ஜூன், 2025

எழுத்தாளர்கள் செத்துப் போனால்தான் பொதுமக்களுக்குத் தெரிகிறது. சில அமைப்புகள் விருது பெற்றால்தான் தெரிகிறது. என் உலகம் சின்னதுதான் 'வேர்கள்' திருப்பூர்; மண்ணரை மூளிக்குளத்தை பராமரித்து வரும், 'வேர்கள்' அமைப்புக்கு, தமிழக அரசு, 'சிறந்த நீர்நிலைப் பாதுகாவலர்' விருதுடன், ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கி கவுரவித்துள்ளது. தமிழக அரசு சார்பில் நடந்த, உலக சுற்றுச்சூழல் தினவிழாவில், திருப்பூரை சேர்ந்த 'வேர்கள்' அமைப்புக்கு, 'சிறந்த நீர்நிலைப் பாதுகாவலர்' என்ற விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலர் சுப்ரியாசாகு, விருதையும், ஒரு லட்சம் ரூபாய் பரிசுத்தொகைக்கான காசோலையையும் வழங்கினார். 'வேர்கள்' அமைப்பின் சார்பில், ஒருங்கிணைப்பாளர்கள்சந்தீப், சதீஷ்குமார் ஆகி யோர் பெற்றுக் கொண்டனர். மூளிக்குளம் பராமரிப்பு மண்ணரை மூளிக்குளத்தை, வேர்கள் அமைப்பினர், நீண்ட நாட்களாக பராமரித்து வருகின்றனர். குளம் மற்றும் அணைக்கு தண்ணீரை எடுத்து வரும் ராஜ வாய்க்காலையும் பராமரித்து வருகின்றனர். அதனை பாராட்டியே, விருது வழங்கி, தமிழக அரசு கவுரவித்துள்ளது. வேர்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் கூறியதாவது: அமைப்புகளுக்கும் தாய் அமைப்பாக இருந்து வழிகாட்டி வருகிறது. அதன்படியே, 'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தில், 22 லட்சம் மரக்கன்றுகள் நட்டு வளர்க்கிறோம். வெற்றி அமைப்பு, ஆண்டிபாளையம் குளத்தை பராமரிப்பது போல், நாம் சிறிய மூளிக்குளத்தை பராமரிக்கலாம் என, இளைஞர்கள் இணைந்து வேர்கள் அமைப்பை துவக்கினோம். மாவட்ட நிர்வாகம், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம், தொழில் அமைப்பினர் பங்களிப்புடன், குளம் மற்றும் வாய்க்காலை பராமரித்து வருகிறோம். எங்கள் தொடர் முயற்சியால், கழிவுநீர் குளத்தில் கலப்பதை தடுக்க, 2.90 கோடி ரூபாயில், உள்ளூர் திட்டக்குழும நிதியில், கால்வாய் பணி நடக்கப்போகிறது; ஆகாயத்தாமரை படராமல், குளம் துாய்மையாக பராமரிக்கப்படும். எதிர்கால சந்ததிக்கான சொத்து இளைஞர்கள் முயற்சி எடுத்து, நீர்நிலைகளை பராமரிக்க வேண்டும்; அது, நமது எதிர்கால சந்ததியினருக்கான சொத்து; பாதுகாப்பாக பராமரித்து அவர்களுக்கு ஒப்படைக்க வேண்டும் என்ற இலக்குடன், குளம் பராமரிப்பு பணியை செய்து வருகிறோம். - ஒருங்கிணைப்பாளர்கள், 'வேர்கள்' அமைப்பு. 0 திருப்பூர்; திருப்பூர் சாய ஆலை கள் சந்தித்து வரும் சவால்கள் தொடர்பாக, உலக சுற்றுச்சூழல் தினத்தில் வெளியான 'தினமலர்' நாளிதழ் செய்திக்கு, சாய ஆலை உரிமையாளர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. உலக சுற்றுச்சூழல் தினமான ஜூன் 5ம் தேதி, பொதுநல விழிப்புணர்வுக்காக, 'தினமலர்' நாளிதழ் திருப்பூர் இணைப்பில், ஒரு பக்க அளவில்செய்திகள் வெளியாயின. இதில், சாய ஆலைகள் சந்திக்கும் சவால்கள், 'வனத்துக்குள் திருப்பூர்' திட்ட சாதனை உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றிருந்தன. சாய ஆலைகளின் சவால்கள் மற்றும் தீர்வுகளை எதிர்நோக்கி, 'பசுமை அங்கீகாரம் வேண்டும் - எதிர்நோக்கும் சாய ஆலைகள்' என்ற தலைப்பில் செய்தி வெளியாகியிருந்தது. dinamalar 1'பசுமை அங்கீகாரம் திருப்பூர் சாய ஆலை உரிமையாளர்கள் சங்க தலைவர் காந்திராஜன் கூறியுள்ளதாவது: 'தினமலர்' நாளிதழில், 'பசுமை அங்கீகாரம் - எதிர்நோக்கும் சாய ஆலைகள்' என்ற தலைப்பில் வந்துள்ள கட்டுரை மிக அருமையாக உள்ளது. அதற்காக, 'தினமலர்' நாளிதழுக்கு, சாய ஆலைகள் சார்பில், நன்றிகளையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம். சாய