சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




புதன், 26 டிசம்பர், 2018

சுப்ரபாரதிமணியன் : அலைவு இலக்கியம்  பற்றிய அலசல்
புலம்பெயர்ந்தோர் இலக்கியம் ( பனுவல்களும் மதிப்பீடுகளும்)

ஆசிரியர்.:  முனைவர் பா. ஆனந்த குமார் .என்சிபிஎச் வெளியீடு-
ஈழப்பிரச்ச்சினைக்குப்பின் உலகம் முழுவதும் பரவி வாழும் தமிழர்களின் படைப்பிலக்கிய முயற்சிகளால் தமிழ் இலக்கியப் படைப்புகளில்  புலம் பெயர்ந்தோர் இலக்கிய வகை காத்திரமான இடத்தை அடைந்துள்ளது. அது ஒருவகையில் ஈழத்துத் தமிழிலக்கிய மரபின் தொடர்ச்சியாக விளங்குகிறது. ஆரம்பத்தில் டொமினிக்ஜீவா, டேனியல், செ.கணேசலிங்கன், கைலாசபதி, கா.சிவத்தம்பி போன்றோரே அறியப்பட்ட நிலையில் இன்றைக்கு எண்ணற்றப்படைப்பாளிகள் எழுதி  வருகிறார்கள்.புலம்பெயர்ந்த இலக்கியத்தின் ஆரம்ப கால முயற்சிகளின் தேடலை காலனி ஆட்சியிலிருந்து தொடங்கி இந்நூற்றாண்டின் தீவிரமான முயற்சிகள் வரை அறிமுகப்படுத்தும் நூலாக இது விளங்குகிறது. இதில் புலம்பெயர்ந்தோரின் கவிதைகள், சிறுகதைகள் மூலம் அவர்களின் புலம் பெயர்வு வாழ்க்கை பற்றிய இலக்கியப்படைப்புகளை பேரா. ஆனந்தகுமார் எடுத்துக்காட்டுகிறார்.. நாவல் பற்றியக் குறிப்புகள் இந்நூலில் இல்லை.அது விரிவான தளம் .
புலம்பெயர்ந்தோர் கவிதைகளில் அயல்நிலம் ,தாய்நிலம் என்ற கண்ணிகள் விரவிக்கிடப்பதை பல கவிதைகளின் மூலம் எடுத்துக் காட்டிர்யிருக்கிறார். அகதிகள் வாழ்நிலை அதில் முக்கியப்பங்கு வகிக்கிறது.பல நாடுகளில் அடிமைத்தனமும் நிறவெறியும் அவர்களைச் சிறுமைப்படுத்தியிருப்பதை மேற்கோள்கள் மூலம் காட்டுகிறார்,இதில் பெண்ணுரிமை சார்ந்த குரல் குறிப்பிடத்தக்கதாயும் விளங்கிகிறது.இந்த வகையில் வ.அய்.ச.ஜெயபாலன் , கலாமோகன், தீபச்செல்வன் முதற்கொண்டு தமிழ்நதி ., மல்லிகா வரை பலரின் கவிதைகள் இடம்பெற்றிருக்கின்றன.
 புகலிட இலக்கியத்தில்( அலைவு இலக்கியம் ) சிறுகதைகளின் பங்கு முக்கியமானது.அவை யாதார்த்தப்பாணி, பின்நவீனத்துவப்பாணியில் அமைந்திருப்பதை வகைப்படுத்துகிறார்.படித்தவர்களாக இருந்தாலும் கூலி உழைப்பில் அவர்கள் ஈடுபடுவதைச் சுட்டிக்காடுவது ஒரு முக்கிய அம்சம்.நாடு, தெருக்கள் அல்லாத மிதவை வெளியில் அவர்கள் வாழ்கிறார்கள் என்கிறார் ஆசிரியர். புலம்பெயர்ந்தவர்களின் தேசியம் மற்றும் சமீபத்திய நாடு கடந்த தேசியம் பற்றிய அவதானிப்புகளும் இதில் உள்ளன.   நாவல் பற்றியக் குறிப்புகள் இந்நூலில் இல்லை  இதோடு தொட்ர்புடைய மீரான் மைதீனின் நாவ்ல்களில் இந்த அம்சங்கள் இருப்பதை ஊடாகக் காட்டுகிறார். இந்த வகையில் கலாமோகன் முதற்கொண்டு அ.முத்துலிங்கம், மாத்தளை சோமு , வரை பலரின் சிறுகதைகள் இடம்பெற்றிருக்கின்றன.போர் சூழல், அகதி வாழ்க்கை, கயறு நிலை போன்றவற்றை அவை கோடிட்டாலும் அ.முத்துலிங்கத்தின் சிறுகதை லவுகீக வாழ்க்கையில அதன் தாக்கம் பற்றிய மாறுபட்டப் பார்வையைச் சொல்கிறது.மாத்தளைசோமுவின் சிறுகதையில் தோட்டத்தில் உழைத்து அங்கேயே செத்தவர்களைப் புதைப்பதற்கு இட தேடும் அவலம் தமிழர்களின் அவலக்குறியீடாய் இன்னொரு கோணத்தில்  அமைந்திருக்கிறது. 1980ல் மதுரை அமெரிக்கன் கல்லூரியின் பாடத்திட்ட்த்தில் இடம்பெற்ற போத்திரெட்டியின் அயலஇலக்கியம் நூல் ஆரம்ப முயற்சி.. அதன் நீட்சியாகவும் ஆழமாகவும் தீவிரமாகப்பயணப்பட்டிருக்கிறது இந்நூல் . அந்த வகையில் கவிதை, சிறுகதை தவிர்த்து நாவல், நாடகம், சுயசரிதம்  உட்பட பல பிரிவுகள் பற்றியவை  இந்நூலில்  இடம்பெறவில்லை
புலம்பெயர்ந்தோர் இலக்கியம் ( பனுவல்களும் மதிப்பீடுகளும்)
ஆசிரியர். முனைவர் பா. ஆனந்த குமார் .என்சிபிஎச் வெளியீடு- ரூ 80 பக்கங்கள் 94
சுப்ரபாரதிமணியன்