சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
கதா பரிசு "92"-
இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது.
"கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.----------------
சுப்ரபாரதிமணியன் -
புதன், 19 பிப்ரவரி, 2025
சுப்ர பாரதி மணியன்
சுப்பிரமணிய பாரதியின் குட்டிக் கதைகள்
நான் சேவல் சண்டை பற்றி பல கதைகளை எழுதி இருக்கிறேன் அப்பா தொகுப்பிலும் வேறு கதை தொப்புகளிலும் அந்தக் கதைகள் உள்ளன. ஆடுகளம் படத்தில் சேவல் சண்டைகள் இலக்கியத்தில் வருகிற இடங்களைக் குறிப்பிட்டு பாரதியாரின் சின்ன சங்கரன் கதை என்பதையும் போடுகிறார்கள் என்று சொன்னார்கள். என்னுடைய சேவல் சண்டை கதைகளை பற்றி அதில் குறிப்பிருக்கிறதா என்று தெரியவில்லை.
பாரதி வேடிக்கை கதைகள் என்று பலவற்றை எழுதியிருக்கிறார் குட்டிக் கதைகள் எழுதி இருக்கிறார் அவற்றிலெல்லாம் நகைச்சுவை மிளிரும்.
பாரதியாரின் சின்ன சங்கரன் கதை 33 பக்க நீண்ட கதை அப்படித்தான் அவர் அப்போது வெளிவந்து கொண்டிருந்த ஐரோப்பிய சாயல் சிறுகதைகளில் வரும் வடிவத்தை பின்பற்றியவர் அல்ல. அதே சமயம் சிறுகதைகள் மற்றும் படைப்புகளில் ஏதாவது செய்தி சொல்ல வேண்டும். சமூகப் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்று கருதியவர். அவர் எழுதிய படைப்புகளில் உடன்கட்டை ஏறுவது குறித்த எதிர்ப்பும் பொட்டுக்கட்டு வழக்கத்தை எதிர்த்தும் ருது ஆவதற்கு முன்பே திருமணம் செய்யும் பழக்கத்தை எதிர்த்தும் பலவற்றை எழுதியிருக்கிறார். கலப்பு மணம் பற்றி ஆதரித்து எழுதியிருக்கிறார். மதவழக்கம், பழமையான சட்டங்களை பற்றி கண்டித்து இருக்கிறார். ஆறில் ஒரு பங்கு சிறுகதையில் கூட தீண்டாமை சார்ந்த எதிர்ப்பு குரல் இருக்கும் இவை எல்லாம் பாரதியை நவீன சிறுகதை சார்ந்த ஒரு எழுத்தாளராக காட்டும்
இதனுடைய தொடர்ச்சி சக்ரவர்த்தினியில் ‘துளஸீபாயி என்ற ரஜபுத்திர கன்னிகையின் சரித்திரம்’ என்ற புனைவை எழுதியிருந்தார் . 11 பக்கம் கொண்டது. அது தமிழில் முதல் சிறுகதை என்று சிலர் சொல்கிறார்கள் . ஷெல்லிதாசன் என்ற புனைப் பெயரில் எழுதியிருந்தார், “ ஆறில் ஒரு பங்கு “ கதையும் அப்படி சிறப்புகள் கொண்டது ஆறில் ஒன்று ஒரு பங்கு 1910 இல் பாண்டிச்சேரியில் இருந்து பாரதியார் அவர்களால் வெளியிடப்பட்டது
கதாபாத்திரம் கதை சொல்லும் யுத்தியும் கதை மையத்திலிருந்து கதையை வெளியேற்றும் புத்தியும் இன்றைக்கு பல எழுத்தாளர்களால் சுட்டிக்காட்டப்படுகிறது. ஆனால் அதை கடைபிடித்தவர் ஆரம்பத்திலேயே பாரதியார் அவர்கள். அவர்களுடைய வேடிக்கை கதைகள் அல்லது குட்டி கதைகள் எனக்குப் பிடிக்கும். இவற்றில் எனக்கு அந்த பழக்கடைக்காரனை ரொம்பவும் ஞாபகம் இருக்கிறது
அவன் கால் யானைக்கால் போல இருக்கும் .அந்த வியாதி உள்ளது. அந்தப் பக்கம் வரும் பள்ளி மாணவர்கள் அவனுடைய கடையில் இருந்து பழங்களை திருட முயற்சித்தால் என் காலால் அடிபடுவீர்கள் என்று விரட்டுவான். ஒரு பையன் அப்படித்தான் ஒரு பழத்தை எடுத்து விட்டான் காலால் உதைக்கிறான். யானைக்கால் என்பதால் மெது மெது என்று இருப்பதாக அந்தப் பையன் மற்ற பையன்களிடம் சொல்லிச் சிரிக்கிறான் . திரும்பத் திரும்பச்சொல்லி சிரிக்கிறான். இது எலும்பில்லாத கால் அடியே படாது, வலிக்காது என்று அவன் சொல்கிறான் இந்த கதை சின்ன வயதிலிருந்து எனக்கு ஞாபகம் வந்தது.. காரணம் இதேபோல யானைக்கால் வியாதி கொண்ட ஒரு பெண்மணி நான் படித்த திருப்பூர் மேட்டுப்பாளையம் நகராட்சி பள்ளியில் முன்பு தேன் மிட்டாய்கள். நெல்லிக்காய் வைத்தபடி வியாபாரம் செய்து கொண்டிருந்தாள் .அவள் தன் காலை காட்டித்தான் மற்றவர்களையும் மிரட்டி கடையை நடத்திக் கொண்டிருந்தாள்.
சேவல் கட்டு பற்றிய குறிப்பு வருகிற சின்ன சங்கரன் கதைக்கு மறுபடியும் செல்லலாம். அதில் ராமசாமி கவுண்டர் நபர் மிக முக்கியமான வருகிறார். அவர் பொழுதுபோக்குகளில் ஒன்று சேவல் சண்டை வேடிக்கை பார்ப்பது. அவர் சார்ந்த அரண்மனை கோழிகள் அந்த சண்டையில் தோற்று தான் போகும். புதிதாக அரண்மனை கோழி என்று எதையாவது கொண்டு வந்து சேர்த்து விடுவார்கள் .பிறகு அவையெல்லாம் சேவல் சண்டையில் பிரயோஜனம் இல்லாமல் போகும். ராமசாமி கவுண்டரின் உணவு பழக்க வழக்கங்களை பற்றி எல்லாம் அந்த கதையில் நிறைய சொல்லப்படும். 32 கவளம் சாப்பிட வேண்டும் என்று குறிப்பு அதில் இருக்கும். அவ்வளவு சாதம் அவ்வளவு சாப்பிட முடியுமா என்று தெரியவில்லை அவ்வளவு சாப்பிட வேண்டும் என்று அந்த கதையில் வலியுறுத்தி இருப்பார். .அதேபோல ராமசாமி கவுண்டர் சேவல் சண்டையில் தோற்றுப் போன கோச்சைக்கறியைச் சாப்பிட்டாரா என்ற குறிப்பு காணவில்லை பாரதியாருடைய கதையில் இடம்பெறும் இந்த சேவல் சண்டை என்னுடைய சில கதைகளின் சேவல் சண்டை மையத்திற்கு அருகில் வந்திருப்பதால் அந்த கதை எனக்கு ரொம்பவும் பிடித்ததாக இருக்கிறது. பாரதியார் எழுதிய வேடிக்கை கதைகள், குட்டி கதைகள் இவற்றை சுலபமாக யாரும் படித்து தங்களுக்கான கதைகளாக எடுத்துக் கொள்ளலாம்
ReplyForward
Add reaction
The tamil hindu jan 2025-02-20
வெப்பம்:
சுப்ரபாரதிமணியனின் சிறார் நாவல்
புவி வெப்பமாதல் இன்று தரும் சிக்கல்கள் ஏராளம். அதன் பாதிப்புகள் எப்படி இருக்கும் என்பதையும் அதன் விளைவுகளையும் இந்த நாவல் சொல்கிறது.
