சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




செவ்வாய், 14 ஜூலை, 2015

கொங்கு வாழ்க்கையின் வார்ப்பு :
மொய் : சுப்ரபாரதிமணியன்  சிறுகதை
          - பூ.அ ரவீந்திரன் (தலைவர் , தமிழ்ச்சிற்றிதழ் சங்கம், கோவை )

“ இலக்கியப் படைப்புகள் சமூக மனிதனை , அவனது உயிர் வாழ்க்கையின்  பல்வேறு கோலத்துடன் அவனது உணர்வுகளுக்கும் சிந்தனைக்குமுள்ள முரண்பாடுகளும், சமூகத்துடனான அவனது உறவுகளும் அவனது அக வாழ்க்கையையும் புற நடத்தைகளையும் சித்தரிக்கின்றது.இவற்றுள்  தனி மனிதனுக்குள்ளும் அவனது வாழ்க்கையும் வரலாற்றுச் சமூக சூழ்நிலையில் பண்பாட்டைக்காட்டுபவை  கதைகள் “ என்ற கார்த்திகேசு சிவத்தம்பியின் வாசகங்கள் ( தமிழில் இலக்கிய  வரலாறு, என்சிபிஎச் வெளியீடு  )  சுப்ரபாரதிமணியனின்      “ மொய்என்ற சிறுகதையை இந்த வாரம் “ திண்ணையில்படித்த போது தோன்றியது.
  கொங்கு மக்களின் வாழ்க்கையை ஆர். சண்முகசுந்தரத்தைப் பின் பற்றி சிறப்பாக பதிவு செய்து வருகிறவர்களில் சி ஆர் ரவீந்திரன், மா.நடராசன்,,பழமன் போன்றோருடன் சுப்ரபாரதிமணியனும் இருக்கிறார். இக்கதை கொங்கு மக்களின் வாழ்க்கையின் ஒரு சிறுபங்கைச் சொல்கிறது. கோவை அருகிலான சோமனூர், செகடந்தாளி, எளச்சிபாளையம், செம்மாண்டாம்பாளையம், கருமத்தாம்பட்டி போன்ற ஊர்களும் அந்த ஊர்களின் கொங்கு மனிதர்களும் என்று நிறைத்திருக்கிறார்.
`       தபால்காரர் ஒருவருக்கு திருட்டுத்தனமாய் கடிதங்களை பிரித்துப் படிக்கும் பழக்கம். உமா என்ற ஆசிரியை பயிற்சி படித்த கிராமத்துப் பெண்ணின் - உமாவின் கடிதங்களை பின் தொடர்கிறார். பக்கத்து கிராமத்து குடிகாரனுக்கு திருமண ஏற்பாட்டில் இருக்கையில் ஆசிரியைப் பயிற்சி நண்பருடன் கிராமத்தை விட்டு வெளியேறுகிறாள். அவள் பேருந்தில் புறப்படுகையில் அவள் கையில் அய்நூறு ரூபாய் கொடுத்து “ மகராசியா இரு “ என்று ஆசீர்வாதம் செய்கிறார், இருபத்தைந்து வருடம் கழித்து அவருக்கு ஒரு மின்னஞ்சல்  வருகிறது.என்ன திருட்டுத் தபால்  ஏதாச்சும் கிடச்சுதா “ என்று கேட்கிறாள் மனைவி.உமாவின் மகன் அமெரிக்காவிலிருந்து  அனுப்பி இருக்கிறான். என் அம்மா  அந்தகிராமத்தை விட்டு கிளம்பும் போது  மோய் ஆசீர்வாதம் செய்த உஙக்ளைப் பற்றி அம்மா சொன்னார்.உங்களைப் பார்க்க வருவேன்என்கிறது மின்னஞ்சல்.
     கொங்கு கிராம வாழ்க்கையின் அடையாளமானப் பேச்சு வழக்கு,    கொங்கு மனித இயல்புகள் விரவிகிடக்கின்றன. மாறி வரும் தலைமுறை அடையாளங்கள், மனித இயல்பிம் தென்படும் மாறுதல்களை இக்கதை துல்லியமாகச் சித்தரித்திருக்கிறது. சுப்ரபாரதிமணியனை இக்கதியில் அடையாளம் கண்டு  கொள்ளமுடிகிறது. ஒரு சிறுகதைக்குள் கொங்கு உலகத்தையே கொண்டு வந்து விடுவது பெரும் சிறப்பாகும்.
( கோவை இலக்கியச் சந்திப்பு 47 ம் நிகழ்வில் சுப்ரபாரதிமணியன் மொழிபெயர்த்த உயில் மற்றும் பிற கதைகள் ‘ ஜெ.பி.தாஸ் ஒரிய எழுத்தாளரின் கதைத் தொகுப்பு  நூலை கவிஞர் புவியரசு வெளியிட் பூ.அ.ரவீந்திரன் பெற்றுக்கொண்டு பேசியது - உயில் மற்றும் பிற கதைகள் ‘ ஜெ.பி.தாஸ் ஒரிய எழுத்தாளரின் கதைகள் விலை ரூ 160 ; சாகித்ய அகாதமி வெளியீடு சென்னை ) . 

