சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




புதன், 11 ஜனவரி, 2017

கதை கதையாய் காரணங்கள் : சுப்ரபாரதிமணியன்
-------------------------------------------------



     சின்னான் ( 4  எப் வகுப்பு )  மயங்கி விழுந்தபோது       அவனைப் புடிங்கடா ..புடிங்கடா “  என்று யாரோ சொல்வது அவன் காதுகளில் சரியாகவே விழுந்தது.
காலை அரசுப்பள்ளிப் ப்ரேயரில் அப்படியொன்றும் நேரம் ஆகிவிடவில்லை. அப்படியொன்றும் வெயில் வந்து விடவில்லை. சுள்ளென்று சுட்டெரிக்கவுமில்லை. மிதமாகத்தான் இருந்தது.

விழுந்தவனை சேகர் மடியில் கிடத்திக் கொண்டான்.அவன் நாலைந்து நாளாய் பள்ளிக்கு வரவில்லை. ஏதாவது மளிகைக்கடையில், திருமணமண்டபங்களில்  மாலை நேரங்களில் வேலை என்று போய் விடுபவன். படிச்சுட்டு வேலைக்குத்தா போகப் போறன். அதுதா இப்பவே ஆரம்பிச்சுட்டேன் என்பான். அதனாலே எதுக்குப் படிக்கணும் என்று பள்ளிக்கு வராதது பற்றி யார் கேட்டாலும் பதில் சொல்வான். அவன் தான்  இன்றையப் பிரேயரில் திருக்குறள் படிக்க இருந்தவன். அந்த நேரம் பார்த்து கழிப்பறைக்குப் போய் விட்டான்.
      தேவி   அன்பிற்கும் உண்டோ அடைக்குந்தாழ்”  என்று திருக்குறளை ஒப்புவித்து விட்டு அதற்கு அர்த்தம் சொன்னாள். தினசரி தாளிலிருந்து செய்தி படித்த காமேஷ் சீனப்பிரதமர் இந்தியா வருகை பற்றிச் சொன்னான். சீனப்பிரதமர் மூன்று நாள் விஜயத்தை முடித்துக் கொண்டு ஊருக்குத் திரும்பி விட்டார். அரசு பள்ளிக்கு இலவச தினசரியை வழங்கும்  ஜாகீர் வீடு அதே தெருவில்தான் இருக்கிறது.  அவர் தினசரியை படித்துவிட்டு அடுத்த நாள் பள்ளிக்கு அனுப்புவார். அடுத்த  நாளில்  ஆசிரியைகள் மத்தியில் போய்விட்டு வந்தபின் காலை பிரேயரில் யாராவது ஆசிரியை கையில் அது அகப்படும்.  என்ன படிக்கச் சொல்ல என்பதில் ஆராய்ச்சியெல்லாம் இருக்காது. காலை  பிரேயர் ஆசிரியை ( யாராவது ஒருத்தர் ) யாரையாவது அழைத்து இன்னிக்கு இதை படிச்சுடு என்று நீட்டி விடுவார். இன்றைக்கு காமேஷ் கையில் அது வந்து விட்டது. அவனும் வீட்டில் செய்தி அலைவரிசைகளை மாற்றி மாற்றிப் போடும் அப்பாவால் சீனப்பிரதமர் ஊருக்குப் போய் விட்டதை அறிந்திருந்தாலும் அவர் வருகையைப் பற்றி இன்றைக்கே பள்ளியில் அறிவித்தான். அவன் அப்பாவிற்கு தெரிந்திருந்தால் ரொம்பவும் வருத்தப்படுவார். சூடான செய்திகளுக்கு அலைவரிசைகளைத் திருப்பிக் கொண்டிருக்கும்  அவர் இப்படி ஆறின பழங்கஞ்சியை தன் மகன் குழந்தைகளுக்கு வாசிப்பது பிடிக்காமல்தான் இருக்கும்.
    பள்ளியில் செய்தி வாசிப்பிற்குப் முன்னால் கதை வாசிப்பு என்று ஒன்று இருக்கும். இன்றைக்கு கதை வாசிப்பு என்றில்லாமல் கதை ஆரம்பித்தது பற்றி சுந்தரக்கண்ணன் சொன்னான்.