ஒரு தீவு போன்ற பகுதியில் புவி வெப்பமாதலால் கடல் மட்டம் உயர்வதும் அதனால் பள்ளிகள் மூடப்பட்டு இடம்பெயர்வதும் இந்த நாவலில் சொல்லப்பட்டிருக்கிறது.
சிறுவர்கள் பெரியவர்கள் ஆன சூழலில் அதன் பாதிப்பு தொடர்வதையும் பல அனுபவங்கள் மூலம் சொல்கிறார் நாவலாசிரியர். அவர்களுக்கு ஏற்படும் அன்பை, காதலை இயற்கை சூழலுடன் கூறியிருக்கிறார்.
குறுகிய காலத்தில் காலநிலை மாற்றம் விசூவரூபம் எடுப்பதை சிறுவர் அனுபவங்கள் மூலம் சொல்லப்பட்டிருக்கிறது இதில்
( ரூ55 நியூ சென்சுரி புஸ் வெளியீடு சென்னை )
• மதுராந்தகன்
தறிநாடா : குறும்படம்
இயக்கம் : ஜோசன் விக்டர்
திரைமொழிக்கதை: சுப்ரபாரதிமணியன்
கைபேசியில் எடுத்த படம்
தயாரிப்பு : கனவு On production
0
தறிநாடா : குறும்படம்
0
தறிநாடா அங்கும் இங்குமோடும் காட்சி
நாடா இந்தப்புறம், அந்தப்புறம் என்று ஓடுவது
நாடா இந்தப்புறம்,
ஆண் பெண் முகங்கள்
நாடா இந்தப்புறம்,
ஆண் பெண் முகங்கள்
நாடா இந்தப்புறம்,
ஆண் பெண் முகங்கள்
நாடா இந்தப்புறம்,
ஆண் பெண் முகங்கள்
அந்தப்புறம்
ஆண் பெண் முகங்கள்
அந்தப்புறம்
ஆண் பெண் முகங்கள்
அந்தப்புறம்
ஆண் பெண் முகங்கள்
அந்தப்புறம்
ஆண் பெண் முகங்கள்
0
சேலையை நெய்து முடித்தல்
0
முதலாளியிடம் போதல் .
நெசவாளி : கூலி குறைவாக இருக்குதே
முதலாளி : அவ்வளவுதான் வரும் .. போ
0
வீடு திரும்பும் நெசவாளி சோகத்துடன்
0
தறிநாடா அங்கும் இங்குமோடும் காட்சி
நாடா இந்தப்புறம், அந்தப்புறம் என்று ஓடுவது
நாடா இந்தப்புறம்,
ஆண் பெண் முகங்கள்
நாடா இந்தப்புறம்,
ஆண் பெண் முகங்கள்
நாடா இந்தப்புறம்,
ஆண் பெண் முகங்கள்
நாடா இந்தப்புறம்,
ஆண் பெண் முகங்கள்
அந்தப்புறம்
ஆண் பெண் முகங்கள்
அந்தப்புறம்
ஆண் பெண் முகங்கள்
அந்தப்புறம்
ஆண் பெண் முகங்கள்
அந்தப்புறம்
ஆண் பெண் முகங்கள்
0
நெசவை திடீரென நிறுத்துதல்
தறி நாடாவை கையில் எடுத்து வீதிக்குச் செல்லுவது . கூர்மையாக்குவது
0
முதலாளி வீடு வரல். குத்த தறி நாடாவை ஓங்குதல்.
அலறல் : நான் காரணமில்லை
0
சாயப்பட்டறை செல்லல்
குத்த தறி நாடாவை ஓங்குதல்.
அலறல் : நான் காரணமில்லை
0
ரேசன் கடையிலில் இலவச சேலை, வேட்டியை வாங்கி வரும் பெண்
“ நான் என்ன பண்ணட்டும். இலவச சேலை, வேட்டின்னு சொல்லி பவர்லூம்லே நெய்சதெ தந்தாங்க. கைத்தறியிலெ நெய்சது இல்லே இது .
அலறல் : நான் காரணமில்லை
0
மளிகைக்கடைக்குச் செல்லுவது
குத்த தறி நாடாவை ஓங்குதல்.
அலறல் : நான் காரணமில்லை
0
ஜரிகைக் கடைக்குச் செல்வது
குத்த தறி நாடாவை ஓங்குதல்.
அலறல் : நான் காரணமில்லை
0
நூல் கடைக்குச் செல்வது
குத்த தறி நாடாவை ஓங்குதல்.
அலறல் : நான் காரணமில்லை
குத்த தறி நாடாவை ஓங்குதல்.
அலறல் : நான் காரணமில்லை
0
நாங்க காரணம் இல்லை யார் காரணம் தேடு
0
அவன் விழித்தபடி
கையில் இருக்கும் நாடாவை உயர்த்துவது.
நட்புரை
வாழ்க்கை பிரம்மாண்டமானது. வாழ்க்கை அனுபவங்களை சில வார்த்தைகளில், சில வரிகளில் சுருக்கிக் கவிதையாக அதிலும் குறிப்பாக ஹைக்கூவாகத் தரும் வல்லமை அமரன் அவர்களுக்கு எப்போதும் உண்டு. அதை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பதிலும் பிற மொழிகளில் கொண்டு செல்வதிலும் ஆர்வம் கொள்பவர்.
ஆயிரக்கணக்கான பக்கங்களை ஹைக்கூ கவிதைகளால் நிரப்பி இருப்பவர் .
எவ்வளவு அனுபவங்கள்
எவ்வளவு கைகுலுக்கல்கள்
எவ்வளவு பரிமாற்றங்கள்
அதெல்லாம் ஆச்சரியமாக இருந்திருக்கிறது. அந்த துறை சார்ந்து தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பவர் என்பதால் அவருக்கு ஹைக்கூ சுலபமாக வந்து விடுகிறது. ஆனால் ஒரு வகையில் பழமைத் தன்மையும் வேறு வகையான இறுக்கமும் இருப்பதை நான் அந்நியமாக கண்டு சில சமயம் ஒதுங்கி இருக்கிறேன் ஆனால் அனுபவ அளவில் அவையெல்லாம் விரிந்த கடல் போன்றது.
