சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




வெள்ளி, 29 நவம்பர், 2013


காற்றுக் கொட்டகை

  சமீபத்தில் எங்கள் தாய்தமிழ்ப் பள்ளி ஆண்டு விழாவில் மாணவர்கள் காற்றுக் கொட்டகை என்ற ஓரங்க நாடகம் நடத்தினர்.
அதில் நகரங்களில் காற்று மாசுபட்டு மக்கள் காற்று சிலிண்டர்களைத் தேடிப் போவது பற்றியது. கேஸ் சிலிண்டர் போல் காற்று சிலிண்டர்களுக்கும் ஏகப்பட்ட கிராக்கி ஏற்படுகிறது. அரசியல்வாதிகள் தேர்தலில் காற்று சிலிண்டர்கள் கொண்ட கொட்டகைகளை அமைத்து மக்களை மூச்சுத் திணறலிலிருந்து காப்பாற்றுவோம் என்று உறுதியளித்து கொட்டகைகளைத் திறக்கிறார்கள். அதைப் பெறுவது, உபயோகிப்பது என்று ஊழல் மலிகிறது. சாதாரண மக்களுக்கும் கிடைக்காததாக இருக்கிறது.

    உலகின் மிக முக்கியமான சுற்றுச்சுழல் சிக்கலில் ஒன்றாக இந்த காற்று மாசுபாடு இன்று கணிக்கப்படுகிறது. காற்று மாசுபாடு போக்குவரத்தும், மின்னுற்பத்தியுமே முதன்மைக் காரணங்களாக இருக்கின்றன. ஆசிய நாட்டு மக்களில் பாதிப்பேர் நகரங்களில் வாழும் சூழலில் நகர் விரிவாக்கமும், வளர்ச்சியும் தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. போக்குவரத்து வாகனங்கள், விமானங்களில் பறப்பது, புகை வண்டிகளின் இயக்கம் எல்லாம் சேர்ந்து இரைச்சலையும், ஒலி மாசையும் உருவாக்குகின்றன.

ஆலை இயந்திரங்கள், பொழுது போக்கு சாதன இரைச்சல், ஒலி பெருக்கி இரைச்சல் என்று தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இவை தொடரும்போது உடல் சோர்வடையும். அதிகமான மன அழுத்தம், மிகையான உளைச்சல், கேட்கும் திறனில் குறைபாடு, உறக்கம் குறைந்து போதல் ஆகியவை நிகழ்கின்றன. மிகையான சப்தங்களால் விலங்குகள் பாதிக்கப்படுகின்றன. கடலில் ஆயுதக் கப்பல்கள் எழுப்பும் ஒலியால் கடல்வாழ் திமிங்கிலங்கள் கடற்கரை நோக்கி விரைந்து கடற்கரையில் செத்துக் கிடப்பதும் நிகழ்கிறது. ஐரோப்பிய நாட்டின் ராபின் பறவைகள் கூவி தங்கள் செய்திகளை பரிமாறிக் கொள்வது வழக்கம். ஆனால் பகல் நேரத்து இரைச்சல்கள் காரணமாய் அமைதியான இரவில் கூவிப்பழகிக் கொண்டன என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இந்த இரைச்சலால் சிட்டுக் குருவிகள் போன்றவை தமது இணைகளிடம் இருந்து பிரிந்து தத்தளிக்கின்றன. இந்த ஒலி மாசுபாட்டை பற்றி அக்கறை கொண்ட ஒரு நிறுவனம் "சத்தத்தில் இருந்து விடுபட்ட அமெரிக்கா" என்ற முழக்கத்துடன் அமெரிக்காவில் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.

