Monday, March 30, 2009

காலச்சுவடு

சுகந்தி சுப்ரமணியன் கவிதைகள்
திரு. மீரா அவர்கள் எனது முதல் கவிதைத் தொகுப்பான "புதையுண்ட வாழ்க்கை'யை வெளியிட்டார். அவர் பெயரால் விருது வழங்கப்படுகிற போதுதான் அவர் மறைந்தது எனக்குத் தெரிய வருவது என் துரதிருஷ்டம். அவருக்கு அஞ்சலியாக இந்த மூன்று கவிதைகளைச் சமர்ப்பிக்கிறேன்.


மரணத்தின் நுழைவாயிலுக்கு
சென்று திரும்பிவிட்டேன்
வந்த பின்னர் இன்னும்
மரணத்தைப் பற்றின ஆசைதான்
ஆனால் என் குழந்தைகளின்
கண்ணீரில்மனது ஊஞ்சலாடுகிறது
எனக்கும் சூரியனுக்கும்
மரணம் பற்றின அச்சம் நீங்கிவிடுகிறது
எல்லோரும் ரிஷிகளாகிறார்கள்
மெüனம் எப்போதும்
என்னைச்சிறையில் அடைக்கிறது.
மரணம் ஒரு பெரிய விசயமல்ல.
உயிரின் ஆசையில் மனத்திற்குள் சலசலப்பு
பார்க்கிற ஒவ்வொரு நிமிசமும்
கடிகாரத்தைப் போலவே
மனமும் மரணமும் . . .
பரிசுகளும் பாராட்டுகளும்
ஆறுதல்படுத்திக்கொண்டே இருக்கின்றன
ஆனால் நானும் என் உடலும்
மெüனமாய்த் தொங்குகிறோம் - தூங்குகிறோம்
மரணத்தை நீக்கிச் செல்லும் உதயசூரியன்
வேதனையைத் தூண்டிவிடுகிறது.
மூளை இறந்தபடி வாழ்கிறேன்

பதிவேட்டில் ஒரு முகம்
எப்போதும் உள்ளத் தூய்மை
வள்ளுவர் சொல்கிறார்.
வள்ளுவர் படத்தைப் பார்க்கிறேன்
அவர்தான் இதைச் சொல்கிறார்.
எப்போதும் ஊக்கமளிக்கும் சொற்கள்
எப்போதும் பண்பான செயல்
வள்ளுவர் சொல்கிறார்.
புத்தகங்களைப் படித்துஎதுவுமே
நிகழவில்லைநிமிடத்திற்கொரு முறை
மாறும் என் மிருகம்
விடுதலை ஆகிவிட்ட பின்பும் மனக் கூண்டிற்
குள்வள்ளுவர் சொல்கிறார்வெளியே வா
வெளியே வந்து நான் யாரிடம்
என்ன சொல்லஎன் அறியாமையின் கூண்டினுள்
எதிர்காலம் சிற்பங்களாய்.
வள்ளுவர் இதையே சொல்கிறார்.
எப்போதும் விடுதலை கேட்கும்
என் உயிர்கள்.எக்காளமிட்டுத் திரிகின்றன
உயிர்களின் குரல்கள்
.வள்ளுவர் இதையே சொல்கிறார்.

சுக துக்கங்கள் ஒரு தராசுபூலச்சந்தர்ப்பவாதம்
எப்போதும் வெல்வதில்லை
ஓயாத குரலில் அழுது
துடிக்கும் குழந்தைமொழி
தெரியாமல் சிரிக்கிற பெண்கள்.
எப்போதும் சுவற்றுடன் ஓயாத
ஓவியங்கள்கவலையற்றுக் கிடக்கிறது
பூமிஏன் என்று அழுகையில் கிடக்கிற
வானம்பூக்கள் இன்னும்
பூத்துக்கொண்டிருக்கின்றன.
எப்போதோ ஓய்ந்துபோன கவலைகளை
சுவடற்றுப் போக்க எல்லாமும்.
எப்போதும் எதுவும் நிரந்தரமில்லைதான்.