அதிலிருந்து சிலவற்றை எடுத்து சொல்ல சொல்ல நாமும் அந்த கடலுக்குள் போய் பயணம் செய்கிற அனுபவத்தை பெறுகிறோம். அதற்குள் நீச்சல் அடிக்கிறோம். சில சமயம் கடல் நீர் வாய்க்குள் புகுந்து கொள்வது உண்டு. அப்படித்தான் நான் முன்னால் குறிப்பிட்ட பழமைத்தன்மையும் கூட.
ஆனால் அதையெல்லாம் மீறி அவர் தொடர்ந்து கவிதை உலகில் இருப்பதும் ஆயிரக்கணக்கான கவிதைகளை அக்கறையுடன் எழுதி இருப்பதும் பெரிய சாதனையாகப்படுகிறது.
அதில் ஒரு நூலை கனவு பதிப்பகத்தின் மூலம் அவர் வெளியிட இசிவு தந்தது என்னை பெரு மகிழ்ச்சிக்குள்ளாக்கியது. அந்த மகிழ்ச்சியை ஹைக்கூ வாசகங்கள் பெற வேண்டும் என்பது என்னுடைய விருப்பம். .அமரன் அவர்களின் ஹைக்கூ உலகத்திற்குள் நாம் செல்வதற்கு ஒரு நல்ல வாய்ப்பை கனவு வெளியீட்டின் மூலமாக அவர் தந்திருக்கிறார். அவருக்கு நன்றி
அவரின் ஹைக்கூ உலகில் அவரோடு இணைந்து அவருடன் கைக்குலுக்கிக் கொள்வோம்.. வாருங்கள்
0
சுப்ரபாரதி மணியன் 9486101003 ( கனவு பதிப்பகம், திருப்பூர் )
எழுத்தாளர் தேவி பாரதி:
ஈரோடு டிரஸ்ட் மருத்துவமனை... அமரர் நண்பர் மருத்துவர் ஜீவானந்தம் அவர்கள் நண்பர்கள் உடன் இணைந்து ஆரம்பித்த மருத்துவமனை. அங்கு தான் எழுத்தாளர் தேவி பாரதி சிகிச்சை பெற்று வந்தார். வருகிறார். அவரை மருத்துவமனையின் தலைமை நிர்வாகிகளான சிவானந்தம் போன்றவர்களும் பத்திரிக்கையாளர் ஜீவா தங்கவேல் போன்றவர்களும் அக்கறை எடுத்துக்கொண்டு அங்கே அனுமதித்திருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன்.
நண்பர் ஓவியர் சுந்தரம் அவர்களுடன் சென்றபோது அவர் அடையாளம் கண்டு பேசும் நிலையில் இருப்பாரா என்ற சந்தேகம் எனக்கு இருந்தது. ஆனால் இரண்டாவது மாடியில் இருந்த அவர் அறையில் அவரை பார்த்தவுடன் தூக்கத்தில் இருந்தவர் சட்டென விழித்து புன்னகைத்தார். தலை கருப்பு கேசம் அடர்ந்திருந்தது.முகத்தில் நாலைந்து நாள் தாடிதான். மூக்கில் குழாய்கள்.
அவர் வாயிலிருந்து வெளியேறிய கோழை படுக்கையை நனைத்து அசுத்துதக்கியிருப்பதைக் காட்டி அதை துடைக்க முடியாமல் இருப்பதை சொன்னார். பக்க வாதத்தால் கைகால்கள் செயலிழந்திருப்பதாகச் சொன்னார். அவரின் தலை அருகில் இருந்த்த் துண்டை எடுத்து ஓவியர் சுந்தர் அவர்கள் அதைத் துடைத்து அவருக்கு ஆறுதல். தந்தார் நன்றாக இருப்பதாக சொன்னார் நாங்கள் வேறு எதுவும் கேட்காத போது அவர் சரளமாக பேச ஆரம்பித்தார்
9 வயதில் பள்ளியில் படிக்கிற போது எழுத ஆரம்பித்தேன் அப்போதே நான் எழுத்தாளர் ஆகிவிட்டேன் என்று நினைத்தேன் ஜெயகாந்தன் அவர்கள் அப்போது பிரபலமான எழுத்தாளர் என்பதால் அவருக்கு கடிதம் எழுதினேன். நான் எழுத்தாளன் இன்னும் தேர்ச்சி பெற வேண்டும். அதற்காக படிப்பதற்காக சில புத்தகங்களை எனக்கு சிபாரிசு செய்யுங்கள் என்று கடிதம் எழுதினேன். அவர் பதில் அனுப்பவில்லை
பின்னால் ஈரோட்டுக்கு ஒரு கூட்டத்திற்கு வந்திருந்த அவரை சந்தித்தேன்.மதுவும் மாமிசம் ஆகவும் இருந்தார். எனக்கு அது சிரமப்படுத்தியது. குப்பையாக இருக்கிறார் என்று நினைத்தேன் ஆனால் அவர் எழுத்துக்கள் அப்படி இல்லை அவரும் அப்படி இல்லை என்று பின்னால் நான் உணர்ந்து கொண்டேன்.
அவர் எழுத்துக்களை தொடர்ந்து படித்து வந்தேன் அவர் மருத்துவமனையில் இருந்த கடைசி காலகட்டத்தில் காலச்சுவடு கண்ணன் அவர்களுடன் சென்று சந்தித்தேன் அடுத்த முறை மைதிலி உடன் சென்று சந்தித்தேன். நான் சந்தித்த சில நிமிடங்களில் அவர் மறைந்து விட்டார் அவருக்கு அஞ்சலி செலுத்திய முதல் நபராக இருந்தேன் என்று நினைக்கிறேன்
சுந்தர ராமசாமியின் படைப்புகளில் எனக்கு பிடித்தது புளிய மரத்தின் கதை தான்.. ஜே ஜே சில குறிப்புகள் நாவல் விளையாட்டுதான் ஆண்கள் பெண்கள் குழந்தைகள் இன்னொரு சிறந்த நாவல். அவர் படைப்பை எவ்வளவு நுணுக்கமாக எழுத வேண்டும் என்பதை கற்றுக் கொடுத்தார். அவருக்கு பெரிய விருதுகள், அங்கீகாரங்கள் கிடைக்கவில்லை என்பது என்னைப் போன்று உள்ளவர்களுக்கு வருத்தம் ஆனால் அவர் அதையெல்லாம் கண்டு கொண்டதில்லை
என்னுடைய படைப்புகளுக்கு ஆதாரமாக, அட்சாரமாக ஈரோட்டைச் சார்ந்த நண்பர் மதுசூதரன் இருந்தார். தீபம் போன்ற பத்திரிகைகளில் பணிபுரிந்தார். அவர்தான் என்னை ஊக்குவித்து எழுத சொன்னார்.