. கி.மு.700ல் முதல் கதை பாறைகளில் எழுதப்பட்டது.
அது கில்காமிஸ் காவியம்: கில்காமேஷ் உருக் தேசத்தை ஆண்ட கொடிய அரசன். அவனுடைய அட்டூழியம் தாங்காமல் மக்கள் கடவுளிடம் முறையிட அவர் எங்கிடு என்ற மிருக மனிதனை சிருட்டிக்கிறார் எங்கிடுவை மயக்கி போருக்கு அழைத்துவர பேரழகியான கணிகையை அனுப்புகிறார்கள். கில்காமேசுக்கும் எங்கிடுவுக்கும் இடையில்  யுத்தம் ஆரம்பமாகி முடிவில்லாமல் நீடித்ததால் அவர்கள் நண்பர்கள் ஆகிறார்கள். மாபெரும் செயல்கள் செய்வதற்காக இருவரும் தேசயாத்திரை சென்றபோது வழியில் ஒரு ராட்சசனைக் கொல்ல கடவுளர்கள் எங்கிடுவைப் பழி வாங்குகிறார்கள். அவன் இறந்துபோக கில்காமேஷ் துக்கம் தாங்காமல் நீண்டநாள் புலம்புகிறான் இறுதியில் கில்காமேஷ் ராச உடைகளைக் களைந்தெறிந்துவிட்டு மிருகத் தோலை அணிந்து மரணம்  அடைகிறான். களிமண்ணில் எழுதி சுட்டு பார்வைக்கு அக்காலத்தில் வைக்கப்பட்டது. .
   பிரேயரின் போது சூரியன் சுட்டெரித்து  மயங்கி விழுந்தவர்கள் பட்டியலில்  நிறையப் பேர் இருந்தார்கள். கவுன்சிலர்  இலவச புத்தங்கள் வழங்க வந்த நாளன்றுதான் யோகநாதனும் சுருண்டு விழுந்தான்.