ஆலைகள் பின்பற்றி வரும் 'பூஜ்ஜிய நிலை' சுத்திகரிப்பு தொழில்நுட்பத்தை தொடர்ந்து செயல்படுத்தி வருவதால் ஏற்படக்கூட மிகப்பெரிய பொருளாதார நஷ்டத்தை பகிர்ந்துகொள்ள, மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்' என்ற எங்களது வேண்டுகோளையும், முன்வைத்துள்ள 'தினமலர்' நாளிதழுக்கு, மீண்டும் ஒருமுறை நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். உலக சுற்றுச்சூழல் தினமான ஜூன் 5ம் தேதி இந்தசெய்தி வெளி யானது எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதுடன், சாய ஆலைகளின் செயல்பாட்டுக்கு கிடைத்த அங்கீகாரமாகவும் நம்புகிறோம். இவ்வாறு, காந்திராஜன் கூறினார்.
கோவையில் இந்த வாரம் சென்ற இரு இடங்கள் பற்றி..RPS 1. கோவை போத்தனூரில் மகாத்மா காந்தி தங்கியிருந்த வீடு தற்போது நினைவிடமாக உள்ளது. இது, காந்தி கோயம்புத்தூர் விஜயத்தின் போது தங்கியிருந்த ஓடு வேயப்பட்ட வீடு. அந்த வீடு நூலகம் மற்றும் புகைப்படத் தொகுப்புடன் கூடிய நினைவிடமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த நினைவிடம், மகாத்மா காந்தியின் பயணம் மற்றும் இந்திய சுதந்திரப் போராட்டத்திற்கான பங்களிப்பின் அடையாளமாக உள்ளது. இளைஞர்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுடன் இணைந்து செயல்படும் அமைப்புகளை உள்ளடக்கியதன் மூலம், மக்கள் மத்தியில் தலைமைத்துவ சிந்தனையை இயக்கும் ஒரு "செயலில் உள்ள மையமாக" அவர் நினைவுச்சின்னத்தை கருதுகிறார். இது 1934 பிப்ரவரி 6 அன்று கோயம்புத்தூர் பொதுக்கூட்டங்களில் உரையாற்றி, தேசியத் தலைவர்களைச் சந்தித்த பிறகு, போத்தனூரில் ஜி.டி. நாயுடு குடும்பத்திற்குச் சொந்தமான ஓடு வேயப்பட்ட வீட்டிற்கு வந்தபோது இரவு 11 மணியளவில் நடந்தது. • டிஜிட்டல் மாவட்ட களஞ்சிய விவரம் மொழிபெயர்ப்பானது — 1934 ஆம் ஆண்டு பிப்ரவரி 6 ஆம் தேதி கோயம்புத்தூரில் பொதுக்கூட்டங்களில் உரையாற்றி, தேசியத் தலைவர்களைச் சந்தித்த மகாத்மா காந்தி, போத்தனூரில் இரவு 11 மணியளவில் ஜி.டி. நாயுடு குடு... cmsadmin.amritmahotsav.nic.in • மகாத்மா காந்தி தங்கியிருந்த கோயம்புத்தூர் ... மொழிபெயர்ப்பானது — மகாத்மா காந்தி தங்கியிருந்த கோயம்புத்தூர் இல்லம் தற்போது நினைவிடமாக உள்ளது கோயம்புத்தூர் விஜயத்தின் போது காந்தி இரண்டு நாட்கள் தங்கியிருந்த கிட்டத்தட்ட மறக்கப்பட்ட ஓடு வேயப்பட்ட ... thehindu.com 2. கல்லாறு பள்ளியில் உள்ள இவரின் சிலை அபூர்வமானது. கோவை செட்டிபாளையம் சாலையில் லோட்டஸ் உள்ளது. சுவாமி சச்சிதானந்தா லோட்டஸ் கோவில் என்பது, ஸ்ரீ சுவாமி சச்சிதானந்தாவால் நிறுவப்பட்ட ஒரு உலகளாவிய ஆலயம். இது, யோகாவை ஒருங்கிணைத்து, உலகளாவிய நல்லிணக்கத்தை வளர்ப்பதற்காக, அமெரிக்காவின் வர்ஜீனியாவில், யோகவில் ஆசிரமத்தில் அமைந்துள்ளது. கோவிலின் சிறப்பம்சங்கள்: • உலகளாவிய ஆலயம்: இந்த ஆலயம், அனைத்து மதங்கள் மற்றும் நம்பிக்கைகள் கொண்ட மக்களையும் வரவேற்கும் ஒரு பொதுவான ஆன்மீக தளமாக விளங்குகிறது. • சுவாமி சச்சிதானந்தாவின் யோகம்: இந்த ஆலயம், சுவாமி சச்சிதானந்தாவின் யோகா போதனைகள் மற்றும் ஆன்மீக பார்வையை பிரதிபலிக்கிறது. • 108-ஐ மையமாகக் கொண்ட அமைப்பு: கோவிலின் அளவீடுகள், ஆன்மீக எண் கணிதத்தில் புனிதமான 108 என்ற எண்ணை அடிப்படையாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளன. • பிரதிபலிப்பு மற்றும் தியானம்: இந்த ஆலயம், தனிநபர்கள் தியானம் மற்றும் ஆன்மீகப் பிரதிபலிப்பு செய்வதற்காக ஒரு அமைதியான இடமாக உள்ளது. • மத நல்லிணக்கம்: இந்த ஆலயம், மதங்களுக்கு இடையேயான நல்லிணக்கம் மற்றும் ஒற்றுமையை மேம்படுத்துவதற்கான ஒரு தளமாக விளங்குகிறது. • யோகாவில்லி ஆசிரமம்: இது யோகாவில்லி ஆசிரமத்தில் அமைந்துள்ளதால், யோகா மற்றும் ஆன்மீகப் பயணங்களில் ஈடுபடுபவர்களுக்கு ஒரு முக்கியமான மையமாக விளங்குகிறது. google 0 தூரிகை சின்னராஜ் அவர்களின் நண்பர் கார்த்திகேயன் இதன் பொறுப்பாளராக உள்ளார்.பல விசயங்களைச் சொன்னார் விரிவாக . அது பற்றி இன்னொரு பதிவில் ..சுப்ரபாரதி
