
Saturday, May 31, 2008
Tuesday, May 20, 2008
"எண்ணும் எழுத்தும்"

"எண்ணும் எழுத்தும்" கோடைப் பயிற்சி
செய்தி: தினத்தந்தி
Monday, May 19, 2008
ஆப்ரிக்காவின் துண்டு வளையல்கள்
==============
சுப்ரபாரதிமணியன்
========================
வீட்டு முற்றத்தில் சாயம் தோய்த்த துணிகளைப் பெண்கள் காயப் போடுகிறார்கள். திருமண ஊர்வலம் ஒன்று கடந்து போகிறது. ஒரு பெண்மணி வாளியொன்றைத் தூக்கிக் கொண்டு அவ்வப்போது கடந்து போகிறாள்.ஒரு குழந்தை தடுமாறி தாயைத் தேடிக் கொண்டிருக்கிறது. அவ்வப்போது தன்னை அலங்கரித்துக்கொள்ளும் பெண் முற்றத்தை அலட்சியமாக பார்த்துக் கிடக்கிறாள். அந்த முற்றத்தில் ஒரு நீதிமன்றம் கூடியிருக்கிறது. இரண்டு தரப்பிலான வழக்கறிஞர்கள் அங்கு நீதிமன்றப் பணியில் இருக்கிறார்கள். உலகவங்கி, சர்வதேச நிதி நிறுவனங்களின் மேல் குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுகின்றன. சில வழக்கறிஞர்களால் ஆப்ரிக்காவின் சுய தன்மையைப் பாழாக்கி அதை ஒரு நவகாலனிய நாடாக்குவதில் இந்த் நிறுவனங்கள் நிணுக்கமாக எப்படிச் செயல்படுகின்றன என்பது குற்றச்சாட்டாக இருக்கிறது. இந்த நிறுவனங்களின் சார்பிலும் சில வழக்கறிஞர்கள் வாதாடுகிறார்கள். புலம்பெயர்தல் ஆப்ரிக்காவில் சாதாரணமாகிவிட்டது. சகாராவில் சாகும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. கல்வி, உடல் நலத்திற்கு நிறைய நிதிகள். அரசு கல்வி கொடுத்தபின் எதற்கு வெளிநாடு போகிறாய் என்ற கேள்விகள். உலகமயமாக்கலின் நாகரீகம் உலகமெங்கும் பரவிக் கொண்டிருக்கிறது. ஒருவன் பாட்டு மூலம் தனது மனக் குறையை வெளிப்படுத்துகிறான். இன்னொருவன் விசாரணைக்கு வந்து நின்று பேச எதுவுமில்லாததாக மௌனமாகவே இருக்கிறான். அதீத மனிதத் தன்மையில் பல விடங்கள் நடப்பதாய் தகவல்கள் பரிமாற்றப்படுகின்றன. உயர்ந்தபட்ச தங்கம் கிடைக்கும் நாடு. ஆனால்யாரும் தங்கம் அணிவதில்லை. நீக்ரோக்கள் சோம்பேறிகள் என்றி குற்றம் சாட்டப்படுகிறார்கள். நீதிமன்றம் நடக்கும் முற்றத்தை தாண்டி சுற்றுச்சுவருக்கு வெளியே இந்த வாதங்களைக் கேட்க மக்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். சாவகாசமாகக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். மதப்பிரச்சாரம் நடக்கிறது. வžகரமான வாதங்கள். மரங்கள் முக்யம் எனப்படுகிறது. ஒரு நிறுவனத்தை நடத்த மரங்கள் எதற்கு . உற்பத்திப் பொருள்போதும். உடையின் பின்புற ஊக்கை போடச்சொல்லி ஒருபெண் நீதிமன்றத்தில் இருப்பவனிடம் கேட்கிறாள். பொருளாதார மேம்பாடு யார்பொருட்டு என்ற விவாதம் கிளம்புகிறது. திருவ ஜஸ்கட்டிகள் உருகுகின்றது என்பதும் விவாதமாகிறது. எய்ட்ஸ் வியாதிக்கு கோடிக்கணக்கில் பணம் செலவிடப்படுகிறது. கடன் நாட்டைச் žரழித்துவிட்டது. ஆப்ரிக்கா அடிமை தேசமாகிக் கொண்டிருக்கிறது. உலகவங்கியின் மேல்குற்றம் சட்டப்படுகிறது. அவர்கள் இல்லாவிட்டால் எல்லோரும் பிச்சைக்காரர்களாகி இருப்பார்கள் என்கிறது ஒரு குழு.
இந்த மாற்றங்களை ஏற்றுக் கொள்வது பிசாசிடம் வாழ்க்கையை ஒப்படைப்பது போன்றது. கடன் பிசாசிடம் நாடு திணறுகிறது. இருப்புப்பாதை மூடப்படுவதால் தோடர்பற்றுப் போவிட்ட ஒரு கிராமத்தைப் பற்றி ஒரு பெண் சொல்கிறாள். ஆப்ரிக்காவில் திட்டமிடப்பட்டு இருப்புப் பாதைகள் அழிக்கப்படுவது மக்களை அந்நியமாக்குகிறது என்ற வேதனை ஒரு பெண் பிரதானமாய் பகிர்ந்து கொள்கிறாள். அப்ரிக்காவின் வறுமைத்தோய்ந்த நிலை அவசரப்பட்டு உலகவங்கி போன்றவை குற்றவாளிகளாக்கப் படுகின்றன. மாலி புறநகர் பகுதியின் ஒரு வீட்டு முற்றத்தில் நடக்கும் இந்த நீதிமன்றம் சாதாரண மனிதர்களின் நடமாட்டங்களுக்கு மத்தியில் வடிவமைக்கப்பட்ட நாடகமாகிறது. இவை ஆப்ரிக்க திரைப்பட உலகின் மிக முக்யமான இயக்குனராக ஆப்டெர்ராஹ்மனே சிஸ்ஸாகோவின் சமீபத்திய "பமாகோ" என்றத் திரைப்படத்தில் இடம்பெறும் அம்சங்களாகும். திரைப்படத்தின் புதிய மொழியை அவர் படங்களில் காணலாம்
என்பதற்கு அத்தாட்சியாக 'பமாகோ' படம் வெளிப்பட்டிருக்கிறது. கதைசொல்லியின் தன்மையினூடே அவரின் அரசியல் கடமை குறித்த அக்கரையிலிருந்து அவர் விலகாமல் இருப்பதை அவர் படங்கள் காட்டுகின்றன. உலகமயமாக்கலின் விளைவுகளால் மரபுக்கும், புதுமைக்கு இடையில் நடக்கும் போராட்டம் இவரின் சமீபத்திய படைப்புகளில் இடம் பெற்றிருக்கின்றன. நவீன உலகத்தின் தொழில்நுட்ப அம்சங்களும், உபகரணங்களும் மனிதனை ஆத்மாவைத் தொடாமல் விலகி நின்று வேடிக்கை பார்ப்பதை வெளிப்படுத்தியது. ஆப்ரிக்க அரசியல் குறித்த விடயங்களைச் சொல்வதற்காக அவர் எடுக்கும் தளம் ஆப்ரிக்க கிராமங்களாக இருக்கிறது. "பமாகோ"வில் மெலே என்ற பாடகியின் கணவனுடனான முறிந்து போகிற
தாம்பத்ய உறவை சொல்ல அரம்பிக்கிற படம் வெவ்வேறு தளங்களுக்கு படரசிகனை இழுத்துச் செல்கிறது. ஆப்ரிக்காவின் வறட்சியான கிராம புழுதியும் வெயிலும் வறுமையும் தரும் சித்திரங்களூடே 'கௌபாய் மற்றும் இந்தியர்களின்' வீரதீர செயல்களின் விமர்சனமும் நீதிமன்ற அலசல் போலவே இன்னொரு தளத்தில் இப்படத்தில் வைக்கப்பட்டிருக்கிறது. முரணான சமூகங்களை அதன் மூலம் முன் வைக்கிறார். பழங்குடி சமூகத்தின் கதை சொல்லும் மனத்தினன் ஆக அவரின் படங்களில் சிஸ்ஸாகோ வெளிப்பட்டிருக்கிறார். நவீன தகவல் தொழில்நுட்ப உலகில் எந்தவிதத் தொடர்பும் அற்று அந்நியமாகிப்போய் வாழ்க்கையைக் கடத்திக் கொண்டிருக்கும் மனிதர்களை சிஸ்ஸாகோவின் படங்களில் பார்க்க முடிகிறது.
"எல்லாம் இழந்து போனதான உணர்வும் இறந்த காலமும் என்னைப் படம் எடுக்க வைத்தது. எல்லா சொத்துக்களையும் இழந்திருந்தேன். பம்பாரா என்ற என் மொழி தொலைந்துபோயிருந்தது. குழந்தைப்பருவ நண்பர்கள் இல்லை. எனவே என்னைச் சுற்றி இருப்பவர்களை, இருப்பவற்றை ஆழமாகக் கவனிக்கவும் கற்றுக் கொண்டேன். என் மனதில் ஆழப் பதிந்திருப்பவற்றை மீட்டெடுக்க நான் படம் எடுக்க வேண்டியிருந்தது. என் அம்மாவின் மூத்த மகனை அவளின் அல்ஜ“ரியத் தகப்பன் கட்டாயப்படுத்தி பிரித்திருந்தது என்னை மிகவும் பாதித்தது. என் அம்மாவையும் அது மிகவும் பாதித்தது. அவனைப் பற்றி நிறைய போசுவார்கள். இரண்டு தடவைதான் அவனை நான் சந்தித்திருக்கிறேன். ரஷ்யாவிற்கு சென்று படமெடுக்க கற்பதற்காகச் சென்றபோது ஒருமுறை வந்தான். அவனை நான் மிகவும் நேசித்தேன். மிகுந்த அன்பால் அவனைப்பற்றி என் அம்மா நிறையப் பேசினாள். அவனி ஆதர்சமாகக் கொண்டேன். அவனைக் கதாநாயகனாக மனதில் கொண்டு நான் படமெடுக்கிறவனானேன். அதற்கு முன்னால் திரைப்படங்கள் என்னை நெகிழ வைத்ததில்லை. எனது மங்கலான நினைவுகளில் இரண்டு மூன்று சார்லி சாப்ளின் படங்கள் மட்டுமே இருந்தன.எனது குடும்ப சூழல் பின்னணியும், அரசியல் அக்கறையும் என் படங்களின் வெளிப்பாட்டு வடிவமாக்கிக் கொண்டேன்" என்கிறார் சிஸ்ஸாகோ.
ஆப்ரிக்க சமூகத்தின் அரசியல் தீண்டாமையை இன்னொரு வடிவத்தில் சொல்லும் படம் "சராபினா" பாடல்கள், நடனங்கள் மூலம் கதை சொல்லும் உத்தியை இப்படம் கையாண்டிருக்கிறது. அதுவும் மாணவர்களின் துள்ளல் மிகுந்த பாடல்களும், ஆட்டமும் இப்படத்தை வேறொரு நிலைக்குக் கொண்டு சென்றிருக்கிறது. இந்த உணர்வெழுச்சியின் மறுபுறமாய் அவர்களுக்கு நேர்கிற அரசியல் அனுபவங்கள் அவர்களை செயலற்றவர்களாக ஆக்குகிறது. ஆனால் அந்தப் பாடல்களை அதிகாரம் அடக்கிவிட முடியாது. எல்லோர் வாய்களிலும் அவை முணுமுணுத்துக் கொண்டே இருக்கும் என்பதை இப்படம் காட்டுகிறது. 1976ல் நடந்த அரசியல் கிளர்ச்சிகளில் மாணவர்கள் பங்கேற்றதை நாடமாக்கி பரவலானது. இது நாடகத்திலிருந்து திரைப்படமாகியிருப்பதால் by2 வடிவத்திற்கு ஒத்திசைவான பாடல்களும், நடனங்களும் திரைப்படத்திலும் அதே வடிவமாக அமைந்துவிட்டிருக்கிறது. சரபினாவிற்கு பெரிய நட்சத்திரமாக வேண்டும் என்ற கனவு இருக்கிறது. அவளின் கனவை அடிக்கடி நெல்சன் மண்டேலாவின் படத்திற்கு முன் நின்று அவரோடு போசுகிற இயல்பில் பகிர்ந்து கொள்கிறாள். அவளுக்கு ஆதர்சமாக இருப்பவள் கோல்டுபர்க் என்ற சரித்திரம் மற்றும் இசையைப் பயிற்றுவிக்கும் ஆசிரியை. மறுக்கப்பட்ட நீதியையும், மீட்டெடுக்கப்பட வேண்டிய மனித உரிமைகளைப் பற்றியும் வகுப்பில் மாணவர்களிடம் கோல்டுபெர்க் சொல்லிக் கொண்டிருப்பது வழக்கம். சரித்திரம் கற்பிக்கும் சாக்கில் பொதுவுடைமை, புரட்சி பற்றி போதிக்கிறாள் என்றக் குற்றச்சாட்டும் கண்காணிப்பும் அவளின் மீது உண்டு. காவல்துறை அவளது நோட்டமிடுவதும், அவள் வகுப்பெடுக்கும்போது கூர்ந்து கவனிப்பதும் சாதாரணம். சராபினாவின் வகுப்புத்தோழியொருத்தி அரசியலில் எதிர்ப்புப் போராட்டமொன்றில் ஈடுபடுவதும் அவளின் வகுப்பையும் பாதிக்கிறது. ஆப்ரிக்க சமுக எழுச்சிக்கான மாணவ்ர்களின் எண்ணமாய் அது விரிகிறது. பள்ளியில் காவல்துறையின் அத்துமீறலும், அதை எதிர்த்த மாணவர்களின் போராட்டங்களும் துப்பாக்கிச் சூட்டிற்கும் தொடர்ந்த கலவரங்களுக்கும் இட்டுச் செல்கிறது. பினாவும் அவளது வகுப்பினரும் மிகவும் மோசமான சிறைசித்ரவதைகளுக்குள்ளும் கொடுமைக்கும் ஆளாகிறார்கள். கோல்டுபர்க்கும் சிறை பிடிக்கப்பட்டு சித்ரவதைக்குள்ளாகிறார். மாணவர்களின் எழுச்சி சிதைக்கப்படுகிறது. மாணவர்கள் உயிரற்ற பிணங்களாய் சிறையிலிருந்து வெளிவருகிறார்கள். தங்கள் வகுப்பினரைத் தேடுகிறார்கள். ஜோகன்ஸ்பர்க்கில் ஒரு வெள்ளைக்காரன் வீட்டில் வேலை செய்யும் சரபினாவின் அம்மா அவளுக்கு ஆறுதலாய் அமைகிறாள். ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்களின் விதைகளை மனதில் ஆழமாகப் பதிக்கிறார்கள். மாணவ்ர்களின் எழுச்சியும் போராட்டமும் வெளிப்படும் தீவிரத்தை படம் முழுக்க இடம் பெற்றிருக்கும் பாடல்கள் ஆழமாக்குகின்றன. பாடல்களும் அதனூடனான ஆடல்களும் மாணவர்கள் போராட்டங்களை உணர்வு பூர்வமிக்கதாக ஆக்குவதாய் அமைக்கப்பட்டிருப்பதில் மாலை சமூக எழுச்சியின் சுயம் வெளிப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் நிகழ்ந்த இந்தி எதிர்ப்பு உட்பட்ட பல மாணவர்களின் போராட்டங்களை இப்படச்சூழலில் வைத்துபார்க்கலாம். தமிழில், இந்தி எதிர்ப்பி போராட்டச் சூழல்களில் மாணவர்களைக் கொண்டு இது போன்ற படங்களின் தேவையை இப்படம் வலியுருத்துகிறது. இது போன்ற படங்களைப் பார்க்கும் வாய்ப்பாவது மாணவர்களை தங்களின் அரசியல் உணர்வு குறித்து விழிப்படையச்செய்யும் வாய்ப்பு உள்ளது. மாணவர்களின் சக்தியும் போராட்ட உணர்வும் தட்டி எழுப்பப்பட்டு முறைப்படுத்தப்படவேண்டிய கட்டாயத்தை இப்படம் உணரச் செய்கிறது. அதற்குப் பயன்பட்டிற்கும் பாடல், நடனம் சார்ந்து கதை சொல்லும் இயல்பில் வழக்கமான பாணி தகர்ந்துபோய் திரைப்படம் பார்ப்பதை உணர்வெழுச்சி கொண்டதாக்குகிறது. ஆப்ரிக்க சமூகம் பற்றின பலவர்ண யத'ர்த்தத்தை வெளிப்படுத்தும் இந்த துண்டு வளையல்கள் ஒரு கோணத்தில் கலைடாஸ்கோப்பின் பல வர்ண ஜாலத்தை வெளிப்படுத்துபவை. கறுப்பு சமூக மக்களிடம் மிஞ்சியிருக்கும் புன்னகையையும் வெளிப்படுத்துபவை.
புதுமைப்பித்தன் வரலாறு

===============================
Friday, May 16, 2008
சாபமும், வீழ்ச்சியும்
சுப்ரபாரதிமணியன்
சமகால அரசியல் நிகழ்வுகள் இந்தியப் படங்களில் வெளிப்படுவது சமீப இந்தியப் படங்களுக்கு பெருமை சேர்ப்பதாக இருக்கிறது. சோனாலிபோஸ’ன் 'அம்மு', கோவிந்த் நிகாலினியின் 'தேவ்" போன்ற படங்கள் இந்திராகாந்தியின் கொலை, குஜராத் வன்முறைகளை முன் வைத்து வெளிவந்திருக்கும் திரைப்படங்கள். சரிகா, நசுருதின்ஷா நடித்து வெளி வந்திருக்கும் "பர்சானியா.." குஜராத் கலவரத்தை முன் வைத்த படம். இப்படத்தில் ஆலன் என்ற அமெரிக்கன் அகமதாபாத்திற்க்கு வருகிறான். இந்தியா மற்றும் காந்தி பற்றின அக்கறையும் நேசமும் இந்தியாவிற்க்கு அவனை அழைத்து வந்திருக்கிறது. கோத்ரா சம்பவங்களில் நிகழ்வு அப்பூமியை கொலைக் களமாக்கியதை நேரிடையாகக் காணுகிறான் இதில். ( இப்படம் குஜராத்தில் திரையிடப்படமுடியாமல் நரேந்திர மோடி செய்த தடைகள் சமீபத்தியவை).
