சுப்ரபாரதிமணியன் திருப்பூரை சேர்ந்தவர். சிறுகதை , நாவல், கட்டுரைகள் , கவிதைகள் என தமிழிலக்கியத்தின் பலதளங்களில் கடந்த முப்பது வருடங்களாகத் தீவிரமாக இயங்கி , அனைவராலும் அறியப்பட்ட ஒரு படைப்பாளி்,இந்திய முன்னாள் குடியரசு தலைவர் வழங்கிய கதாவிருது தமிழக அரசின் சிறந்த நாவல் ஆசிரியர் விருது உட்பட பல்வேறு விருதுகளையும் பரிசுகளையும் பெற்றுள்ளார். திருப்பூர் பகுதியில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண்களை சுரண்டும் சுமங்கலி திட்டத்தை ஒழிப்பது ,நொய்யலை பாதுகாப்பது போன்ற பல்வேறு சமூக பிரச்சினையிலும் அக்கறை கொண்டவர் ,15 நாவல்கள் 15 சிறுகதை தொகுப்புகள் ,கட்டுரைத் தொகுப்புகள் உட்பட 50 நுல்கள் வெளியிட்டுள்ளார் கனவு என்ற இலக்கிய இதழை 30 ஆண்டுகளாக நடததுகிறார் திருப்பூர் தாய்தமிழ் பள்ளியோடு இணைந்து பணியாற்றுகிறார். தொலை பேசித்துறையில் உதவி கோட்ட பொறியாளராய் பணியாற்றியவர். வலைப்பதிவாக்கம் சுந்தரக்கண்ணன்
<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
கதா பரிசு "92"- இந்தியாவின் பல்வேறு மொழியின் சிறந்த சிறுகதை எழுத்தாளர்களுக்கான "கதா-92" பரிசை தமிழ் எழுத்தாளர்கள் சுப்ரபாரதிமணியன், ஜெயமோகன் பெற்றிருக்கிறார்கள். டெல்லி ராஷ்டிரபதி பவனில் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில் ஜனாதிபதி சங்கர் தயாள் சர்மா இந்திய மொழிகளின் பல்வேறு எழுத்தாளர்களுக்கு பரிசு வழங்கினார். அவ்விழாவில் எம்.டி. வாசுதேவன் நாயர், என்.எஸ். மாதவன் (மலையாளம்), வைதேகி, விவேக் ஷான்பாக் (கன்னடம்), ரெண்டல நாகேஸ்வரராவ் (தெலுங்கு) மற்றும் 12 மொழிகளின் எழுத்தாளர்களுக்கும் இப்பரிசு வழங்கப்பட்டது. "கதா பரிசுக் கதைகள்" என்ற ஆங்கில நூலை மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சர் பரூக் மரக்காயர் வெளியிட்டார். அந்த ஆங்கிலத் தொகுப்பில் பரிசு பெற்றப் படைப்பாளிகளின் சிறுகதைகள் இடம் பெற்றிருக்கின்றன. சுப்ரபாரதிமணியனின் "இடம்", ஜெயமோகனின் "ஜகன் மித்யை" கதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புகளும் இடம் பெற்றுள்ளன. அப்படியே எழுத்தில் கொண்டு வந்து விட முடியாது. அதற்கென்று ஒரு ஒழுங்கமைவு தேவைப்படுகிறது. இந்த ஒழுங்கமைவிற்கு தயார்படுத்திக் கொள்வது அவசியமாகிறது. அதுவும் எழுதத் தொடங்குவதற்கான ஒழுங்கமைவில் இந்த முயற்சி முக்கியப் பங்காகி விடுகிறது. வார்த்தைகளின் ஒழுங்கமைவும், மொழியின் இயல்பும் பொருந்தி வருகிற போதே ஒருவன் எழுத ஆயத்தம் செய்து கொள்ளலாம். அதற்காகக் காத்திருக்கிற 'தவம்' அர்த்தமற்றதாகக் கூட அமைந்து விடுகிறது.தில்லி தமிழ்ச்சங்கம் ஒரு பாராடு விழாவை நட்த்தியது. அதில் நானும் உரையாற்றினேன்.---------------- சுப்ரபாரதிமணியன் -




வெள்ளி, 15 அக்டோபர், 2010

பால சாகித்திய புரஸ்கார் மற்றும் விருதுகள்

1.சாகித்திய அகாதமி: குழந்தை இலக்கியப் பரிசு

சாகித்திய அக்காதமி ஆண்டுதோறும் படைப்பிலக்கியம், மொழிபெயர்ப்பு ஆகிய பிரிவுகளில் பரிசு வழங்கி வருகிறது. இவ்வாண்டு முதல் சிறுவர் இலக்கியத்திற்கும் வழங்குகிறது. இவ்வாண்டிற்கான “ பால சாகித்திய புரஸ்கார்” பரிசு திண்டுக்கலைச் சார்ந்த குழந்தை எழுத்தாளர் கமலவேலனுக்கு அவரின் ‘அந்தோணியின் ஆட்டுக்கூட்டி’ என்ற நூலுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. 1961 முதல் சிறுவர் நூல்களை கமலவேலன் எழுதி வருகிறார். கண்ணன், அரும்பு, கோகுலம், தினமணியின் சிறுவர் மணி ஆகிய இதழ்களில் குழந்தைகளுக்காக எழுதி வருகிறார். ஆசிரியராகப் பணியாற்றியவர் . அறிவொளி இயக்கத்தில் சிறந்த பணிக்காக மால்கம் ஆதிசேசய்யா விருதும் பெற்றிருக்கிறார்.