சுப்ரபாரதிமணியன் மூன்று நாவல்கள் எப்படி சுற்றுச்சூழல் பிரிவில் எப்படி இடம் பிடிக்கின்றன இயற்கை சார்ந்த விசயங்களை மனதில் கொள்வதும் அதை விவரித்துக்கொள்வதும் மட்டுமே சுற்றுச்சூழல் படைப்புகள் என்ற பிரிவு, அக்கறைக்குள் வருவதில்லை. இயற்கையை, அதன் சமநிலையைக் குலைக்கும் செயல்பாடுகளைப் பற்றிப் பேசுவதாலேயே கூட சில படைப்புகள் அவை சுற்றுச்சூழல் படைப்புகள் ஆகின்றன என்று மேற்கத்திய சுற்றுச்சூழல் வாதிகள் சமீபத்தில் எழுதிய பல ஆய்வுகளும் தரகவுளும் சொல்கின்றன அந்த வகையில் சுப்ரபாரதிமணியன் மூன்று நாவல்கள் சுற்றுச்சூழல் பிரிவில் இடம் பிடிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கதாகும். சுற்றுச்சூழல் சீர்கேடுகளைப் பற்றி நினைக்கிற போதெல்லாம் பழைய இலக்கியங்களும் அவை வெளிப்படுத்தும் சுற்றுச்சூழல் இயற்கை சார்ந்த விஷயங்களும் மனதில் வந்து கொண்டே இருக்கும். பல இலக்கியங்கள் இயற்கையையும் அதன் வலிமையும் சொன்ன இயற்கையை பற்றி விரிவாக சொல்லாமல் தமிழ் சமூகம் பற்றி இலக்கியம் சென்றதில்லை. தொல்காப்பியம் சிலப்பதிகாரம் பத்துப்பாட்டு துவங்கி பல விஷயங்கள் அப்படித்தான் இருக்கின்றன. தமிழில் திணை என்று இருப்பதும் அவற்றின் தனி அடையாளமாக மரம்., பறவை, விலங்கு, பூ, சிறு தெய்வம் என்ற இருப்பதும் இதற்கு வலு சேக்கிறது பழைய இலக்கியங்களில் காணப்படும் சமூக வாழ்க்கை உன்னதமாக இருப்பதாக தோன்றுவதன் காரணம் அப்போதைய சுற்றுச்சூழல் விஷயங்களும் இயற்கை சார்ந்த விஷயங்கள் மனித வாழ்க்கைக்கு வலிமை சேர்ப்பதாக இருந்தது. காரணம் இயற்கையை சிதைக்காமல் வழிபடும் தன்மை அப்போது இருந்திருக்கிறது. இன்று விஞ்ஞானமும் தொழில் நுட்பங்களும் வளர்ந்து இயற்கையை கேடுகளை தருகிற போது பல வகைகளில் அந்த வகை இலக்கியங்கள் ஆறுதலாகத்தான் இருந்திருக்கின்றன. இலக்கியம் சமூக வாழ்க்கையை பிரதிபலிக்கிறது அவை சமகாலத்தோடும் பயணிக்க வேண்டும் என்பது தான் முக்கியம் பலவகை விஷயங்களை பற்றி இலக்கியங்களில் பேசுகிறோம் கிராம வாழ்க்கை, வறுமை, பிற்பட்ட மக்களின் வாழ்க்கை என்று பல விஷயங்கள் பல்வேறு இலக்கிய வகையில் சொல்லப்படுகின்றன, அதை தாண்டி சுற்றுச்சூழலை பற்றியும் சொல்ல வேண்டி இருக்கிறது, இந்த இலக்கிய விஷயங்கள் மக்களிடம் விழிப்புணர்வை ஊட்டி விட முடியுமா என்ற கேள்வி இருக்கிறது. ஆனால் இலக்கிய படைப்புகளில் இவை தரப்படுகிறது. அவை தரும் மாற்றங்களை நாம் உணர்ந்துதான் இருக்கிறோம். நாம் இயற்கையை கண்டு பயப்பட ஆரம்பித்து விட்டோம் அது தந்த பல எச்சரிக்கைகளும் பலனில்லாமல் போய்விட்டன அது இப்போதைக்கு காலநிலை மாற்றத்தையும் மோசமான வாழ்க்கையும் கொண்டு வந்து விட்டது. அதனால் மக்களை இடம்பெறச் செய்து விட்டது இந்த சூழலில் இந்த இடம் பெயரும் வேதனையையும் இயற்கைக்கான பாதிப்புகளையும் சுப்ரபாரதி மணியனின் நாவல்கள் பெரும்பாலும் சொல்கின்றன. இயற்கை பற்றி யோசிப்பதற்கும் நுகர்வு கலாச்சாரத்தின் அதீத தன்மை பற்றிச் சொல்வதற்கும் அவருடைய படைப்புகள் பயன்படுகின்றன. அரசியல் தத்துவ விஞ்ஞான ரீதியான படைப்புகளை தாண்டி பல்வேறு சூழலில் சூழலியல் பாதுகாப்பு சார்ந்த அக்கறை முன்வைக்க சுப்ரபாரதிமணியன் படைப்புகள் விழிப்புணர்வு சார்ந்த அம்சங்களை கொண்டிருக்கிறன .