மேற்கத்தியத் திரைப்படங்களில் சமகால அரசியல் நிகழ்வுகளும் அரசியல் தலைவர்களின் பிண்ணணியும் வெகு சாதாரணமாக முன் வைக்கப்படுவதுண்டு. என்றாலும் விமர்சனமும் கலந்த தன்மை அவ்வகைபடங்களை இன்னொரு நிலைக்கு கொண்டு செல்கின்றன. ஈரான் ஈராக் பிரான்ஸ் கூட்டுத் தயாரிப்பில் சதாம் ஹுசேனின் ஆட்சிப் பற்றியும் அதன் பின்புலம் வெளிப்படும் படங்கள் வெளியாகியிருக்கின்றன. சதாம் ஆட்சியின் கொடுமைகளும் அது பற்றின விமர்சனத்தையும் "கிலோமீட்டர் ஜ“ரோ" என்ற படம் கொண்டிருக்கிறது. அக்கோ என்ற குர்திஸ் இனத்தைச் சார்ந்தவன் சதாம் ஹுசேனின் ராணுவத்தில் கட்டாயமாக சேர்க்கப்படுகிறான். அவனின் கனவு அந்த நாட்டை விட்டு ஓடிப் போவதுதான்.ஆனால் அது நிறைவேறுவதில்லை. அக்கோவின் மனைவி நாட்டைவிட்டு ஓட சம்மதிப்பதில்லை. படுக்கையில் கிடக்கும் அவளின் அப்பாவை நிர்கதியாக்கிவிட்டு ஓடுவது அவளுக்கு உடன்பாடில்லை. ஈராக் ராணுவத்தில் கணவன் கட்டாயமாக்கப்பட்டு தள்ளப்படுவதை விட ஓடிப் போவது ஆறுதல்தான். ஆனால் படுக்கையில் கிடக்கும் தகப்பன் சுமையாகிறான். தேவதூதர்கள் அவனுக்காக, கிழவனுக்காக வந்து கொண்டிருக்கிறார்கள் என்று கிழவனிடம் எரிச்சலுடன் சொல்லிக் கொண்டிருப்பது அவனின் பொழுது போக்காகிறது. கட்டாயமாக்கப்பட்டு, அடி உதைக்குள் தள்ளப்படும் சக மனிதர்களின் அவஸ்தையூடே அவனும் ராணுவத்தில் சேர்க்கப்படுகிறான். ஈரான் ஈராக் போர்முனைக்கு செல்கிறான். அங்கு மேல் அதிகாரிகளின் அதிகார வன்முறையும், சாதாரண சாப்பாட்டிற்கும் சிரமப்பட வேண்டிய சூழலும், குர்திஸ் இனத்தவன் என்பதாலான அவமானங்களும் அவனை அங்கிருந்து ஓடச் செய்ய எத்தனிக்கின்றன. நிர்பந்தத்தால் அவனுடன் இருக்கும் வேறு ஒருவனின் அனுபவங்கள் வேறு வகையிலானது. பெருத்த உடம்பைக் கொண்ட ஒருவன் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு ஓடுவது, பதுங்குக்குழிக்குள் ஒளிவது போன்றவற்றுக்குக் கூட சிரமப்பட்டு மேலதிகாரிகளால் உதைபட வேண்டியிருக்கிறது. அற்ப உணவை பகிர்ந்து கொள்வதிலும் ரொட்டித் துண்டின் மிச்சம் கையிலிருக்கும் போது பறக்கும், குண்டு வீசும் விமானங்களின் போக்கால் அதையும் தவற விட வேண்டியதாகிறது. தப்பி ஓடுகிற கனவை அக்கோ மனதில் தேக்கி வைத்துக் கொண்டே இருக்கிறாள். செத்துப் போன ஈராக்கியன் ஒருவனின் சவப்பெட்டியை அவனின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கும் பணி அக்கோவிடம் ஒப்படைக்கப்படுகிறது. அவனுக்கு ஆறுதல் தான் போர் சூழலில் இருந்து தப்பித்துவிடலாம். அங்கு சென்ற பின் எப்படியாவது தப்பித்து குர்தீஸ் எல்லைக்குள் தஞ்சமடைவது அவனின் லட்சியமாகிறது. சவப் பெட்டியை எடுத்துச் செல்லும் ராணுவ வண்டியோட்டி குர்தீஸ் இனமக்கள் மீது பகைமை கொண்ட அராபியன். பயணம் தொடர்கிற போது சதாம் ஹுசேனின் சிலையொன்று வாகனம் ஒன்றில் இணையாகவும், நாடு முழுவதும் ஹுசேனின் புகழ் பாடிய படி தொடர்ந்து செல்கிறது.வண்டியோட்டியுடன் அக்கோவிற்கு வாக்குவாதங்கள் ஏற்படுகின்றன.குர்தீஸ் மக்கள் மீதான வெறுப்பு , அவர்கள் ஈரான் ஆட்சிக்கு விசுவாசமானவர்கள் அல்ல, அல்லா அவர்களை தண்டிப்பார், ஹுசேன் அல்லாவின் தூதன் என்பது பற்றின வாக்குவாதங்களாய் அவை அமைகின்றன. ஒருவரை ஒருவர் தாக்கிக் கொள்ளும் அபாயங்களும் நிகழ்கின்றன.
சவப்பெட்டிகளை தாங்கிய பல ராணுவ வண்டிகள் வெவ்வேறு திசைகளுக்குச் செல்கின்றன. அவை மலைப் பகுதி சாலைகளில் கொண்டு செலவ்து மேலதிகாரிகளால் வலியுறுத்தப்படுகிறது." சவப்பெட்டிகளை பிரதான சலைகளில் கொண்டு சென்றால் ஈராக்கியனின் மனது புண்படும். நாமென்ன கோழைகளா." ஆனால் சவப்பெட்டியைச் சுற்றிய ஈராக் கொடி மீதான அவமதிப்பை அக்கோ நிகழ்த்திக் கொண்டே இருக்கிறான். துடைக்க கொடியை பயன்படுத்துவது, அலைந்து திரியும் எருமை சவப்பெட்டியின் மீது சாணம் இடுவது, சவப்பெட்டியின் நாற்றத்தை மிகைப்படுத்துவது என. இறந்த ராணுவ வீரனின் வீட்டை கண்டுபிடிக்கிற சில நாட்களின் தேடலில்பின் அந்த வீட்டின் உள்ளிலிருந்து எழும் சிரிப்பலைகள் பெட்டியை ஒப்படைக்க மனம் இசையாமல் , அனாதையாக விடப்பட்ட நிலப்பரப்பில் சவப்பெட்டியை வைத்துவிட்டு அக்கோவும் வண்டியோட்டியும் மறைகிறார்கள். அக்கோ வீடு வந்து குர்தீஸ் பிரதேசத்திற்கு மனைவியையும், மாமாவையும் வண்டியொன்றில் அழைத்து வந்துவிடுகிறான். ஊமையாக்கப்பட்ட ஒருவன் அத்துவான வீடு ஒன்றை அக்கோவிற்கு தருகிறான். அக்கோ பாலுறவுக்கு கிழட்டு மாமா படுத்திருக்கும் கட்டில் தேவைப்படுவதால் அவர் கீழிறக்கப்பட்டு கட்டில் பயன்படுத்தப்படுகிறது வெட்ட வெளியில். விமானங்கள் வீசும் குண்டுகளின் பொழிவு அவர்களை நிர்கதியாக்குகிறது. பாக்தாத்தை அமெரிக்கா கைப்பற்றினச் செய்தியை கேட்கிறார்கள். குர்திஸ்தான் வாழ்க என்று அக்கோவும் அவன் மனைவியும் கூச்சலிடுகிறார்கள். பாடல்களால் தங்களின் மகிழ்ச்சியை தங்களின் சொந்த குர்திஸ் மண்ணில் தனிமையில் பகிர்ந்து கொள்கிறார்கள்.
இப்படத்தில் வரும் குழந்தை எல்லாவற்றையும் வேடிக்கை பார்க்கிறது.எங்காவது தப்பி ஓடிவிடத்துடிக்கும் அப்பாவோ, படுக்கையில் கிடந்து கொண்டு எதையாவது அரற்றிக் கொண்டிருக்கும் தாத்தாவோ, எல்லாவற்றையும் எரிச்சலாகப் பார்க்கும் அம்மாவோ, மரத்தடியில் ஒதுங்கி நிற்கையில் வெடிக்கும் குண்டோ எல்லாம் வேடிக்கைப் பொருட்கள்தான். மிரட்சியுடன் அவற்றைப் பார்க்கிறது. குழந்தைத்தனம் மேலிட எல்லாவற்றையும் வியப்பாய் பார்த்துக் கொண்டிருக்கிறது.
குழந்தைத்தனம் இழந்து போய் கன்னி வெடிகளுக்கும், அகதி முகாம்களுக்கும், உயிர் ஊசலாட்டத்திற்கும் இடையில் மிரட்சியானப் பார்வையைத் தள்ளி விட்டு எந்த கணமும் சாவை எதிர்நோக்கும் குழந்தைகளை " Turtles can fly "என்ற படத்தில் காணலாம். கிழக்கத்திய நாடுகளின் குழந்தைத்தன்மையை இழந்து விட்ட குழந்தைகளை இதில் காணலாம். நவீன் அரசியலின் குரூரங்களும் மனிதத் தன்மை இழந்து போன மனிதர்களின் மத்தியில் வெறும் பிண்டமாய் திரிகிறவர்களாய் குழந்தைகளைப் பார்க்க வேண்டி இருக்கிறது. குழந்தைகளின் ஆதிக்க சக்திகளின் வன்முறையை சுலபமாகக் காண முடிகிறது. சிவில் யுத்தங்களுக்கு நடுவில் அகப்பட்டுக் கொண்ட மனிதர்களின் காலோரங்களில் குழந்தைகள் நடை பயில்வதை பார்க்க நேரிடுகிறது.
ஈரான் ஈராக் எல்லையோர குர்திஸ் அகதிகள் முகாமை இப்படம் மையமாகக் கொண்டிருக்கிறது.அமெரிக்க யுத்தம் ஆரம்பிப்பதற்கு சற்று முந்தைய கால கட்டம். அவ்வகை யுத்தம் பற்றினச் செய்திகளைப் பகிர்ந்து கொள்ளவும் அவற்றை தொலைக்காட்சியில் பார்த்து ரசிக்கவும் அகதி முகாமிலும் சுற்றிலும் இருப்பவர்கள் ஆயத்தப்படுத்திக் கொள்கிறார்கள். மேகங்களிடையே பறந்து திரியும் விமானங்களைக் அடையாளம் கண்டு தங்கள் மீட்சிக்கானவை அவை என்று முதியவர்கள் நம்புகிறார்கள்.
குர்திஸ் அகதி முகாமில் இருக்கும் குழந்தைகளுக்கு ஒரு பையன் குழுத்தலைவனாக இருக்கிறான்.பதிமூன்று வயதினான அவனின் பெயர் மறந்து போய் " சாட்டிலைட் " என்ற பட்டப் பெயரே நிலைத்து விடுகிறது. பக்கத்து கிராமத்திலிருந்து வந்து அகதி முகாமில் தங்கியிருக்கும் ஹென்கோவ் கன்னி வெடி விபத்தில் ஒரு கையை இழந்தவன். அவன் ஒருவகையில் ஆருடம் சொல்கிறவனாகவும் இருக்கிறான். இந்தப் பகுதி அபாயகரமானது, இங்குள்ள டேங்க் வெடிக்கும் , இங்குள்ள கன்னி வெடிகள் அபாயகரமானவை என்பதையும் அவனின் ஆருடம் ஏகதேசம் யதார்த்தமாக்குகிறது. "சேட்டலைட்டுக்கு " இது அதிர்ச்சி தருகிறது. ஊரும் அகதிமுகாமும் அவனை வழிபட்டுக் கொண்டிருக்க அவன் ஹன்கோவை ஆராதிக்கிறான். அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பதைத் திரும்பத் திரும்ப கேட்கிறான். அமெரிக்கா ஆக்கிரமிப்பு செய்யப்போவது உறுதி என்கிறான். அகதிகளின் வாழ்க்கை ஒரு நிலைக்கு வருகிற கனவு ஊர் பெரியவர்களுக்கு உண்டாகிறது. ஆண்டானாக்களைத் திருப்பி வைத்து யுத்த செய்திகளை காண்பிக்க முயல்கிறான். ஆனால் செய்திகள் கிடைப்பதில்லை. டிஸ் ஆண்டனா தேடி ஆயுத சந்தைக்கு தன்னுடன் இருக்கும் அகதி முகாம் சிறுவர்களுடன் செல்கிறான். காய்கறிக்கூறுகள் போல் ஆயுதங்கள் கிடக்கின்றன. டிஸ் ஆண்டனா வாங்கி வந்து பொருத்துகிறான். அமெரிக்கா போர் நிகழ்த்தப்போவது உறுதியாகிறது. அகதிகள் உயிரோடு இருக்க சாத்தியங்களை நினைத்துக் கொள்கிறார்கள். குர்தீஸ் அகதி முகாமில் இருக்கும் துருக்கியர்கள், ஈராக்கியர்கள் வன்மத்துடன் பார்க்கிறார்கள்.குர்தீஸ் அகதிகள் நாடற்றவர்களாக அலைகிறார்கள். குழந்தைகளும் இளம் சிறுவர்களும்ம் அவர்களின் மத்தியில் அனாதைகளாகத் திரிகிறார்கள்.
அந்த அனாதை குழந்தைகளுக்கு வேலை வாங்கிக் கொடுப்பவனாகயும் 'சாட்டலைட்' இருக்கிறான். கன்னி வெடிகளை அகற்றுவது அந்த அகதிக் குழந்தைகளுக்கு வேலையாகிறது.என்ன கூலி என்பது பற்றி பேரம் நடத்துகிறான். மீட்ட
கன்னி வெடிகளை ஆயுத சந்தைக்கு குழந்தைகளுடன் எடுத்துப் போய் விற்கவும் செய்கிறான். சதாம் ஹ’சேனின் ராணுவத்தினரால் புதைக்கப்பட்டவை அந்தக் கன்னி வெடிகள்.குழந்தைகள் கன்னி வெடிகளை அகற்ற வேண்டியிருக்கிறது. கைகள் இல்லாத சிறுவர்கள் வாயினால் கன்னிவெடிகளை திறக்க வேண்டியிருக்கிறது.செயலிழக்கச் செய்ய வேண்டியிருக்கிறது. இவ்வகையில் கைகளை இழந்த ஒரு பையன் 'சட்டிலைட்' போலவே ' பையன்' என்ற பெயருடன் உலா வருகிறான். 'சாட்டிலைட்டுக்கு அக்ரின் என்ற பெண் மீது ஈர்ப்பு. அவளுக்கு சிறு சிறு உதவிகள் செய்து நற்பெயர் எடுக்க முயல்கிறான்.ஆனால் அவள் நிராகரித்தபடியே இருக்கிறாள் . அவளுடன் நடக்கத் தடுமாறும் குழந்தை உள்ளது. அக்குழந்தை ஈராக் ராணுவ வீரர்களின் பாலியல் வன்முறை காரணமாக அவள் பெற்றது. அக்குழந்தையை அவள் வெறுக்கிறாள். கல்லைக் கட்டி குழந்தையை குளத்தில் எரிகிறாள். மண்ணெண்ணையை ஊற்றி மூச்சு திணறச் செய்கிறாள். இறுதியில் தற்கொலை செய்து கொள்கிறாகவும் இருக்கிறாள். டிஸ்
ஆண்டெனா, 'சாட்டலைட்' இவர்கள் அமெரிக்கப் போரை அறிவிக்கிறார்கள்.ஊர் பெரியவர்கள் அமெரிக்கர்களுக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார்கள். குர்தீஸ் இன மக்கள் சதாம்ஹ’சேனை எதிர்த்துப் போரிட்டபோது அமெரிக்கா ஆதரவு அளித்திருக்கிறது. அமெரிக்கர்களின் வருகை ஆறுதாலாகக் கணிக்கப்படுகிறது. அமெரிக்கர்கள் அகதி முகாமில் நுழைழந்து முன்னேறுகிறார்கள். குழந்தையை மீட்கும் முயற்சியில் கால்களை இழந்த 'சாட்டிலைட்' வலியால் அரர்றிக் கொண்டிருக்கிறான். ஆருடம் சொல்கிற 'பையனின்' கைகள் இல்லாத உடம்பின் மீது குழந்தை பலமாக இறுக்கிக் கொள்கிறது. கன்னி வெடிகளை வாயின் மூலம் அகற்றி பணம் சம்பாதிக்க வேண்டியிருக்கிறது. சதாமின் ஆட்சியின் வன்முறைகளிலிருந்து தப்பும் கனவுகளில் பெரியவர்கள் மூழ்குகிறார்கள் அமெரிக்கர்கள் கதாநாயகர்களாக்கப்படவில்லையென்றாலும் சதாமிற்கு முன் ஆறுதல் தருகிறவர்களாக இருக்கிறார்கள்.சதாம் சிலை உடைபடுகிறது.ஒரு பையன் தன்னிடமிருந்த கன்னி வெடிகளை விற்று உடைந்த சதாம் உசேனின் சிலையிலிருந்த கையை வாங்கி வருகிறான். கைகள் இல்லாத பையன் சொல்கிறான்: " 275 நாட்களுக்குப் பிறகு நிலமை மாறும்.'. கன்னி வெடிப்பில் ஊனமுற்ற 'சாடிலைட்' அமெரிக்க ராணுவத்தினர் முகாமைக் கடந்து போவதைக்காணச் சகிக்காதவன் போல் முகத்தைத் திருப்பிக் கொள்கிறான்.
குர்தீஸ் குழந்தைகளின் அவலம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. ஈராக் ஆட்சி அதிகாரத்தில் குர்தீஸ் இனத்தவர் சில முக்கிய பதவிகளில் இருந்தாலும் அதிகாரமற்றவர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள்.நாடற்றவர்களாய் அகதி முகாம்களில்
இருக்க வேண்டியதுமாகிறது. துருக்கியர்கள், இராக்கியர்களுக்கெதிரான அவர்களின் போராட்டமும் தொடர்கிறது.
தங்களின் சொந்த நிலத்தில் இருந்து விரட்டப்பட்டு ஈரான் ஈராக் துருக்கி சிரியா ஆர்மினியா என் சிதறின் வாழ்க்கையைக் கைக்கொண்டிருப்பவர்கள் குர்தீஸ் மக்கள்.
சதாமிற்கு எதிராக கொமேனி ஈராக்கியகுர்துக்களுகு உதவியிருக்கிறார். கொமேனிக்கு எதிராக சாதம் ஈரானிய குர்துக்களுக்கு உதவியிருக்கிறார். துருக்கிய அரசை எதிர்த்த குர்தீஸ் போராளி ஒச்சலனுக்கு சிரியா இடமளித்து உதவி செய்தாலும் பின்னால் துர்ருக்கி, இஸ்ரேல், சிரியா ஒன்று சேர்ந்து கொண்ட போது ஒச்சலன் சிரியாவை விட்டு வெளியேற்றப்பட்டார்.அமெரிக்கா ஒச்சல்லனின் இயக்கத்தைத் தடை செய்து பயங்கரவாதி என முத்திரை குத்தி மரண தண்டனை விதித்தது. ஒச்சல்லனை விடுதலை செய்ய வேண்டும் என்றக் குரலை எழுப்பியவர்களில் முக்கியமானவர் இலக்கியத்திற்கான நோபல் பரிசைப் பெற்ற ஹெரால்ட் பிண்டர். குர்தீஸ் மக்களின் சித்திரவதி அனுபவங்களின் அடிப்படையில் அவர் இரண்டு நாடகங்களை உருவாக்கியிருக்கிறார்.
ஹெரால்டுபிண்டர் குறிப்பிடும் குர்தீஸ் மக்களின் அனுபவங்களை இப்படம் காட்டுகிறது எனலாம். அவர்களின் பிரச்சினைகளும், வாழ்வியலும் மாறாமல் -தீர்வை நோக்கிச் செல்லாமல்- ஒரு வகையில் அமெரிக்காவைப் பார்த்து ஆசுவாசம் கொள்ளும் காலகட்டத்திற்குள் தள்ளி விட்டதை இப்படங்கள் காட்டுகின்றன் அது மாயை என்பதையும், அமெரிக்காவின் வேடமும் 275 நாட்களுக்குப் பின்னால் நிலமை மாறும் என்று ஆருடம் சொல்லும் 'பையனை' நினைவுபடுத்துபவையும் கடந்த இரண்டு ஆண்டுகளில் அங்கு அரங்கேறிக் கொண்டிருக்கின்றன.
'Maroaned in Iraq" என்ற படத்தில் வரும் பல கதாபாத்திரங்கள் சதாமின் மீது கடுமையான விமர்சனங்களை முன் வைக்கிறவர்களாகவும் அவன் வாழ்வு நாசமாகப் போகட்டும் என்று சபிக்கிறவர்களாகவும் இருக்கிறார்கள் வளைகுடாபோருக்குப் பின்னதான காலகட்டத்தை இப்படம் கொண்டிருக்கிறது.ஈரான் குர்தீஸ்தானத்தில் மக்கள் போரினால் வீடு, உடமைகளை இழந்து அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மிர்சா என்ற பாடகன் தனது மனைவி ஒருத்தி சாகக் கிடக்கிறாள் என்பதை அறிந்து தனது இரண்டு வளர்ந்த மகன்களுடன் பயணமாகிறார். ( அவர்கள் இருவரும் மகன்களும் பாடகர்கள்தான். ஒருவனுக்கு இன்னொரு திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பது விருப்பம். இன்னொருவன் தன் மனைவிகள் =7 மனைவிகள்,
11 குழந்தைகள்=ஆண் குழந்தையைப் பெற்றுத் தராததால் இன்னொரு திருமண்ம் தேவை என்று நினைப்பவன்) ஈராக் குர்தீஸ்தான் பகுதிக்குச் செல்கிறார்கள். இடையில் கொள்ளைக்காரர்களால் இரட்டைச் சக்கர வாகனம், உடமை என பறி போகிறது. மிர்சாவின் மூத்த மனைவியைத் தேடுகிறார்கள். அவள் மிர்சாவை விட்டு வேறொருவனுடன் சென்று இருபத்தைந்து ஆண்டுகள் ஆகின்றன. ஈரானில் பெண்கள் பாடக் கூடாது என்ற நிர்பந்தம் அவளை அப்படி துரத்தியிருக்கிறது. பயணத்தி மூத்த மகன் தனக்குப் பிடித்தமான ஒரு பெண்ணை அகதி முகாமில் சந்திக்கிறான். ( அவளின் பாடல் அவனை உருக்குகிறது) இரண்டாவது மகன் அகதி முகாமில் இருக்கும் இரு ஆண் குழந்தைகளி தத்தெடுக்க விரும்புகிறான். மிர்சா தன் மூத்த மனைவியின் இருப்பிடத்தைக் கண்டறிகிறான். அவள் ரசாயன ஆயுதங்களின் பாதிப்பில் குரலை இழந்து செத்துப் போயிருப்பது தெரிகிறது. அவளின் குழந்தையை எடுத்துக் கொண்டு திரும்புகிறான் மிர்சா. சதாமின் போரால் லாபடடைகிற வியாபாரிகள் அவனைப் புகழ்வதும், பின்னால் கொள்ளைக்காரர்களால் அவற்றை இழக்கிற போது அவனை இகழ்வதும் , சாபமிடுவதும் இப்படத்தில் சாதாரணமாக இடம் பெறுகிறது. ரசாயன ஆயுத பாதிப்பால் குரல்களை இழந்த பாதிப்பில் அலறும் பெண்கள், ஒட்டு மொத்தமாக பிணங்களை புதைக்கையில் எழும் பெண்களின் ஓலங்கள் சதாமிற்கு எதிரான சாட்சியங்களாக அமைந்துள்ளன.