” மண் புதிது “ சுப்ரபாரதிமணியனின் பயண நூல் வெளியீடு


சுப்ரபாரதிமணியனின் “ மண் புதிது “ பயண் நூல் வெளியீட்டு விழா திருப்பூரில் எம்ஜி புதூர் மூன்றாம் வீதியின் ஓசோ பவனில் நடைபெற்றது. வழக்கறிஞர் சி ரவி நூலை வெளியிட வழக்கறிஞர் சுகன்யா பெற்றுக் கொண்டார். நூலை அறிமுகப்படுத்தி கவிஞர் முத்து சரவணன் பேசினார். 1995 இல் சுப்ரபாரதிமணியன் இங்கிலாந்து, அய்ரோப்பிய நாடுகளுக்குப் பயணம் சென்றிருக்கிறார். அப்போதைய தமிழ் ஈழம் பற்றியக் கனவுகள் இப்போது சிதைந்திருப்பது வருத்தம் தருகிறது. அய்ரோப்பிய நாட்டில் வாழும் ஈழமக்களைப்பற்றி அதிகம் எழுதியிருக்கிறார். அவர்கள் கலாசாரரீதியாக அன்னியப்பட்டிருப்பது பற்றியும் அதிகம் கூறியிருக்கிறார். வெவ்வேறு நாட்டு தேசிய இனக்குழுப்போராட்டங்கள் தீவிரவாதப்போராட்டங்களாக மாறி இருப்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார். தீவிர அக்கறையுடன் திரைப்பட , குறும்பட முயற்சிகள் பற்றியும் எழுதியுள்ளார். வழக்கமான பயண நூலாக இல்லாமல் கலாச்சாரத்தேடலாக இந்த நூல் வடிவமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது என்று குறிப்பிட்டார். வழக்கறிஞர் சுகன்யா பழங்குடிகள் மீதான் வன்முறை என்ற தலைப்பிலும் வழக்கறிஞர் சி ரவி “ முத்துகுமார்; நெருப்பாய் வாழ்ந்தவன் ’ என்ற நூல் பற்றிய விமர்சன உரையையும் வழங்கினர். பழ விசுவநாதன் தலைமை வகித்து மறைந்த தமிழ் தேசிய வாதி ஆசிரியர் துரை அரசன் பற்றிப் பேசினார். கவிஞர் இரத்தின மூர்த்தியின் கவிதைகள் குற்ற உணர்வில் அமிழ்ந்து கிடக்கும் தனி மனிதனின் தீவிர மன ஆதங்கமாக அமைந்திருந்தன. ஆலம் நன்றி கூறினார். “ மண் புதிது “ நூல் வெளியீடு : அறிவு பதிப்பகம், சென்னை , இரண்டாம் பதிப்பு இது.


Interior Decoration :ஆங்கிலk கவிதை தொகுப்பு


பத்து இந்திய மொழிகளைச் சார்ந்த 54 பெண் கவிஞர்களின் கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்புத் தொகுப்பு இது. தமிழில் குட்டி ரேவதி, சல்மா, சுகந்தி சுப்மணியன், இளம்பிறை, மாலதி மைத்திரி, சிகிர்தராணி, உமா மகேஸ்வரி, வத்ஸலாவின் கவிதகள் இடம் பெற்றுள்ளன. உருது, ஆங்கிலக் கவிதகளும் உள்ளன. தெலுங்குக் கவிஞர்களின் மொழியாக்கத்தில் வசந்தா கண்ண பிரான் இடம் பெற்றுள்ளார்.


( ரூ 395. வெளியீடு . Women Unlimited , New Delhi )


நம்மாழ்வார்; சிற்பி பாலசுப்ரமணியன்


பாலுக்கும் தேனுக்கும் நிகரான இலக்கியச் சுவையும், பண்பட்ட வைணவ செந்னெறி ஏற்றத் தத்துவச் செழுமையும் கொண்ட திருவாய்மொழியைத் தந்த நம்மாழ்வார் நம் சிந்தயிலும், சென்னியிலும் வீற்றிருக்கும் கீர்த்தி உடையார். வைணவ அடிமைத் திறமும் , ஆய்வு நெறித்தரமும் ஒன்றிணைந்த சிறப்போடு கவிஞர் சிற்பி பாலசுப்ரம்ணியன் அவர்கள் இதை உருவாக்கி உள்ளார்.. ஞானப்பரம்பரை என்ற பழம் இலக்கிய வரிசையில் இடம்பெற்றுள்ள நூல் இது. பொள்ளாச்சி என் ஜி எம் க்ல்லூரி இந்த ஞானப்பரம்பரை நூல் வரிசையை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.

செம்மொழி மாநாட்டு சமயத்தில் “ வள்ர் கொங்கு” என்றத் தலைப்பில் கொங்கு நாட்டுப் படைபாளிகள், மொழி அறிஞர்கள் , திரைப்படத்துறையினர் எழுதிய 500 பக்க நூல் ஒன்றையும் இக்கல்லூரி வெளியிட்டிருந்த்து. இவ்வாண்டில் இக்கல்லூரி இணைந்து நடத்திய சாகித்திய அக்காதமியின் அற நெறி நூல்களும், உலகமயமாக்கலும் கருத்தரங்கமும், நல்லி திசை எட்டும் மொழிபெயர்ப்பு பரிசு குறித்தான மொழிபெயர்ப்பாளர்களின் கருத்தரங்கு ஒன்றும் குறிப்பிடத்தக்கது.




wwww.thinnai.com