நான் மார்க்சிய தத்துவம் சார்ந்த இயக்கங்களில் இருந்தேன் ஆனால் அங்கிருந்தவர்களில் பலபேர் இலக்கிய வாசிப்பு என்பதை தேவையில்லாததாகக் கொண்டிருந்தார்கள் ஆனால் தத்துவார்த்த விஷயங்களை வரமாக கொண்டிருந்தார்கள் அதெல்லாம் எனக்கு உரமாக இருந்தது
நான் எழுதிய நாவல்களில் நொய்யல் எனக்கு பிடித்த நாவல் என் வாழ்க்கை அனுபவங்கள் பலதும் அதில் வந்திருக்கின்றன. நீர் வழிபடூம் நாவல் அதிகம் பேசப்பட்டாலும் அதைவிட நொய்யல்தான் அதிகமாக பேசப்பட வேண்டும் என நினைத்தேன்
நான் இப்போது எழுதி வரும் ஆதியாகமம் என்ற நாவல் கூட முக்கியமான நாவல். வண்ணநிலவனின் கதைகளில் ஆதியாகமமஎன்ற வார்த்தை அதிகம் தென்படும். அது எனக்கு ரொம்பவும் பிடிக்கும் .அந்த தலைப்பிலேயே புதிய நாவலை எழுத ஆரம்பித்தேன்.
எழுத்தாளனுக்கு மரணம் இல்லை அவர் எழுத்துக்கள் வாழ்ந்து கொண்டே இருக்கும்
The hidnu tamil feb 2025
முஸ்லிம்கள் எப்படி சிறந்த சமூகமாக இருக்க முடியும்
கற்பனையும் கருத்துரையும்: பிஜிலி நூல்
உண்மையைச் சரணடைதல் என்ற எளிய நம்பிக்கை தான். இஸ்லாமியத்தின் அடிப்படை அது பணிந்து நடக்க வற்புறுத்துகிறது என்கிறார் பிஜிலி
இஸ்லாம் ஒரு தத்துவமாகும். வாழ்க்கை முறையாகவும் பரவி அந்தந்த நாடுகளின் கலாச்சாரமும் பாதித்திருக்கிறது உள்ளூர் கலாச்சாரம் இஸ்லாமின் அடிப்படை கொள்கைகளை பாதிக்காத முறையில் பின்பற்றப்படுகிறது. வேறுபாடு இருக்குமானால் அது விலகிதாக உணரப்படும் சூழல்களை இந்த நூலில் சிறப்பாக சொல்கிறார். பிஜிலி.
சுற்றுச்சூழல் பொறியாளராக இந்தியா மற்றும் வெளிநாடுகளில் பணிபுரிந்து திருவனந்தபுரம் நகரில் வாழ்ந்து வருபவர். ஐந்து மொழிகளில் எழுதும் ஆர்வம் கொண்டவர். அவரின் சமீபத்தியக் கட்டுரைத்தொகுப்பு நூல் இது.
இஸ்லாமைக் கொள்ளாதவர்களும் புரிந்து கொண்டிருப்பது போன்று அது வெறும் மதம் மட்டும் அல்ல படைத்தவர்களிடமிருந்து படைக்கப்பட்டது திருக்குர்ஆன். இந்த வாக்கியத்தை மெய்ப்பிக்கும் உண்மையின் குரலை சொல்வதற்காக இந்த நூலை பிஜிலி அவர்கள் எழுதியிருக்கிறார்.
இந்தியா என்பது ஒரே கலாச்சாரத்தை கொண்டது என்ற கருத்து கற்பனையானது. இந்த கருத்தை கொண்டவர்கள் அதிகாரம் வைத்திருக்கிறார்கள் அவர்கள் இதை உறுதி செய்ய வேண்டும் என்று மனதில்கொண்டிருக்கிறார்கள் என்பதை பல தரவுகள் மூலம் சொல்கிறார்.
பேராசை தாகம் உருவாக்கியிருக்கும் துன்பங்களிலிருந்து விடுதலை பெற்று மோட்சம் அடைவதற்காக வழியாக இஸ்லாம் இருப்பதை பல உதாரணங்கள் மூலம் விளக்குகிறார். அந்த உண்மையை அறிந்து அடைய இந்த கட்டுரைகள் வழி காட்டுவதாக அமைத்திருக்கிறார். இஸ்லாம் தவறாக புரிந்து கொள்ளப்பட்டு தவறாக எடுத்துரைக்கப்பட்டு தவறாக கணிக்கப்பட்டு இன்று இஸ்லாம் உட்படாத எல்லோராலும் எதிர்க்கப்பட்டு வருகிறது என்பதை சமீபத்திய சம்பவங்கள் மூலம் விளக்குகிறார். நாம் ஒன்று சேர்ந்து மனிதாபிமானத்தை புரிந்து கொள்ள முயல்வது சமூக வாழ்க்கைக்கும் ஆரோக்கியமான முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் என்பதை சொல்கிறார்
இந்தியாவில் இருக்கும் 20 கோடி முஸ்லிம்கள் சரிவாகவேக் கிடக்கிறார்கள். பலரைக் கவரக்கூடிய உயர் சாதிக் கலாச்சாரம் பூர்வீக ஆதிக்கம் அவர்களை பாதித்திருக்கிறது என்பதை சொல்கிறார் ஆன்மீகம் லவுகீகமும் இஸ்லாமில் இணைபிரியாதவை இஸ்லாம் தான் மிகவும் பழமையான மதம் அதே நேரத்தில் இஸ்லாம் தான் மனிதனுக்கு ஏற்றதான நவீனமான மதம் என்றும் பல சர்ச்சைகளை இந்த நூல் எழுப்பி இருக்கிறது. முஸ்லிம்கள் எப்படி சிறந்த சமூகமாக இருக்க முடியும் என்பதற்கான நெறிமுறைகளையும் விளக்குகிறது இந்நூல்.அதை பிற மதத்தினரும் கைக்கொள்ளலாம் என்பதையும் இது சொல்கிறது
பிஜிலி அவர்கள் தமிழ், மலையாளம், உருது, இந்தி, ஆங்கிலம் ஆகிய ஐந்து மொழிகளில் எழுதவும் வாசிக்கவும் அறிந்தவர். தமிழில் அவ்வப்போது எழுதி வருகிறார் அவரின் ஐந்து தமிழ் நூல்களில் சமீபத்திய நூல் இது.
ரூபாய் 300/ 388 பக்கங்கள் சித்தார்த் பதிப்பகம் மதுரை 6 2 5020 8220550688
சுப்ரபாரதிமணியன்
SUBRABHARATHIMANIAN/ RPSubramanian ) சுப்ரபாரதிமணியன்
8/2635 Pandian Nagar, Tiruppur 641602 , subrabharathi@gmail.com.. 094861 01003/ 94423 50199
--------------------------------------------------------------------------------------------------------------------------------FB
. தமிழகம் முதல்வருக்கு கோரிக்கை: சுப்ரபாரதிமணியன்
1. நகரங்களில் மற்றும் பிற ஊர்களில் நடைபெறும் நூலக விழாக்களில் உள்ளூர் எழுத்தாளர்களுக்கு பங்களிப்பும் முக்கியத்துவம் தரப்பட வேண்டும்
2. நூலாக வாசகர் வட்ட குழுக்களில் அம்பது சதவீதம் எழுத்தாளர்கள் இடம் பெற வேண்டும்
சமீபத்தில் நூலக வார விழா நடந்து முடிந்தது அதில் இடம்பெற்றவர்களின் பட்டியலை பார்த்தால் அதிர்ச்சிகரமாக இருக்கும்.அதில்எழுத்தாளர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் எழுத்தாளர்களை நூல்கள் நூலகங்ளில் இருக்கும். பிறர் எடுத்து படிப்பார்கள் விமர்சிப்பார்கள். ஆனால் அங்கு நடைபெறும் கூட்டங்களில் எழுத்தாளர்கள் இடம்பெற மாட்டார்கள்
சாதாரண தேனீர் செலவுக்கு பணம் கொடுக்கும் தொழில் பிரமுகர்கள் இலக்கிய வள்ளல்களாக அந்த கூட்டங்களில் முன் நிறுத்தப்படுவார்கள். அவர்கள் எழுதும் பொன்மொழிகள் கவிதைகள் என சொல்லப்படும் தத்துவ கொட்டேசன் மூலம் அவர்கள் நூல் சிறந்த எழுத்தாளர்களாக முன்னிறுத்தப்படுவார்கள்.