ஒரு புறம் நீதிமன்றத்தில் அமெரிக்காவை எதிர்த்து சதாம் எழுப்பிய கேள்விகளும் இன்னொரு புறம் அவனின் வன்முறைக் கொலைகளும் , அமெரிக்காவை வெளியேறச் சொல்லி நடக்கும் போராட்ட வன்முறைகளும் அதனை ஒட்டிய பதில்களும் என் இப்படங்களின் வெவ்வேறு பரிமாணங்கள் அமைந்துள்ளன. சதாமிற்கு தூக்கு நிறைவேற்றப்பட்ட சூழலில் குர்தீஸ் இன மக்களை கொன்ற குற்றத்திற்காக இப்படங்கள் அவருக்கு எதிரான சாட்சிப் பதிவுகளாக அமைந்துள்ளன.
சுப்ரபாரதிமணியன்
புதிய தொழிலாளி புலம்பெயர்வு வாழ்க்கை
சுப்ரபாரதிமணியன்
===================
உலகமயமாக்கல் மரபு ரீதியானத் தொழில்களை முடக்கி விட்டது. விவசாயம், கைத்தொழில்கள் போன்றவற்றில் வேலை செய்து வந்த தொழிலாளர்கள் தங்களின் இருப்பிடங்களை விட்டு விட்டு தொழில் தேடி நகரங்களுக்கு இடம் பெயர்வது சாதாரணமாகிவிட்டது. தொழிற்சாலைகளை மையங்களாகக் கொண்ட நகரங்களில்
புலம் பெயர்ந்து வரும் தொழிலாளர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகரித்து வருகிறது.
நகரங்களில் பெரும் முதலீட்டாளர்களும் பன்னாட்டு நிறுவனங்களும் உலகை சிறு கிராமமாக்கி வெவ்வேறு வகையான தொழில்களில் பெரும்பாலும் லாபத்தையே முதன்மை நோக்கமாகக் கொண்டு முதலீடுகளைச் செய்கிறார்கள்.
புலம் பெயர்ந்து வரும் தொழிலாளர்கள் தங்களைத் தொழிலாளர்கள் என்று உணர்வதற்கான் சந்தர்ப்பங்கள் வெகு குறைவாகவே நேர்கின்றன. விவசாயம் மற்றும் மரபு ரீதியான தொழில்களில் தங்களை கிராமங்களிலும் பிற நகரமல்லாத பகுதிகளிலும் ஈடுபடுத்திக் கொண்டவர்கள் பெரும்பாலும் தங்களை தொழிலாளர்களாக எண்ணிக் கொள்வதில்லை
தங்களின் சிறு நில உடமை மற்றும் சிறு முதலீட்டின் மூலமாக தொழிலைச் செய்கிறவர்களாகவும் அதன் மூலமான உற்பத்திப் பொருளை விநியோகிக்கிறவர்களாகவும்
விற்பனை செய்கிறவர்களாகவும் அதிலிருந்து வரும் லாபத்தை தங்கள் தினப்படி வாழ்க்கைக்கு
பயன்படுத்திக் கொண்டு வாழ்கிறவர்களாகயும் இருந்திருக்கிறார்கள். தங்களை தொழிலாளர்கள் என்று வகைப்படுத்திப் பார்ப்பதற்கான சந்தர்ப்பங்களை அவர்கள் ஏற்படுத்திக் கொண்டதில்லை.
அவர்கள் தங்களின் சொந்தப்பகுதியிலிருந்து நகரங்களின் தொழிற்சாலைகளுக்கு வேலை தேடி வந்து குடிபெயர்ந்த பின் தொழிற்சாலையின் பகாசூரப்பசிக்கு சுலபமாக இலக்காகிப் போகிறார்கள் இயந்திரத்தனமான வாழ்க்கைக்குள் அமிழ்ந்து போகிறார்கள்.
புலம் பெயர்ந்து வந்த தொழிலாளர்கள் என்பதாலேயே அவர்கள் சேரும் தொழிற்சாலைகளில் முன்பு பணிபுரிந்து வரும் தொழிலாளர்களின் கூலி, சம்பளம் போன்றவை நிராகரிக்கப்பட்டு பணிக்கு அமர்த்தப்படுகிறார்கள். கூலி பாதியாக நிர்ணயிக்கப்படலாம். அதுவே அவர்களின் தேவைக்குப் போதுமானதாகக் கருதப்படும் சூழ்நிலைக்கு ஒத்துப் போகிறார்கள்.தங்களின் கிராமப்பகுதி வேலைகளுக்குக் கிடைத்த சம்பளம். கூலியிலிருந்து 50% அது அதிகமாக இருப்பதே காரணம். ( ஆனால் தொழிற்சாலயின் குறைந்த பட்ச சம்பளத்தில் அது 50% தான் என்பதை அவர்கள் அறிவதில்லை) நிரந்தரத் தொழிலாளி, தொழிற்சட்டங்கள் தரும் உரிமைகள் , இ.எஸ்.அய்,
பிராவிடண்ட் பண்ட் மருத்துவ வசதி போன்ற அடிப்படையான வசதிகளை உரிமையாகப் பெறும் தொழிலாளி மத்தியில் தன்னைப் பொருத்திப் பார்ப்பதில்லை. தனக்குக் கிடைக்கிற வருமானம் சொந்த ஊரில் கிடைத்ததை விட அதிகமானது என்ற ஆறுதலே அவர்களுக்குப் பெரும் வரப்பிரசாதமாக அமைந்து விடுகிறது. இதன் பிறகு வேலை நேரம் என்பது இரண்டாம் பட்சமாகிவிடுகிறது. அது எட்டு மணி நேரத்திலிருந்து பத்து, பனிரெண்டு பணி என்று நீட்சி பெறும்போதோ, நிர்பந்திக்கப்படுகிற போதோ அதிக கவனம் பெறுவதில்லை. அல்லது வேலை நேரம் குறிப்பிடத்தக்கதாக இல்லாமல் குறிப்பிட்ட வேலையை பூர்த்தி செய்வது வரைக்குமானது என்ற வகையில் வடிவமைக்கப்ப்ட்டு தொழிற்சாலைகளுக்குள் இருக்க வைக்கப்படுகின்றனர்.
அதிகப்படியான் வேலைக்கு ஓவ்ர் டைம் அலவன்ஸ் போண்றவற்றைக் கோருதல் என்பது சற்று மிகையாகப் பட்டு விடுகிறது."யாசகமாய்" அப்படி ஓவர் டைம் அலவன்ஸ் வழங்கப்படுகிற போதும் சாதாரண சம்பளத்தை விட அது இரட்டை மடங்காக இருக்கவேண்டும் என்பது தவிர்க்கப்பட்டு சாதாரண சம்பளமே அதிகப்படியான நேரத்திற்குமென்றாகிவிடுகிறது,
தங்களின் சொந்த ஊரின் பாதிப்பிலிருந்து அவர்கள் மீள்வதற்கு அவசியம் இல்லாதபடியாகிறது. சொந்த ஊரில் வருடத்தில் பாதி நாட்கள் வேலை இருந்தாலே அதிகம். இங்கு வார ஞாயிறு விடுமுறையும் மறுக்கப்பட்டு வேலை நாட்கள் அதிகமாய் இருப்பது அவர்களின் உழைப்பிற்கு பூரண அங்கீகாரம் தருவதாய் எண்ணி விடுகிறார்கள்.
தங்களின் சொந்த ஊரில் விசாலமான வீடுகளில் வாழ்ந்து வந்ததையும் நல்ல காற்றோட்டமான சூழலும் மாசுபாடற்ற தண்ணீர் கிடைத்து வந்ததையும் மறந்து இரவு நேரத்தில் தூங்குவதற்கு மட்டும் ஒரு இடமாகி விடுகிறது புது இடம். மற்றும் வாடகை வீடு. குடி தண்ணீரோ, வீட்டு உபயோகிப்பிற்கான தண்ணீரோ காசு கொடுத்துதான் வாங்க வேண்டியிருக்கிறது. உடல்நலப்பாதுகாப்பு, சுகாதாரம் போன்றவை கேள்விக்குறிகளாகிவிடுகின்றன.
இந்நிலையில் அவர்களின் வாழ்க்கை வெகு இயந்திர நிலையிலாகி விடுகிறது. ஓய்வு நேரத்திற்கான அவசாசங்களையும் உருவாக்கிக் கொள்வதில்லை. வார விடுமுறைகளையும் தெய்வ நம்பிக்கை , ஜாதிய ஈடுபாடு மற்றும் முறையற்ற பொழுதுபோக்கால் கழிக்கிறார்கள்.
இவர்கள் தொழிலாளர்கள், தொழிலாளர்களுக்கான சட்டரீதியான உரிமைகளைப் பெற்றவர்கள் என்று உணர்வதற்கான சந்தர்ப்பங்களிஅ அவர்கள் உருவாக்கிக் கொள்வதில்லை. தொழிற்சங்க இயக்கங்களின் தேக்கநிலை என்பது பல ஆண்டுகளாக உள்ளது. புலம் பெயர்ந்துவந்தத் தொழிலாளர்களை தொழிற்சங்கத்தினர் சந்திப்பது என்பது அபூர்வமானதாக அமைகிறது, தொழிற்சாலைசூழல்கள் அதற்குத் தடையாக இருக்கின்றன. அவர்களின் வசிப்பிடங்களுக்குச் சென்று தொழிலாளர்களை ஓய்வு நேரத்தில் சந்திப்பது அபூர்வமாகிவடுகிறது. இயலாததாகவும் உள்ளது. அப்படி அவர்களை சந்தித்து உரையாட முற்பட்டாலும் சாதகமான விளைவுகள் இருப்பதில்லை.
தங்களைத் தொழிலாளிகள் என்று உணர்கிற சந்தர்ப்பங்களை அவர்கள் ஏற்படுத்திக் கொள்வதில்லை. அதிகப் படியான வேலை நேரங்களுக்கு வேலை செய்வதற்கான முறையான உரிமையைக் கோராமல் , இருக்கும் உரிமைகளைப் பற்றி எடுத்துரைக்கும் போது எங்களுக்கு வேலை கிடைப்பதே பெரிய வரம் என்பதாய் சொல்லிக் கொள்கிறார்கள். வார விடுமுறை நாட்கள் மற்றும் நீண்ட இரவு வேலைகள உடல்நலம் பொருட்டு தவிர்க்கவேண்டும் என்பதற்கு பதிலாக அவ்வாறு உழைத்தால்தான் குடும்ப நிலைகளைச் சமாளிக்கிற அளவு வருமானத்தை ஈட்ட முடியும் என்பதால் இதெல்லாம் அவர்களுக்கு உறுத்தலாக அமைவதில்லை. வெகு சாதாரணமாகவே எடுத்துக் கொள்கிறார்கள்.
தெழிற்சங்கங்கள் அவர்களின் வளர்ச்சிக்கும் இருப்பிற்கும் தங்களைப் பயன்படுத்திக் கொள்வதாகவே எண்ணுகிறார்கள். தங்களுக்குத் தேவையில்லாதவர்கள் தங்களின் தினப்படி வாழ்க்கையில் குறுக்கிடுவது போன்ற பிரமைகளை உருவாக்கிக் கொள்கிறார்கள்.தொழிற்சங்கத்தில் உறுப்பினராகச் சேர்வது தேவையற்றது என்பதாய் நிச்சயித்துக் கொள்கிறார்கள்.. தங்களின் வேலை பாதுகாப்பிற்கு குந்தகமாய் அமைந்து விடும் என எண்ணுகிறார்கள்.
தொழிற்சங்கங்களில் சேருவதன் மூலம் அதிகப்படியான் நேர உழைப்பு, குறைந்த கூலி இவற்றைத் தவித்து விட்டு முறையான அதிக சம்பளம் , தொழிலாளர்கள் உரிமைகள் , வேலை பாதுகாப்பு போன்றவை கிடைக்கும் என்பதை உணராமலே காலத்தைக் கழிக்கிறார்கள்.
வேலை நீக்கம், கூலி பாக்கி, தண்டனை என்று வருகிற போதே தொழிற்சங்கத்தினரை அவர்கள் அணுகுகிறார்கள். அப்போதுதான் தொழிற்சங்கத்தினர் அவர்களுகு தொழிற்சங்க உரிமைகள எடுத்துச் சொல்ல வாய்ப்பு அமைகிறது. கட்டாயத்தால் தொழிற்சங்கத்தில் சேர்கிறார்கள்.தங்களின் பிரச்சனைகள் தற்க்காலிகமாக தீர்ந்த பின்பு நிர்ப்பந்தங்கள் வருமானால் சந்தா செலுத்துவது மட்டும் அவர்களின் கடமையாகிறது. இவ்வகையான புதிய தொழிலாளர்கள் மிகப்பெருமளவில் வளர்ந்து வருகிறார்கள்.
பெரும் நகரங்களிலும் பெரும் தொழிற்சாலைகளிலும் இவ்வகை புதிய தொழிலாளர்கள் வளர்ந்து பெருகுகிற " முறை சாராத தொழிலாளர்களின் "கடலில்"
சங்கமித்திருக்கிறார்கள்.
அங்கீகரிக்கப்பட்ட தொழில் அமைப்புகள், அங்கீகரிக்கப்பட்ட அந்நிய செலவாணியைக் குவித்துக் கொண்டிருக்கும் தொழில்களின் மத்தியில் தொழிலாளர்கள் மட்டும் அங்கீகரிக்கப்படாதவர்களாக, முறை சாராத தொழிலாளர்களாக தள்ளப்படுவது தற்செயலாக நிகழ்ந்து வருவதல்ல. உலக மயமாக்கல் நிகழ்த்தி வரும் மாயாஜாலங்களில் ஒன்றாக சாதாரணமாக இது நிகழ்ந்து கொண்டிருக்கிறது.இது தொழிற்சங்கத்தினரை பலவீனமாக்கி சிதறுண்டு போகச் செய்து வருகின்றது. இந்தத் தேக்க நிலையை உடைத்தெரிவது தொழிலாளர்கள் தங்களைத் தொழிலாளிகள் என்று உணரச் செய்வதற்காக உபாயமாக இருக்கும். கொத்தடிமைகளாய் தொழிலாளர்கள் நீடிக்கிற அவலத்தை சிதறடிப்பதாக அமையும்.அதற்காக தொழிற்சங்கத்தினரும், அரசியல் கட்சிகளும் அக்கறை எடுத்துக் கொள்வது சரித்திர நிர்பந்தமாகும்
பசோலினி : கலையும், விளையாட்டும்
Thursday June 7, 2007
சுப்ரபாரதிமணியன்
=================
வீ£தியில் நடந்து போகிறவர்களுடன் பேச்சு கொடுக்கிறான். வாகனங்களின் தாறுமாறான இயக்கமும் இரைச்சலும் அபரிமிதமாக இருக்கிறது. அலட்சியமும், இறுக்கத்திலிருந்து தளர்ந்த மனநிலையிலுமாக அவன் முகம். போரும் குண்டுகளின் பொழிவும் இடைக்காட்சிகளாகி துணுக்குறச் செய்கிறது. கடவுளின் குரல் அவனை அழைக்கிறது. இளைஞன் அதை அலட்சியம் செய்தபடி நடக்கிறான். சிவப்பு காகிதப் பூவை கையில் ஏந்தியபடி தெருக்களில் அலைகிறான். கடவுளின் குரல் உட்சபட்ச்மாய் அலலைக்கழிக்கிறது. வெகுளித்தனம் பாவசித்தமானது என்கிறது கடவளின் குரல். அவற்றையெல்லாம் சபிக்க வேண்டும் என்கிறது. அநீதிகளுக்கும் போரின் வன்முறைகளுக்கும் மத்தியில் மகிழச்சியாக நடமாடிக் கொண்டிருப்பவர்கள் அழிந்து விட வேண்டும் என்கிறது. வெளுத்த நீல வானத்தைக் காட்டும் காட்சியினூடே கைகளை விரித்தபடி அவனின் சவம் கிடக்கிறது. காகிதப்பூ அவன் அருகில்.
பசோலினியின் குறும்படங்களில் ஒன்று இது. இதில் வரும் கடவுளின் குரல் அவர் சார்ந்திருந்த கம்யூனிஸ்ட் கட்சியின் குரலை ஒத்திருக்கிறது, கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டவர் பசோலின.¢ அவரின் குரல் என்றைக்கும் எதேச்சாதிகாரத்திற்கும் ஒடுக்கப்பட்டவர்களின் அநீதி, பாசிசத்திற்கு எதிராகவே இருந்திருக்கிறது. அவர் கொலை செய்யப்படுவதற்கு ஒரு வாரம் முன்பு கூட அவர் எதேச்சாதிகாரம் , சிஜஏ ஆதிக்கம் , பொதுப்பண விரயம், வன்முறையை ஊக்குவித்தல், எல்லா சிந்தனைத்தளங்களும் வெளியேற்றப்பட்ட அறநெறி குறித்து தன் தீர்க்கமான கருத்துக்களை முன் வைத்தவர். பாலியல் துன்புறுத்தல் என்ற வகையில் பதினொரு வயது பையன் ஒருவன் பசோலினி மீது குற்றம் சாட்டியிருந்தான். அதனால் பசோலினி அடித்துத் துன்புறுத்தப்பட்டு எரியூட்டப்பட்டார்.
எழுபதுகளில் இத்தாலியில் நிலவிய அதிகாரத்துவம் படைப்பாளிகளை மிகவும் பாதித்திருந்தது. முதல் நான்கு ஆண்டுகளில் மூன்று ராணுவ ஆட்சிக்கவிழ்ப்புகள். மிகச் சிதைந்த பொருளாதார நிலை.எங்கும் வன்முறை. பசோலினீயின் எழுத்தும் படைப்பும் இதற்கு இதற்கு எதிராக இருந்ததே அவரின் கொலையின் பின் காரணங்களில் ஒன்றாக இருக்கலாம்.
இருபத்தோராம் வயதிலான அவரின் எழுத்துக்களிலிருந்து ஓரிநனப் பாலுணர்வு சம்பந்தமான அவரின் ஈடுபாட்டை உணர்ந்து கொள்ள முடிகிறது. அந்த வயது பாலியல் உணர்வின் சந்தோச காலம் என்கிறார்.ஓரினப் பாலுணர்வு அவரை அலைக்கழித்திருக்கிறது. உடம்பின் தேவை மற்றும் பாலியல் பிரச்சினைகள் குறித்து அவற்றின் முக்கியத்துவத்தை பல வகைகளில் வெளிப்படுத்தியிருக்கிறார். இது குறித்து சொல்லாடல்களும் விவாதத்திற்கும் மார்சியத்தின் போதாமையை வெளிப்படுத்தியிருக்கிறார். மனித நேயம் கத்தோலிக்கம், மார்க்சியம், உளவியல் சிந்தனை மற்றும் ஓரினப் பாலுணர்வு வெவ்வேறு வகைப் பழக்கங்களாய் மற்றும் படிமங்களாய் அவரின் படங்களில் நிறைந்திருக்கிறது. பாலியல் பிரச்சினைகளும்,
பாலியல் தொழிலாளர்களும் அவ்வகையில் அவர் படங்களை ஆக்கிரமித்திருக்கிறார்கள். கத்தோலிக்கத்தினூடே மார்க்சியத்தின் தேவையைப் பல வகைகளில் உணர்ந்திருக்கிறார். ஒடுக்கப்பட்டவர்களைப் பற்றி சிந்திக்க மார்க்சியம் அவருக்குப் பெரிதும் உதவியிருப்பதும் கலைஞர்களும் மற்றும் எழுத்தாளர்களின் இருப்பும், நியாயமும், பணியும் மார்க்சியத்தால் வழி நடத்தப்படுவதாகவே பெரிதும் நம்பினார். மார்க்சியத்தைத் தவிர கிறிஸ்துவும், பிராய்டும் அவரின் பெரும் ஆதர்சங்களாக இருந்திருக்கிறார்கள். பைபளின் வெவ்வேறு வகையான கதாபாத்திரங்கள் விமர்சனரீதியிலும் விவரணங்களாகவும் பல படங்களில் பதிவு செய்திருக்கிறார். கிறிஸ்துவ நிறுவனங்களை தம் படைப்புகளில் கேவலமாக சித்திகரித்த
குற்றச்சாட்டிற்காக கைதாகியும் இருக்கிறார்.
