சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
கதா பரிசு "92"-
இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது.
"கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.----------------
சுப்ரபாரதிமணியன் -
ஞாயிறு, 11 ஜனவரி, 2026
0 கோவை உலகப் பண்பாட்டு மையம் 12 ஆண்டுகளாக விருதுகளைத் தந்து கொண்டிருக்கிறது. இவ்வாண்டு அம்பை, க,. ரத்தினம், லோகமாதேவி, சுப்ரபாரதிமணியன் , மருத்துவர் கணேசன், கி. சிவா உள்ளிட்டோர் அவ்விருதுகள் பெற்றனர். பத்து லட்சம் ரூபாய் தொகை பகிர்ந்தளிக்கப்படுகிறது 26/12/26
படைப்பாளி உண்மைத் தேடுதலைக் கை விடும்போது ….சுப்ரபாரதிமணியன்
காலம் பண்பாட்டு வெளி இவற்றில் பயணம் செய்கிறவன் படைப்பாளி . கலாச்சார வெளியும் சமூகவெளியும் இணைந்து தான் அவன் படைப்புகள் உருவாகின்றன. மன உழைப்பை செலுத்தி அவன் படைப்பை உருவாக்குகிற போது பண்பாட்டு வெளியில் தான் அறிந்த மனிதர்களை கொண்டு வருகிறான் அவனுக்கு தெரிந்த நிலம், வெளி, காலம் அந்தப் படைப்புகளில் முக்கிய பங்களிப்பை செய்கின்றன
பண்பாட்டு வெளியில் மனித பண்பாட்டு நடத்தைகளை ஆவணப்படுத்தும் முக்கிய முயற்சிகளை அவன் எடுக்கிறான் அவற்றில் சமகாலத் தன்மை என்பது மிக முக்கியமானது என்று நான் நினைக்கிறேன். அவற்றில் அந்த வழக்காற்றுகளில் நிகழ்த்துவதும் எழுத்தின் மூலம் பதிவு செய்வதும் முக்கியமாக இருக்கிறது..
படைப்பாளி மனித மனங்களை உயிரூட்டுகிறார். பார்வையாளன் அந்த ஆற்றலில் திளைத்து தன் வாழ்க்கையும் கொஞ்சம் திரும்பி பார்க்கிறார் என்ற கணம் படைப்பாளியின் தனித்த மனதில் இயங்காமல் பார்வையாளனையும் மனதில் கொண்டு தான் இயங்குகிறது .அப்படி இயங்குகிற போது அது கடந்த காலத்திற்கும் முக்கியத்துவம் தர வேண்டி இருக்கிறது கடந்த காலத்தின் நீட்சியை நிகழ்வு காலமாகவே பார்க்கிறான். மக்களின் அனுபவங்கள் கடந்த காலத்திலும் நிகழ்காலத்திலும் முக்கியமானவை. மக்களின் பண்புகள் அவை கோபமோ மகிழ்ச்சியோ எழுச்சியின் உச்சகட்டமோ எப்படியும் படைப்புகளில் வெளிவந்து தான் தீர்கின்றன
காலத்தில் பொழுதுகள் என்பதும் முக்கியமானதாக இருக்கிறது பகல் வெளிச்சம் கொண்டு சூரியனின் இயக்கத்தை காட்டிக் கொண்டே இருக்கிறது அதேபோல் மகிழ்ச்சியும் நிகழ்கால பண்பாடுகளும் வளர்வதற்கு நம்பிக்கை தரக்கூடிய விஷயங்களும் படிமங்களாக பகலாக பிரகாசிக்கிறது. இரவு வந்ததும் மனிதன் தான் பட்ட கஷ்டங்களையும் பிரச்சினைகளையும் சோகத்தில் ஆழ்ந்திருக்கிறதை அந்த இருட்டு காண்பித்து விடுகிறது. பின் மாலை பகலும் இரவும் கலந்த ஒரு நிழலாக இருக்கிறது. அங்கு சோகமும் மகிழ்ச்சியும் வேறு பண்புகளும் கூட ஆடி வருகின்றன. ஆகவே பகலிலும் இரவிலும் பின் மாலையிலும் பின் இரவிலும் முன் விடியலிலும் என்று அவன் படைப்புகளும் கூட பல பண்புகளை காட்டிக் கொண்டு போய்க் கொண்டே இருக்கின்றன
எனக்கு ஒரு எல்லைக்கோடு தென்பட்டது அந்த எல்லைக்கு ஓட்டி அந்தபுறம் பேண்டசியும் சர்ரியலிசமும் என நடமாடிக்கொண்டிருந்தார்கள் சிலர் நான் இந்த எல்லையிலேயே, யதார்த்த எல்லையிலேயே நின்று நான் அநீதி மனிதர்களை அறிந்த மனிதர்களை அவர்களின் பண்புகளையும் அனுபவங்களையும் நான் அறிந்த காலத்திலும் வெளியிலும் பரப்பிக் கொண்டிருக்கிறேன்
பம்பரம் விடுதல் என்பது ஒரு சின்ன சாசக விளையாட்டு தான் அவற்றை சுழலவைக்க கயிற்றை சரியாக சுற்ற வேண்டும் எவ்வளவு சுற்று கயிறு சுற்றப்படுகிறது, போகிறது என்பது முக்கியம் குறைந்த சுற்றுகள் என்றால் அந்த பம்பரம் கொஞ்ச நேரம் சுழன்று நின்று விடும். அதிக சுற்று கயிறு என்றால் ரொம்ப நேரம் ஓடக்கூடிய வாய்ப்பு இருக்கிறது படைப்பு என்று வருகிற போது பம்பரம் சுற்றுவது போன்ற ஒரு செயல்பாடு இருந்து சுற்றுகிறது அது எவ்வளவு தூரம் சுற்றும் எவ்வளவு நேரம் சுற்றும் தெரியாது ஆனால் அது சுற்றிக்கொண்டு தான் இருக்கிறது வேடிக்கை பார்த்துக் கொண்டே காலம் கழிகிறது.. காலம் எழுத நிறைய அனுபவங்களைத் தந்து கொண்டேயிருக்கிறது
இந்தக் காலம் மனிதப் பண்புகளை மனதில் கொண்டு ஒரு விளையாட்டாகவே இலக்கியம் இருந்து கொண்டிருக்கிறது
சுற்றுகிறது அது எவ்வளவு தூரம் சுற்றும் எவ்வளவு நேரம் சுற்றும் தெரியாது ஆனால் அது சுற்றிக்கொண்டு தான் இருக்கிறது வேடிக்கை பார்த்துக் கொண்டே காலம் கழிகிறது.
இந்த காலம் மனிதப் பண்புகளை மனதில் கொண்டு ஒரு விளையாட்டாகவே இலக்கியம் இருந்து கொண்டிருக்கிறது.
அந்த விளையாட்டிலும் நேர்மையும், உண்மைத்தன்மையும் அவசியமாகிறது படைப்பாளி உண்மையைத் தேடுதலைக் கைவிடும்போது அது படைப்புத் தோல்வியில் செல்லும் விளைவுகளை உண்டாக்கும். உண்மையைத் தேடும் படைப்பளிகளை இந்த அமைப்பு இந்த விருதுகள் மூலம் அடையாளம் காட்டுவது குறிப்பிடத்தக்கது.
( ஏற்புரைக்காக எழுதியது )