நூலகர்கள் அந்தப் பகுதியில் எழுத்தாளர்களை அழைப்பதில்லை. அவர்களின் நூல்களைப் படிப்பதில்லை சரியாக அறிந்து கொள்வதே இல்லை இந்த நிலையில் நடக்கும் நூலக விழாக்கள் திருப்திகரமாக இல்லை
மாவட்ட தலைநகரங்களில் நடக்கும் புத்தக கண்காட்சிகளில் எழுத்தாளர்களின் பங்களிப்பு, உள்ளூர் படைப்பாளியின் பங்களிப்பையும் வலியுறுத்தும் தமிழக அரசு இந்த விஷயத்திலும் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும் இதை நூலகப் பொதுத்துறை கவனத்தை எடுத்துக் கொள்ள வேண்டும்
SUBRABHARATHIMANIAN/ RPSubramanian ) சுப்ரபாரதிமணியன்
8/2635 Pandian Nagar, Tiruppur 641602 , subrabharathi@gmail.com.. 094861 01003/ 94423 50199
சுப்ரபாரதிமணியன்
27 நாவல்கள் உட்பட 116 நூல்களை வெளியிட்டிருக்கும் சுப்ரபாரதிமணியன்.
சிறந்த சிறுகதையாளருக்கான இந்திய ஜனாதிபதி வழங்கிய “கதா விருது “, தமிழக அரசின் சிறந்த நாவலாசிரியர் விருது, தமிழ்ச்செம்மல் விருது, மொழிபெயர்ப்பாளர் விருது இரண்டு லட்சம் தொகையுடன் உட்பட பலமுக்கிய விருதுகளை பெற்றுள்ளார்.
இவ்வாண்டில் இவர் பெற்ற இரு முக்கிய விருதுகள்:
2020 ஆண்டிற்கான சிறந்த நாவல் ஒரு லட்சம் பரிசுத் தொகையுடன் “ அந்நியர்கள்” எழுத்து அறக்கட்டளை மற்றும் 2021 சார்ஜா புத்தகக் கண்காட்சியின் புக்கிஷ் விருது.
இவரின் 1000 பக்க நாவல் “ சிலுவை “ சமீபத்தில் வெளிவந்துள்ளது NCBH .
சிலுவை நாவல் இவ்வாண்டின் எஸ் ஆரெம் தமிழ்ப்பேராயம் புதுமைப்பித்தன் விருது ஒரு லட்சம் ரூபாயுடன் பெற்றுள்ளது.
இவரின் 10 சிறுகதைகள் குறும்படங்களாகியுள்ளன ( அயலான் இயக்குனர் ரவிக்குமார், பேரெழில் குமரன் உட்பட பலரின் இயக்கத்தில் அந்தக்குறும்படங்கள் வந்துள்ளன ).இவரின் இயக்கத்தில் வந்த குறும்படம் “ நாணல் ”.
5 திரைப்பட நூல்கள் வெளியிட்டுள்ளார், இதைத் தவிர 8 திரைக்கதைகள் நூல்கள் வெளியிட்டுள்ளார்.கனவு இலக்கிய இதழை 38 ஆண்டுகளாக நடத்தி வருகிறார்.கனவு திரைப்பட சங்கத்தையும் நடத்தி வருகிறார்.திரைப்பட சங்க கூட்டமைப்பின் ரீஜினல் கவுன்சில் உறுப்பினர். பல திரைப்பட விழாக்களில் தொடர்ந்து பங்கு பெறுகிறார்.
0
இவரின் சிறுவர் இலக்கியப் படைப்புகளில் நாவல், நாடகம் ஒவ்வொன்றும் சிறுகதை நூல்கள் இரண்டும் முந்தையவை .
இவரின் கட்டுரைத் தொகுப்புகளில் சுற்றுச்சூழல், திரைப்படக் கட்டுரைகள், இலக்கியக்கட்டுரைகள், பயணக்கட்டுரைகள் என் 35 நூல்கள் அடங்கும். இவரின் சுற்றுச்சூழல் சார்ந்த நூல்கள் அதிகம் விற்பனையான நூல்கள்.
கவிதை நூல் ஒன்றும், நாடக நூல் ஒன்றும் இவரின் 110 நூல்களில் அடங்கும்.
0
இவரின் சிறுவர் இலக்கியப் படைப்புகளில் , நாடகம் ஒன்றும் நாவல், சிறுகதை நூல்கள் இரண்டும் முந்தையவை
நாவல்கள் .. வெப்பம், கொரானா தடுப்பூசி
சிறுகதைகள் : அன்பே உலகம், சிந்திக்க வைக்கும் சிறுவர்கதைகள்
நாடகம் : பசுமைப்பூங்கா..
SUBRABHARATHIMANIAN/ RPSubramanian ) சுப்ரபாரதிமணியன்
8/2635 Pandian Nagar, Tiruppur 641602 , subrabharathi@gmail.com.. 094861 01003/ 94423 50199
--------------------------------------------------------------------------------------------------------------------------------FB
சுப்ரபாரதிமணியன்
NCBH புதிய நூல்கள் 1 சென்னைப் புத்தகக் கண்காட்சியில் வெளியாகிறது
1 வேர்களை இழக்கும் பூமி.. சுற்றுச்சூழல் கட்டுரைகள்
புவி வெப்பமாதல் இன்று தரும் சிக்கல்கள் ஏராளம். அதன் பாதிப்புகள் எப்படி இருக்கும் என்பதையும் அதன் விளைவுகளையும் சுப்ரபாரதிமணியனின் சமீபக் கட்டுரைகள் சொல்கின்றன.
குறுகிய காலத்தில் காலநிலை மாற்றம் விசூவரூபம் எடுப்பதையும் இக்கட்டுரைகள் சொல்கின்றன. மற்றும் நம்மைச் சுற்றியுள்ள சூழல்கள் பற்றிய பார்வையையும் இவை தருகின்றன.
சுற்றுச்சூழல் சார்ந்த நாவல்கள், கட்டுரைத் தொகுப்புகள் இவரின் படைப்புகளில் முக்கிய அம்சங்களாக விளங்குகின்றன
27 நாவல்கள் உட்பட 115 நூல்கள் எழுதியிருக்கும் சுப்ரபாரதிமணியனின் படைப்புகளில் -- சுற்றுச் சூழல் நூல்களின் வரிசையில் ஒரு கட்டுரை நூல் இது..