     சின்னான் தலைமையாசிரியர் அறையில் தூக்கிக் கொண்டு போய் கிடத்தப்பட்டான். தலைமையாசிரியர் இல்லாமல் அப்பள்ளியில் தலைமையாசிரியைதான் இருந்தார். அப்படியிருக்கையில் தலைமையாசிரியர் என்று போர்டு சின்னதாய் தொங்குவது சின்னானுக்கு எப்போதும் ஆச்சர்யமே அளித்திருக்கிறது.  அவன் வாய் டிபன் பாக்ஸ்  டிபன் பாக்ஸ் என்றே முணுமுணுத்தது.
நான்காம்  வகுப்பிற்குள் ஆசீரியை காந்தாள் நுழைந்ததும் சின்னான் சின்னான் என்றுதான் குரல்கள் வந்தன கசகசவென்று. அவனுக்கொன்னுமிலடா.. ரெஸ்ட் எடுக்கிறான். அடுத்த வகுப்புக்கு வந்திருவான்.”  வாய்ப்பாடுகளிலிருந்துதான் அவள் ஆரம்பிப்பாள் . காந்தாள் கணித ஆசிரியை. அன்றும் வாய்பாட்டிலிருந்து அய்ந்து இடங்களை பூர்த்தி செய் என்ற ரீதியில் எழுதிப் போட்டு விட்டுப் போய் விட்டாள்.
 “ சின்னானைப் பாத்துடுட்டு வந்தர்றன்.  அமைதியா இருங்கோ “  .
   சின்னான் வாய் டிபன்பாக்ஸ் டிபன் பாக்ஸ்  என்று முணுமுணுத்தது.  அது அவன் கைகளுக்கு வந்து விட்டது.  அவன் கண்களை மலங்க மலங்க்  விழித்து பசி என்றான்.   ”  உன் டிபன் பாக்ஸ்தா இருக்கே. யாரோ கால்களில் தள்ள தரையில் கிடந்தவனின் தலை அருகில் வந்து நின்றது.
நான்காம் வகுப்பில் சர்ச்சை ஆரம்பித்தது. சின்னானுக்கு என்னவாகியிருக்கும். ஏதாவது உடம்பு சரியில்லையா. மருத்துவமனைக்கு கொண்டு போகப் போகிறார்களா. மருத்துவரே பள்ளிக்கு வந்த சந்தர்ப்பங்கள் உண்டு. பசியால் மயக்கம் போட்டிருப்பானா. பசியென்று சொல்லி விட்டால் போது ஏதாவது கிடைக்கும். குறைந்தது பன்னோ, தேனீரோ கூட இருக்கலாம்.பக்கத்துக் கடையிலிருந்து பக்கோடா கூட கிடைக்கலாம். பக்கத்து கடை பக்கோடான்னா நானும் மயங்கி விழத் தயார் என்றான் சிஜீ.
டிபன் பாக்ஸைத் திறந்து அவுக் அவுக்கென்று   தாளித்த சாதத்தை விழுங்கினான். அவனுக்கு அவசரத்தில் விக்கிக் கொண்டால் என்னவாகும் என்ற பயத்தில் மகேஸ்வரி ஓடிப்போய் அவளின் பாதுகாப்பான மினரல் பாட்டிலைக் கொண்டு வந்து நீட்டினாள்.
காலையில் சாப்புடிலியா..
 “ அம்மா பனியன் கம்பனி வேலைக்கு நேரமாச்சுன்னுனு இதைக் கையில் குடுத்துட்டு வெரசலா போயிட்டாங்க
தொண்டையில் சோறு அடைத்திருக்க வந்த குரலில் அதன் அர்த்தம் தெரிந்தது.      ஸ்கூலுக்கு வந்த பொறகு சாப்பிபுட்டிருக்கலேமே.
 “ என்னமோ பயம். அப்புறம் சாப்புடலாமுன்னு
சாப்புட்டுத் தொலச்சிருக்கலா..
அவன் பல நாட்கள்  சாப்பாடு எதுவும் இல்லாமல்தான் வருவான். மதிய உணவு வரைக்கும் பசியைத் தாக்குப்பிடித்து விடுவான். மதிய உணவு சாப்பிட்டபின் தூக்கக் கலக்கம் வந்து விடும் . சமாளிப்பதில் சிரமம் என்பது போல் ஆகிவிடும்.
     நான்காம் வகுப்பில் ( எப் ) விவாதங்கள் தொடர்ந்து கொண்டிருந்தன. சின்னான் மயங்கி விழுந்ததற்கான காரணங்கள் பற்றி;
1. இன்று கணக்கு மார்க் தரப்போவதாக காந்தாள் ஆசிரியை சொல்லியிருந்தார். சின்னான் கணக்கில் வீக்.  பெயிலாகி நிற்பவர்களில் அவனும் ஒருவன் எப்போதும்.              2. ஆங்கிலப்பாடத்தை  நேற்று ஒரு தாளில் எழுதியிருந்தான். நோட்டில்தான் எழுதிக்கொண்டு வர வேண்டும். அப்போதுதான் தொடர்சி இருக்கும். பின்னால் திருப்பி பார்ப்பதற்கு சவுகரியமாக இருக்கும். நோட்டில்லாமல்  ஆங்கில வகுப்பிற்கு வரக்கூடாது என்று இளஞாயிறு ஆசிரியர் கட்டளை
.3. அவன் அம்மாவிற்கு உடம்பு சுகமில்லை. அந்தக் கவலை.
4. நேற்று  மோகன்ராசு ஆசிரியரிடம் அடி வாங்கியிருந்தான். அவன் சட்டை மோசமான அழுக்கில் இருந்ததால்.
5. நோ டீச்சிங்.. ஒன்லி கோச்சிங் என்று எழுதச் சொல்லிக் கொண்டே இருக்கும் துளசி டீச்சருக்கு அவனைப் பிடிக்காது.

டிபன் பாக்ஸில் இருந்தை அவுக் அவுக் என்று சாப்பிட்டு முடித்ததில் ஆசிரியைகளுக்கு ஆறுதல். டிபன் பாக்ஸிலேயே கைகழுவிக் கொள் என்று மகேஸ்வரி ஆசிரியை பாட்டிலை நீட்ட  நாலைந்து விரல்களைச் சேர்த்து  வினோதமாய்க் கழுவினான்.மெல்ல தூக்கம் வருவது போல கண்களை மூடினான்.    படுத்துக்கோ என்ற வார்த்தைகள் ஆறுதல் தந்தன. கண்களை மூடிக் கொண்டான். அம்மா சின்ன வயதில் பள்ளிக்கூடம் போகலியா பூச்சாண்டி கிட்டக் குடுத்திருவன்”  என்று பயமுறுத்துவாள். பள்ளிகூடத்தில் நிறைய பூச்சாண்டிகள் இருப்பதாய் அவன் ஒருதரம் சொன்னபோது வகுப்பில் எல்லோரும் வெகுவாகச் சிரித்தார்கள். ஆமோதிக்கிற சிரிப்பு அது.