உலகின் பேரிலக்கியப் படைப்புகளில் ஒன்று ஈடிபஸ் மன்னன். சிக்மண்டு பிராய்டு போன்றவர்களின் தீவிர பரிசிலனைக்குட்பட்டது. புராதன கிரேக்க மொழிகளில் சோபாக்ளிஸ் எழுதிய இந்த நாடக் வடிவத்தை பசோலினி தன் வரலாற்றுப் படம்மாக்கியிருக்கிறார். ஒரு வகையான விஞ்ஞான விளக்கத்தை பசோலினியின் ஒற்றை பாலுணர்வு பிரச்சனைக்கு இக்கதை அளிப்பதாய் நம்பியிருக்கிறார். ஒடிபசிற்கும் அவன் தாயிற்குமான அன்பை மீறி ஒடிபசின் பாலைவன அலைவுறுதல் படத்தின் மையமாகியிருக்கிறது.
முதல் பாகம் இத்தாலிய நகரமொன்றின் ஒரு ராணுவ அதிகாரி , அவன் குழந்தை, மனைவி என மையமாகிறது. குழந்தை மீதான சிறு வெறுப்பில் குழந்தை அலைக்கழிக்கப்பட்டு தனிமைப்படுத்தப் படுகிறது. இதிலிருந்து சோபாக்ளியின் நாடகத்திற்கு தாவுகிறது. கடைசிப்பகுதி மீண்டும் நிகழ்காலத்திற்கு வருகிறது. ஒடிபஸ் புல்லாங்குழல் வாசித்தவறு கண்கள் குருடான நிலையில் ஒரு மாதா கோவிலில், ஒரு தொழிற்சாலைத்தெருவில் அலைகிறான். அவனின் அம்மா அவனை அடிக்கடி எடுத்துச் செல்லும் புல்வெளியில் திரிகிறான். இவற்றின் பிம்பங்களை அழிவுறுகிற கவி மனம், மார்க்சிய கவி மனம், அழிவுறும் நிலை என்ற வகையில் வகைப்படுத்திப் பார்க்கிறார் பசோலினி.
அறுபதுகளில் இந்தியாவிற்கு வந்த பசோலினி இந்தியா பற்றின தனது பதிவுகளை புத்தகமாக்கியிருக்கிறார். அதுவே ஒரு படமாகவும் விரிகிறது. இந்திய சாமியார்கள், எழுத்தாளர்கள் , பழைய மகாராஜாக்களின் குடும்பத்தினர் என்று பலரின் பேட்டிகளாய்த் தொடர்கிறது. இந்திய சமூக் நிலைகள், வறுமை , மதம், உழைக்கம் வர்க்கம் என்று அவர் மனம் துணுக்கிடுகிறது. ஒரு வகை அவநம்பிக்கைவாதியாக அவர் இதில் வெளிப்படாவிட்டாலும் இந்தியாவின் சோகங்களால் அவர் ஈர்க்கப்பட்டிருப்பதும்
விரவும் பிம்பங்களால் தெளிவடைகிறது. எரியூட்டப்படும் ஒரு பிணத்தைக் காட்டியபடி படம் முடிவடைகிறது.
பின்னணியில் உடம்பை உலுக்கும் புல்லாங்குழல் இசை. பசோலினியின் பின்னணிக்குரல் அலைந்து தேய்வுறுகிறது.
"இந்தியாவிற்கு வந்து போகும் ஒரு மேற்கத்திய உலகைச் சார்ந்தவன் ( எல்லாம் உள்ளவனானவன் ) எதையும் தருவதில்லை.ஆனால் இந்தியா ( எதுவுமில்லாதது ) எல்லாவற்றையும் தருகிறது."
சுப்ரபாரதிமணியன்
சின்ன வீடு
==== ===============
கோடை காலத்தில் நமது பயணங்கள் தறுமாறாகத்தான் அமைந்து விடுகின்றன். நகர நெரிசல், பெட்ரோல் புகை மூட்டம் இவற்றிலிருந்துதப்பிப்பதற்காக் கோடை வாசஸ்தலங்களை நோக்கி பயணிப்பதும் சாதரணமாகி விட்டது. வார விடுமுறையை வீட்டை விட்டு வெளியில்சென்று கழிப்பது என்ற மேற்கத்திய வாழ்க்கைமுறையின் ஒரு அம்சம் நம்க்குள் விடுமுறை தினங்களில் புனித ஸ்தலங்கள், கெடா வெட்டுகள் என்று கழிகின்றன. இந்த பயண அலைச்சலின் மையமாக இருப்பது நகர நெரிசலைத்தவிர்ப்பது, இய்ற்கையை அண்டிப் போவது என்றாகிறது.
அறிவியல் தந்த வசதிகளை தவிர்த்து விட்டு இயற்கையோடு இணைந்த வாழ்க்கைக்கு ஏங்குவதும் அதனோடு இயைந்து வாழப்ப்ழகுவதும்அடி ஆசை என்றாகி விட்டது. அதை பிரதிபலிக்கிற பிலிப்பைன்ஸ் , சப்பான் இணை தயாரிப்பான் படம் சின்ன வீடு .இயற்கை வேளாண்மைக்கு சப்பான் போன்ற நாடுகள் திரும்பிக்கொண்டிருக்கிற முயற்சிகளில் பூக்கோகாவின் ஒற்றை வைக்கோல் புரட்சி போன்ற நூல்களின் வழிகாட்டுதல்கள் முக்கியமாக இருக்கின்றன.
ஆதிவாசி பழங்குடி குடும்பங்களில் இருந்து படித்து நகர வாழ்க்கையைப் பார்த்தவர்களுக்கு ஒரு நிலையில் காடும், மரங்களும் நிதானமும் மீறி வேறு வாழ்க்கை தேவைப்படுகிறது. அந்த வகையான ஆதிவாசிகளின் குடும்பத்தலைவன் வெளிநாடு போகிற ஆசையில் அலைகிறான்.நகர விடுதிகளில் சாதாரண வேலை செய்ய வேண்டியக் கட்டாயம். அதன் மூலம் வெளி நாட்டு வேலைகளுக்கு பணம் சேர்ப்பது, விடுதிகளின் தாதா கும்பல்களின் ஆக்கிரமிப்பு, வெளிநாட்டிற்குக் கூட்டிச் செல்வதாகப் பணம் பிடுங்குபவன்,வேறு நகரத்தில் விட்டு விட்டுச் செல்வதும் சதாரணமாகிறது.அவனின் மனைவி நகரத்தில் சாதாரண வேலை செய்து சம்பாதிக்க வேண்டியிருக்கிறது. கணவனின் வெளிநாட்டு சம்பாத்தியக் கனவில் அவளுக்குப் பங்குண்டு.
ஆனால் அவர்களின் மூன்றுக் குழந்தைகளும் மலைப்பிரதேசம் ஒன்றில் முதிய உறவினர் வீட்டில் இருக்கிறார்கள். பெற்றோரை எதிர்பார்த்து ஏங்கித் தவிக்கிறார்கள். அந்த மலைப்பிரதேசம் மின்சாரமோ, தேவாலயமோ, பாதை வசதிகளோ இல்லாதது. இயற்கை உரங்கள் பயிர் வளர்க்கதபோதுமானதாக இருக்கிறது. காய்கறிகளும், கனிகளும், கீரைகளும் சதாரண அரிசி போன்ற பொருட்கள் விளைகிற இடமாகவும் இருக்கிறது.
அந்த வாழ்க்கை நகர வாழ்க்கையின் சிக்கல்களிலிருந்து விடுபட்டு வந்து வாழும் சிலருக்கு உவப்பானதாக இருக்கிறது. ஒட்டு விதைகள் பற்றிபிரசாரம் செய்கிறவர்களை மலைப்பிரதேச மக்கள் நிராகரிக்கிறார்கள். மினி செனரெட்டர் போன்றவற்றுடன் வந்து மின்சாரத்தின் பயன் பற்றியும், தொலைக்காட்சி, மிக்ஸி உட்பட் மின்சாதனப் பொருட்களுடனும் வந்து அதன் உபயோகம் பற்றி உபதேசிப்பவன் தேவையில்லாததவனகிறான்.மலரும் பூக்களும், தூரத்து காட்சிகளும், சலசலக்கும் நீரோடைகளும், உணவிற்கான தங்கள் முயற்சிகளும் அங்கு வாழ்பவர்களுக்கு இயல்பாகவேப்படுகிறது
மூன்றுக்குழந்தைகளும் தங்கள் முயற்சிகளை முதியவர்களோடு தினசரி வேலைகளில் உதவுவது மட்டுமல்லது, கீழ்ப்பகுதிகளுக்குச் சென்று சிறு சிறு பொருட்களை விற்பது, தேவாலயங்களில் பூசை பொருட்களை விற்பது என்றாகிறது. பெற்றோர்களின் வீடு திரும்பலுக்காக ஏங்குகிறார்கள்.நகரத்தில் வசிக்கும் பெற்றோர் மலைப்பிரதேசத்திற்கு வந்தாலும் மீண்டும் நகரக்கனவுகளில் இருக்கிறார்கள். தனிமையை இரண்டாம் பட்சமாக்கி கணவன் இம்முறையாவது வெளிநாடுசெல்லும் கனவை நிறைவேற்றிக் கொள்வது என்று கணவனுக்கும் அவரவர் பாதைகள் நீள்கின்றன். குழந்தைகள் முதியவர்களோடு மலைப்பிரதேச வாழ்க்கைகு தங்களைப் பொருத்திக் கொள்கிறார்கள். .
நகர வாழ்க்கையின் குரூரங்களும், மலைப்பிரதேச இயற்கையோடு இணைந்த வாழ்க்கையும் மாறி மாறி பிம்பங்களாகின்றன்.
இயற்கையோடு வாழ்தல் என்பது பற்றினத் தீர்மானங்களாய் இந்த பிம்பங்கள் அழுத்தமாகப் பதிகின்றன. படம் இந்த விடங்களை சொல்லும் நிதானமும், மிகையற்ற் சாதாரண் பிரேம்களும் இப்படத்திற்கு இன்னும் வலு சேர்கின்றன். இயற்கைக்கு கடன் பட்டிருக்கிறவர்கள் மற்றும் நகர வாழ்க்கை, வெளிநாட்டு வேலை சொகுசு என்று பொருளாதர்ரச் சூழலுக்குக் கடன்பட்டிருப்பதை சுட்டுகிறது இப்பட.ம் .
அபோங்க் ( சின்னவீடு) ஆங்கிலம் மற்றும் பிலிப்பைன்சின் பிற மொழிகளில் தயாரிக்க்பட்டிருக்கிறது.
சுப்ரபாரதிமணியன்
Wednesday, May 14, 2008
Tuesday, May 13, 2008
முற்றுகை
பஸ்ஸின் புறப்பாட்டிற்கும் நிறுத்தலுக்கும் என்று பஸ்களில் கயிறுடனோ, டொயினுடனோ இணைக்கப்பட்ட ஒருவகை மணி டிரைவரின் தலைக்குமேல் தொங்கிகொண்டிருக்கும். ஆனால், கயிறோ, டொயினோ அறுந்த அல்லது சிதைந்த நிலையில் நகரத்து கண்டக்டர்கள் வரிசையாய் டிக்கெட்டுகளை பொருத்தின இரும்புக்கட்டையால் பஸ்ஸின் குறுக்குக் கம்பிகளையோ தலைக்குமேல் தெரியும் பஸ்ஸின் பரப்பையோ அடித்து மணிக்கு ஈடான ஒருவகை சப்தத்தை எழுப்புவார். நாராசமாக இருக்கும் தெருமுனைப் பம்பின் சப்தத்தை நினைவுபடுத்தும். உட்கார இடமின்றி நின்றிருப்பவர்கள் தலையை சற்று நிமிர்த்தி பார்த்தால் கொடிய அம்மை வந்தவனின் முகம்போல் இருக்கும். நகரினை பற்றின சரியான பிம்பத்தை தரவேண்டுமானால் அதை தான் ஒப்பிட்டு சொல்ல வேண்டும்.டீக்கடைகள் பெரும்பாலும் அரட்டைக்கான இடங்களாக மாறிவிட்டன. ஈரானிய டீயைக் குடித்து விட்டு அடுத்த டீ வேண்டுமா என்று சர்வர் கேட்கிறவரைக்கும் உட்கார்ந்து பேசுபவர்கள் அதிகமாகி விட்டார்கள். டீக்கடைகளுக்கு இணையாக எண்ணிக்கையில் மதுக்கடைகளிலும் உட்கார்ந்து பாட்டில்களைக் காலி செய்து விட்டு வரும் தட்டுகளுக்காகக் காத்திருக்கிற கூட்டம் எப்போதும் உண்டு.இரு இடங்களுக்கும் செல்ல வசதியற்றவர்கள் போல் பலர் வருகிற இடம் கிளாக் டவர் பூங்கா. மணிக்கூண்டில் இருக்கும் கடிகாரம் எல்லோரையும் உளவு பார்ப்பது போல வெறுமனே நின்றிருக்கும். அவ்வப்போது அக்கடிகாரத்தை ஓட்ட வைக்கிற ஏதாவது முயற்சி நடந்து கொண்டிருப்பதை அது காட்டும்.கிளாக் டவர் பூங்காவிற்கு அருகில் ஒரு மர அறுவை மில் இருந்தது. பூங்காவிற்கு வருபவர்களைத் தொந்தரவு செய்யக்கூடாது என்ற எண்ணத்தில் மரம் அறுக்கும் இயந்திரம் தன் ட்ரீர்ர்ர்ரிர் குரலை ரொம்பவும் அடக்கி வெளிப்படுத்தும். பூங்கா கும்பல்கள் எப்போதும் அமைதியாய் இருந்ததில்லை. ஏதாவது ரகளை என்று வந்து விடுகிறபோது கும்பல்களில் யாராவது மர அறுவை மில்லுக்குள் சென்று கைக்கு அகப்பட்டதை எடுத்து வந்து ஆயுதங்களாக்கிக் கொள்வர். வீச்சிற்கும், தாக்குதலுக்குமான நீளமான கட்டைகளை மர அறுவை மில் தொடர்ந்து தயாரித்துக் கொண்டிருந்தது. அதன் உரிமையாளர் அவர் வயதிற்கு இணையான, அவருடன் வேறு வியாபாரிகளைத் தொடங்கினவர்களுக்கு இணையாக பெரும் செல்வந்தர் ஆகாததற்கு காரணம், வெவ்வேறு கும்பல்கள் இப்படித் தங்களைக் காத்துக் கொள்ளவென்று உருவும் மரக்கட்டைகளின் எண்ணிக்கை வெகுவாக அதிகமாகி அவரின் பெரும் லாபத்தைக் குறைத்து விட்டதுதான்.ஏதாவது ரகளை என்று வந்து விடுகிறபோது கட்டைகளும், குச்சிகளும், அறுந்த செருப்புகளும், கற்களும் மர ஆலையிலிருந்து பூங்காவின் விஸ்தாரத்திற்கும் இறைந்து கிடக்கும். பூங்கா மர அறுவை மில்லின் விஸ்தாரத்திற்குள் அடைபட்டுப் போகிற நாள் வெகு தூரத்திலில்லை என்று தோன்றும்.கிளாக் டவர் பூங்காவில் பல மொழியினர் கூடுவதுண்டு என்றாலும் அந்தப் பகுதியிலுள்ள பெரும்பான்மை மக்களை நினைவுபடுத்துகிற மாதிரி 'அரவாடு பார்க்' என்றுகூட ஒரு வழக்கு இருந்தது. பலருக்கு சின்னச்சாமி பூங்கா என்ற பெயரும் நினைவிற்கு வரும். சின்னச்சாமி வழிபாட்டிற்குரிய தலைவனாக இருந்து கொண்டிருந்தார். அவரை பழிபடுபவர்களின் புகலிடமாகத்தான் அந்தப் பூங்காவும் இருந்தது.ஒரு படை வீரனுக்குரிய அம்சங்களோடு சின்னச்சாமி இருந்தார். அவரின் உடல்வலிமை அவருக்கு எந்தப் பட்டத்தையும் சூட்ட பொருத்தம் கொள்ளச் செய்யும். சின்னச்சாமியும் வெளியிலிருந்து வந்தவர்தான். நகரத்திற்கு வந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. நகரத்தோடு ஒன்றிப்போய்விட்டார் என்றாலும் அவரின் பிரதேச உணர்வு அவரைத் தனிமைப்படுத்திக் காட்டிக் கொணடிருந்தது. பல தருணங்களில் கிளாக் டவரின் உச்சியில் நிறுத்தி பெரிய மனிதனாக்கும் முயற்சிகள் நடந்திருக்கின்றன. ஆனால் அவர் எப்போதும் தான் சாதாரணமானவர் என்பதை நிலை நிறுத்திக் கொள்ள பூங்காவின் புல்தரையோடுதான் இருப்பார்.கிளாக் டவர் பூங்காவில் எப்போதும் 'அரவாடுகள்' நிறைந்திருப்பார்கள். கூலி வேலை செய்கிறவர்கள், படுக்க இடமின்றி பூங்கா கம்பியைப் பற்றிக்கொண்டு உள்ளே புகுந்து கொள்கிறவர்கள், வேலையற்றவர்கள் என்ற ரீதியில் இருப்பவர்கள் இந்த அரவாடுகள். கல்யாண சீசன்களில் கல்யாண வீட்டு வேலை செய்யவென்றே அந்தக்கூட்டம் காத்திருக்கும். அரசியல் கட்சியின் ஊர்வலங்கள், கூட்டங்களுக்கு ஆள் சேர்ப்பதற்காக வருகிறவர்களுக்கு அகப்படுவார்கள். சின்னச்சாமி காண்ட்ராக்ட் வேலை செய்து வந்தபோது ஆட்களுக்காக குளிரும் இதமுமான காலை நேரத்தில் வருவார்.அவர் பெரிய காண்ட்ராக்டராக பதினைந்து வருடங்களில் வளர்ந்து விட்டார் என்றாலும் பூங்காவோடு அவர் சம்பந்தம் இருந்து கொண்டே இருந்தது. அவருக்குத் தேவையான ஆட்களுக்காக அவரின் துணையாளர்கள் வந்து போவதுண்டு. எவ்வளவு வேலை இருந்தாலும் சின்னச்சாமியும் பூங்காவிற்கு வந்து சில நிமிடங்கள் இருந்து விட்டுப் போய்விடுவார். அப்போதெல்லாம் அவரை விக்ரகமாக்கி தொழுது கொண்டிருப்பர்.எனக்கு சின்னச்சாமி அறிமுகமானது ஒரு நடு இரவில், பகல் தூக்கம் காரணமாக இரவில் தூக்கம் பிடிபட ரொம்ப நேரமாகும் என்று பாரடைஸ் தியேட்டர் பக்கம் நடந்து கொண்டிருந்தேன். விரையும் வாகனங்களும், தெரு விளக்குகளும் துணையாக இருந்தன. நாலைந்து பேர் கொண்ட கும்பல் போஸ்டர் ஒன்றை மொய்த்துக் கொண்டிருப்பது போல பட்டது. கூர்ந்து கவனித்த போது போஸ்டர் ஒன்றை ஒட்டிக் கொண்டிருப்பது தெரிந்தது. அது தமிழ் போஸ்டராக இருக்கவே நான் நின்று பார்க்க ஆரம்பித்தேன். எதிரில் போஸ்டர் ஒட்டுவதை கண்காணித்துக் கொண்டிருந்தார் சின்னச்சாமி. நீளமான இருசக்கர வாகனத்தின் முன் நின்றபடி சிகரெட்டைப் புகைத்துக் கொண்டிருந்தார்.புகைச்சுருள் வட்டமாகி அவரின் முகத்தை அதற்குள் திணித்துக் கொண்டிருந்தது. அவரின் ஆகிருதி வளர்ந்த திடமான கிளாக் டவர் பூங்காவின் மரமொன்றை ஞாபகப்படுத்தியது. உள்ளூர் தமிழர்களின் பிரச்சினையொன்றைப் பற்றின போஸ்டர், எதையும் தாங்கிக் கொள்வார்கள் என்ற எச்சரிக்கை.சினிமா போஸ்டர்களுக்கு முன்னால் இந்த வகையான போஸ்டர்களின் ஆயுள் சிலமணி நேரந்தான். போஸ்டர்களைப் பார்த்தபடியே நின்றிருந்த என் முக வெளிப்பாட்டில் போஸ்டரின் அற்ப ஆயுள் பற்றின தொனி தெரிந்திருக்க வேண்டும். சின்னச்சாமி அருகில் வந்தார். “உன் முகத்திலே ஒரு அலட்சியம் தெரியுது. காரணம் என்னன்னு தெரிஞ்சுக்கலாமா”ஹிந்தியில் கேட்டார். நளினமான உருது கலந்திருந்தது. பண்டிதத்தனமான ஹிந்தி சற்று பிரமிப்பைத் தந்தது.