சுப்ரபாரதிமணியன் NCBH புதிய நூல்கள் 2
சென்னைப் புத்தகக் கண்காட்சியில் வெளியாகிறது
0 முகப்பறவையே எங்கு சென்றாய்.. திரைநாவல்
27 நாவல்கள் உட்பட 116 நூல்கள் எழுதியிருக்கும் சுப்ரபாரதிமணியனின் திரை நாவல் வரிசையில் ஒரு நாவல் இது.
நாவல்கள், சிறுகதைகள் மூலம் திரைக்கதைகள் உருவாகும்.. . அதே சமயம் திரைக்கதைகளிலிருந்து உருவாகும் திரைநாவல்கள் இன்னொரு வகை. அந்த வகையில் ஒரு நாவல் இது.
பெண்ணின் முக அழகும், உள்ளார்ந்த அக அழகும் வெளிப்படுமொரு இளம் பெண்ணின் கதையாகும் .
கிளமெண்ட் விக்டரின் திரைக்கதைகள்
திரையரங்குகளில் வேலை என்ற அளவில் சுமார் 40 ஆண்டுகள் தன் வாழ்க்கையின் பெரும் பகுதியை கழித்திருப்பவர் கிளமெண்ட் விக்டர் அவர்கள் .ஆயிரக்கணக்கான படங்களை பார்த்திருப்பவர். தொழில் ரீதியாக அந்த படங்கள் அவரோடு ஓடிக் கொண்டிருந்தாலும் அவற்றை உள்வாங்கிக் கொண்டு தமிழ் திரைப்பட உலகின் அகல ஆழங்களை நன்கு அறிந்தவர் நீண்டகால தமிழ் திரைப்பட வரலாற்றை தன் மனதில் கொண்டிருப்பவர். திரைப்பட ஆக்கங்கள் குறித்த ஆர்வத்தில் இருப்பவ.ர் திரைக்கதை ஆக்கங்கள் சார்ந்த பல ஆலோசனைகளில் அவருடைய திறமையை கண்டு வியந்திருக்கிறேன் அது சார்ந்த உழைப்பும் அக்கறையும் ஆச்சரியப்படுத்தும்.
அவர் இயக்கிய குறும்படங்களை பார்க்கிற போது அதில் திரைக்கதைகளில் நேர்த்தியும் தொழில்நுட்ப நேர்த்தியும் அவரின் கைவண்ணத்தை காட்டும். அவரும் திரைக்கதை நூல்களை எழுதி இருக்கிறார். திரைப்பட பாடல்கள் உட்பட பல்வேறு வடிவங்களிலும் முயற்சி செய்திருக்கிறார். இயக்குனர் முத்திரை அவருடைய குறும்படங்களில் பளிச்சென்று தெரிகின்றன
முழுநீளத்திரைப் படம் எடுக்கிற அவருடைய முயற்சிகள் வெற்றி பெறும். அதன் முதல் படியாக இந்த திரைக்கதைப் புத்தகம் கொண்டு வருகிறார்
இன்றைய திரைப்பட ஆக்கங்களில் திரைக்கதைகள் பெரும் பங்கு வகிக்கின்றன அந்த வகைக் கதைகளை சொல்ல அவர் கேட்டு இருப்பது ஆச்சரியம் எனக்குள். திகைப்பும் புத்திசாலித்தனம் கொண்ட கதாபாத்திரங்களும் திரைக்கதை ஆக்கமும் வசனமும் ஆச்சரியப்படுத்தும் அப்படி ஆச்சரியப்படுத்திய ஒரு திரைக்கதை தான் இது. இதுபோல் அவருடைய மனதில் நிறைய திரைக்கதைகள் உள்ளன. பல பதிவுகள் உள்ளன அவையெல்லாம் திரைப்பட ஆக்கங்களாக வெளிவர வேண்டும் அதற்கு காலம் கை கொடுக்க வேண்டும். அதன் முதல் படியாக இந்த திரைக்கதை நூலை எடுத்துக் கொள்ளலாம் நானும் அவருடைய முயற்சிகளில் பங்கு பெறவே விரும்புகிறேன்.
காலம் ஒத்துழைக்க வேண்டும் என்று நம்புகிறேன்
. சுப்ரபாரதி மணியன் எழுத்தாளர் திருப்பூர
ReplyForward
Add reaction
கொரானா தடுப்பூசி
சிறுவர்களுக்குப் பிடித்தமான தடுப்பூசியிது...சுப்ரபாரதிமணியனின் சிறுவர் நாவல் பற்றி
- மு.முருகேஷ்
குழந்தைகளின் மனவுலகம் கதைகளால் ஆனது. கற்பனை வளமும் சிந்தனைத் திறனும் குழந்தைகளின்
கதையுலகைக் கட்டமைக்கின்றன. முதலில் கேள்விகளிலிருந்தே எதையும் கேட்கத் தொடங்குகிறார்கள் குழந்தைகள்.
தன்னருகே இருக்கும் சக உயிரிடம் (அது மனிதராக இருக்க வேண்டுமென்கிற அவசியமில்லை) பேசுவதென்றால்
குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும். அருகில் மனிதர்கள் இல்லாவிட்டாலென்ன... கையில் வைத்திருக்கும் பர்பி
பொம்மையொன்று போதும், குழந்தைகள் பேசுவதற்கு. யாருமில்லா சூழலிலும் பேசிக்கொண்டிருக்க குழந்தைகளால்
முடியும். பல நேரங்களில் அவர்களுக்குப் பதில்கள்கூட தேவையில்லை. அவர்கள் பேசுவதை யாராவது கேட்டுக்
கொண்டிருந்தால்கூடப் போதும். எதுவும் பேசாமல் வெறுமனே ‘சும்மா’ உட்கார்ந்திருக்க குழந்தைகள் ஒன்றும்
பொம்மைகள் அல்லவே!
குழந்தைகள் பேசுகிறார்கள் என்றால் சிந்திக்கிறார்கள் என்று அர்த்தம். கேள்விகள் கேட்கிறார்கள் என்றால்
கற்றுக் கொள்கிறார்கள் என்று பொருள். எந்தக் குழந்தைக்கும் யாரும் தாய்மொழியைப் பேசுவதற்கு கற்றுத் தருவதேயில்லை.
நாம் பேசுவதைக் கவனிக்கும் குழந்தை, அதுவாகவே பேசக் கற்றுக்கொள்கிறது. தட்டுத் தடுமாறி குழந்தைகள் பேசப் பேச,
ஒவ்வொரு நாளும் புதுப்புது வார்த்தைகளைக் கற்றுக்கொண்டேயிருக்கிறார்கள். எப்போதும் கற்றுக்கொள்வதில் குழந்தைகள்
பெரியவர்களை விடவும் வேகமானவர்கள், ஆர்வமானவர்கள். நாம் தான் வளர வளர கற்றுக்கொள்வதிலிருந்து மெல்ல
விலகி விடுகின்றோம். ‘நாம் வளர்ந்தவர்கள், நமக்கு எல்லாம் தெரியும்’ என்கிற மனநிலை கற்றுக்கொள்வதற்குப் பெரும்
தடையாக இருந்து விடுகிறது.
