சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




புதன், 30 டிசம்பர், 2015


நம்மாழ்வார் நினைவு தினம்  இன்று டிச.31 
காலம் தந்த வேளாண் போராளி
எனதுசாயத்திரைநாவலின் ( திருப்பூர் சுற்றுச்சூழல் பிரச்சனைகள் பற்றிய நாவல்). ஆங்கில மொழிபெயர்ப்பு நூலை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் அவர்களுக்குச் சம்ர்ப்பணம் செய்திருந்தேன். அதன் வெளியீட்டு விழாவிற்கு நம்மாழ்வார் அய்யாவும் வந்திருந்தார் ( ‘தி கலர்டு கர்டெய்ன்என்றத் தலைப்பில் அது ஆங்கிலத்தில் டாக்டர் ராஜ்ஜா அவர்களால் மொழி பெயர்க்கப்பட்டு வெளிவந்திருக்கிறது). அந்த மொழிபெயர்ப்பு நூல் வெளிவந்து பத்தாண்டுகளுக்குப் பிறகு கோவை கூட்டமொன்றில் அவரைச் சந்தி்த்த போது அது கன்னடம், மலையாளம், ஹிந்தி, வங்காள மொழிகளில் வெளிவந்திருப்பதை அறிந்து தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். “நீங்கள் சாயத்திரை நாவலில் எழும்பிய கேள்விகள் இன்னும் கேள்விகளாகவே இருக்கின்றன. தீர்வுகள் கிடைத்தபாடில்லைஎன்றார்.
     தீர்வு, மாற்றம் குறித்து அக்கறை கொண்டால் அந்த மாற்றத்தை நம்மிடமிருந்தே துவங்க வேண்டும் என்பதில் முன்னுதாரணமாக அவர் இருந்தார். ரசாயன உரங்கள் பற்றிய பிரச்சாரம், பசுமைப் புரட்சி போன்றவற்றை தன் அரசு தொழில் சார்ந்து இயங்குதலில் முரண்பாடு கொண்டு அரசு பதவியிலிருந்து வெளியேறியவர் நம்மாழ்வார். அதன் பின் அரசு சாரா நிறுவனங்களில் பணி புரிந்தாலும் சுதந்திரமானப் போக்கையே மனதில் கொண்டு மனதில் கொண்டு செயல்பட்டவர்.
     இந்திய வேளாண்மை முறையில் அதிகம் பேசப்பட்டபசுமை புரட்சிஏற்படுத்திய மோசமான விளைவுகள், ரசாயனம் சார்ந்த உரங்கள், பூச்சி மருந்துகள் ஆகியவற்றை பற்றிய விவாதங்கள் பெரும்பாலும் பொதுவுடைமை இயக்க வட்டாரங்களுக்கு  வெளியில்தான் பெருமளவில் நடந்தன. என்சாயத்திரைநாவல் பற்றி பொதுவுடைமை சார்ந்த எழுத்தாளர் ஒருவர் திருப்பூர் கூட்டமொன்றில் தன் கட்சி சார்ந்த இலக்கிய பிரிவின் விவாதத்தில் எடுத்துக் கொண்டுசாயத்திரைநாவல் பற்றிய மையத்தை பொதுவுடைமை  கட்சி சார்ந்த உள்ளூர் எழுத்தாளர்கள் அதற்கு முன் நாவல் என்ற அளவில் கைக் கொள்ளாததும்,அந்த நாவல் வந்த பின் அதை முன் எடுத்துப் பேசாததும் குறித்து விவாதத்தை எழுப்பியிருக்கிறார். அப்போது சுற்றுச்சூழல் பிரச்சனைகளை பெரிதுபடுத்தி 10,000 கோடி ரூபாய் அந்நியச் செலவாணியையும்,  தொழிலாளர் நலத்தையும் புறக்கணித்து