Saturday, June 5, 2010

அங்காடித் தெருவும் "தேநீர் இடை வேளை" நாவலும்

அங்காடித் தெரு பற்றி பல்வேறு விமர்சனங்கள் தொடர்ந்து வெளிவந்து கொண்டிருக்கின்றன. சமீபத்தில்தான் இதைப் பார்த்தேன்.
சுப்ரபாரதிமணியனின் தேநீர் இடைவேளை என்றொரு நாவல் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு வெளி வந்த்து. புரோக்கர்களால் தெற்கு மாவட்டங்களிலிருந்து டீன் ஏஜ் பெண்கள் அழைத்து வரப்படுவது, பின்னலாடை பஞ்சாலைகளில் அவர்கள் சுமங்கலித் திட்ட்த்தின் கீழ் கொத்தடிமைகளாக கொட்டடிகளில் அடைக்கப்பட்டு வேலை வாங்கப்படுபது, பாலியல் ரீதியான சுரண்டல், ஓன்னுக்குப் போவதற்குக் கூட அபராதம் கட்ட வேண்டிய சூழல், வட்டிக்கு பணம் கொடுத்தவர்களால் பெண்கள் பாலியல் ரீதியாக சுரண்டப்படுவது, பெண்களின் தற்கொலை, காதல் முறிவுகளால் பெண்களின் அவஸ்த்தை இந்த நாவலில் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த நாவல் கடிதங்கள், டைரி குறிப்புகள் என்ற வடிவத்தில் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த நாவல் பிரேமா நந்தகுமார் அவர்களால்
“UNWRITTEN LETTERS” என்ற தலைப்பில் ஆங்கிலத்தில் வெளி வந்துள்ளது.
கடந்த ஏழு ஆண்டுகள் இடைவெளியில் சுமங்கலித்திட்டம் போன்றவற்றின் தாக்கங்கள் வெகுஜன ஊடகங்களிலும் பதிவுகளை செய்துள்ளன. சுப்ரபாரதிமணியனின் தேநீர் இடைவேளை நாவலை திரைப்படத் துரை சார்ந்த நண்பர் ஒருவரும் திரைக்கதை முயற்சியில் ஈடுபட்டு திரைக்கதையை மூன்றாண்டுகளுக்கு முன் முடித்திருந்தார். சுப்ரபாரதிமணியணின் தேநீர் இடைவேளை நாவலை காவ்யா பதிப்பகம், சென்னை வெளியிட்டுள்ளது.

செய்தி : சுந்தரக்கண்ணன்