ஒரு படைப்பின் வெற்றி என்பது அது மக்களுக்கும் விழிப்புணர் ஊட்டவும் வாசல்களைத் திறந்து வைக்க வேண்டும். அந்த விஷயங்களில் சிந்தனைகளை மனக் களத்தில் கொண்டு செல்லவும் ஆழ்மனதில் பல துன்பங்களை உருவாக்கவும் பயன்படுவதாகும். அப்படித்தான் அவரின் சுற்றுச்சூழல் சார்ந்த நாவல்கள் பயன்படுகின்றன. அதற்கு தமிழின் சில சாத்தியங்களும் உதவுகின்றன. இப்போதைய காலகட்டத்தில் எழுத்தும் சொற்களும் பேச்சை விட காட்சிகளாகச் சொல்லப்படும் தன்மை என்பது முக்கியமாக இருக்கிறது. அந்த தன்மைக்கு அவர் படைப்புகளும் பயன்படுகின்றன அவையெல்லாம் காட்சிகளாக கூடவே வருகின்றன என்பதும் முக்கியம் 1 திருப்பூர் மக்களின் வாழ்க்கை சார்ந்து, பனியன் தொழில் சார்ந்த மக்களின் வாழ்ககை பற்றிய சிந்தனைகளை தொடர்ந்து தன் படைப்புகளின் வழியே வெளிப்படுத்தி வருபவர் சுப்ரபாரதிமணியன். சாய்த்திரை நாவலில் நொய்யல் சுற்றுச்சூழல் சீர்கேடு பற்றியும் அந்த் நதியின் கலாச்சார விசயங்களையும் இலக்கியப்படைப்பாக்கியவர். இந்த நாவலில் அந்த நகரம் சார்ந்த சிந்தனைகளை வேறொரு கோணத்தில் எழுதியிருக்கிறார் –பிரபஞ்சன் 2 வாழ்க்கை ஓயாமல் இயங்கிக் கொண்டே இருக்கிறது. மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. அந்த மாற்றங்களின் ஊடாக மனிதர்கள் உள்ளும் புறமுமாக உருமாறிக் கொண்டே இருக்கிறார்கள். இருப்புக்கும் மாற்றத்திற்கும் இடையில் வெளிப்படையான, மறைமுகமான மோதல்கள் நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. அவற்றின் ஊடாக மனிதர்கள் தங்களுடைய வாழ்க்கையைப் புதுப்பித்துக் கொண்டே இருக்கிறார்கள். அந்த மோதல்களில் ஆக்க ரீதியான விளைவுகளைப் பெறுபவர்களைப் போலவே அழிவிற்கும் உள்ளாகிறார்கள். ஆக்கமும் இல்லாமல் அழிவும் இல்லாமல் வாழ்க்கையை இன்னொரு தளத்திற்கு நகர்த்திச் செல்லும் மனிதர்களையும் அன்றாட வாழ்க்கையில் பார்க்க முடிகிறது. கடைசியாகக் குறிப்பிட்ட வாழ்க்கை முறைதான் பெருமளவிற்கு எல்லோருக்கும் சாத்தியமாகிறது. அதைத் துல்லியமாக, மனம் நெகிழும் படியாக, ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒன்றாக, எதார்த்தத்தை மீறாத ஒன்றாகத் தன்னுடைய நாவலான 'நீர்த்துளியை' வடிவமைத்திருக்கிறார், சுப்ரபாரதிமணியன். நவீனத்துவம் அடையும் வாழ்க்கைச் சூழலில் வாழ்ந்து வரும் இவர் தன்னைச் சுற்றிலும் உள்ள, இயங்கும் வாழ்க்கையை அக்கரையுடன் கூர்ந்து கவனித்து அதற்குத் தன்னுடைய இயல்பான மொரியின் வாயிலாக வடிவம் கொடுக்கிறார். அவர் காணும் உலகம் மாறுதல்கள் நிறைந்த ஒன்றாகவே இருக்கிறது. அதனால், அவருடைய படைப்புக்களும் புதுமையாகவே வெளிப்படுகின்றன. பழைய வாழ்வின் மதிப்பீடுகளைக் களைந்துவிட்டு புதிய மதிப்பீடுகளை வாழ்க்கைக்கு அளிக்க முயலும் தவிர்க்க முடியாத வளர்ச்சிப் போக்கை அவருடைய படைப்புக்களில் இயல்பாகக் காண முடிகிறது. நெருக்கடிகளுக்குள் அகப்பட்டுத் தவிக்கும் மனிதர்கள் மௌனமாக அதைச் சகித்துக் கொண்டே அங்கிருந்து வெளியேறிப் பெருமூச்சு விடுவதை அவருடைய பெரும்பாலான படைப்புக்களில் இயல்பாக இருப்பதை இனம் காணலாம். சாராம்சத்தில் இந்தத் தனித்தன்மையை இயல்பாகப் பெற்றிருக்கும் அவர் தன்னுடைய அனுபவ எல்லைகளைக் கடந்து சென்று வாழ்க்கையை மதிப்பீடு செய்து அதற்குக் கலை வடிவம் கொடுக்க முனைவதில்லை. தெளிவான நீரோட்டத்தை ஆர்வமுடன் கவனித்து மகிழ்ச்சியடையும் ஒருவரைப் போல அவர் வாழ்க்கையை ஒரு வித அக்கரையுடன் மௌனமாகக் கவனிப்பதை அவரின் படைப்புக்களின் வாயிலாக உணர்கிறோம். மனச்சிதைவுகளுக்கு உள்ளாகித் தவித்து விகாரமடையும் விசித்திரமான மனிதர்களின் மனப் போக்குகளுக்கு இடமளிக்கும் கலைக்கண்ணோட்டம் அவரிடம் இல்லையென்றே கொல்லலாம். வாழ்வதற்காகவே மனிதர்கள் பிறந்து, வளர்கிறார்கள். கால