“போஸ்டர் தமிழ்ல இருக்கு, தமிழ் படிப்பியா...”“தமிழ்தா நானும்”“செரி. போஸ்டர் பார்த்ததும் உம் மூஞ்சியில் ஒரு வகையான அலட்சியம் தெரியுது. இதெல்லாம் தேவையில்லங்கற அலட்சியமா, இவங்களெல்லா என்ன சாதிக்கப் போறாங்கற அலட்சியமா.“அப்படியெல்லாம் இல்லே. இன்னும் அரைமணி நேரத்திலெ இதுக்கு மேல ஏதாச்சும் போஸ்டர் ஒட்டிடுவாங்க. அத நெனச்சிட்டிருந்தேன்”“அவ்வளவுதானா... இதெல்லாம் பண்ணனும்கிறியா...”“ஆமா.. நிச்சயமா பண்ணணும்”“சபாஷ்”அவர் என் முதுகில் கை வைத்தார். குளிருக்கு வகைவகையான தடுப்புகளாய் உடையினை உடம்பில் சாத்தியிருந்தார். முரட்டுக் கைகளின் தன்மையை உணருவது போலிருந்தது. போஸ்டர் ஒட்டிக் கொண்டிருந்தவர்கள் முடித்த கையோடு எங்களைச் சுற்றி நின்று கொண்டார்கள்.“இதுக்கு மேல போஸ்டர் எதுவும் ஒட்டாமப் பாத்துக்கணும் இந்தப் பக்கம் இருக்கற நாலஞ்சு தியேட்டர்களுக்கு போன் பண்ணி சொல்லிடறேன். நாளைக்குப் பாரு. இது இப்பிடியே இருக்கும். நாலு நாளைக்கப்புறமும் இருக்கணும். அப்புறம் நீயெல்லா இதிலெ சேரணும். நாம ஒத்துமையா நம்மளெ நம்மளெ காப்பாத்தணும்...”அந்தப் போஸ்டர்களின் ஆயுளை நிச்சயித்துக் கொள்வதற்காக நாலைந்து நாட்கள் அந்தப் பக்கங்களில் கவனித்துத் திரிந்தேன். போஸ்டர்கள் அப்படியே இருந்தன. சின்னச்சாமியின் செல்வாக்கு பற்றி மனதில் திடமாய் எண்ணம் ஏற்பட்டது. சின்னச்சாமியை காரணமின்றிப் பார்ப்பதற்காகவே கிளாக் டவர் பூங்காவிற்கு நான் போவதுண்டு. ஆனால், அபூர்வமாய் தென்பட்டு மறைந்து விடுவார். எப்போதைக்குமான புன்னகையை முகத்தில் தேக்கிக் கொண்டிருப்பவர் போல் எல்லோரையும் பார்த்துச் சிரித்து விட்டுக் கிளம்பி விடுவார்.ஒரு தரம் “வேலைக்கு வர்றியா” என்று கேட்டார். இரவு தூக்கமின்றி களைத்துப் போயிருந்தேன். உடைகளின் அழுக்குத் தோற்றம் வேறு என்னைக் கசங்கலாகக் காண்பித்துக் கொண்டிருந்தது. கட்டிட வேலைக்குத்தான் கூப்பிடுகிறார். பக்கத்திலிருந்தவர் அதை மறுப்பதுபோல “படிச்ச பையன்” என்ற வார்த்தையை உதிர்த்தார். மன்னிப்புக் கேட்கும் தோரணையாக அவர் “ஓ” வென்றதை எடுத்துக்கொண்டேன்.“ரொம்ப நாளாத்தா பாத்துக்கிட்டிருக்கேன். ஏதாச்சும் பண்ண முடியுமான்னு பாக்கறேன்”.அவர் சொன்னது ஆறுதலாக இருந்தது. அவர் கிளம்பிப் போன பின்பு, சிலர் அண்ணாச்சி நிச்சயம் பண்ணுவார். அவர் கண்லே அப்பப்போ பட்டுகிட்டிரு... நேரில போயி பாரு... உதவி பண்ணுவாரு...” அவர் கண்களில பட்டுக்கொண்டிருந்தேன். நான் வாழ்க்கையில் விரித்துக்கொண்ட முதல் தலைவனாக சின்னச்சாமி ஆனார். அவர் செய்யும் உதவிகள், அவரின் பரோபகார குணம், நம்மவர்களுக்காக அவர் சிந்தின ரத்தம் என்பது பற்றின பிரஸ்தாபங்கள் இருந்துகொண்டே இருந்தன.கிளாக் டவர் பூங்கா ஆள் நடமாட்டம் இல்லாமல் போகிற காலங்கள் என்றால் அது நகரம் மதக்கலவரத்தில் சிக்கிக் கொள்ளும்போதும், அரசியல் தகராறுகள் பெரிதாகி தடைச்சட்டம் அமுலாகும் போதும், “நம்ம ஆளுகளை எந்த ஊர்ல, நாட்ல அடிச்சாலும் நாம சும்மா இருக்கக்கூடாது. எதிர்ப்பைக் காட்டாமெ இருந்தா நாம செத்ததுக்குச் சமானமாயிருக்கும். நாம உசிரோட இருககறதெ கொண்டாடிக் காட்ட வேண்டியதில்லே. இது மாதிரி சமயங்கள்ளதா காட்டணும்” என்பார் சின்னச்சாமி.அப்படி நிலைமை தொனிக்கிற போது, அவர் கிளாக் டவர் பூங்காவிற்கு வரத்தவற மாட்டார். “இந்தச் சமயத்திலெ நாம சிதறினதா காட்டக்கூடாது.” அவரைப் பார்த்தும் மெல்ல கும்பல் சேரும், அந்தக்கும்பலின் முழுமைக்குமான புன்னகையை அவர் முகம் தேக்கி வைத்திருக்கும்.போலீஸின் பலத்தகாவல் அம்முறை பூங்காவிலிருந்தது. யாரையும் உள்ளே விடாமல் துரத்திக் கொண்டிருந்தார்கள். ஆனால் சின்னச்சாமி மட்டும் காலையும், மாலையும் புல்லட்டில் வந்து சிகரெட் புகைத்தபடி நின்று கொண்டிருந்தார். யாரும் அவரை நெருங்க முடியவில்லை. அவர் பக்கம் வருகிறவர்களைத் தடுத்து போலீஸ் மிரட்டிக் கொண்டிருந்தது. அவரை அண்ட விடவில்லை.மூன்றாவது தினம் அவர், மிரட்டின போலீஸ்காரர்களை ஏதோ கேட்க அவரைக் கைதுசெய்து கொண்டு போனார்கள். மூன்று தினங்கள் சிறையிலிருந்தார். அதில் ஒரு நாள் இரவுதான் நகரின் ஒரு பகுதி கலவரப்பட்டது. குடிசைகள் தீயிடப்பட்டன. வீடுகளை நொறுக்கித் தள்ளி வீடுகளில் புகுந்து தாக்குதல் நதிநீர் தகராறு சம்பந்தமில்லாமல் நகரின் ஒரு பகுதியைச் சின்னா பின்னப்படுத்தி இருந்தது.சிறையிலிருந்து வெளிவந்த சின்னச்சாமி கிளாக் டவர் பூங்காவிற்கு வந்தார். வெகுநேரம் பூங்காவினுள் தனியே உடகார்ந்திருந்தார். பூங்கா முனையில் நின்றுகொண்டு புகைத்துக் கொண்டிருந்தார். யாரும் அவரை அணுக போலீஸ் விடவில்லை. அவர் எங்கு போய் நின்றாலும் அவரைச் சுற்றி வளைத்தார்கள். அவர் பார்வை ரொம்பதூரம் சொல்லாதபடி மறைத்துக் கொண்டார்கள். நோய்வாய்ப்பட்டவரின் முகச்சிதைவு போலாகிவிட்டது.தொடர்ந்து சில தினங்கள் சிகரெட்டைப் புகைத்தபடி தொடர்ந்து பூங்காவை சுற்றிச் சுற்றி நடக்க ஆரம்பித்தார். அவர் கால்கள் இலக்கின்றித் திரிந்து கொண்டிருந்தன. அவருக்குத் தேவை அவரின் புன்னகையை ஏற்றுக்கொள்ள குறைந்தது நாலைந்து பேர்களாவது கொண்ட சிறு கும்பல் என்று தோன்றியது.நகரம் சீக்கிரம் சீர்பட்டுவிட்டாலும் கூட பூங்கா போலீஸின் ஆக்கிரமிப்பிற்குட்பட்ட எல்லை என்பது போலவே இருந்தது. வாசலில் பொறியில் மாட்டித் தவிக்கிற ஒரு பிராணிபோல சின்னச்சாமி ஆகிப்போனார். சிக்கிராமத்திலிருந்த நண்பனின் அறையில் இரவு சினிமாவுற்குப் பிறகு தங்கிவிட்டு, அதிகாலையில் கிளம்பும்போது குளிர் உடம்பை இம்சித்துக் கொண்டிருந்தது. பனி ஆள்மாறாட்டம் செய்து காண்பித்துக் கொண்டிருந்தது. என்னை நெருங்கியவர் சின்னச்சாமி என்று கண்டு கொள்ளவே ரொம்ப நேரம் பிடித்தது. என்னைத்தாண்டி ஒரு பர்லாங் சென்றிருப்பார். முற்றின நோயாளியின் நடை எனவே சீக்கிரம் அவரருகில் சென்றுவிட்டேன்.எதிரிலிருந்த பனியை விலக்குவது போல் வாயிலிருந்து வந்த சிகரெட் புகையினை விலக்கினார். “நீயா”, “இந்த நேரத்திலெ எங்கியோபோயிட்டு இருக்கீங்க”. “ஆமா... செரி வரட்டுமா” அவர் துரிதமாகிவிட்டிருந்தார். பேரேட் கிரெளண்ட் ஓர எல்லையில் நுழைந்தார். அவர் பின்னால் நடக்க ஆரம்பித்தேன். அடர்ந்த பனியில் உருவம் மறைந்துவிட்டது. என் கால்கள் சின்னச்சாமியை நோக்கித்தான் சரியாகச் சென்று கொண்டிருக்கின்றன என்று நினைத்தேன். ஆனால் பனி, எல்லா உருவங்களையும் கல்லறையில் புதைத்த அழுகின பிணங்களைப் போலாக்கி இருந்தது.அந்த பங்களாவின் வேலி ஓரத்தில் சின்னச்சாமி நின்றார். வேலியின் ஓரத்துக் கல்தூண் போல் ரொம்ப நேரம் நின்று கொண்டிருப்பது போல் பட்டது. பங்களாவிலிருந்து வந்த அழுகைச் சப்தம் அவரை அங்கே நிற்க வைத்திருக்கலாம். புரோகிதர் போல தென்பட்டவரை சின்னச்சாமி நிறுத்தினார். அவரின் வெற்றுடம்பு குளிரில் அடிபட்ட பறவைபோல் நடுங்கிக் கொண்டிருந்தது. அல்லது சின்னச்சாமியை அறிந்துதான் அந்த நடுக்கமா என்ற கேள்வியும் எழுந்தது.சின்னவரோட கொழந்தை செத்துப்போச்சு” சொல்லின படி அவல் பனியில் மறைந்து போனார். சற்றுக் கூர்ந்து கவனித்தபோது அழுகை உரத்துத் தேய்ந்து கொண்டிருப்பது கேட்டது. திசை மாற்றிக்கொள்கிற நோக்கில் அவர் திரும்பிய போது நான் அவர் கண்ணில் பட்டேன்.“என்ன”“ஒண்ணுமில்லை...”“எம்பின்னாலியே வர்ரே...”“அப்பிடியில்லே...”“இந்த வூட்லே வுழுந்த சாவு இன்னொரு சாவை தள்ளி வெச்சிருச்சு”. அவரின் இடுப்பில் பருமனாய் ஏதோ துருத்திக் கொண்டிருந்தது. என் உடம்பு குளிரை முதலாக உணர்ந்தது போல நடுங்க ஆரம்பித்தது.“என்னை மூணு நாள் ஜெயிலுக்கு அனுப்பிச்சிட்டா நம்ம ஆளுகளெ பத்தி கேக்க யாருமில்லன்னு நெனச்சிட்டானுக போலிருக்கு...”அவர் சிறையில் இருந்த ஒரு நாளின்போது ராத்திரிக் கலவரம் பற்றி மனதில் வந்து போனது. இதையெல்லாம் தட்டிக் கேட்க சின்னச்சாமியால்தான் முடியும் எனிபது போல் கிளாக் டவர் பூங்கா பக்கம் ஓடிவந்து போலீசால் துரத்தப்பட்டவர்களை பார்த்திருந்தேன், மார்பில் அடித்துக்கொண்டு அவர்கள் அழுத அழுகை.“நம்ம ஆளுகளுக்குப் பரம எதிரியா இவன் இருந்துட்டே இருக்கான். ஒரு தரம் கத்தி முனையை ஈரம்பட வெச்சிட்டாப் போதும் அவனுக நம்ம ஆளுக மேலக்கையைத் தொடமாட்டாங்க.. அதுக்குத்தா...”“அதுக்கு நீங்களா....”“என் இடுப்புக் கத்தி ஈரமாகி ரொம்ப நாளாச்சு. யாராச்சும் இதை செஞ்சுதா ஆகணும்”அவரின் வலதுகையை நான் பற்றிக் கொண்டேன். அவரை ஏதேதோ துயரங்களிலிருந்து தடுப்பதற்காக அப்படி செய்தது போலிருந்தது.“இன்னிக்கு ஏதோ சாவு வுழுந்திருச்சு அவங்க வீட்லே. அது அவனுகளெ உசுப்பியிருக்கும். ஏனோ சந்தோஷமாத்தா இருக்கு, இது போதும் ஆனா அவனுக வூட்லே என் கத்தியாலே ஈரம் படறது ரொம்ப நாளாகாது...”அப்படி எதுவும் ஆகக்கூடாது என்று நினைத்தேன். பனியில் மறைந்து கொண்டிருந்த மனிதர்கள் ரத்தக்கறைபட்ட பிணங்களாய் நடமாடிக் கொண்டிருப்பது போல் தோன்றியது.
Monday, May 12, 2008
மீனாட்சி புரியுடன் சந்திப்பு
சுப்ரபாரதிமணியன்
தொடர்ந்த மொழிபெயர்ப்புப் பயணத்தில் 75 வயதை எட்டி விட்டார் திருமதி மீனாட்சிபுரி. உடம்பின் தள்ளாமையும் நினைவின் தப்பித்தலும் சாதாரணமாகி விட்டது. ஆனாலும் தனது அனுபவங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் என்பதில் அக்கறையும் கவனமும் கொண்டு செயல்பட்டு வருகிறார்.
திருநெல்வேலி மாவட்டம் நாங்குனேரி தாலூக்கா திருக்குறங்குடி சொந்த ஊர்.
சென்னையில் தேசிய பெண்கள் பள்ளியில் ஒன்றாவது பாரம் படித்திருக்கிறார். அதன் பின் தில்லி வாழ்க்கைதான். முத்தைய்யாபாகவதர் நெருங்கிய உறவினர் என்பதால் இசை குறித்த ஆர்வமும் தமிழ் சூழலின் தொடர்ந்த பரிச்சயமும் கொண்டிருந்திருக்கிறார்.
தில்லியின் 'THOUGHT ' பத்திரிக்கையில் முதல் ஆங்கில சிறுகதை வெளிவந்திருக்கிறது. தந்தையின் பத்திரிக்கை துறை அக்கறை மீனாட்சியை பாதித்து எழுத்தாளராக்கியிருக்கிறது.
'PAY ON THE FIRST ' என்ற முதல் நாவல் ஆங்கிலத்தில் அரசாங்க ஊழியர் ஒருவரை மையமாகக் கொண்டது. ' 'THOUGHT பத்திரிக்கையின் வார மலரினைத் தயாரிக்கும் பொறுப்பில் மொழிபெயர்ப்பு செய்ய ஆரம்பித்திருக்கிறார். புதுமைப்பித்தன் கதையை முதலில் முதலில் மொழிபெயர்த்திருக்கிறார். 1967-73 ஆண்டுகளில் 150 மொழிபெயர்ப்புப் படைப்புகள் வெளிவந்திருக்கின்றன. அதன் பின் ஜெர்மனியில் Voice of Germany வானொலியில் பணி. ஆங்கில மற்றும் ஹிந்திசெய்திகள் வாசிப்பதும், மொழிபெயர்ப்பு செய்வதும் பணியாகிறது.
' நான் செய்தி வாசிப்பது கதை வாசிப்பது போல இருப்பதாக வானொலி நேயர்கள் கருத்து தெரிவிப்பார்கள். ஆனால் அலுவலகத்தில் என் மேலதிகாரிகளுக்கு செய்தியை கதை போல சொல்வது பிடிக்காது. ஆலுவலகத்தில் கெட்ட பெயர்தான். '
20 ஆண்டுகள் ஜெர்மனியில் வாசம். முதல் மகள் வழிப் பேரனை கவனிக்கும் பொருட்டு தில்லி வந்திருக்கிறார். பின்னர் தொடர்ந்த மொழிபெயர்ப்புப் பணி. இவரின் படைப்புகள் நூலாக வெளி வந்தவை:
1. BAITHAK KI BILLI (SITTING ROOM CAT)
2. JAANE PEHCHANAE AJNABI ( KNOWN, UNKNOWN STRANGER)
3. DES KIKALW ( REFUGEES)
4. SAAT PHERE ADHURE ( SEVEN HALF ROUNDS THE FIRE )
5. TASHTARI MEIN TOOFAN ( STORM INA SAUCCER )
6. சுந்தரராமசாமியின் IMLI PURAN ( PULIA MAARATIN KADAI)
7. சுப்ரபாரதிமணியனின் RENG RENGEELI CHAADAR MAILI (CHAYATHIRAI)
8. COLOURFUL SWEETS TURNED DIRTY
9. பொன்னீலனின் ' KARISAL '
10. பூமணியின் ' VEKKAI '
11. அசோகமித்திரனின் PITHKEE MITRE ( ' APPAAVIN SINEKITHAR ')
12. GERMEN: THENALI RAMAN KATAIKAL
13. BRECT PLAYS IN HINDI
எழுபது ஆண்டுகளாய் இல்லாத குளிர் தில்லியை வாட்டிக்கொண்டிருந்த ஒரு நாள் காலையில் கதா திருவிழாவில் கலந்து கொள்ள சென்றிருந்த போது தோப்பில் முகமது மீரான் உடன் அவர் இல்லத்தில் சந்தித்தது:
கேள்வி: சிறு வயதிலேயே தில்லி வந்து விட்டிர்கள். தமிழ் பரிச்சயம் எப்படி தொடர்ந்தது ?
பதில்: ஆனந்தவிகடன், கல்கி போன்றப்பத்திரிக்கைகள் தொடர்ந்து வாசிக்கக் கிடைத்துக்கொண்டிருந்தன. கர்னாடக சங்கீதம் கற்கிற வாய்ப்பில் தமிழர்களுடனான தொடர்புகள் இருந்தன். மொழிபெயர்ப்பு அக்கறையில் புத்தகங்களை வாசித்துக்கொண்டும் இருந்தேன். புதுமைப்பித்தனை தொடர்ந்து வாசித்தேன். அவர் அன்றைக்கு நவீன எழுத்தாளராக இருந்தார். கல்கி மீது விருப்பம் எழவில்லை. இன்றைக்கும் வாசிக்கிற போது புதுமைப்பித்தன் நவீன எழுத்தாளர்தான்.
கே: ஜெர்மனியில் இருந்த போது என்னமாதிரியானப்படைப்புகளை மொழிபெயர்த்தீர்கள்.
ப: வானொலி நிகழ்ச்சிக்கானவைதான் அவை. இந்திய நாட்டுப்புறக்கதைகள் குறிப்பாய் தெனாலி ராமன் கதைகளை நிறைய மொழிபெயர்த்தேன். அவை இப்போதும் தொடர்ந்து ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கின்றன. குந்தர் க்ராசுடன் அடிக்கடி தொலைபேசியில் பேசுவேன். அவரின் சில படைப்புகளை மொழிபெயர்த்திருக்கிறேன். அவருடன் பரிச்சயம் உள்ள அளவுக்கு அவரின் படைப்புகளை மொழிபெயர்த்ததில்லை.
பிரக்க்டின் நாடகங்களை ஹிந்தியில் மொழிபெயர்த்திருக்கிறேன். ' நாக் கா பகிட்சா ' என்று. (Introduction to Hell ).
