சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




சனி, 9 மே, 2020

திக்குத் தெரியாத உலகில்—சுப்ரபாரதிமணியன்
கொரானா காலத்திற்குப் பின் தண்ணீர் போத்தல்கள் டீசர்ட்டுகளாக  மாறும் விசயமும் இப்படித்தான்...
..சுப்ரபாரதிமணியன்
கொரானாவுக்குப் பின்னான வருங்காலத்தில் ஒருமுறை அணிகிறஆடைகளுக்கான தேவை அதிகரிக்கும்.ஆடைக்காக ஏன்அதிகபொருளை
செலவிடவேண்டும்என்கிறஒருகேள்விநம்
மனதில்எழுவதால்,மறு சுழற்சி, நிலை நிறுத்தல்,(Recycle, reuse ,sustain)போன்றவார்த்தைகள்மிக
அதிகமாகபுழக்கத்தில்இருப்பதால்,மீண்டும்
மீண்டும்பயன்படுத்தக்கூடியவடிவமைப்பை
கொண்டிருக்கிறஆடைகளும்ஏற்கனவே
பயன்படுத்தியஆடைகள்இருந்தும்
தண்ணீர்போத்தல்களிலிருந்தும்மறுசுழற்சிமூலம்பெறப்பட்டநூல்இழைகளில்இருந்து
உருவாக்கப்பட்டஆடைகள்அதிகமாக
விற்பனைக்குவரும் என்கிறார்நண்பர் யுவராஜ்சம்பத் .
இது கொரானாவுக்கு முந்தியே இவ்வாண்டின் ஆரம்பத்தில்  திருப்பூரில் ஆரம்பித்து விட்டது.

திருப்பூர் என்றால் சாயக்கழிவு வீட்டுக்கழிவு அதிகம் உள்ள நகரம் என்றப் படிமம் பலருக்கு வந்து விடுவதுண்டு. யதார்த்தம் கூட
திடக்கழிவு மேலாண்மை, திரவக்கழிவு மேலாண்மை என்கிற ரீதியில் ஏதாவது இங்கு நடந்து கொண்டே  இருக்கின்றன