வெளியில் ஒளிக் கீற்றுக்களை விசிறிக் கொண்டே வாழ்க்கை குறித்த கேள்விகளே எழுப்பிவிட்டு மறைந்து போகிற மனிதர்களை அவருடைய படைப்புக்களில் வெளிப்படையாகக் காண முடிகிறது. இதுதான் அவருடைய தனித்தன்மை வாய்ந்த கலை வெளிப்பாடாக இருந்து வருகிறது. அடக்கமும், ஆழ்ந்த மௌனமும், இலேசான புன்னகையும் கலந்த தன்னுடைய கலை ஆளுமையை அவருக்கே உரிய தனி மொழியில் அவர் வெளிப்படுத்துகிறார். -சி ஆர் ரவீந்திரன் விளம்பர யுகத்தின் வண்ணங்கள் காட்டும் மாயையில் இன்று நாம் சிக்கியிருக்கிறோம். இந்த வானவில்லின் பின்னால் அனைத்தும் சோகம். இயற்கையைப் பார்த்து, அதைப் போல் தானும் வர்ணங்களை சிருஷ்டிக்க முடிந்த மனிதன், புலியைப் பார்த்து பூனை சூடிட்டுக்கொண்டாற்போல் அவதியுறுவதை சுப்ரபாரதிமணியன் மறக்க முடியாத-அல்ல, மறக்கக் கூடாத-புதினமாக வடித்திருக்கிறார். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் தரையில் உதிர்ந்த பவழ மல்லி மலர்களைப் பிழிந்து தம் உடைக்குக் காவி ஏற்றிய புத்த பிட்டுக்கள் இயற்கையை அழிக்கவில்லை. இன்று இயற்கையின் மகத்தான படைப்பாம் மனிதனை இந்த வண்ண மோகம் எப்படி அரித்துக் கொண்டிருக்கிறது, அழித்துக் கொண்டிருக்கிறது என்ற அவலத்தை சாயத்திரை நாவல் எடுத்துச் சொல்கிறது. இந்த நாவல் தற்காலத் தமிழ் இலக்கியத்தில் கலைப்பாங்குடன் சொல்வது என்பதிலும் பொருள் காரணமாகவும் முக்கியத்துவம் பெறுகிறத. நவீனத்திற்குப் பின் எனப்படும் உத்தியில், கதை முன்னேறுவது போல் தோன்றாமலே முன்னேறும் வகை ஒன்றுண்டு. இதை இடைவெளி வழி (Spatial form) என்பார்கள். பல அனுபவங்கள் திட்டுத்திட்டாகத் தரப்படும். ஒன்றுக்கு ஒன்று சொல்லிக் கொள்ளும்படியான தொடர்ச்சி இருப்பது போல் தோன்றாது. ஆனால் புள்ளிகள் சேரச்சேர கோலத்தின் சொரூபம் தெரிவது போல் சில நேரங்களில் பல மனிதர்களின் அனுபவங்களை உள்வாங்கிக் கொள்ளும்போது, கதாசிரியரது நோக்கம் புரியும். சுப்ரபாரதிமணியன் இந்த எழுத்து நடையை சிறப்பாகக் கையாண்டிருப்பதால் நம் சிந்தனைகள் நெஞ்சை நெருடுவதேயன்றி, மனிதாபிமானத்துடன் நாம் செயல்பட வேண்டும் என்பதையும் உணர்த்துகிறது. நாதனியல் ஹாதர்ன் எனும் அமெரிக்க நாவலாசிரியரின் ரப்பாச்சினியின் மகள் எனும் சிறுகதைதான் நினைவுக்கு வருகிறது. ரப்பாச்சினி விஷ மருந்துச் செடிகளை வளர்க்கிறான். இவனது மகள் பியேட்ரிஸ் விஷமயமான தோட்டத்தில் வளர்வதால் இயற்கையாகவே விஷக்கன்னி ஆகிறாள். அவளை யாரால் மணக்க முடியும்? அந்த விஷ மலர்களால் கொத்தப்பட்டு விஷம் உடலில் ஊறிப்போன மாணவன் சியோவன்னியால் தான் மணக்க முடியும். இந்தியாவின் ஒரு பாகமாக இருந்தாலும் ரப்பாசினியின் தோட்டம் போல் தனிப்பட்டுப் போயுள்ள திருப்பூரைப் பற்றிய சாயத்திரையில் செஸ் ஆட்டம், வியாதியில் தவிக்கும் நாய் எனப் பல உருவகங்கள், சாதிக் கலவரங்கள், வரதட்சிணைப் பிரச்சனைகள், நொய்யல் ஆறு சாக்கடையாகவும் வைகுந்தக் கிணறு குப்பைக் கூடாரமாகவும் ஆகிவிட்ட பயங்கரம் போன்ற உண்மைகள்; குடிதண்ணீர் காணாமற் போய்விட்ட அனுபவம் கூட பாக்கியில்லையோ எனும்படி ஆசிரியரின் கருடப் பார்வை, திருப்பூர் தொழிலாளிகளைக் கவனிக்கிறது. அவர்கள் குழந்தைகளைப் பார்த்து பெருமூச்சு விடுகிறது. 1962ல் முதன் முதலாக வெளிவந்த ரேகல் கார்ஸனின் மவுன வசந்தம் (The Silent Spring) நூல் தந்த அதிர்ச்சியில், மேலை நாடுகளில் சுற்றுச்சூழலைக் காக்க வேண்டும் என்ற உணர்வு பரவலாயிற்று. சுப்ரபாரதிமணியனும் அப்படியொரு அதிர்ச்சி தந்திருக்கிறார்.