சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




செவ்வாய், 18 பிப்ரவரி, 2014

நாவல் : தறிநாடா… –

சுப்ரபாரதிமணியன் -காலமாற்றமும் தொழிலோட்டமும்

கலைச்செல்வி

ஆரம்ப எழுபதுகளில் திருப்பூரில் நடந்த நெசவாளர் போராட்டத்தை மையப்படுத்தி  ரங்கசாமி.. நாகமணி குடும்பத்தின் வாயிலாக நெசவுத்தொழில் பயணிக்கிறது. லாட்டரிச்சீட்டு.. வேதாத்திரி மகிரிஷி என்று நாவலின் காலக்கட்டங்களை உரைத்துக் கொண்டே கதை நகர்வதால் முன்னுரைக்கு பதிலான பின்னுரையின் தொடர்பின்றி மறுபதிப்பு நாவலாக மனதிற்குள் பதிகிறது.
‘கைத்தொழில் ஒன்றை கற்றுக் கொள்.. கவலை உனக்கிலை ஒத்துக் கொள்..’ என்ற கருத்து எதிர்மறையாகிறது. கற்றுக் கொண்ட கைத்தொழில் கண்ணெதிரே நசிந்துக் கொண்டிருக்க விட்டு செல்லவும் முடியாமல் தொட்டு தொடரவும் வழியின்றி போராட்டமாக மாறுகிறது. போராட்டம்.. போராட்டம்.. நீளும் போராட்டம்.. அரசியல் பாதுகாப்பின்மை.. பணபலமின்னை.. வலுவான ஆள் தொடர்பின்மை.. ஒருமித்த கருத்தின்மை.. ஜாதி ரீதியாக மட்டுமே கையெடுப்பு.. என்பது போன்ற காரணிகள் அமிழ்த்துவதில் பசி.. சாவு.. அழுகுரல்.. இவற்றோடு காவல்துறையினரின் அடக்குமுறையும் சேர்ந்து கொள்ள போராட்டம் கூர்மையை இழக்கிறது. இருப்பதை பிடித்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் நிலைக்கிறது. மாற்றம் ஒன்றே மாறாதது.. என்ற உண்மை நிலைப்பாடு உருக்குலைந்து போகிறது.
நெசவுத்தொழிலின் பிரத்யேக வார்த்தைகளுக்கான அர்த்தங்களை தெளிவு செய்திருக்கலாம். தறிநாடா.. பாவு.. பாவடி.. பில்வேர்.. ஊடைநூல்.. ஜக்காடு மிஷின்.. என்ற நெசவுப்பயணத்தில் சவுண்டியம்மன் கோவில்.. அதை தொடர்ந்த சிறுசிறு நம்பிக்கைள்.. சம்பிரதாயங்கள்.. சிவனின் காரமடை பெருமாள் மீதான பக்தி.. அதை சுற்றியமைந்த கதைகள் போன்றவை நாவலை உயிர்ப்பாக்கி முன் செலுத்துகிறது.
ஒரு தொழிலின் நசிவென்பது முதலில் உணரப்படுவது அந்த தொழிலாளிகளால் தான். அவர்களின் குரல்கள் அலட்சியப்படுத்தப்பட்டு செய்யும் காலப்பயணம் முழுமையற்று தான் போகும். பொன்னுவை நேர்முகத்தேர்வுக்கு அனுப்பும் தகப்பன் ;நாங்கள்ளாம் ஏழப்பட்ட நெசவாள குடும்பம்ன்னு சொல்லுப்பா..’ என்ற ஒற்றை வார்த்தை ஒரு சமுதாய துயரத்தை உணர்த்துகிறது. ஆசாட மாதங்களில் தறிசாமான் கடையா.. அடகு கடையா என்ற சந்தேகம் வந்து விடும் என்ற பதிவுகள் மனதின் சுமைகள்;. கூரைப்புடவை.. ராஜாஜி கதர்.. ஆனந்தரங்கம் பிள்ளையின் நெசவுத்தொழில்.. இப்படியான தகவல்கள் ஏராளம். எண்ணங்களையும் எதிர்கால பயங்களையும் கனவுகளாக்கி வெளிப்படுத்துகிறார் ஆசிரியர்.