சுப்ரபாரதிமணியனின் “ மேக வெடிப்பு நூல்
                            பேரூர்  ஜெயராமன்
     சுப்ரபாரதிமணியனை  அவரின் “ சாயத்திரை நாவல் வழியாகவே எப்போதும் காணக்கிடைக்கிறார் என்பது அவர் சுற்றுசூழல்  பிரச்சினைகளில் அக்கறை கொண்டு செயல்பட்டு வருவதை அறிந்து கொள்ளலாம். அவற்றின் படைப்புகளில் அது  வெளிப்படுத்துகிறது.இவ்வாண்டின் அவரின் புதிய சுற்றுசூழல் தொகுப்பான “ மேக வெடிப்பு “ அவ்வகையில் முக்கியத்துவம் வாய்ந்தது.அருள் எழுதிய ஒரு கட்டுரை ஏற்படுத்திய பாதிப்பில் ஒரு நூலையே உருவாக்கியிருக்கிறார். இதில் அமைந்துள்ள 15 கட்டுரைகளின் பாதிப்பில் இது போன்று 15 நூல்களை நாம் உருவாக்குவதம் மூலம் சுற்றுசூழல் சார்ந்த உரையாடல்களை விரித்துக் கொண்டு போகலாம். தேன் போல் பயன் உள்ளவை இக்கட்டுரைகள். தேன் யாருக்குப் பிடிக்காது. ஆனால் மீத்தேன் யாருக்கும் பிடிக்காதுதான். மீத்தேன் எடுக்க ஆயத்தப்பணிகள் நடைபெறும் இடங்களை நான் சமீபத்தில் சென்று பார்த்தேன். அந்த என் அனுபவங்களைப் பிரதிபலிப்பவை இதில் உள்ள கட்டுரை.
2013ம் ஆண்டின் மிக முக்கியமான சுற்றுச் சூழல் சார்ந்த உலக அளவிலான பாதிப்புகளைப் பற்றி இந்நூல் பேசுகிறது.ஜார்கண்ட்டின் பெரும் வெள்ளம், இந்தோனிசியாவின் புயல்,  ஹயான்னாவின் சிரமம், கார்களால் சுற்றுசூழல் கேடு உட்பட பல தகவல்களைச் சொல்கிறார். சுற்றுச்சூழல் சார்ந்து இயங்கிய பலரை அறிமுகப்படுத்துகிறார். அதில் நம்மாழ்வாரும்  இருக்கிறார்கள்.இந்த கட்டுரைகளின் அறிமுகங்கள் மூலம் குப்பையை உற்பத்தி செய்பவனுக்கு அதை ஒழுங்குபடுத்த, சுத்தம் செய்யும் பொறுப்பு இருப்பது உணர்த்தப்படுகிறது. சிறு ஆறு அதன் உற்பத்தி இடத்தில் சின்னதாக அமைந்திருந்தாலும் அது போகப் போக அக்லமான, நீளமான ஆறாகப் பரிமாணம் அடையவும் அதிகப்யன்பாடு கொள்ளவும் நம் செயபாடும் இருக்கவேண்டும். சுற்ற்சுசூழல் பற்றித் தனியே பேச வேண்டியதில்லை. அது வாழ்க்கையோடு இணைந்தது.  அதைப் பேசுவதைத் தவிர்க்க இயலாது விஞ்ஞானம்  நம் வாழ்க்கையை நெருக்கடிக்குள்ளாக்கியிருப்பதை இக்கட்டுரைகள் தெரிவிக்கின்றன.மிச்சமுள்ள மலை எவ்வளவு, .  மிச்சமுள்ள மரங்கள் எத்தனை என்று ஒவ்வொரு மரம் நடும் போதும், மலையைப் பாதுகாக்கப் பேசும் போதும் கேட்டுக் கொள்ள வேண்டியிருக்கிறது. இந்தக் கேள்விகளை இக்கட்டுரைத் தொகுப்பும் வெளிப்படுத்துகிறது. சுப்ரபாரதிமணியன் தொடர்ந்து சுற்றுச்சூழல் சார்ந்து எழுதியும் இயங்கியும் வருவதை சாயத்திரை நாவல், குப்பை உலகம், நீர்ப்பாலை போன்ற கட்டுரைத் தொகுப்புகளின் மூலமும் அறிந்து கொள்ள முடிகிறது. எழுத்துப் பதிவு சுற்றுசூழல் சார்ந்த செய்ல்பாடுகளில் முக்கிமானது என்பதை இவரின் எழுத்து மெய்ப்பிக்கிறது.

( மேக வெடிப்பு   ரூ 50 , எதிர் பதிப்பகம்., பொள்ளாச்சி :9865005084 )