குழந்தைகள் இருக்குமிடத்தில் குதூகலத்திற்குப் பஞ்சமிருக்காது. ஆடுவதும், ஓடுவதும், குதிப்பதும், பேசுவதும், கேட்பதும்
குழந்தைகளுக்கே உரித்தான இயல்பான செயல்பாடுகள். ஒரே இடத்தில் உட்கார்ந்தேயிருக்கும் குழந்தைகள் ‘சவலைப்பிள்ளை’களாகி
விடுவார்கள். கால் இடறிப் பள்ளத்தில் விழுந்தெழும் குழந்தைகளே, அடுத்த முறை அந்தப் பள்ளத்தில் விழாதிருக்க கற்றுக் கொள்கிறார்கள்.
‘இடுப்பிலிருந்து இறக்கி விடுங்கள்
விழுந்து எழட்டும்...
குழந்தைகள்’ - என்றெழுதிய கவிஞனை நிச்சயம் குழந்தைகள் கொண்டாடவே செய்வார்கள்.
“ஏம்பா, இந்தக் குருவிகளெல்லாம் எங்கேயிருந்து வந்துச்சு..?”
“ஏம்மா, நெருப்பைத் தொட்டா சுடுது..?”
“தூங்கும்போது மட்டும் ஏன் காது கேட்க மாட்டேங்கிது..?” என்று குழந்தைகள் கேட்கும் பல கோடி கேள்விகளுக்கு
நமக்குப் பதிலே தெரியாது. ஆனாலும் சாமர்த்தியமாய், “சும்மா தொண தொணன்னு பேசாம, அமைதியா கவனி..!” என்று
குழந்தைகளின் வாயை அடக்கி விடுகின்றோம்.
குழந்தைகளைக் கல்வி கற்பதற்காக நாம் அனுப்பும் பள்ளிக்கூடங்களும்கூட இதையே தான் சொல்கின்றன.
“கையைக் கட்டு; வாயைப் பொத்து..!”
தன்போக்கில் இயல்பாய், வெகு சுதந்திரமாய்ப் பேசிக் கொண்டிருந்த குழந்தை, பள்ளியில் சேர்த்த சில தினங்களிலேயே
வாய் மூடி மெளனியாவதை எந்த எதிர்விளைவுமின்றிச் சகித்துக் கொண்டிருக்கும் இந்தச் சமூகத்தை என்ன செய்வது..?
குழந்தைகளோடு உரையாடவும், குழந்தைகள் நம்மிடம் நெருங்கி வரவும் நமக்கு கதைகள் தெரிந்திருக்க வேண்டும். அவர்கள்
சொல்வதைக் குறுக்கீடின்றிக் கேட்பதற்கு பெரிய காதுகளும் வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக, குழந்தை மனம் வேண்டும்.
குழந்தைகளோடு பேசவும், பழகவும், குழந்தைகளுக்கென்று எழுதவும் குழந்தை மனம் வாய்க்க வேண்டும். அவ்வாறான
மனம் படைத்த மனிதர்களாலேயே குழந்தை இலக்கியங்களைப் படைக்க முடியும்.
நம் இந்திய நாடு சுதந்திரம் அடைவதற்கு நூறாண்டுகளுக்கு முன்பே, 1847-ஆம் ஆண்டு வங்க எழுத்தாளர் ஈஸ்வர சந்திர வித்யாசாகர்
எழுதிய ‘வேதாள பஞ்சவிம்ஷதி’ எனும் நூலே குழந்தைகளுக்கான முதல் இந்திய படைப்பென அறியப்பட்டுள்ளது. இவர்
குழந்தைகளுக்கென பல கதைகளை ஆங்கிலத்திலிருந்து மொழிபெயர்த்தும் தந்துள்ளார்.
உலகின் மிகச் சிறந்த எழுத்தாளர்கள் பலரும் குழந்தைகளுக்கென்று எழுதியிருக்கிறார்கள். ‘போரும் அமைதியும்’ எனும் உலகப்
புகழ்பெற்ற நாவலை எழுதிய ரஷ்ய எழுத்தாளர் லியோ டால்ஸ்டாய், குழந்தைகளுக்காகவும் பல கதைகளை எழுதியுள்ளார். நம்
நாட்டின் தேசிய கீதத்தை எழுதிய இரவீந்திர நாத் தாகூர், மகாகவி பாரதியார் என பலரும் குழந்தைகளுக்காகவும் எழுதி இருக்கின்றனர்.
’குழந்தைக் கவிஞர்’ என அழைக்கப்பட்ட அழ.வள்ளியப்பாவால் 1950-இல் தொடங்கப்பட்ட ‘குழந்தை எழுத்தாளர்கள் சங்கம்’, குழந்தை
இலக்கியப் படைப்புகள் மிகுதியாக வெளிவர வழி வகுத்தது. ஆண்டுதோறும் போட்டிகள் நடத்தி, சிறந்த சிறுவர் பாடல்கள்,
கதைகள், நாவல்கள், நாடகங்களுக்கு தங்கப் பதக்கம் வழங்கி கெளரவித்தது. கையெழுத்துப் படிகளைப் பெற்று, நூல்களாக்கி
வெளியிட்டது.
ஆர்.வி என்றழைக்கப்பட்ட ஆர்.வெங்கட்ராமன் சிறார்களுக்காகப் பத்துக்கும் மேற்பட்ட நாவல்களை எழுதியுள்ளார். அழ.வள்ளியப்பா,
பெ.தூரன், வாண்டுமாமா, ரேவதி, தமிழ்வாணன், பூவண்ணன், கொ.மா.கோதண்டம், எஸ்.ஆர்.ஜி.சுந்தரம். ஆயிஷா இரா.நடராஜன் எனப்
பலரும் சிறுவர்களுக்கான காத்திரமான படைப்புகளைத் தந்திருக்கிறார்கள்.
இன்றைக்கு தமிழில் சிறுவர் இலக்கியம் என்பது போதிய அளவில் எழுதப்படவில்லை என்பதே சமூக எதார்த்தமாக உள்ளது.
சிறுவர்களுக்கென்றே வெளியான இதழ்கள் பலவும் நின்றுவிட்ட காலமிது. சிறுவர்களுக்கு எழுதுவதென்பது, தன்னைக் குறைத்து
மதிப்பிடச் செய்துவிடும் என்கிற எண்ணமும் இன்றைக்கு எழுதிக் கொண்டிருக்கும் பல தமிழ் எழுத்தாளர்களின் மனதில்
உறைந்துபோய் கிடக்கிறது. இந்தச் சூழலிலிருந்து மீண்டு, சிறுவர் இலக்கியங்களைப் படைத்துவரும் எழுத்தாளர்களில் குறிப்பிடத்தக்கவர்
எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன்.
கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்ப் படைப்பிலக்கியத் தளத்தில் தனது காத்திரமான பங்களிப்பினைத் தொடர்ந்து ஆற்றி வருபவர்.
சிறுகதை, நாவல், கவிதை, கட்டுரை, திரைப்படம் என பல விரிந்த தளத்தில் எழுதிவரும் இவர், சிறுவர் இலக்கியப் படைப்புகளையும் ஆர்வத்தோடு
எழுதி வருகிறார். இவர் எழுதிய ‘சாயத்திரை’ நாவல் தமிழக அரசின் சிறந்த நாவலுக்கான பரிசினை வென்றதோடு, ஆங்கிலம், இந்தி, மலையாளம், கன்னடம், வங்காள மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்திய அளவில் சிறந்த கதைகளுக்கு வழங்கப்படும் ‘கதா விருதினை’யும் பெற்றுள்ளார்.