    இந்தக் காற்று மாசுபாடு காரணமாக சென்றாண்டில் மட்டும் உலக அளவில் 32 லட்சம் பேர் தங்களின் இயல்பான முதுமையை அடைவதற்கு முன்பாகவே மரணத்தைத் சந்தித்துள்ளனர். இந்த மாசுபாட்டால் அதிகம் பாதிக்கப்படும் நாடுகளில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் போன்றவை முன்னணியில் உள்ளன. மனிதர்களின் முன் கூட்டிய மரணங்களுக்கான காரணங்களில் எட்டாவது காரணமாக இந்த காற்று மாசுபாடு உள்ளது.

    "வளரும் நகரங்கள், ஆரோக்யமான நகரங்கள்" என்ற முழக்கத்துடன் காற்று மாசுபாட்டிற்கெதிரான பல்வேறு திட்டங்கள் இன்று அமைக்கப்படுகின்றன.

    இந்த நுண் தூசு மாசு உடல் ரிதியாக பல நோய்களைக் கொண்டு வருகிறது. நுரையீரல் மற்றும் இதயம் சார்ந்த நோய்களை அதிகப்படுத்துகின்றன. தொடர்ந்த ஆஸ்துமா, இதயம் நின்று போதல் காரணமாக அகால மரணங்கள் சம்பவிக்கின்றன. குடியிருப்புப் பகுதிகளிலும், சாலைகளிலும் குப்பைகளை எரித்து இன்னும் மாசுபாடாகிறது.

    திருப்பூரில் பனியன் தொழிற்சாலைகளின் இயந்திர இரைச்சல் சப்தமும், பனியன் வேஸ்ட் துணிகளை சாதாரண மக்கள் அடுப்பெறிக்கப் பயன்படுத்துவதும் வேஸ்ட்களைப் பிரிக்கும் வேலையில் தூசு அடைவதும் மக்களின் உடல்நலக் கேடுகளைத் தொடர்ந்து தந்து வருகிறது. வாகனங்கள் வெளியேற்றும் புகை, வாகனங்கள் இயக்குவதால் உருவாகும் தூசு சிரமங்களைத் தருகின்றன.

    தனிப்பட்ட முறையிலான வாகனங்களைக் குறைத்து பொது வாகனங்களைப் பயன்படுத்துதல், மிதிவண்டிகளுக்கு முன்னுரிமை அளிப்பது நடையாகச் செல்வதை ஊக்குவிப்பது போன்றவை பெருமளவில் மாசுபாட்டினை குறைக்கும். வறண்ட பகுதிகளில் தாவரங்கள், மரங்கள் வளர்ப்பது, சாலை பராமரிப்பு பணிகள் செய்யும் போது குழிகளை உடனே மூடுவதாலும் குறைக்கலாம்.

    அமெரிக்காவின் ஒரிகன் மாநிலத்தில் போர்ட்லண்ட் நகரத்தில் சத்த அளவைக் குறைப்பதற்கான விதி முறைகளை முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு முன் தெரிவித்தார். இந்த போர்ட்லண்ட் சட்ட விதி முறைகளே பின்னர் அமெரிக்காவிலும், கனடாவிலும் பல நகரங்கள் பின்பற்ற ஆரம்பித்தன.

    போர்ட்லண்ட் நகரத்தில் ஒலி மாசுபாடு சம்பந்தமான ஒவ்வொரு தவற்றுக்கும் தலா 5000 டாலர் வரை அபராதம் விதிக்கப்படுகிறது. ஒரே நாளில் பலமுறை தவறு செய்தால் தனித்தனியாக அபராதம் செலுத்த வேண்டியிருப்பதால் இது கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது. பல்வேறு வகைச் சட்டங்களும், மாசு கட்டுப்பாட்டு வாரிய நடவடிக்கைகளும் முறையாக்கப்படுமானால், சீக்கிரம் காது செவிடாகும் நிலையோ, சீக்கிரம் இதயநோய் ஏற்படும் துயரமோ மனிதனுக்குக் குறையும்.
- 4தமிழ்மீடியாவுக்காக சுப்ரபாரதி மணியன்