சுப்ரமணி அறுபத்தாறு மார்க்”   தேங்ஸ் டீச்சர்
ராஜி இருபத்தஞ்சு
ஜெயபால் நாப்பது
சின்னான் எழுபது . குட் நன்றி டீச்சர்.

கணக்குத்தாளை வாங்கியபோது அவன் உடம்பு நடுங்குவதாக இருந்தது. காந்தாள்  ஆசிரியை இல்லை. வேறு கணக்கு ஆசிரியர் வந்து விட்டார்.  பிரபாகர். இனி நல்ல மார்க்தான் வரும்.

தூக்கத்திலிருந்து  விழிப்பு வந்து விட்டது. நல்ல தூக்கம்.. பூச்சாண்டி எதுவும் தூக்கத்தில் வரவில்லை. அவனைச் சுற்றி யாருமில்லை. எதிர் பீரோவின் மீது உலக உருண்டை நீலக்கலரில் உட்கார்ந்திருந்தது. இந்தப்பள்ளிக்கு வந்த பின் உலக உருண்டையை அவன் தொட்டுப் பார்த்த்தில்லை. யாரும் தொடக்கூடாது.  எல்லா நாடுகளும் நீரில் அமிழ்ந்திருப்பது போல் தென்படும்.முந்தின திருநீலகண்டபுரம் பள்ளியில் உலக உருண்டையைத் தொட்டதால் பிரம்படிபட்டிருக்கிறான்.  எழுந்து  கதவு ஓரம் வந்து நின்றான். தொட்டிப்பக்கம் எல்லோரும் தட்டுகளைக் கழுவிக் கொண்டிருந்தார்கள். மதிய சத்துணவு   நேரம் முடிந்து விட்டது. அவனுக்கென்று யாரும் எடுத்து வைத்திருக்கப்போவதில்லை. மதிய சாப்பாடு இல்லை. ராத்திரி வரை தாக்குப்பிடிக்க வேண்டும்.
காலையில் மயங்கி விழுந்ததை விட பசி மறுபடியும் வயிற்றைக் கவ்வும், மதிய உணவு அவனுக்கென்று இல்லாமல் போய் விட்டது பற்றி அவனுக்கு நினைப்பு பெரும் சுழலாய் எழுந்து அவனை மூழ்கடித்துக் கொண்டிருந்தது. இன்னொரு பசி சுழலை எதிர்பார்த்திருந்தான்.

சின்னான் நிமிர்ந்து உட்கார முயன்றான். யாருக்கும் அவன் சொல்லாத மயங்கி விழுந்ததன் காரணம் அவனுள் சுழன்றது.
அப்பா ரேசன் கார்டை மளிகைக்கடையில் அடகு வைத்திருந்தார், ரேசன் கடைக்குப் போகமுடியவில்லை என்று அம்மா அழுது கொண்டிருந்தாள். அவன் அப்பள்ளியில் சேரும் போது அவன் பள்ளி டிசி ரேசன் கடையில்தான் இருந்தது அடகுக்கு. அதை மீடக அம்மா அழுதழுது காசு சேர்த்தாள். நானெல்லா காதெத் தொட்டு காமிச்சு  பள்ளிக்கூட்த்திலே சேந்து படிச்சேன். அப்பிடி தொட்டு காமிச்சு சேரு போடா என்று அவர் விரட்டினார்.திருநீலகண்டபுரத்திலிருந்து  பாண்டியன் நகர் பள்ளிக்கு மாற வேண்டியிருந்தது. சாயப்பட்டறை மூடப்பட்டதில் வேலையில்லாமல்   போய்  வீடு மாற்றும் படலம் மறுபடியும்..  கடன்  கொடுத்தவர்கள் தொல்லை வேறு..
அவன் வகுப்பு மாணவர்கள் அவன் மயங்கி விழுந்ததற்கான காரணப்பட்டியல் போட்டது அவனுக்குத் தெரியவில்லை. அதில் நான்கு காரணங்கள் இருந்தன.

அவன் பட்டியலில் ஒன்றுதான்.