எழுதுவதோடு நின்றுவிடாமல் களத்திலும் செயல்படும் ஆர்வமிக்க சமூகச் செயல்பாட்டாளராகவும் விளங்கி வருகிறார். திருப்பூரிலுள்ள குழந்தைத்
தொழிலாளர்கள் ஒழிப்புப் பணியிலும், பெண்களைச் சுரண்டும் சுமங்கலித் திட்டத்தை ஒழிப்பதிலும், நொய்யல் ஆற்றைப் பாதுகாக்கும் பணியிலும்
ஈடுபட்டு வருகிறார்.
எழுபதுக்கும் மேற்பட்ட பல்துறை நூல்களைப் படைத்துள்ள எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன், ‘கனவு’ எனும் இலக்கிய இதழையும் 38 ஆண்டுகளாக
நடத்தி வருகிறார். எய்டு-இந்தியா குழந்தைகளுக்காக வெளியிட்ட சிறு நூல்களில் சுப்ரபாரதிமணியன் எழுதிய ‘பள்ளி மறுதிறப்பு’ எனும் கதை நூல்
எனக்கு மிகவும் பிடித்தமானது. சாகித்திய அகாதெமிக்காக நான் தொகுத்த ‘சிறுவர் நாடகக் களஞ்சியம்’ தொகுப்பில், இந்தக் கதையின்
நாடக வடிவத்தைத்தான் நான் பயன்படுத்திக் கொண்டேன். சமூக அக்கறையும், சமூக அநீதிகளுக்கு எதிரான கோபமும் சேர்ந்த கலவையே
சுப்ரபாரதிமணியனின் எழுத்துகள்.
உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கரோனா பெருந்தொற்று காலத்தில் எல்லோரும் ஊரடங்கினால் வீடுகளுக்குள் அடைப்பட்டுக் கிடந்தோம்.
கோவிட் - 19 வைரஸ் தொற்றின் கோரத் தாண்டவம் பல்லாயிரம் உயிர்களைச் சூறையாடிச் சென்றுள்ளது. ஊரடங்கிலிருந்து ஒவ்வொன்றாக
தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்தக் காலச்சூழலை அப்படியே நம் மனதில் நிறுத்தும் வண்ணமாக ;கொரோனா தடுப்பூசி’ எனும் சிறார்களுக்கான
நாவலாகத் தந்துள்ளார் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன்.
இந்த நாவலை கையிலெடுத்தால் போதும்; கடகடவென எழுத்தோட்டம் நம்மைத் தள்ளிக்கொண்டு போகிறது... தெளிந்த நீரோடையாக. சிறுவர்களுக்கே
பிடித்த முழுக்க முழுக்க உரையாடல் போக்கிலான இந்த நாவலில் எல்லாவற்றையும் வாய் ஓயாமல் பேசிக்கொண்டேயிருக்கிறார் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன்...
இல்லையில்லை... இந்த நாவலில் வரும் குழந்தைகள். பேசிக்கொண்டேயிருப்பதால் இந்த உயிர்ப்பான குழந்தைகள் நமக்கும் பிடித்துப் போகிறார்கள்.
“மாடியிலே போய் கைத்தட்டுறாங்க. மாடி இல்லாதவங்க என்ன செய்வாங்க..?” என்கிற அர்த்தம் செறிந்த கேள்விகளோடு தொடங்கும் நாவலில் வரும் புகழ்,
செல்வி, மீரான், பால், ஆர்த்தி, நிர்மலா என எல்லாக் குழந்தைகளும் நம் வீட்டுக் குழந்தைகளைப் போல நம் மனசுக்கு மிக நெருக்கமானவர்களாக
இருக்கிறார்கள். இவர்களுக்கிடையே நிஜமான கதாபாத்திரமான திருப்பூர் பாண்டியன் நகரில் மாடித்தோட்டம் அமைத்திருக்கும் கிரிஜா அக்காவும்
வருகிறார். குழந்தைகளின் கற்றலுக்குத் தடைகள் இல்லாத போது, அவர்கள் தங்களை எந்தச் சூழலிலும் வெளிப்படுத்திக் கொள்வார்கள் என்பதை நாவலின்
எல்லா இடங்களிலும் நடைபெறுகிற உரையாடல்கள் வழி உணர்த்தியுள்ளார் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன்.
முகக்கவசம் போடணும், ஏ.சி.யினால் வைரஸ் தொற்று சீக்கிரமாகப் பரவும், கரோனா ஊரடங்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவணும்,
ஊரடங்கினால் இயற்கைச் சீரழிவு குறைந்துபோனது, மாடித் தோட்டத்தின் பயன்கள், பாம்பு சட்டையுரித்தல், மத நல்லிணக்கம் என ஒன்றையும்
விட்டு வைக்கவில்லை. இடையிடையே மூட நம்பிக்கைகளுக்கு எதிரான சாட்டைச் சொடுக்குகளும் சரியான இடத்தில் கையாளப்பட்டுள்ளன.
.
எங்கெங்கெல்லாமோ சுற்றித் திரியும் உரையாடல், ‘அரசுப்பள்ளியில் ஆசிரியராக வேண்டும்’ என்கிற நல்லெண்ணத்துடன் முடிகிறது. இந்த நேரத்தில், கரோனா
போன்ற பெருந்தொற்று காலத்திலும் வீட்டில் இல்லாமல், குழந்தைகளுக்கான கல்விப் பணியை வீடு தேடிச்சென்று செய்த பல நூறு ஆசிரியர்களின் அக்கறையான
கல்விப் பணியை நெகிழ்ச்சியோடு நினைவுகூற வைக்கிறது.
’கொரானா தடுப்பூசி’ சிறுவர் நாவல், சிறுவர்களுக்கு மிகவும் பிடித்தமான தடுப்பூசி. சிறுவர்களுக்கு மட்டுமல்ல; மூட நம்பிக்கைகள் சமூகத் தொற்றாகப்
பரவாமலிருக்க நாம் அனைவரும் வாசிக்க வேண்டிய காலத்தின் தேவையறிந்த தடுப்பூசி. வாருங்கள்... நாம் அனைவருமே வாசிக்கலாம்.
சிறப்பானதொரு சிறுவர் நாவலைத் தந்திருக்கும் எழுத்தாளர் சுப்ரபாரதிமணியனுக்கு என் அன்பின் தோழமை கனிந்த வாழ்த்துகள்.
இன்னும் இன்னுமாய் சிறுவர் இலக்கியங்களைப் படையுங்கள். தமிழ்ச் சமூக மேம்பாட்டிற்கு உங்கள் எழுத்துகளும் படிக்கட்டுகளாக
அமையட்டும்.
( கொரானா தடுப்பூசி. விலை ரூ100 நிவேதா பதிப்பகம், சென்னை வெளியீடு..
அழவள்ளியப்பா நூற்றாண்டை ஒட்டி நிவேதா பதிப்பகம் வெளியிட்ட 30 சிறார் நூல்களில் ஒரே சிறார் நாவல் இது )_
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)