சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




வியாழன், 29 ஜனவரி, 2015

படிக்கலாம் வாங்க…. தாய்மொழி வழிக்கல்வி


சுப்ரபாரதிமணியன்


” இந்தியாவில் ஏழு குழந்தைகளில் அய்ந்து பேர் பள்ளிக்குச் செல்லவில்லை. இங்குள்ள 5 கிராமங்களில் 4ல் பள்ளிக்கூடமே இல்லை. தொடக்கக் கல்வியை நாடு முழுக்க இலவசக் கட்டாயக் கல்வியாக்கச் சட்டம் கொண்டு வர வேண்டும்.” 1910 ம் ஆண்டில் இப்படிக் குரல் எழுப்பி பிரிட்டிஷ் அரசிற்கு அவமானகரமான விசயம்  இது என்று சுட்டிக் காட்டியவர்  கோகலே. எல்லோருக்கும் கல்வி தேவை என்பதை 1937ல் காந்தி அறிவித்தார், 1993ம் ஆண்டில் கல்வி அடிப்படை உரிமை, அதை இலவசமாக்க் கொடுக்க வேண்டும் என்று உச்சநீதி மன்றம் அறிவித்தது.இது குறித்த சட்டம் 2010ல்  அமுலுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் நடைமுறையில் பல சிக்கல்கள்.
மாநில சிறுபான்மையினருக்கான தொடக்கக் கல்வியை முடிந்தவரை தாய் மொழியில் வழங்குவதில் மாநில அரசின் பொறுப்பாக்கியது அரசியல் சட்டம். எல்லா மாணவர்களுக்கு தாய்மொழியில்தான் தொடக்கக் கல்வி தரப்பட வேண்டும்  என்பதை இந்திய அரசும் ஒப்புக்கொண்டது.  கல்வி தருவது அரசியல் சட்ட்த்தில் தொழில் என்று சொல்வதில் அடங்கும்.லாபத்துக்காகச் செய்தாலும், சேவையாகச் செய்தாலும் அது தொழிலே.. சமீபத்தில் உச்ச நீதி மன்றம் அளித்த தீர்ப்பொன்று தாய்மொழி வழியாக்கக் கல்வி வழங்கும் சட்டத்தை நிராகரித்திருக்கிறது.  பொது நன்மையை காக்க அரசுக்கு இருக்கும் கடமையைக் குறைத்து விட்டது.இது தாய்வழிக்கல்வி குறித்த அக்கறை கொண்டவர்களுக்குப் பேரிடியாகும்.
தாய்மொழிக் கல்வி பற்றி அவரின் பணிகாலத்திலும், இலக்கியப் பணியிலும் அக்கறை கொண்டு செயல்பட்டு வருபவர் பொன்னீலன் அவர்கள்.மொழிவழிப்பட்ட இன வளர்ச்சியே மனித குலத்தைப் பரிபூரண மனித லட்சியங்களை நோக்கி மேலும் மேலும் செலுத்தும் . பண்பாட்டு விடுதலை என்பது அரசியல் பொருளாதார விடுதலையோடு அவசியம் என்பதை வலியுறுத்தி வந்திருக்கிறார். அதைத்தான்  “ தாய் மொழி வழிக்கல்வி “ என்ற சிறு நூலிலும் வலியுறுத்துகிறார்.அவரின் சில அபிப்பிராயங்களைக் கேளுங்கள்.


  1. ஒரு இனத்தின் முகத்தை வடிவமைப்பதில் மொழிக்கு முக்கியப் பங்கு உண்டு. 2. பண்பாட்டின் உட்கரு மொழியே. ஒரு இனத்துக்கு ஆளுமை, சுயசிந்தனை, அழகு, பெருமிதம், கர்வம்  தருவது மொழியே.3.aaaஆங்கிலம்  பயன்பாட்டுத் தத்துவம் கொண்ட்து. பிஞ்சு பருவத்தில் ஆங்கிலம் படிக்கும் மனதும் இப்படிப்பட்டப் பார்வையோடுதான் வளரும். மனித மதிப்பை விடப் பண மதிப்பையே பெரிதெனக் கருதும். 4. மண்ணுக்கும் , சூழலுக்கும் ஏற்ப உருவாகும் மனித உடல் போல மனித உழைப்புக்கும் உணர்வுக்கும், அறிவுக்கும் ஏற்றவாறு மொழியை மையமாகக் கொண்டே மனித மூளை கட்டமைகிறது.தாய் மொழியும் தாய் உணர்வும் குழந்தையின் மூளையைக் கட்டமைப்பதில் குறிப்பிடத்தக்க பங்கு ஆற்றுகின்றன. 5. அந்நிய மொழியின் எதிர்திசைக் கட்டமைப்பானது ஏற்கனவே அமைந்துள்ள தாய் மொழிக் கட்டமைப்போடு முரண்படும் 6. வெள்ளைக்காரத் தமிழனின் திமிராட்சி சாதாத்தமிழன் தலையை நசுக்காதா 7. கல்வியை அல்ட்சியப்படுத்தினால் அல்லது அரசியல் படுத்தினால் சமூகத்தின் எதிர்காலமே சீர்கெட்டுப் போகும் 8. கல்வி வழியெ ஒரு தலைமுறையில் ஏற்படும் கோளாறு ஏழு தலைமுறைகளை பாதிக்கும் என்பதை அரசு மறந்து விடக்கூடாது.