- பிரேமா நந்தகுமார் திருப்பூர் என்றதும் நினைவுக்கு வருவது நொய்யல் என்னும் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஜீவ நதியும், அதன் கரையில் உருவாகி வெற்றிலைக்கும், தாழம்பூவுக்கும், விதவிதமான கீரை காய்கறிவகைகளுக்கும் பெயர் பெற்று விளங்கிய சின்னஞ்சிறிய திருப்பூர் நகரமும், விடுதலைப் போர்க்கொடி கீழே விழாமல் தன் இன்னுயிரில் தாங்கிய திருப்பூர் குமரனும் நினைவுக்கு வருவார். மக்களைக் காந்தமாய்க் கவரும் விதவிதமான பின்னலாடைகள் நினைவுக்கு வரும். புதிதாய் முளைத்தெழும் வண்ண வண்ணக்கட்டிடங்களும் நினைவுக்கு வரும். இம்மாதிரியான கவர்ச்சிமிக்க எண்ணத் திரைகளை நீக்கிவிட்டுப் பார்த்தால் உள்ளே தெரிவதென்ன? சாயச் சாக்கடையாகச் சிறுத்துக் கொண்டிருக்கும் நொய்யல் நதி. சாயப்பட்டறைக் கழிவுகளால் விஷமாகிக் கொண்டிருக்கும் தெருக்கள். மனிதனின் மொத்த வாழ்க்கையையே சூதாட்டம் ஆக்கி, மனித மதிப்புகளை வெளிறி வண்ணமிழக்கச் செய்யும் பனியன் தொழில்-இந்தச் சூதாட்டத்தில் கணம்தோறும் வெட்டுப்பட்டுக் கல்லறைக்குப் போகும் ராஜா, ராணி, யானை, குதிரைகள், சேவகர்கள்: இவைகளை மாற்றி மாற்றிக் காட்சிகளாகப் பக்கம் பக்கமாக வரைந்து காட்டியிருக்கிறார் சுப்ரபாரதிமணியன் தன் சாயத்திரை நாவலில். - பொன்னீலன் அரை நூற்றாண்டு இலக்கிய இயக்கம் திருப்பூரின் இலக்கிய முகம் சுப்ரபாraதிமணியன். அவரது கதைக்களங்கள் தமிழ்நாட்டை தாண்டி விரிந்தவை என்ற போதும் ஒரு செயல்பாட்டாளராக திருப்பூர் அவரது எழுத்து இயக்கமும் மேற்கொண்டது . அவசர காலகட்டத்தை பற்றிய சுதந்திர வீதியில் என்ற சிறுகதையிலிருந்து நவீன இலக்கியத்தில் அவரது பயணம் தொடங்கியது. இதுவரை 110க்கும் மேற்பட்ட நூல்கள், இடைவிடாத கனவு சிற்றிதழ் வெளியீடு என்று தனிநபர் இயக்கமாக வெற்றிகரமாக புலிவால் பிடித்துக் கொண்டிருப்பவர். தமிழ் இலக்கிய சூழலில் நவகால அரசியல் குறித்து தொடர்ந்து உரையாடி வருவோர். கடந்த 50 ஆண்டுகளில் பல்வேறு இதழ்களில் வெளிவந்த அவரின் நேர்காணல்களை பொன் குமார் தொகுத்துள்ளார். ஒளிவட்டங்களை தவிர்க்கும் சுப்ரபாதி மணியன் தனது கருத்துக்களை இயல்பாக பகிர்ந்து கொண்டு உள்ளார். சமூக பாதுகாப்பு இல்லாத தொழிலாளர் முறையே கொத்தடிமைத்தனம் என்ற நோக்கில் இருந்து திருப்பூரின் வளர்ச்சியைஅவர் பார்க்கிறார். இட ஒதுக்கீடு, தாய் மொழி கல்வி, சூழலியல் விழிப்புணர்வு ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறார். மனசாட்சியோடும் சமூகப் பொறுப்பணவோடும் இங்குவது தான் எழுத்தாளின் வெற்றி. இலக்கியத்துறையில் பீடாதிபதிகள் தேவையில்லை என்பதை உணர்த்துகின்றன சுப்ரபாதி மணியனின் நேர்காணல்கள் நூலை முன் வைத்து .சே இளவேனில் ( புலிவாலை பிடித்த கதைகள் சுப்ரபாதி மணியனின் நேர்காணல்கள் தொகுப்பு நூல் தொகுப்பு பொன் குமார். அந்த நூலை முன்வைத்து தமிழ் இந்து இதழில் எழுதி இருப்பது’’ .இவர்களின் கூற்றுகள் மூலம் திருப்பூர் சார்ந்த இயற்கை சிதைவுகள்எப்படி நிகழ்ந்துள்ளன அன்று தன் நாவல்களில் விவரிப்பதன் மூலமாக சுப்ரபாரதிமணீயனின் சாயத்திரை, புத்துமண், வெப்பம் ஆகியவை சுற்றுச்சூழல் படைப்புகளாக விளங்குகின்றன.. ( சுய அறிமுகமாய் இக்கட்டுரை தொகுப்புதிவ்யா பி ., ஆய்வாளர் )
Pesum puthiya sakthi june 2025 நீடித்த இயற்கை சூழல் என்பது கனவா ..சுப்ரபாரதிமணியன் நீடித்த இயற்கை சூழல் என்பது பூஜ்ஜியம் கழிவு மேலாண்மையில் மட்டுமே சாத்தியப்படும் . திருப்பூர் பின்னலாடை துறை சார்ந்த இரண்டு நிறுவனங்கள் 2020 பிப்ரவரியில் ஒரு சாதனையை நிகழ்த்தி இருக்கிறார்கள்.பின்னலாடை துறையில் வெளியேறும் சாயக்கழிவுகள் பற்றிய விமர்சனங்கள் எப்போதும் உண்டு .