கே: உங்களுக்குப் பிடித்த மொழிபெயர்பாளர்கள் ...
ப: சுந்தரராமசாமி, தேவேந்திர சத்யார்த்தி, ராஜி நரசிம்மன், பாலசுப்ரமணியன், லட்சுமி கண்ணன், நிர்மல் வர்மா.. நிர்மல் வர்மா உயிரோடு இருந்த காலத்தில் அவரை கூட்டங்களில் சந்திக்கிற போதெல்லாம் அவருடன் சண்டைதான். அவரின் பொதுவுடமைக்கருத்துக்களோடு எனக்கு உடன்பாடு இருந்ததில்லை. அது சுவாரஸ்யமான சண்டையாக இருந்திருக்கிறது.
கே: எழுத்து, வானொலி பணி இதில் எது தங்களுக்குப் பிடித்தது ?
ப: இரண்டும் தான். வானொலியின் நிகழ்ச்சிகளுக்கு உடனடியாக எதிர் வினை இருக்கும். எழுத்திற்கு தாமதமாகும். எழுத்து போல் ஆசுவாசம் வேறெதுவும் இல்லை. மொழிபெயர்ப்பில் கிடைகும் திருப்தி வேறுவகையானது.
கே: பூமணியின் நாவல் போன்றவற்றை மொழிபெயர்க்கையில் இருந்த சிக்கல்கள் என்ன ?
ப: சு.ரா., பொன்னீலன், பூமணியை மொழிபெயர்ப்பது சிரமமாகத்தன் இருந்தது. நாட்டுவழக்கு வார்த்தைகளுக்கு பலரிடம் விளக்கம் பெற்றுதான் மொழிபெயர்தேன். உங்களின் சாயத்திரையை மொழிபெயர்த்தபோது அவ்வளவாக சிரமப்படவில்லை.தலித் எழுத்துக்கள் பிரச்சாரமாக இருக்கின்றன. பெண்ணியம் சார்ந்த எழுத்துக்களும் பெரும்பாலும் பிரச்சாரமாக இருக்கின்றன. பெண்கள் பெண்களுக்கு எதிராக செய்யும் கொடுமைகள்தான் அதிகம். இதில் பெண் எழுத்துக்கள் அதிகமாக ஆண்களைச் சாடுவதற்கு நியாயங்கள் குறைவுதான். அதனால் பெண்ணிய எழுத்துக்களில் எனக்கு அக்கறை இல்லாமல் போய்விட்டது. இலங்கையில் தேசிய இனப்பிரச்சினை தீவிர ஆன
பின்னால் ஜரோப்பிய நாடுகளுக்கு இலங்கைத்தமிழர்கள் அகதிகளாக வர ஆரம்பித்தனர். அவர்களின் கதைகளைக் கேட்டிருக்கிறேன். அதனாலேயே அவர்களின் படைப்புகளை வாசிக்கிற ஆர்வம் அதிகமிலாமல் போய் விட்டது. இப்போது புகலிட இலக்கியம் என்பது தீவிரமான விசயமாக வருவதாய் கேள்விப்படுகிறேன். புது வகை எழுத்தில் சாதீயம் ஆக்கிரமித்திருப்பது எனக்குப் பிடிக்கவில்லை.நவீன எழுத்தென்பது சாதீய எழுத்து என்றும் ஆகி விட்டது.
கெ: பெண்களின் பிரச்சனைகளை தாங்கள் புரிந்து கொள்ள முடியவில்லையா ?
ப: அவை சுவாரஸ்யமாகத்தான் இருக்கின்றன. ஆனால் பிரச்சாரத்தொனி உள்ளது அதிகமாய். மனித நேயத்திலும் உடன் படும் நடவடிக்கைகளிலும் அக்கறை வேண்டும் அது குறைந்து வருவதுதான் பிடிப்பதிலை. அது குறித்த ஆக்கபூர்வமானவற்றில் அக்கறை உண்டு. இந்தியில் கிருஸ்ண தோத்தி போன்றவர்களின் படைப்புகள் இவற்றிலிருந்து மாறுபடுபவை.
கே: தமிழில் உங்களுக்கு சுலபமகாக இருந்த மொழிபெயர்ப்பு எவை ?
ப்: உங்களின் சாயத்திரையை மொழிபெயர்க்க சுலபமாக இருந்தது. சாயத்தொழில், நெசவு இவற்றின் பின்னணியோடு வடகத்திய வாவசகர்கள் புரிந்து கொள்வதற்காக தலைப்பை கபீரின் கவிதை வரியாய் எடுத்தேன். கபீர் ஒரு நெசவாளி என்பதால்.அசோகமித்திரனை மொழிபெயர்ப்பது சுலபமானது. அவர் அடிப்படையில் சைவம் என்றாலும் அவரின் கதைகளில் நிறைய கொலைகள் இருக்கும். அசைவ அம்சங்கள் அவை. வன்முறையும் நிறைய. மதக்கலவரம் போன்றவற்றில். கலவரங்களையும் வன்முறையையும் நானும் நேரில் பார்த்திருக்கிறேன்.
இந்திய பாக்கிஸ்தான் பிரிவினையின் போது பார்லிமெண்ட் வீதியில் ஜந்தர் மந்திர் அருகில் குடியிருந்தோம். நிறைய உயிர்கள் பலியானதை கண்ணால் பார்த்திருந்தேன். குதிரை வண்டிக்காரன் ஒருவனை வெட்டிக் கொல்வதை கண்ணால் பார்த்திருக்கிறேன். கொடுமைதான்.இப்போதையக் கொடுமைகள் அதற்கு இணையானவை. ஜாதி பெயரால் நடக்கும் வன்முறைகள். ஜாதி பெயரால் இலக்கியங்கள் அருவருப்பாய்தான் இருக்கின்றன.
கே: தமிழ் சூழல் பிடித்திருக்கிறதா ?
ப: சண்டை, காக்கா பிடிப்பது எல்லாம் இங்கும் அதிகம். வட இந்திய சூழல் எனக்குப் பிடிக்காதுதான். இடது கை சாப்பாட்டுப் பழக்கம். இடது கையிலேயே எல்லாவற்றையும் செயவது. அது போல் இடதிலிருந்து எழுதுவது, ஒரு மொழி வேறு மொழியின் ஸ்கிரிப்டை பயன்படுத்துவது. உதாரணமாக பஞ்சாபிகள் உருது ஸ்கிரிப்டை பயன்படுத்துவது போல பல விசயங்கள் . தமிழுக்கு உள்ள சிறப்புகளை நிறைய சொல்லிக் கொண்டே போகலாம். தமிழ் மாதிரி மொழி வளம் வட இந்திய மொழிகளுக்கு இல்லை.
கே: அடுத்த உங்களின் மொழிபெயர்பு முயற்சி என்ன ?
ப : அய்ந்து வயதில் இருந்து எனது அனுபவங்களை ஞாபகப்படுத்தி முறைப்படுத்தி எழுதி வருகிறேன். நாவலாகத்தான். நெடுநாள் பிடிக்கும் அதை முடிக்க.
திரைவெளி
----------------------------------------------------------------------------
சத்தியானந்தன்
=============
திரைப்படம் பார்த்து விட்டு அந்தக் கதையை ஒருவர் சொல்ல மற்றொருவர் கேட்டு வியப்பது வகுப்பு வித்தியாசமற்று எல்லா இடங்களிலும் காணப்படுவது. அதை ஒரு வரிக் கதையாகச் சொல்லாமல் எந்த இடத்தில் பாட்டு வந்தது, சண்டை வந்தது இடைவேளை வந்தது என சஸ்பென்ஸ் குறையாமல் சொல்பவரையும் அவரது முகபாவங்களையும் கவனிக்க ரசனை மிகுந்ததாக இருக்கும். 1992லிருந்து 2006 வரை பதினைந்து வருடங்களாக பல்வேறு சிறு பத்திரிக்கைகளில் சுப்ரபாரதிமணியன் எழுதிய நாற்பது கட்டுரைகள், ஏறத்தாழ 108 படங்கள் பற்ரி 176 பக்கங்களில் வெளிவந்துள்ளன. விரிந்த பயணம், ஆழ்ந்த கவனம், ரசனையும், கடுமையான உழைப்பும் வாசகனுக்குக் கண்கூடாகின்றன.
கட்டுரைகளின் தொனி எத்தகையது. அசோகமித்திரன் கட்டுரைகள் தனது கோணத்திலிருந்து உரையாடுவது போல ஒரு நிகழ்ச்சி பற்றிய கருத்தை அல்லது விவரத்தை முன் வைப்பது போல கட்டமைக்கப்பட்டிருக்கும். வாசகனுக்குச் சென்றடைய வேண்டிய பல்வேறு விடயங்களை , பல்வேறு பரிமாணத்தில் நெய்து அளித்திருப்பார். அதை உன்னிப்பாக வாசிக்கும் போதே உள்வாங்க இயலும். இந்நூலின் கட்டுரைகளின் பெரும்பகுதி நேரடியாக விடயத்திற்குச் சென்று திரை விமர்சனம் செய்து, அந்த மொழிப் படங்கள் பற்றிய மேலும் சில விபரங்களைச் சொல்லி அமைபவை. அவ்வாறெனில் சுப்ரபாரதிமணியனின் அசல் தொனி இதுதானா என்றால் இல்லை என்று இருபதாவது கட்டுரை " ஒரு பயணம் இரு படங்கள் ' என்னும் கட்டுரை விடையளிக்கும். பிரான்சிலிருந்து ஜெர்மனி செல்லும் பயணத்தில் அவர் காணும் இரு படங்கள் பற்றியும் அந்தப் பயணம் தொடர்பாக அவர் தரும் விவரங்கள் அய்ரோப்பாவின் நிலை அங்கு வாழும் இந்தியர் பற்றிய அய்ரோப்பியர் கண்ணோட்டம் , தமிழரின் இருப்பு, இலங்கைத் தமிழரின் நிலை என பல கோணங்களில் நம் அறிவை வளப்படுத்துகிறது. மிகவும் சகஜமான தொனியில் நீளமே தெரியாத வண்ணம் விரியும் கட்டுரை.
எனவே இக்கட்டுரைகள் பெரிதும் சிறு பத்திரிக்கைகளில் வெளியானதால் இடப்பற்றாக்குறையை கருத்தில் கொண்டு சுருக்கமாக ஆனால் முக்கியமான எந்த விவரமும் விட்டுப் போகாத கவனத்துடன் எழுதியிருக்கிறார். .
லெபனான் நாட்டில் குண்டு வீச்சு நடக்கும் போது நிலவ�றையில் தொடுகையும், நெருக்கமுமாய் ஒருத்தி மீது காதல் கொள்கிறான் ஒருவன் வெளியே வந்த பின் அவளைத் தேடுகிறான். பெயர் மட்டுமே தெரியும்.
புத்தபிட்சுகள் கிரிக்கெட் வெறியில் என்ன ஆனார்கள்.
ஒரு சர்வாதிகாரி தன் மீது நூற்றுக்கணக்கான பிச்சைக்காரர்கள் எச்சில் துப்ப ஏன் சம்மதிக்கிறான்
எழுத்தாளர் ப�ரின் இளம் வாசகி, பள்ளி மாணவியின் கசப்பான திருமண அனுபவம் எதை வெளிப்படுத்துகிறது.
மால்கம் என்னும் அரசியல் கலைஞனின் போராட்டங்கள் என்ன
இந்திய சூழலில் அடூர் கோபால கிருஸ்ணன், டி வி சந்திரன், நரசிங்கராவ், கிரிஸ் கர்நாட், மீரா நாயர், அபர்ணா சென், சத்தியஜித்ரே ஆகியோரின் சாதனை என்ன.
இந்த நூலின் பணி இந்த ஆளுமைகள் முன் வைக்கும் மாற்று திரைபடம் பற்றிய அறிமுகமேனும் வாசகனுக்கு ஏற்படுத்துவது
திரைப்படம் மிக முக்கியமான ஊடகம் ஆகி இருப்பது என்னும் சாதகமான சூழலை குறும்பட , கலைப்பட., இணைப்பட கலைஞர்கள் பயன்படுத்த நடத்தும் போராட்டங்கள் மிகவும் கொடுமையானது. தொலைக்காட்சி தாயாரிப்பாளர் நாகாவுடன் பேசிக் கொண்டிருந்த போது எனெப்டிசியே பரிட்சார்த்தமான படங்களுக்கு நிதி தர தயங்குகிறது என்று குறிப்பிட்டார்.
சமீபத்தில் ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் தமது வீடு, சந்தியா ராகம் ஆகிய படங்களின் நெகட்டிவ்கள் அழிந்து விட்டன எனக் கண்ருடன் பாலு மகேந்திரா கூரினார். நல்ல திரைப்படத்தை கலை ஆர்வமும் பண்பாட்டு விழுமியங்களும் உள்ளோர் ஆதரிக்க வேண்டும் என்னும் கோரிக்கை கட்டுரைகளின் ஊடாக நம் மனதுள் பதிகிறது.
வெறும் விமர்சனம் மட்டுமின்றி உள்நோக்கம் உள்ள படங்களையும் இனங்காட்டுகிறார். சிருங்காரம் என்னும் தமிழ்ப் படத்தில் தேவதாசி முறையைக் கையாண்டுள்ள விதம் உள்நோக்கத்துடன் தென்படுகிறது. சாம்பலின் நிழல்கள் என்னும் படம் இலங்கைப் போராளிகளின் நிலையை எதிர்மறையாய் மட்டுமே அணுகுகிறது. எனவே தனது நிலைப்பாட்டை அல்லது விழுமியங்களை கூர்மையாகவே அலசியிருக்கிறார் சுப்ரபாரதிமனீயன்.
இதைத் தவிர இயக்குனர் பெர்க்மெனின் கடிதம் மற்றும் அப்பாஸ் கியராஸ்டமி (ஈரான்) போன்றோரின் குறும் பேட்டிகள் மிகவும் சிந்தனையைத் தூண்டுபவை..
தமிழில் கொண்டாடப்படும் இயக்குனர்களுக்குக்கூட திரைப்படம் ஒரு விசுவல் மீடியம் என்னும் அறிவோ அதன் சாத்தியக்கூறுகளைப் பயன்படுத்தும் கலையோ அன்னியமானது. அவர்கள் பயன்படுத்தும் நடிக நடிகையர் நிறைய சம்பளம் வாங்கும் நட்சத்திரமாக உயர்ந்ந்தால் போதும் நாலு பேர் காலில் விழத்தயார்.
பெரிதும் சமகால இந்தி உலக திரைப்படம் பற்றிப் பேசும் கட்டுரைகளில் நமக்கு எத்தனை திரைப்படங்கள் பற்றி, இயக்குனர்கள் பற்றி அறிமுகமும் அவர்கள் கலையின் பல்வேறு பரிமாணாங்கள் பற்றிய விபரமும் காணக் கிடைகிறது என்பது பற்றிய யோசிப்பை இக்கட்டுரைகள் கிளப்புகின்றன. நல்ல திரைப்பட ரசிகர்களின் நூலகத்தில் இந்த புத்தகம் இடம் பெறும் தகுதி கொண்ட முக்கியத்துவம் கொண்டதாகும். ( திரைவெளி ரூ80/ சுப்ரபாரதிமணியனின் திரைப்படக் கட்டுரைகள்
அமிருதா பதிப்பகம் வெளியீடு, சென்னை )
Friday, May 9, 2008
THE HINDU
Tamil Nadu
News:
Tamil Nadu - Others Story writing competition
Staff Reporter
TIRUPUR: In an effort to revive the tradition of story telling and to encourage story writing among younger generation, the Tirupur-based literary circle, Kanavu, is organising a story writing competition for children.
Subrabharathi Manian, writer, in a release here has said that Rs. 5,000 will be given to the best stories. The stories can be on any topic and should not exceed five pages.
Students up to Plus Two can send their contributions to Subrabharathi Manian, 8/2635, Pandian Nagar, Tirupur-641602 on or before August 1, the release said.
Printer friendly page Send this article to Friends by E-Mail
The Missing Files
You may perhaps be the person who would join me for a drink today. I am very happy to have met you. But I do not see any arrangement for serving drinks. We have arrived at a wrong time. Of course this happens with people who are excited and restless.
The work of cleaning the chairs and tables is in progress. Their shine dazzles the eyes. It seems as if we have worn spectacles that magnify light manifold. They may become dirty and lose their purity in the course of tonight’s stumbling and tottering. The girl who squirts the cleaning liquid on the table looks out of place in this shop. Her irregular-shaped face is not one to attract attention. She may take some more time to complete this purity-ritual. Let us sit at one of the cleaned tables till then.
I shall ask you later what drink you would like to have. I just need some drink to dissolve myself in it; it does not matter what kind of drink it is. I need this to lose myself for a few hours and ensure my sleep with tightly closed eyes so that I may not be woken up by fearful dreams.
Who is going to serve us drinks? No girls, like the one who is cleaning the tables, have yet been appointed as waiters. The owner of this joint was speaking yesterday as if it was his cherished aim to have this managed only by girls. It is difficult to select suitable girls for this purpose. If you know of any girls with ability and enthusiasm for this work, you may recommend them to the owner.
The snowfall outside makes us shiver. I think that is only the fear of being dissolved or completely enveloped in the snow that has made me and you enter the pub.
Moments, which strive hard to lose themselves, make their appearance from time to time. So does the exhaustion in the course of searching for missing persons. This morning, I had gone to a government office in search of a friend of mine who is missing. The officer said that the file relating to my friend was completely lost. He said that there was no need for me to come again as the file was lost. He said that it was my duty to search for the missing file in addition to my search for my missing friend.
I used to meet my friend in the evenings at the petty shop owned by his father at the corner of the south street. Being a chain-smoker, he would be always having something lighted between his lips. I don’t like smoking. I do not understand what pleasure there is in smoking. My friend would say that one could feel the pleasure of nicotine when one inhales the smoke and fills one’s lungs with it. But to me to smoke is like keeping a piece of thin stick between one’s lips. Do you smoke? At midnight this pub would look as if it is enveloped in snow. It seems that lovers of drinks are mostly lovers of smoking also. If you like to smoke now, go ahead, I have no objection. Perhaps you favour only filter-cigarettes like my friend.
One evening I was little late in reaching the petty shop. The streets were almost empty, as most of the shops in the town had drawn their shutters. Only in that shop, rather unusually, a shutter-door was kept half-open
My friend was smoking his favorite cigarette. Tension has been created in the town as a petrol bomb had been thrown in some locality. He had not finished his cigarette when a military van which came there pulled him inside. I saw this as I was approaching the shop. I hurried and broke into a run to reach the van, but stopped short as if remembering military procedures. The speeding van became a dot at a distance and then disappeared.
My friend’s father was hurriedly closing the single open door. He was in a weepy mood. His trembling could not manage to lock the door properly. I took the bunch of keys from him and locked the door. He was on the point of crying loudly. He stammered out one word at a time.
“Let me go to the police station and find out what the matter is. They have perhaps taken him for some routine enquiry” I said.
“The times when people were taken to the police station are over. Nowadays the army is everywhere. We have to go to the army camp only. Let me also come.’
It was not easy to dissuade him from coming with me. You know how difficult it is to manage an old man who is nervous. I shook myself off from him and went to the army camp. The name of the camp was ‘Vasantam.’ There I told the soldier that I had come in search of a friend. It appeared that I could not get past the stiff demeanour of the soldier. He told me that all those that had been arrested recently had been put up in another camp named ‘Vasantam-2.’ The name ‘Vasantam’ tickled me. I felt like laughing loudly uttering ‘Vasantam, Vasantam.’ (Vasantam means the spring season.) The ‘Vasantam-2’ camp was fenced in by a thick row of soldiers. I could get in only in my fourth attempt.
At one stage they said that the army had not arrested any such person. They asked me to report him at the police station as missing. A file was opened in his name in a state government office also. It was a rare photograph that was pasted in this file. The photograph showed him wearing a rose in bloom on his shirt on which were printed the words “Towards Vasantam …” The background showed a hillside, bright green. My friend’s young wife had parted with the photograph as she was told that they required a photo of the person missing. She had given it knowing fully well that she would not get it back. If you were in her position you too would not have agreed to give it away. It was my friend’s wife’s favourite photograph.
When I met her once later and reminded her of that photograph she cried loudly. She said that the memory of her young husband would wake her up in the midst of sleep. Then she could not sleep and had to await the dawn, weeping. It was tragic that his face was slowly dissolving from her memory. She said that anyone who heard of this would think ill of her. When the heroines weep in our films the villain would say sarcastically that they look more beautiful when they cry. But when that young woman weeps narrating something about her husband, her face gets distorted and it pains one to see it. Have you enjoyed beautiful girls weeping or have you felt sorry for them…?