சாயக்கழிவு மூட்டை மூட்டையாய் நொய்யல் கரையில் பார்த்தவர்களுக்கும் ஆற்று நீரில் கலந்து போவதைக் கண்டவர்களுக்கும்  கழிவிலிருந்து   இன்னொரு உப்பொருள் தயாரிக்க முடியும்  என்பதே பெரிய ஆறுதல் . அதுவும் டீசர்ட்., போன்றவை கூட ...
     நீடித்த இயற்கை சூழல் என்பது
பூஜ்ஜியம் கழிவு மேலாண்மையில் மட்டுமே சாத்தியப்படும் .
       திருப்பூர் பின்னலாடை துறை சார்ந்த இரண்டு நிறுவனங்கள் 2020  சமீபத்தில் ஒரு சாதனையை நிகழ்த்தி இருக்கிறார்கள். பின்னலாடை துறையில் வெளியேறும் சாயக்கழிவுகள் பற்றிய விமர்சனங்கள் எப்போதும் உண்டு .ஆனால் அவர்கள் அந்த கழிவுகளை சார்ந்து பல்வேறு ஆய்வுகளை தொடர்ந்து நடத்திக்கொண்டிருக்கிறார்கள் இப்போது நாம் பயன்படுத்திய பழைய போத்தல்களை பயன்படுத்தி சட்டை தயாரிக்கும் பணியில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். நாம் வீசி எறியும் தண்ணீர் போத்தல்கள் பேருந்து நிலையங்களில் குவிந்து கிடக்கும் அவற்றின் மலைத் தன்மை போன்றவை நம்மை எப்போதும் பயமுறுத்தும். அந்த தண்ணீர் போத்தல்களை எடுத்து அதிலிருந்து பைபர் நூலை பிரித்து பின்னலாடை துறையில் பயன்படுத்த இரண்டு நிறுவனங்கள் வெற்றி கண்டிருக்கிறார்கள் .
ஒன்று சுலோச்சனா நிட் என்ற ஒரு நிறுவனம். இன்னொன்று சிண்டிகேட் இம்பெக்ஸ். இவர்கள் இருவரும் வெளிநாட்டு தொழில் நுட்பத்தை முன்வைத்து குஜராத்தில் நிகழ்த்தப்பட்ட ஆய்வுகளில் அடிப்படையில் தண்ணீர் போத்தல்களில் இருந்து பைபர் நூலை பிரித்தெடுக்கும் முயற்சியில் வெற்றி பெற்று பின்னர் ஆடைகளை உற்பத்தி செய்திருக்கிறார்கள் .அது ஆஸ்திரேலியாவின் உலக ஓபன் டென்னிஸ் போட்டிகளின் போது பயன்படுத்தப்பட உள்ளது .இந்தப் போட்டியின் போது பந்துகளை சேகரிக்கும் தரும் சிறு பையன்கள் பயன்படுத்துகிற பின்னலாடை  ஆகியுள்ளன.  இந்த தண்ணீர் போத்தல்கள் டீசர்ட்டுகளாக  மாறியுள்ளன .உலகத்தில் முதல் முயற்சி இது .அந்த டீ சர்டுக்களை அடிக்கடி துவைக்க வேண்டியது இல்லை .
திடக் கழிவை பின்னலாடை துறை டீ சர்டுக்களை  மாற்றியிருக்கிறார்கள்.அது ஒரு சாதனை .திருப்பூரில் நிகழ்ந்திருக்கிறது
 திடக்கழிவுகள் என்று வந்துவிட்டாலே அவற்றை மறுப்பது குறைப்பது மறுபயன்பாடு செய்வது மறுசுழற்சி செய்வது என்பவை முக்கியமாக இருக்கின்றன. ஒரு லிட்டர் கொக்ககோலா தயாரிக்க 60 லிட்டர் தண்ணீர் தேவையாக இருக்கிறது. இரண்டு டம்ளர் அரிசியை வேக வைக்க வெவ்வேறு முறைகள் என்று வருகிறபோது 10 லிட்டர் தண்ணீர் தேவைப்படும். இதற்கான தண்ணீர் மறைநீர் தண்ணீர் என்று சொல்லப்படுகிறது. நம்முடைய கழிவுகளில் வீட்டுக்கழிவுகள் தொழிற்சாலைக் கழிவுகள்  முக்கியம் ஆகும் .டன் கணக்கில் இவை வெளியேறிக் கொண்டிருக்கின்றன. இவற்றை தடுப்பதற்கான முயற்சிகள் குறைவாகவே இருக்கின்றன .நண்பரொருவர் போபால் எக்ஸ்பிரஸ் என்ற திரைப்படத்தின் ஒரு காட்சியை குறிப்பிட்டார் .போபால் விஷவாயு சம்பவம் நடந்து 30 ஆண்டுகளுக்கு மேலாக அதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பெரிய நிவாரணங்கள் கிடைக்கவில்லை அந்த படத்தின் இறுதியில் ஒரு காட்சி. ஒரு தொடர்வண்டி பயணிகளுடன் சென்று கொண்டிருக்கிறது .போபால் பகுதியில் ஒருவர் சிரமப்பட்டு அந்த விஷ வாயுவை சுவாசித்து  உடல் தள்ளாட ஒரு கொடி ஒன்றை காட்டி அந்த வண்டியை நிறுத்துகிறார். அந்த வண்டி விஷவாயு பாதிக்கப்பட்ட பகுதிக்குச் செல்வதை தடுக்கிறார். அவர் விசவாய்வு தன்மையால் மயங்கி விடுகிறார் .பக்கத்திலேயே எந்த அடையாளமும் கிடைக்காத இன்னொரு தொடர்வண்டி போபால் விஷவாயு பகுதிக்குள் போகிறது. ஒரு பக்கம் கழிவு சார்ந்து ஏதாவது நடக்கிறது.  எப்படி முடிகிறது .இப்படித்தான்  அறிவு சார்ந்த விஷயங்களால் ஏதோ ஒரு பகுதியில் எச்சரிக்கையோடு நிறுத்தினால் இன்னும் பல பகுதிகளில் அது திரும்பத் திரும்ப வேறு விதங்களில் வந்து கொண்டிருக்கிறது .சமீபத்தில் மருத்துவ கழிவுகளை வளரும் நாடுகளில் கொண்டு வந்து கொட்டி இன்னும் பிரச்சனை செய்து கொண்டிருக்கிறார்கள் .
திருப்பூருக்கு அருகில் கடல் ஏதாவது இருந்தால் திருப்பூர் 2020ல் ஒரு லட்சம் கோடி ரூபாய் அந்நியசெலவாணி இலக்கை அடைந்திருக்கும் என்றார் நண்பர் ஒருவர்,. கடலில் திடசாயக்கழிவுகளை சுலபமாக வெளியேற்றி விடலாம். பல சிரமங்கள் , சுத்திக்கரிப்பு நிலையம் பல கோடி செலவு செய்து ஏற்படுத்துவது போன்றவற்றைத்தவிர்க்கலாமே. 2020 இந்தியா வல்லரசாகும் என்ற அப்துல்கலாமின் கனவு போல்  2020 ல் ஒரு லட்சம் கோடி ரூபாய் என்பது திருப்பூர் பின்னலாடைஏற்றுமதியாளர்களின் கனவாக கடந்த 5 ஆண்டுகளில் இருந்தது. கை கூடவில்லை. ஓர் அடி முன்னால் இரு அடி பின்னால் என்கிற மாதிரி ஆகிவிட்டது 
திருப்பூரின் இன்றைய நிலை பற்றி:
 . திருப்பூரின் 10000 தொழிற்சாலைகளும்மூடப்பட்டுவிட்டன.அதைநம்பியிருந்த 10 லட்சம்பேர்வீட்டில்முடங்கிக்கிடக்கின்றனர் 
திருப்பூரின்பெரியபிரபலமானபல்வேறுஏற்றுமதியாளர்கள்வயிற்றில்நெருப்பைகட்டிக்கொண்டுதிக்குத்தெரியாமல்அல்லாடிவருகிறார்கள்
.இதில்ஏற்கனவேநிகழ்வுற்றஒருமரணமும்அடங்கும்