ஆனால் அவர்கள் அந்த கழிவுகளை சார்ந்து பல்வேறு ஆய்வுகளை தொடர்ந்து நடத்திக்கொண்டிருக்கிறார்கள் இப்போது நாம் பயன்படுத்திய பழைய போத்தல்களை பயன்படுத்தி சட்டை தயாரிக்கும் பணியில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். நாம் வீசி எறியும் தண்ணீர் போத்தல்கள் பேருந்து நிலையங்களில் குவிந்து கிடக்கும் அவற்றின் மலைத் தன்மை போன்றவை நம்மை எப்போதும் பயமுறுத்தும். அந்த தண்ணீர் போத்தல்களை எடுத்து அதிலிருந்து பைபர் நூலை பிரித்து பின்னலாடை துறையில் பயன்படுத்த இரண்டு நிறுவனங்கள் வெற்றி கண்டிருக்கிறார்கள் .ஒன்று சுலோச்சனா நிட் என்ற ஒரு நிறுவனம். இன்னொன்று சிண்டிகேட் இம்பெக்ஸ். இவர்கள் இருவரும் வெளிநாட்டு தொழில் நுட்பத்தை முன்வைத்து குஜராத்தில் நிகழ்த்தப்பட்ட ஆய்வுகளில் அடிப்படையில் தண்ணீர் போத்தல்களில் இருந்து பைபர் நூலை பிரித்தெடுக்கும் முயற்சியில் வெற்றி பெற்று பின்னர் ஆடைகளை உற்பத்தி செய்திருக்கிறார்கள் .அது ஆஸ்திரேலியாவின் உலக ஓபன் டென்னிஸ் போட்டிகளின் போது பயன்படுத்தப்பட உள்ளது .இந்தப் போட்டியின் போது பந்துகளை சேகரிக்கும் தரும் சிறு பையன்கள் பயன்படுத்துகிற பின்னலாடை ஆகியுள்ளன. இந்த தண்ணீர் போத்தல்கள் டீசர்ட்டுகளாக மாறியுள்ளன .உலகத்தில் முதல் முயற்சி இது .அந்த டீ சர்டுக்களை அடிக்கடி துவைக்க வேண்டியது இல்லை . திடக் கழிவை பின்னலாடை துறை டீ சர்டுக்களை மாற்றியிருக்கிறார்கள்.அது ஒரு சாதனை .திருப்பூரில் நிகழ்ந்திருக்கிறது திடக்கழிவுகள் என்று வந்துவிட்டாலே அவற்றை மறுப்பது குறைப்பது மறுபயன்பாடு செய்வது மறுசுழற்சி செய்வது என்பவை முக்கியமாக இருக்கின்றன. ஒரு லிட்டர் கொக்ககோலா தயாரிக்க 60 லிட்டர் தண்ணீர் தேவையாக இருக்கிறது. இரண்டு டம்ளர் அரிசியை வேக வைக்க வெவ்வேறு முறைகள் என்று வருகிறபோது 10 லிட்டர் தண்ணீர் தேவைப்படும். இதற்கான தண்ணீர் மறைநீர் தண்ணீர் என்று சொல்லப்படுகிறது. நம்முடைய கழிவுகளில் வீட்டுக்கழிவுகள் தொழிற்சாலைக் கழிவுகள் முக்கியம் ஆகும் .டன் கணக்கில் இவை வெளியேறிக் கொண்டிருக்கின்றன. இவற்றை தடுப்பதற்கான முயற்சிகள் குறைவாகவே இருக்கின்றன .நண்பரொருவர் போபால் எக்ஸ்பிரஸ் என்ற திரைப்படத்தின் ஒரு காட்சியை குறிப்பிட்டார் .போபால் விஷவாயு சம்பவம் நடந்து 30 ஆண்டுகளுக்கு மேலாக அதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பெரிய நிவாரணங்கள் கிடைக்கவில்லை அந்த படத்தின் இறுதியில் ஒரு காட்சி. ஒரு தொடர்வண்டி பயணிகளுடன் சென்று கொண்டிருக்கிறது .போபால் பகுதியில் ஒருவர் சிரமப்பட்டு அந்த விஷ வாயுவை சுவாசித்து உடல் தள்ளாட ஒரு கொடி ஒன்றை காட்டி அந்த வண்டியை நிறுத்துகிறார். அந்த வண்டி விஷவாயு பாதிக்கப்பட்ட பகுதிக்குச் செல்வதை தடுக்கிறார். அவர் விசவாய்வு தன்மையால் மயங்கி விடுகிறார் .பக்கத்திலேயே எந்த அடையாளமும் கிடைக்காத இன்னொரு தொடர்வண்டி போபால் விஷவாயு பகுதிக்குள் போகிறது. ஒரு பக்கம் கழிவு சார்ந்து ஏதாவது நடக்கிறது. எப்படி முடிகிறது .இப்படித்தான் அறிவு சார்ந்த விஷயங்களால் ஏதோ ஒரு பகுதியில் எச்சரிக்கையோடு நிறுத்தினால் இன்னும் பல பகுதிகளில் அது திரும்பத் திரும்ப வேறு விதங்களில் வந்து கொண்டிருக்கிறது .சமீபத்தில் மருத்துவ கழிவுகளை வளரும் நாடுகளில் கொண்டு வந்து கொட்டி இன்னும் பிரச்சனை செய்து கொண்டிருக்கிறார்கள் . திருப்பூருக்கு அருகில் கடல் ஏதாவது இருந்தால் திருப்பூர் 2020ல் ஒரு லட்சம் கோடி ரூபாய் அந்நியசெலவாணி இலக்கை அடைந்திருக்கும் என்றார் நண்பர் ஒருவர்,. கடலில் திடசாயக்கழிவுகளை சுலபமாக வெளியேற்றி விடலாம். பல சிரமங்கள் , சுத்திக்கரிப்பு நிலையம் பல கோடி செலவு செய்து ஏற்படுத்துவது போன்றவற்றைத்தவிர்க்கலாமே. 