It is the lament of my friend’s mother that discourages me from visiting his house for some enquiry or information. She was affected with paralysis four years ago. Since then her face has become contorted. Two of her teeth at the corner of the mouth jut out of the lips. When she weeps her face would be distorted like the ugly howling of some animal. The cry she lets out beating her breasts would echo in the hills and cause more pain.
You may perhaps be familiar with the face of my friend’s father roaming the streets in search of his son, because he has wandered in all the streets. You might also have seen him searching - with sharp eyes, though he is old - for his son in the valley. While wandering in the dense forests of tall trees he would call his son’s name loudly in the midst of birdsong. If a human name is heard among the screeching and cooing of birds it may be my friend’s name, and the voice that calls the name may be his father’s.
Nowadays he opens his shop only rarely. He becomes agitated when policemen or soldiers buy things from the shop. Previously he would enquire about his son, sobbing. Nowadays he only looks at them silently, his lips trembling. The main reason for his nervousness may be the fact that the policemen and the soldiers buy only cigarettes mostly.
I have no objection to your smoking here. You are at liberty to smoke.
I too have often cried aloud at the height of intoxication thinking of my lost friend. I have also called his name loudly, wandering at the dead of night in streets where the army does not roam. Thousands of names, like my friend’s name, are floating in space. I think that the cries of their families are not much different from those of my friend’s family. There may even be some people known to you, who would be weeping beating their breasts for their missing family members. If you narrate their story it will be just a repeat of my story. People known to you may have been lost. Some may have been killed and thrown on the far-off streets. We may have no other information about some of them. It appears that it has become a routine matter of our lives to search for persons and missing files. If you think differently you may express your opinion freely.
We have reached the height of intoxication. Today it has become my great responsibility to escort you to your house. We may be able to totter to our destination even though the cold and the snow are very severe. We may proceed calling our friend’s name aloud. This would be a proper occasion to search for him.
I never imagined that you would slip so easily. Have you fallen down somewhere overcome by intoxication? … I cannot see you. Have you sunk or dissolved in the snow? … Anyhow, it appears that you too have been lost.
I feel somebody tugging at my shoulder. If it is some beautiful girl I shall be glad. Even if it be some prostitute, that too is a matter of consolation. I have sufficient money to share with her. But when I feel the strength of the hand that tightens on my shoulder, the thought occurs that it may belong to a soldier … I feel I am gradually becoming sober …
சுப்ரபாரதி மணியனின் ஆதாரக்கவலைகள்
---------------------------
HELL IS A CITY MUCH LIKE LONDON என்றான் ஸெல்லி.
PARIS IS A DINGY SORT OF TOWN என்று ஆல்ப்ர்ட்காம்யு கூறினான்.
சுப்ரபாரதிமணியனின் ' தேனீர் இடைவேளை ' நாவலை ஆழ்ந்துணர்ந்து வாசிக்கும் போது HELL IS A TOWN MUCH LIKE TIRUPPUR என்று சுப்ரபாரதிமணியன் சொல்வதை உணரமுடியும்.அவருடைய கட்டுரைகள்
'உலகமயமாக்கலும் உள்ளூர் அகதிகளும் ' 'கரையும் நதிக்கரைகள் ', 'கடத்தல்
கலாச்சாரம் ' போன்றவற்றை வாசிக்கும் போது ' TIRUPPUR IS A DINGY SORT OF TOWN ' என்று வேதனைப்படுவதை உணர முடியும்.
இந்திராபார்த்தசாரதி பார்த்த டெல்லி மேல்தட்டு மக்கள் வாழ்வின் அரசியல்தன்மை, ஆதவன் விவாித்த டெல்லி நடுத்தர மக்கள் வாழ்வின் அரசியல் தன்மை இவற்றிலிந்து வேறுபட்டு மணியன் தான் சார்ந்த திருப்பூர் கீழ்தட்டு மக்கள் வாழ்க்கையில் அரசியல் தன்மை வெளிப்படையாக இல்லாதவாறு எழுதிப்போவதை காணமுடியம். சமூகவியல் சார்ந்து சமகால அரசியல்,கலாச்சார நிகழ்வுகளின் மீதான் ஆய்வாக ' தேனீர் இடைவேளை ' நாவல் விாிகிறது. ({காவ்யா பதிப்பகம்{). ஒரு எழுபத்தைந்து பக்கங்களில் இதன் சாத்தியம் அதிசயம்தான்.
உலகமயமாக்கலில் திறந்த வெளிச்சந்தையில் மலிவாகக் கிடைக்கும் பொருட்கள், அதே நேரத்தில் தண்ணீரும் கூட அாிதாகி விடுகிற அவலம்.எட்டாயிரம் கோடி அந்நிய செலவாணி கிடைக்கிற திருப்பூர் நகரம் சாயக்கழிவுகள், குப்பைகள் சேர்ந்து அழுக்காகி நாறி விட்டது. நொய்யலாறு ரசாயனக் கழிவுகளால் சாக்கடையாகி விட்டது. வேலை தேடி இங்கே பிழைக்க இடம் பெயர்ந்தவர்கள் விவசாயத்தையும், மரபானத்தொழில்களையும் நிராகாித்து விட்டு வந்திருக்கிற துயரம்.சாதாரணத் தொழிலாளிகளும் பெண்களும் சிறுவர்களும் சிறுமிகளும் இங்கே அனுபவிக்கிற அவதிகள்., முறையானத் தொழிற்சங்கங்கள் இல்லாததால் தொழிலாளிகளுக்கு எந்தப்பாதுகாப்பும் இல்லாத சூழ்நிலை. மில்கொட்டகைகளில் பெண்களும், ஆண்களும். கல்யாணத்திற்கு பணம் சேர்க்க பெண்களுக்கு மாங்கல்யத்திட்டம். வேலை நேரத்தில் எந்த ஒழுங்கும் கிடையாது. இரவில் கூட பெண்கள் இங்கே கட்டாய வேலை செய்ய நிர்பந்திக்கப்படுகிறார்கள். பெண்கள் மீதான் பாலியல் வன்முறை. பழைய மில்கள் மூடப்பட்டு புதிய மில்கள் ஊாின் ஒதுக்குப்புறத்தில் ஆரம்பிக்கப்பட்டு பழைய மில்லில் வேலை பார்த்தவர்களே புதிய மில்லில் தினக்கூலிகளாகக் வேலை செய்ய வேண்டிய துரதிஸ்டம். உலகமயமாக்கலின் எல்லாவகையானத் தாக்கங்களையும் எளிதில் சுலபமாகக் காணக்கூடிய சிறு நகரம்.
'தேனீர் இடைவேளை ' நாவலின் வடிவம் மாறுபட்டது. முதல் பகுதி எழுதப்படாத கடிதங்கள் மல்லிகா , ரங்கநாதன், ஸமீம். போஸ்ட்மேன், கண்ணம்மா, வட்டிக்கு விடும் ராஜேஸ்சிங், வாசகர் செந்தில். இரண்டாவது பகுதி தோற்றுப் போன தொழிற்சங்கவாதி அந்தோணிராஜான் டைாிக்குறிப்புகள். மூன்றாவது பகுதி யதார்த்த வாழ்க்கையில் லட்சிய உலகைக் காண விழையும் செந்திலின் டைாிக்குறிப்புகள்.
தி ஜானகிராமனும், அசோகமித்திரனும் பெண்ணை முழுமையாகச் சித்தாித்தவர்கள்.பெண் மனதின் நுட்பங்களை துல்லியமாக் எழுத்தில் கொண்டு வந்தவர்கள். தேனீர் இடைவேளை நாவலில் மல்லிகா, ஸமீம், கண்ணம்மா ஆகியோர் பாத்திரங்களும் அவர்களுடையச் சிக்கல்களும் சிக்கனமான வாிகளில் சுப்ரபாரதிமணியன் ஒரு பெண்ணாகவே மாறித்தான் விாித்துக் காட்டியிருக்கிறார். ரங்கநாதனின் கடிதங்களில் வெளிப்படும் கிாிஜா,அருக்காணி என்ற விளிம்புநிலைப் பெண்களைக்கூட முழுமையானப் ப e த்திரங்களாக்கி விடுகிறார். ஸ்மீம் மி கொட்டகையில் தன் சிறு அறையிலிருந்து சிறுநீர் கழிப்பதற்காக பதினைந்து அறைகள் தாண்டி கழிப்பறைக்குச் செல்ல நேரும் நிர்ப்பந்தம், அவளுடைய அந்தரங்கத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுவதால் அவளுக்கு எற்படும் கூச்ச உணர்வு. மிக நுட்பமான் இது போன்ற சித்தாிப்புகளில் ஆவேசமிக்கக் கலைநராக சுப்ரபாரதிமணியனின் சாதனை வெளிப்படுகிறது. கோவில்களை ஆடம்பரமாக மில்லில் அமைக்கும் நிர்வாகம் கழிப்பறைகளை சிக்கனமாக ஏன் அமைக்க வேன்ண்டும்.ரங்கநாதன் வேறு மில்லில் வேலைக்கு சேர்கிறார். அந்த மில்லிலும் அழகான பிள்ளையார் கோவில்., ஒரு பொதுவானக் கழிப்பறை, குளியறை.
ரோசாலக்சம்பர்க் ' மனித குலத்தின் தேர்வு காட்டுமிராண்டித்தனமா, கம்யூனிசமா ' என்று கேட்டதுதான் நாபகம் வருகிறது, அந்தோணிராஜான் டைாி ஒரு சமுத்திரம் போல. சேக்ஸ்பியாின் டெம்பஸ்ட், ஈஎம் எஸ், அருந்ததிராய், தொழிற்சங்கப்பெண்கள் அம்முவும், கோவிந்தம்மாவும்.,தொழில் நிறுவன உலகமயமாக்கல், இந்து மத பாசிசம், கோயமுத்தூர் மில் தொழிலாளி சங்கம், கேட் மீட்டிங் கூட்டங்களில் ஜீவா, சி.ஏ.பாலன், பாலதண்டாயுதம் ஆகியோாின் பேச்சு மார்க்சியத்திற்கு வழி திறந்து விட்டதும் , கேட் மீட்டிங்கை ஒழிக்க இன்றைய நிர்வாகம் கேட் முன்னால் பூங்காக்கள் அமைத்தது,புரூக் பாண்டு ட்டா வந்த புதிசில் தொழிலாளர்களுக்கு வாரக்கணக்கில் காலையும், மாலையும் இலவச தேனீர் வழங்கப்பட்டு பின் சம்பளப்பணத்தில் பிடித்தம் செய்து அதற்குதெதிரான தொழிலாளர் போராட்டம், கடிகார முட்களை நகர்த்தி அதிகப்படியான வேலை வாங்கியது,தெலுங்கானாப் போராட்டம், ஆனைகட்டி துவைப்பகுதி ஆதிரூ 7ாசிப்போராட்டம் மாதிாி கூட கேட் பூங்காவுக்கு எதிராகப் போராட்டம் அறிகுறி இல்லாமல் போனது பற்றிய தவிப்பு, சினிமா தியேட்டரே இல்லாத வால்பாறை, நொய்யல் நதி கழிவுகளின் சங்கமாவது பற்றி என்றெல்லாம் எவ்வளவு விசியங்களை அந்தோனிராஜான் டைாி உள்ளடக்கியிருக்கிறது.
ஏதாவது ஒரு நிலையிலாவது தன் வாழ்க்கை தோல்வி என்று எண்ணிப் பார்த்து சோர்ந்து போகாதவன் யாரேனும் உண்டா என்றக் கேள்வி உலுக்கிவிடுகிறது.
செந்தில் இலைநன். HIS WHOLE FUTURE IS BEFORE HIM மெகா சீாியல் அபத்தங்கள் உறுத்தும் அதே வேளையில் சினேநகாவை பிடிக்கிறது. லாாிதண்ணீர், கல்வி, டுயுசன், பகுத்தறிவு பிரசாரத்தின் தேவை, தமிழ் வழிக் கல்வி, ஒடுக்கப்பட்ட மக்களுக்கான விடுதலை கல்வி, குழந்தையின் மருத்துவ செலவுப்பணம் பள்ளிக்கட்டணமாக கட்டப்படுவது பற்றியெல்லாம் நிறைய சிந்திப்பவன். வாசிப்புதான் வாழ்க்கை அனுபவம். புதியதைத் தேடும் ஆவல் வாய்ப்பு என்பதாக வாசிப்பு பற்றிய பிரம்மைகள் செந்திலுக்கு இருக்கிறது. குடி தனி மனித விருப்பம். ஜர்னலிசம் செய்யமுடியாத சில விசயங்களை நாவல் செய்து விடும் என்று இவனால் கருத முடியவில்லை.மில்லில் வேலை, கொட்டகையில் வாழ்க்கை என்றாலும் இலட்சியக்கனவுகளில் மிதக்கிறான்.கேப்ாியல் மார்க்வெஸ் ' நான் பத்திாிக்கையாளன். கூடவே கொந்சம் கதைகளும் எழுதியிருக்கிறேன் ' என்று கூறியிருப்பதனா ல் பத்திாிக்கை செய்தி எழுதும் பாணியலான இலக்கியப்படைப்புகள் இறுக்கமில்லாமல் நிறையப்பேரை சென்று சேர்கின்றன என்று செந்தில் டைாிக்குறிப்பு எழுதுகிறான். 40 வயதுப் பெண் பிணவண்டியை இடுகாட்டிற்கு தள்ளிக்கொண்டு போவதைப்பற்றிக் கூட டைாியில் எழுதுகிறான்.
வாசிப்பு, இலக்கிய கூட்டங்கள் என்று இருந்த ராஜேந்திரன் இப்போதெல்லாம் மாறிப்போய் 'இலக்கியவாதிகளின் விரோதங்களும் துரோகங்ளும் ஒதுங்கும்படி செய்து விட்டதாகக் ' கூறுவதை இவனால் அங்கீகாிக்க முடியவில்லை.செந்தில் வருகிற சில ஆண்டுகளில் ராஜேந்திரனினின் உணர்வுகளைப்புாிந்து கொள்ள முடியும். அய்ன்ஸ்டான் ' I have never never read anybody ' என்று சொல்லவில்லையா. 'புயலிலே ஒரு தோணி ' ப.சிங்காரத்தை நான் 1989ம் ஆண்டு மதுரை ymcaல் சந்தித்துப் பேசிக்கொண்டுருந்த போது நம் தளத்து படைப்பாளிகள் பலரையும் அவர் வாசித்திருக்கவில்லை என்ற செய்தியை அறிய நேர்ந்தது.
ஒரு வேளை அதனாலேயே கூட ' புயலிலே ஒரு தோணி ' போன்ற சாதனை அவருக்கு சாத்தியமானதோ என்னவோ. வாசிப்பு,இலக்கியம் பற்றிய செந்திலின் பிரமை மிகையாகவே பதிவாகியிருக்கிறது. கி.ரா.வின் கதவு கதையைப்படித்து விட்டு பாராட்டி சுந்தரராமசாமி அதில் ' செகாவியன் டச் ' இருப்பதாக சொன்னபோது கி.ரா. 'செகாவியன் ' என்றால் என்ன என்று அந்தக்காலத்தில் கேட்டார்
முன்பொரு தடவை கி.ரா. அவர்கள் சிட்டியிடம் மற்றப்படைப்பாளிகள் போல் பரந்த வாசிப்பு அனுபவம் தனக்கு இல்லையே என்று வருத்தப்பட்ட போது சிட்டி பதற்றத்துடன் ' வேண்டாம் ரொம்ப வாசிப்பு வேண்டாம். வாசித்தால் எழுத்தில் உங்கள் தனித்தன்மை காணாமல் போய்விடும் ' என்று சொன்னாராம்.
பிடரல் காஸ்ட்ரோ வாசிப்பு ஈடுபாடு அதிகமுள்ளவர். கேபிாியல் கார்சியா மார்க்வெஸான் அனைத்துப் புத்தகங்களையும் படித்தவ்ர். இங்கே ஜீவா, பாலதண்டாயுதம் இலக்கிய வாசிப்புள்ளவர்கள்.ஆனால் சமீபமாய் தலைவர்கள் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் அப்படி தென்படவில்லை. நாவலின் இந்தப் பதிவு பல தோழர்களை கோபப்படுத்துகிறது.
நாவலின் ரங்கநாதனின் SEXUAL POVERTY திகைக்க வைக்கிறது. ரங்கநாதனின் பாத்திரம் நேர்த்தியாக உருவாகியுள்ளது. ரங்கநாதனுக்கு வயது அம்பது என்பது சாியல்ல. அறுபது என்று இருக்க வேண்டும். ரங்கநாதன், அந்தோணிராஜ், செந்தில் மூவருமே பெண் துணையில்லாதவர்கள்.ரங்கநாதன் சபலம் பற்றிப் பேசுகிறார். அந்தோணிராஜ் டைாியில் ஆசை, சபலம், பாலியல் உணர்வுகள் பற்றி எழுதக் கூடாது என்றத் தீர்மாணம் கொண்டவர். செந்திலுக்கு உடம்பில் இருக்கும் காமத்தையெல்லாம் ஒன்று திரட்டி யாாிடமாவது கொடுக்க வேண்டும் போலிருக்கிறது.
( இந்த நாவலின் முதல் பகுதி The Unwritten Letters ' என்ற பெயாில் திருமதி பிரேமாநந்தகுமார் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு தனிப்புத்தகமாக வெளிவந்துள்ளது. இவாின் ' சாயத்திரை ' நாவல் ஆங்கிலத்தில் பாண்டிச்சோி Dr.ராஜ்ஜா அவர்களால் The Coloured Curtain என்றத்தலைப்பிலும், இந்தியில் திருமதி மீனாட்சி புாி அவர்களால் Reng Reng ki chadewr mehli என்றத் தலைப்பிலும் வெளிவந்திருப்பதை சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.)
சமீபத்திய கதை சொல்லி இதழில் 'திரும்புதல் ' என்ற சிறுகதையின் ஆண் பாத்திரம் 'எனக்கான பெண் துணை எங்கே தென்படுவாள் ' என்று கேட்பதை இங்கே நினைவு கொள்ள வேண்டும். உயிர்மை இதழின் ' நீலப்படமும் சுசித்திராவும் ' ,புதிய பார்வை இதழின் 'சூடு ' ஆகிய கதைகளும் பாலியல் உணர்வுகளையே வெளிப்படுத்துபவை . புதிய கோடாங்கியின் 'மாற்றங்கள் ' உலகமயமாக்கல் சம்பந்தப்பட்டது. அரசாங்க அமைப்பில் தனியார் சேவை நுழைவதை எதிர்த்த நிலை மாறி தனியார் சேவை நிறுவனங்களுக்கு அரசாங்க அமைப்பு ஊழியர்கள் தோள் கொடுக்க நேர்ந்துள்ள அசாதாரண நிலை பற்றி, மாறிவிட்ட வெவ்வேறு செருப்புகளை குறியீடாக்கி பேசுகிறது. ' தேநீர் இடைவேளை ' நாவலில் வருவது போல இந்த சிறுகதையிலும் தெருவோரத்தில் ஏற்பட்ட சாவு ஒன்று பிணக்காட்சியாக வருகிறது, தெருவோரக் குடியிருப்பு பெண்களைப்பற்றி மணியன்
' அழுக்கானப் பெண்கள் எல்லாத்துயரங்களையும் அழுக்கின் மூலம் சேர்த்து உடம்பில் அப்பிக் கொண்டவர்கள் ' என்று கவிதையாக சுட்டுகிறதைப் பார்க்கலாம்.
சினிமா பற்றி சுப்ரபாரதி மணியன் எழுதியள்ள பல கட்டுரைகளும் அதிலும் குறிப்பாக அவர் செக்கந்திராபாத் நகரத்தில் இருந்த போது எழுதிய தெலுங்கு , இந்தித்திரைப்படக் கட்டுரைகளும் தொகுக்கப்பட்டு நூலாக வர வேண்டும் . நல்ல கலைப்படங்கள் பலவற்றின் மீதான் விமர்சனக்கட்டுரைகளால் அவர் நடத்தி வரும் 'கனவு ' பத்திாிக்கையில் எப்போதும் திரைப்பட ஊடகத்தின் ஆக்கிரமிப்பை உணர்ந்து கொள்ளலாம்.
இங்க்மார் பெர்க்மான் ' FACE TO FACE ' படம் பற்றி தன் குழுவினருக்கு எழுதிய கடிதத்தின் மொழிபெயர்ப்பு 'முகாமுகம் ' , ஒரு சாிதம், ஒரு திரைப்படம்; மதவாதம் மற்றும் பொதுவுடமை அடிப்படை வாதங்கள் , தில்லி கதா திருவிழா படங்கள்; மங்கம்மாக்கள், பூலான் தேவியின் குரல் , மீராநாயாின் மான்சூன் வெட்டிங்; மலையாளிகளின் சிம்மாசங்கள்; கவிநனும் தடை செய்யப்பட்ட இசைக்குறிப்புகளும் , ரகு ரோமிமோ, குறும்படங்களின் தணிக்கை மீதான் வன்முறை, போன்றக் கட்டுரைகள் பல ஆபூர்வமான உலகளாவியத் திரைப்படங்களிலிருந்து 'பீா குறும் படம் வரை விாிவாகத் தொட்டுப் பேசுபவை.