போராட்டத்தின் தொய்வுகளும் நிமிரல்களும் பத்திகளாக வெளிப்படாமல் கதாபாத்திர உரையாடல்கள் மூலம் தெரிய வருவது ஆறுதல்.  ‘ஸ்டிரைக் யார பாதிக்குது..? முதலாளிங்க அக்கறப்படல.. நாமளே இறங்கி வரணும்னு நெனப்பு அவங்களுக்கு.. கடைகளை கூட அபூர்வமா தான் தெறக்கிறாங்க.. எப்போஎப்போன்னு பாத்து நெஞ்ச சேலைய கொடுத்தமுன்னா காசு வேணும்னா உங்க சங்கத்துல கேளுங்கிறாங்க..’ இயலாமை வார்த்தைகளாகிறது. ‘பாவெல்லாம் நீட்டி எவ்ளோ நாளாச்சு..’ குலத்தொழிலின் ஏக்கம் வார்த்தைகளில் வடிகிறது.
ஏகப்பட்ட விஷயங்களை தொட்டு செல்லும் நாவலாசிரியர் பொன்னுவின் பாத்திரத்தில் தன்னையறியாது வெளிப்படுகிறார். ‘நெசவாளிங்க போராட்டத்துல உண்மையா நெசவு செய்றவங்கள மட்டும் போனா போதும்..’ என்று வரமறுக்கும் நேர்மை.. தகப்பனின் தழுதழுப்புக்கு ‘இரக்கப்படற உலகம் இது இல்லப்பா..’ என்ற சமுதாய புரிதல்.. என்று பொன்னுவின் மனப்போக்கு விரிவடைகிறது. நாராயணமூர்த்தி வேடமிட்ட பொன்னு.. தன்னை ஜாதிக்குள் சொருகிக் கொள்ளும் பொன்னு என்றிருந்தவன் வேலையின்றி சலித்து கிடந்ததில் பாசிபடர்ந்த குட்டைக்கு அழுக்கு துணிகளை வெளுக்க செல்லும் தாயும் சகோதரிகளும்.. சோறின்றி போனதில் மயங்கிய தாய்… காசின்றி போனதில் காத்து கருப்பு நம்பிக்கை.. இதற்கு ஒத்து ஊதும் காசி சித்தப்பா.. இப்படியான பற்பல நிகழ்வுகளில் பொன்னுவின் விழிப்புணர்வு உணர்த்தப்படுகிறது. துப்பாக்கி சூட்டில் வீழ்ந்து போன பரமேஸ்வரன் பொன்னுவின் மனதில் உயிர்த்து போகிறார்.. தோழர் ராஜாமணி நிலைத்து விடுகிறார்.. பொதுவுடமை சித்தாந்தத்தின் வழி செல்லும் மனதை கட்டுப்படுத்த முடியாது இறுதியாக பெற்றவர்களிடம் தன்னை தணித்துக் கொண்டு வாதிடும் பொன்னு.. அப்போதே புதுத்தோழர் உருவாகி விடுகிறான்;.
ஒரு விதமான ‘டிரண்ட் செட்டர்களாக..’ தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் தற்போதைய கதராடை காதலர்களை நோக்கி சொடுக்கி விட்ட சாட்டை இந்நாவல். வெகுஜன பார்வைக்கு உட்பட்டேயாக வேண்டிய நாவல்.
நாவலை முடிக்கும் போது காலங்களின் குரல்கள்; காதுகளில் தறிநாடா சத்தமாய்.. சத்தமாய்.. சத்தமாய்..
Print Friendly