2020 இந்தியா வல்லரசாகும் என்ற அப்துல்கலாமின் கனவு போல் 2020 ல் ஒரு லட்சம் கோடி ரூபாய் என்பது திருப்பூர் பின்னலாடைஏற்றுமதியாளர்களின் கனவாக கடந்த 5 ஆண்டுகளில் இருந்தது. கை கூடவில்லை. ஓர் அடி முன்னால் இரு அடி பின்னால் என்கிற மாதிரி ஆகிவிட்டது தற்போது என்றார் ஒரு நண்பர் . மீத்தேனை விட அபாயகரமானது சமையல் வாயு. அதிக விசத்தன்மை கொண்டது. சகாய விலை , மான்யம் என்பதால் சமையல் வாயுவை யாரும் எச்சரிக்கையாக, அக்கறை எடுப்பதில்லை. இலவசம் என்று வந்து விட்டால் சலுகைதான் மரணத்திற்கும் என்றார் நண்பர்.மீத்தேன் தான் கண்களுக்குத் தெரிகின்றன. மூட்டை மூட்டையாய் கொட்டிக்கிடக்கும் திடக்கழிவுகள் பல சமயங்களில் சோற்றில் மறைந்த பூசிக்காயாய் இருக்கின்றன. பல சமயங்களில் நாம் என்சைம் என்பதையும் எச்சில் என்பதையும் பலவாறு போட்டு மனதில் சமைத்து பார்க்கிறோம் .ஒருவகையில் இரண்டு வார்த்தைகளும் ஒரே அர்த்தத்தை தான் தருகின்றன .காரணம் அவை இரண்டும் திடகழிவு என்பதில் உடைய வெவ்வேறு ரூபங்களாக இருக்கின்றன. இதிலிருந்து பொருட்களை உற்பத்தி செய்வது அழகுபடுத்துவது ஒரு கலையாக உலகம் முழுக்க இன்று வளர்ந்து வருகிறது அந்தக் கலைக்கு வளம் சேர்க்கும் வகையில் பல கலை பொருட்கள் உலகம் முழுவதும் இன்று வரை கொண்டிருக்கின்றன ஆனால் அவை விஷத்தன்மை நீக்கப்பட்டதாக இருக்கவேண்டும் என்பது மிகவும் முக்கியமாக இருக்கிறது. . இந்த தண்ணீர் போத்தல்கள் டீசர்ட்டுகளாக மாறியுள்ள விசயமும் இப்படித்தான் .
New Centuary Book publishers, Tiruppur நியூ செஞ்சுரி புத்தக நிலையம், திருப்பூர் திருப்பூர் புதிய பேருந்து நிலையம்.. வணக்கம். நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் “ உங்கள் நூலகம் “ஜீன் மாத இதழில் வேரல் பதிப்பகம் வெளியிட்ட, சேலம் பொன் குமார் தொகுத்த “ திருப்பூர் சிறுகதைகள் “ ” நூல் பற்றிய அறிமுகத்தை எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் எழுதியுள்ளார். அந்த நூலில் தங்கள் சிறுகதை இடம்பெற்றுள்ளது. அதை எழுதிய தங்களைப் பாராட்டுகிறோம். உங்கள் படைப்புப் பயணம் தொடர வாழ்த்துகிறோம். தொடர்ந்து தங்களின் இலக்கியப் பயணத்தின் மூலம் சாதனைகள் புரிய வாழ்த்துகிறோம். உங்களைப் போன்றோரின் நூல்களை விற்பனை செய்யவும்,தங்கள் நூல்கள் விற்பனையிலும் வெளியீட்டிலும் பங்கு பெறவும் நியூ செஞ்சுரி புத்தக நிலையம், திருப்பூர் விரும்புகிறது. உங்கள் இலக்கியப்பணி தொடர வாழ்த்துகிறோம். உங்கள் நூலகம் மாத இதம் ஆண்டுச்சந்தா ரூ540. அன்புடன், குணசேகரன் ( நியூ செஞ்சுரி புத்தக நிலையம், திருப்பூர் )(8098426515) ராமசாமி ( நியூ செஞ்சுரி புத்தக நிலையம், திருப்பூர் ( 9363044117 ) திருப்பூர் சிறுகதைகள் Thiruppuu sirukathaikal : veral books 01. ஒருவர் உள்ளம் - திருப்பூர் கிருஷ்ணன் 02. அப்பா - சுப்ரபாரதி மணியன் 03. கிணற்றில் குதித்தவர்கள்- என். ஸ்ரீ ராம் 04. அரூப நெருப்பு - கே. என். செந்தில் 05. . மனப்பொருத்தம் - தி. குழந்தைவேலு 06. அரசாங்கம் - தாண்டவக்கோன் 07. அப்பாவின் நிழல் - ரத்தினமூர்த்தி 08. திருவினை - உடுமலை கி. ராம் கணேஷ் 09. பெண் வலிமையானவள் - ரா. தீபன் 10.அறிமுகம் - அழகு பாண்டி அரசப்பன் 11 ஏ. டி. எம். - அம்பிகா குமரன் 12. முக்கோணம் - அ. இளஞாயிறு 13. மன்னிப்பு - சிவதாசன் 14. கிடா விருந்து - எஸ். ஏ. காதர் 15.நானறிந்த காதல் எழுதப்பட்ட கதை - ஆ. அருணாச்சலம் 16. உயிர்க் கொல்லி கிளர்த்திய ( அறிவுப்) பசி - ஆர். செம்மலர் 17. டயர் வண்டி - வெண் புரவி 18. தக்காளி - பிரபாகர் 19. இயலாமை - முத்துபாரதி 20. பள்ளிக்கூடத்திற்கு அப்பால் - த. குணசுந்தரி 21 பெருசு - முரளி குமார் 22. செத்தவன் - இரா. சிந்தன் 23. பிரிவினை - சாமக்கோடாங்கி ரவி 24. வென்றே தீரும் அஹிம்சை - த. மஞ்சு 25. சந்தையான பள்ளிக்கூடம் - கோம்பை மணிகண்ட