திருப்பூர்ஏற்றுமதியாளர்கள்ஒருவித்தியாசமானவியாபாரதந்திரத்தை கடைப்பிடிக்கிறார்கள்..அதுஎதிர்மறையானவிளைவைதற்போதுதரப்போகிறது..இனியாவது திருந்த வேண்டும்..

மாதம் 2500 கோடிரூபாய்வியாபாரம்செய்கிறஊருக்கு 2 மாதம்விற்பனைசெய்தசரக்குபணம்வரவில்லைஎன்றால்அவர்கள்
நிலைஎன்னஅடுத்துமூன்றுமாதங்களுக்குவியாபாரமேஇல்லை
என்றால்அவர்கள்முதலீடுஎன்னாவது?
இந்தக்கேள்விகளுக்குவிடைகிடைத்தால்திருப்பூரின்நிலைஉங்களுக்குதெளிவாகும்..
கோடைகாலவியாபாரம் 60 லிருந்து 70 சதவீதம்திருப்பூரில்நடக்கும்.கொரோனாஇந்தகோடைகால
வியாபாரத்தைஅப்படியேநிறுத்திவிட்டது.தயாரித்தஆடைகள்நிறுவனங்களிலும்,வியாபாரிகளுக்குஅனுப்பப்பட்டபெட்டிகள்கப்பல்களிலும்
,கப்பலிலிருந்துஇறக்கப்பட்டபெட்டிகள்அந்தந்ததுறைமுகங்களிலும்
அப்படியேநிற்கின்றன..இவர்களின்சோகத்தைசுமந்தபடி..
இந்தபாதிப்புஇந்தியாவைவிடவங்காளதேசம்வியட்நாம்விடும்
கம்போடியாவிலும்அதிகம்இருக்கலாம்என்றுஆராய்ச்சியாளர்கள்
சொல்லுகிறார்கள்..
இந்தஆயத்தஆடைவியாபாரம்ஏதோஉங்களுக்கும்ஆடைக்கும்உள்ளதொடர்புமட்டுமேஎன்றோ அல்லதுதயாரிப்பாளருக்கும்இறக்குமதியாளர்கள்உள்ளதொடர்புஎன்றோ நினைப்பது நல்லது அல்ல ( யுவராஜ் சம்பத் )
 மீத்தேனை விட அபாயகரமானது சமையல் வாயு. அதிக விசத்தன்மை கொண்டது. சகாய விலை , மான்யம் என்பதால் சமையல் வாயுவை யாரும் எச்சரிக்கையாக, அக்கறை எடுப்பதில்லை. இலவசம் என்று வந்து விட்டால் சலுகைதான் மரணத்திற்கும் என்றார் நண்பர்.மீத்தேன் தான் கண்களுக்குத் தெரிகின்றன. மூட்டை மூட்டையாய் கொட்டிக்கிடக்கும் திடக்கழிவுகள் பல சமயங்களில் சோற்றில்  மறைந்த பூசணிக்காயாய் இருக்கின்றன.

பல சமயங்களில் நாம் என்சைம் என்பதையும் எச்சில் என்பதையும் பலவாறு போட்டு மனதில் சமைத்து பார்க்கிறோம் .ஒருவகையில் இரண்டு வார்த்தைகளும் ஒரே அர்த்தத்தையேத் தான் தருகின்றன .காரணம் அவை இரண்டும் திடகழிவு என்பதில் உடைய வெவ்வேறு ரூபங்களாக இருக்கின்றன. இதிலிருந்து பொருட்களை உற்பத்தி செய்வது அழகுபடுத்துவது ஒரு கலையாக உலகம் முழுக்க இன்று வளர்ந்து வருகிறது அந்தக் கலைக்கு வளம் சேர்க்கும் வகையில் பல கலை பொருட்கள் உலகம் முழுவதும் இன்று வரை வந்து கொண்டிருக்கின்றன ஆனால் அவை விஷத்தன்மை நீக்கப்பட்டதாக இருக்கவேண்டும் என்பது மிகவும் முக்கியமாக இருக்கிறது.
இந்த தண்ணீர் போத்தல்கள் டீசர்ட்டுகளாக  மாறியுள்ள விசயமும் இப்படித்தான் .