சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




புதன், 30 மார்ச், 2022

The hindu tamil Book review section ? From subrabharathimanian தாங்கள் 45 ஆண்டுகளாக எழுதி வருகிறீர்கள். தி இந்து 30 என்று குறைத்து குறிப்பிட்டிருக்கிறது என்று வேலூர் சிந்து சீனு தொலைபேசியில் இன்று இந்து தினசரி பார்த்துவிட்டு பேசினார் ஆம். என் முதல் சிறுகதை 1977ல் திருப்பூர் சி பி எம் கட்சித் தோழர்கள் நடத்திய விழிப்பு இலக்கிய இதழில் வெளியானது.சுதந்திர வீதி கள் தலைப்பு. நெருக்கடி கால நிலையில் ஒரு கால்பந்தாட்ட வீரருக்கு ஏற்பட்ட காவல் துறை அத்துமீறல் பற்றிய கதை அது. அதற்கு முன்பு கோவை பூசாகோ கல்லூரியில் எம் எஸ் சி படித்த போது தமிழ் த் துறை நடத்தி ய புதுவெள்ளம் மாணவர் இதழில் சிலது எழுதினேன் 2 சி பி எம் தோழர் கணேசன் விழிப்பு இதழ் சி பி எம் கட்சியினர் இதழ் அல்ல என்று குறிப்பிடுகிறார். கட்சி தோழர் கள் சிலர் இருந்தனர் என்று கூறினார் ஆம்.. அதன் ஆசிரியர் குழுவில் கோவை சி ஆர் ரவீந்திரன். கோவை ஞான பாரதி. பேன்டம் நடராஜன். பாவெல் துரை ஆகியோர் இருந்தனர்..பாவல் மறைந்து விட்டார் சமீபத்தில். கட்சி வட்டாரம் தாண்டி பல வெவ்வேறு வகை இடதுசாரி ப்படைப்பாளிகள் அதன் எழுதினார் கள். நானும் பல கதைகள் எழுதினேன். செம்மலர் பத்திரிகை யும் கட்சியும் விழிப்பு இதழுக்கு கருப்பு கொடி காட்டி நிறுத்த வைத்தனர் என்று பரவலாக ப் பேசப்பட்டது 3 செம்மலர் பத்திரிகை யும் கட்சியும் விழிப்பு இதழுக்கு கருப்பு கொடி காட்டி நிறுத்த வைத்தனர் என்பதை இரு சி பி எம் தோழர்கள் மறுத்திருக்கின்றனர். விழிப்பு பொருளாதாரச் சிரமங்களால்தான் நிறுத்தப்பட்டது. கட்சித் தலையீட்டால் அல்ல என்று குறிப்பிட்டனர் “