முன் செல்ல முடியாது என்று அவருக்கு பதில் அளிக்கப்பட்டது. இது போலவே சுற்றுச்சூழல் சார்ந்த பல பிரச்சனைகளின் மீதான் பொதுவுடைமை இயக்கவாதிகளின் முன்னெடுப்புகள் இருந்தன. இந்தச் சூழலில்தான் மண்மீதும், இயற்கை வேளாண்மையை முன் வைத்தும் நம்மாழ்வார் தனது செயல்பாடுகளயும், பரப்புரைகளையும் தொடர்ந்து நடத்தி வந்தார். கிராம் அனுபவங்களும், கிராமந்தோறும் சென்று நுண்ணறிவால் சேகரித்துக் கொண்டதையும் உலக அளவில பேசப்பட்ட ஜப்பானிய புகோகோவின் ஒற்றை ஐக்கோல் புரட்சி நூலும், ரேச்சல் கார்சனின்மெளன வசந்தம் “ நூலும் அவரை முன்னெடுத்திச் செல்ல பயன்பட்டன. மரபணு மாற்றப்பயிர்கள் இந்தியாவில் வேகமாகப் புக ஆரம்பித்தபோது, தமிழகத்தில் பலரையும் முன் நிறுத்திக் கொண்டு அதைஎதிர்த்துப் போராடினார். இந்திய மக்களை பலிகடாவாக்கும் மரபணு தொழில்நுட்பம் பற்றிய பரப்புரைகளின் மூலம் பசுமை இயக்கங்களை ஒன்றிணைத்து அது பற்றிய எதிர்ப்பை சரியாகவே வெளிப்படுத்தி வெற்றி கண்டார். இயற்கை வேளாண்மை சார்ந்த பாதுகாப்பையும், சத்துணவு அவசியமும், சுத்தமான குடிநீர் உரிமை என்பதையும் வலியுறுத்தி சக மனிதனின் விடுதலை குறித்த முன்னெடுப்புகளாக அவரின் போராட்ட இயங்கு முறை இருந்தது. திருவாரூர், தஞ்சை மாவட்டங்களில் மீத்தேன் வாயு எடுக்கும் முறைகளுக்கு எதிராக கடைசி காலத்தில் போராடி அங்கேயே மரணமடைந்தார். ஆயிரக் கணக்கான இளைஞர்களின் நல்லாசிரியராக இருந்து இயற்கை வேளாண்மை, சுற்றுச்சூழல் பாதுகாப்பாய்  முன் நின்ற போராளியாக விளங்கினார்.
     ஹைதராபாத்தில் நான் வசித்து வந்த போது கத்தாரின் நடமாட்டம் அதிகம் இருந்த செகந்திராபத் பகுதியில் அவரின் உடம்பு மீதான துப்பட்டா துப்பாக்கியைப் போல செயல்பட்டதை அறிந்திருக்கிறேன். அதே போல் தலையில் முண்டாசாகக் கட்டி கொள்ளும் வெள்ளை துண்டும், பசுமை வாழ்வை முன்னிருத்தும் பச்சை நிற சால்வையும், பற்றற்ற வாழ்க்கையின் குறியீடான காவி வேட்டியும் அவரை இயற்கை காப்புப் போராளியாக வெளிக்காட்டியிருக்கிறது.

     அவரை உசுப்பிய விடுகதை ஒன்றை பல மேடைகளில் சொல்லுவார்: “பழமாகி காயாவது எது? காயாகிப் பூவாவது எதுஅவர் பழமாகவும், காயாகவும், நெஞ்சில் நிறைந்த அற்புத மலராகவும் சுற்றுச்சூழல் சார்ந்த போராட்டங்களை முன்னெடுக்க பல ஆயிரம் இளைஞர்களை உருவாக்கிவிட்டுச் சென்றிருக்கிறார் என்பதுதான் கண்கூடாகும். அவர் 2013 டிசம்பர் கடைசி நாளில் மறைந்து நம்மை வெகுவாக பாதித்து விடைபெற்று விட்டார்.