பிராணிகள், பறவைகள், காட்டுஉயிர்கள் நமக்கு சமச்சீரான இயற்கை வாழ்வைத் தருபவை என்பதாக ' கானுயெிர் காப்போம் ' என்றக் கட்டுரையின் அக்கறை, சா.கந்தசாமி என்னும் கலைநன்., மிகச் சிக்கனமான வார்த்தைகளில் பிரமாண்ட உலகை எழுத்தில் காட்டும் நல்ல கலைநனுடன் ஏற்பட்ட ஒரு பயண அனுபவம். 'படைப்பு மனம் சந்சலமுறும் பின் நவீனத்துவம் ' என்ற தேடல் இவருடைய எழுத்துப் பயணத்தின் தவிப்பை தொிவிக்கிறது.
ஆறு நாவல்கள், பன்னிரண்டு சிறுகதைத்தொகுப்புகள் உட்பட 25 நூல்களை வெளியிட்டுள்ளார்.
ஒரு கல்லின் மேல் உட்கார்ந்து தவிப்புடன் தலையைத் தூக்கி பச்சோந்தி பார்த்துக் கொண்டுருந்தது. அதை டால்ஸ்டாய் உற்றுப் பார்த்தார். 'அப்படியா , நானும் கூட கவலையாகத்தான் இருக்கிரேன் ' என்று அதனிடம் வாய் விட்டு சத்தமாகவே கூறினாராம்.
ஆர்.பி.ராஜநாயஹம்
சமயலறைக் கலயங்கள்

--------------------------
வாழ்க்கை மிகப் பிரம்மாண்டமான. கோடி கோடியாய் நிகழ்ந்து முடிந்த,நிகழும் மற்றும் நிகழவிருக்கிற வாழ்க்கையின் கூட்டாகவே உலக இயக்கம் சாத்தியப்பட்டிருக்கிறது. இதில் தான் எத்தன விதமான பரிமாணங்கள். ஒருவரின் வாழ்க்கை ஒருவிதமாய், பிறிதொருவருடய வாழ்க்கை மற்றொரு விதமாய் தத்தம் சூழலின் வியூகமாய் மாறிப் போய் விடுகிறது. அவ்விதமாய் மாறி அல்ல மாற்றப் படுகிற கவனத்தில் கொள்ளத் தக்க ஒன்றிரண்டின் குறிப்புகளை பதிவு செய்வதும் அதன் மூலம் விசாரனைக்குட்படுத்திட முயல்வதும் அவசியமாய் படுகிறது.
மானுட வாழ்வின் தீராத வேட்கை என்பது துன்பகளேதுமற்ற நிரந்தர இன்பமென்பதாயினும். அத்தகைய வாய்ப்பு யாருக்கும் வாய்ப்பதில்ல. குறிப்பாய் பெண்களின் வாழ்வினை காட்டாற்றின் வேகமாய் புரட்டிப் போட்டுவிட்டுச் செல்லும் நீர்ச் சுழற்சிகள் ஏராளம் . அத்தகைய நீர்வீழ்ச்சி ஒன்றின் மேலடையாளக் குமிழியாகத் தென்படும் சுப்ரபாரதிமணியனின் சமயலறைக் கலயங்கள் என்னும் நாவல்.
கதைத் தளம் விரிவானதல்ல திரும்பவும் சொல்வதற்கு கதையுமல்ல. கதை தேவையுமல்ல மீண்டும் நினைக்கவும் பேசவும் ஏதுமற்ற சக்கையாய் உலர்ந்து போகத்தான் செய்கிறது பல பெண்களின் இறுதி.
திருப்பூர் நகரையும் அந்நகரின் பிரதான தொழிலான பனியன் கம்பனிகளயும், சாயப் பட்டறைகளையும் கதக் களமாகக் கொண்டு சுப்ரபாரதிமணியன் ஏற்கனவே பல சிறுகதைகளயும் நாவல்களையும் எழுதியது போல் , இந்நாவலின் களமும் அதுவாகவே உள்ளது. அது அவரால் முற்றிலும் அறியப்பட்ட இடம் அங்குலங்களாய் இடைவெளியின்றி அறியப்பட்ட இடம் . அதபோலவேதான் வேறெந்தப் பகுதியிலும் மற்ற பல தொழிற்சாலகளிலும் அலுவலகங்களிலும் இது நிகழ்ந்துகொண்டிருக்கிறது என பொருத்திப் பார்த்துக் கொள்ளவியலும்.
பெண்கள் சில தருணங்களில் ஏற்படுத்திக் கொள்கிற அல்லது உருவாகிற உறவுகள் அற்ற உறவுகள் மிகவும் அனுதாபத்துக்குரியது. உறவில் தூய்மையும் அன்பும் இருக்கிறது போதும் . அவ்விதமான உறவற்றதாயும் பொருளாதாரத்தின் கட்டமைப்பாலும் அவளை விலக்குதலாலும் இருக்கிற உறவுகளே தொடர்ந்து உறவுகளாய் வெளி அங்கீகாரம் பெறுவம் சமுதாயச் சோகம். கிருஷ்ணனின் மீது பெரிய எதிர்பார்ப்பு எதுவுமற்று அவனிடத்தில் சக மனித அன்பு கொள்ளும் சாந்தாவால் அவனது சுகவீனம் பற்றி அவனின் குடும்பத்திற்குச் சொல்வதும் அவர்கள் வந்த பிறகு அவ்விடத்தில் நிற்கவும் தயக்கமுற்றவர்களாய் அல்லது இலாயக்கற்றவர்களாக்கப் பட்டவர்களாய் போவதுதான்‘உறவுகளற்ற உறவுகளின் அவலம்.
பெண்களுக்கான குறியீடாக அழகு என்பது அவ்வப்போது நினைவுப்படுத்தம் அம்சம். அதுவேகூட ஒர் ஆணாதிக்க அடையாளம்தான்.பெண் அழகாக இருக்க வேண்டியதன் அவசியம் சக ஆணை சந்தோஷப்படுத்திட வேண்டும் என்பதற்காகவே . அத்தகைய அழகு ஆணுக்கு கட்டாயமில்லை. ஏனெனில் அவனின் அழகு பெண்ணின் விருப்பத்தை, உடன்பாட்ட எவ்விதத்திலும் பாதிக்கக்கூடாது. அழைக்கும்போ வருகிறவள் என்கிற அகங்காரம். ஆனால் அத்தகைய அழகு பெண்களுக்கு எவ்விதமான ஆபத்தான விளவுகளை வெளியிடங்களிலும், பணியிடங்களிலும் ஏற்படுத்திகிறது என்பதை அறிந்தே வத்திருக்கிறோம்.
சாந்தாவுக்கு அதுவே நேர்கிறது. அழகான பெண்கள் வேலைக்குப் போகிறபோது அவர்களை அனுபவித்து விட வேண்டும் என்று ஆசைப்படுகிற முதலாளி, அதிகாரி என்பதும் அதைவிட கூப்பிடும் போதெல்லாம் வந்து படுத்துக் கொள்வார்களென்னும் வக்கிர எதிர்ப்பார்ப்பும் சூழல் யதார்த்தமாய் அமைந்திருப்பது எவ்வளவு துரதிஷ்ட வசமானது.
விதவைகள் தரிசு நிலங்கள் , வேலைக்குப் போகும் பெண்களெல்லாம் நெறிகெட்டவர்கள் என்று சொல்கிற பாடாவதிகள் போல உங்களைப் போன்ற நிறுவனங்கள் தொழிலாளப் பெண்களைக் கொச்சைப் படுத்துகின்றன.
மேற்கண்ட வரிகளப் படிக்கிறபோ இதைச் சொன்ன மகா பெரியவரின் ஞாபகம் வருவதை தடுக்கவியலவில்லை. ஆன்மீகத்தின் பேரால் பீடமேறி வீற்றிருப்பவர்கள் பெண்களுக்கு எதிரான இத்தகைய கருத்து முன் வைப்புகளைக் கொண்டிருப்பது எத்தனை வேதனைக்குரியது.
சாந்தாவுக்கு நேர்கிற இத்துயரிலிருந்து தப்பிக்க தான் அழகற்றவளாக இருந்திருக்கக் கூடாதாவென பல இடங்களில் மருகுகிறாள். அதன் மேலழுத்தங்களால் வேலையில் தொடரவியலாமல் போகிற கட்டாயம். போகிற போக்கில் சந்திக்கிற கிருஷ்ணன். அவனிடம் ஒரு சின்ன ஈடுபாடு.பதட்டம், தடுமாற்றம். நம்பிக்கையற்ற தன் மனோபாவத்தோடு உருவாகும் நம்பிக்கை. அன்பு ரீதியான மெல்லலையிலான பரிமாற்றம்.
மற்றொரு சரடாய் பொது நிகழ்வில் பெண்ணியம் குறித்துப் பேசும் பூசணி, பெண்ணியம் குறித்தான கருத்து வெளிபாடுகள். அவளின் மனநிலை மற்றும் செய்திகள்.
காட்சிகளில் அதிகபட்ச விவரணைகள் ஏதுமற்ற செய்திகளும் ,உரையாடல்களுமாய் நகர்கிற நாவல். சிற்சில இடங்களில் நிகழ்வு பற்றின வெளிப்பாடு சற்று விஸ்தாரமாய் அமந்திருக்கலாமோவென்றும் கூடத் தோன்றுகிறது.
பூரணியின் மகள் மற்றும் தாய் என்று மூன்று தலமுறைப்பெண்களின் மனநிலயில் உள்ளாடைகளைப் பற்றிய அகச்சித்திரங்கள் கலாச்சார மாற்றத்தின் படிநிலைகளை சொல்லாமல் கூறும் உத்தி.
பெண்ணுறுப்பைத் தைத்து விடுவதும், அவர்களது உணர்வு மொட்டை அறுத்தழித்து விடுவதுமான கொடூரத்தைப் படிக்கிறபோது ஏற்படுத்துகிற அதிர்ச்சி, சாந்தா போன்ற எத்தனையோ பெண்கள் வெறும் யோனிகளாகவே முதலாளி வர்க்கத்தால் சில இடங்களில் நிகழ்வதை நினக்கிறபோதும் எழத்தான் செய்கிறது.
உரையாடல்களில் இருக்கிற தீர்க்கத்தைக் கண்டிப்பாக குறிப்பிட்டாக வேண்டும். உரையாடல்களின்போது நம்மை உடனிருக்கச் செய்வதை உறுதிப் படுத்கிறது. அதற்கு முக்கியக் காரணம், எழுத்தாளன் தன் முனைப்போடு பிரஸ்தாபிக்க நினைக்கிற எந்தக் கருத்தையும் பாத்திரங்கள் வாயிலாக வலிந்து பேசச் செய்யவில்ல என்பதான் . பாத்திரங்கள் அந்தந்தச் சூழ்நிலையில் இயல்பாய் பேசுவதாக அமந்திருப்ப எளிமயான சிறப்பு. அதே சமயம் அவ்வுரையாடலை அழுத்தமானதாயும், ஆழமானதாயும் கட்டமைந்திருப்பதையும் கவனம் கொள்ள வேண்டும்.
சமயலறைக் கலயங்கள் பேசும் விஷயம் ஆயிரமாய் நிகழ்ந்த வண்ணமே இருக்கின்றன.
பெண்கள் எழுதினாலன்றி ஒப்புக்கொள்ளவியலாது என்றொரு வாதம் தனித்திருப்பினும் , சமயலறைக் கலயங்கள் ஒரு பெண்ணிய நாவல் என்பதில் சந்தேகமில்ல. அது ஒரு பெண்ணின் மனநிலையில் உணர்வோடு எழுதப்பட்டிருக்கிறது.
இயல்பு வாழ்வின் சிக்கல்களின் பரிமாணத்தை ஒரு புள்ளியில் நின்று பேசுகிற இந்த நாவல் அந்தப் புள்ளிய கடக்கிற எவரயும் சலனப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.
....
ரூபாய் 45 -
காவ்யா பதிப்பகம்
சென்ன
திசை எட்டும் இதழின் நான்காம் ஆண்டு விழா - நல்லி -திசை எட்டும் மொழிபெயர்ப்பு விருது வழங்கும் விழா
---------------
சென்னை மைலாப்பூர் நியூவுட்லண்சு வளாக மய்ய அரங்கத்தில் 9 நவம்பர் 2007 வெள்ளிக்கிழமை அன்று நல்லி திசை எட்டும் விருது வழங்கும் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. திரு நல்லி குப்புசாமி செட்டியார் பிறந்த நாள் விழா
மொழிபெயர்ப்பு செய்த சிறந்த எழுத்தாளர்க்கு விருதுகள் வழங்கும் ஒரு இலக்கிய விழாவாக த்தொடர்ந்து கொண்டாடப்பட்டு வருகிறது நல்லி திசை எட்டும் விருதுகள் ஒவ்வொரு ஆண்டும் தமிழிலிருந்து தரமான நூல்களை சிறப்பாக மொழிபெயர்த்து பிறமொழிக்கு கொண்டு சென்றவர்கட்கும் பிற மொழியிலிருந்து நல்ல நூல்களை தமிழ் மொழிக்கு கொண்டு தந்தவர்கட்கும் என தனித்தனியே வழங்கப்படுகின்றன.
ஒவ்வொரு மொழிபெயர்ப்பாளருக்கும் ரூபாய் பத்தாயிரம் ரொக்கப்பரிசோடு , நல்லி திசை எட்டும் நினைவுப்பரிசும் பாராட்டுச்சான்றிதழும் என அளிக்கப்பட்டு விழா மேடையில் கெளரவிக்கப்படுகிறார்கள்.
முதல் நிகழ்வாக மொழிபெயர்ப்பாளர்களுடன் சந்திப்பு நிகழ்ச்சி எழுத்தாளர் இ. பா. தலைமை ஏற்க குறிஞ்சிவேலன் முன்னிலையில் நடைபெற்றது. மலயாள எழுத்தாளர் விஜயகுமார் குனிச்சேரி சிறப்புரை ஆற்றினார்.
இந்திய ஒருமைப்பாட்டுக்கு முற்றாக உழைக்கும் இதழாய் திசைஎட்டும் விளங்குவதால் அதற்கான உரிய தகுதி தேசிய அளவில் அங்கீகரிக்கப்படவேண்டும் என இ. பா. குறிப்பிட்டார். தமிழை த்தன் பாட்டிமொழி என விஜய்குமார் குனிச்சேரி பெருமையோடு பதிவு செய்தார்.
மூல நூல் ஆசிரியரைச்சந்தித்து மொழிபெயர்ப்பில் இடைமறிக்கும் அய்யங்களைக்களைந்து கொண்ட பின்னரே மொழிஆக்கம் செய்ய வேண்டும் என ஆர். நடராஜன் குறிப்பிட்டார்.
முனைவர் ராஜ்ஜா பேசுகையில் ஆங்கிலம் கவனமாய்க் கற்றுக்கொள்ள தனக்கு ஒரு பாதிரியார் உதவியதையும் தமிழ் ச்சுவைஉணர்வை உள்வாங்க தமிழ் அறிஞர் வெள்ளைவாரணனாரின் வகுப்பு அமர்வு உதவியதையும் நினைவு கூர்ந்தார்.
இலக்கிய சந்திப்பில் கலந்துகொண்ட எழுத்தாளர்கள் சரவணன், டி. டி. ராமகிருஷ்ணன் சாந்தாதத் இறைஅடியான் வெ. பத்மாவதி
புவனா. நடராஜன் என மொழிபெயர்ப்பாளர்கள் நல்லபல கருத்துக்களை வழங்கினர். சுப்ரபாரதிமணியன், இளம்பாரதி சாகித்ய அகாடெமி இளங்கோவன் யுகமாயினி சித்தன், சரத்கமலன் ஜி ஜி ஆர், கிருஷாங்கினி, சத்யானன்தன்
எனப்பலர் சந்திப்பு அமர்வுக்கு சிறப்பு சேர்த்தனர்.
நல்லி திசை எட்டும் விருது வழங்கும் மாலை அமர்வு முன்னாள் சென்னை தொலக்காட்சி நிலைய இயக்குனர் எ.நடராஜன் தலைமையில் நடைப்பெற்றது. எழுத்தாளர் சிவசங்கரி நிகழ்வில் கலந்துகொண்டு தன் மொழிபெயர்ப்பு அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். பதினெட்டு மொழிக்கான இலக்கிய பறிமாற்றங்களை செய்யும் இந்திய இலக்கியத் திருவிழாவாக இவ்விழா பரிணமிக்க வேண்டும் என நல்லி செட்டியார் அவர்களிடம் வேண்டுகோள் வைத்தார். நல்லி திசைஎட்டும் இதழின் ஆசிரியர் குறிஞ்சிவேலன் நல்லி திசை எட்டும் விருது நிறுவப்பட்டு நிர்வகிக்கப்பட்டு வருதல் குறித்த தனது அனுபவங்களை விவரமாகக்குறிப்பிட்டார். சிறப்பு விருந்தினர் காவல்துறை இயக்குனர் பொன்னுசாமி ராஜேந்திரன் நெய்வேலி புத்தகக்காட்சி அமைக்கப்பட்டது தொடங்கி குறிஞ்சி வேலனோடு தனக்கு ஏற்பட்ட இலக்கிய அனுபங்களை ரசனையோடு குறிப்பிட்டார். மொழிபெயர்ப்பாளர்கட்கு நல்லி திசை எட்டும் விருதுகள் மேடையில் வழங்கப்பட்டன.
மூல நூல் ஆசிரியர்களும் பதிப்பகத்தாரும் சான்றிதழ் வழங்கப்பட்டு பெருமைப்படுத்தப்பட்டனர்
ஆர். நடராஜனின், ‘வனநாயகம்’ என்னும் இன்றைய அரசியலை ஆழமாய் விமர்சிக்கும் சிறுகதை நூல் மிருகாதிபத்தியம் என ச்டான்லி அவர்களால்
மலயாளத்திற்கு மொழிஆக்கம் செய்யப்பட்டு திசை எட்டும் வெளியீடாக கொண்டுவரப்பட்டுள்ளது.
இப்புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி விழா மேடையில் சிறப்பாக நடந்தேறியது. ச்டான்லி
மேடையில் கெளரவிக்கப்பட்டர்.
திருமதி சுதா ரகுநாதனின் இன்னிசை மழையோடு துவங்கிய இலக்கிய நிகழ்வில் திருவாளர்கள்
அவ்வை நடராஜன், இராம. வீரப்பன் நடிகர் விவேக் ஆகியவர்களுடன் எழுத்தாளர்கள்
நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு சிறப்பு சேர்த்தனர். நிகழ்ச்சிக்கு வருகை தந்த ஆயிரக்கணக்கானோருக்கு செவிக்கினிய- இசை, இலக்கிய விருந்தோடு இனிய இரவு விருந்தும் படைத்திட்ட நல்லி
செட்டியார் அவர்கள் இனிய உள்ளம் போற்ருதலுக்குறியது.
விருது பெற்றவர்கள் விபரம்.
தமிழ்- பிற மொழிக்கு மலயாளம் டி டி ராமக்ரிஷ்ணன்
தெலுங்கு மந்திரிப்ரசுட சேஷாபாய்
குஜராதி நவனீத் மதராசி
இந்தி வெ. பத்மாவதி
ஆங்கிலம் பி. ராஜ்ஜா
பிற மொழி- தமிழுக்கு
ஆங்கிலம் ச,சரவணன்
மலயாளம் நிர்மால்யா
கன்னடம் இறையடியான்
தெலுங்கு சாந்தா தத்
வங்காளம் புவனா நடராஜன்
சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்.
மு.புவனேசுவரி
----------------------------------------------------------------------
சுப்ரபாரதிமணியனின் இருபத்தைந்து நூல்களின் பட்டியலில் இரு கட்டுரைத்
தொகுப்புகளே இடம் பெற்றுள்ளன. 'மண் புதிது 'பயண நூல் பத்தாண்டுகளுக்கு முன் வெளிவந்தது. குமுதம்-ஏர் இண்டியா இலக்கியப் போட்டியில் பரிசு பெற்று இங்கிலாந்து, அய்ரோப்பிய நாடுகளுக்கு 40 நாட்கள் சுற்றுப் பயணம் செய்த அனுபவங்கள் அத்தொகுப்பில் இடம் பெற்றிருந்தன. வழக்கமான பயண அனுபவம் என்றில்லாமல் அந்த நாடுகளில் வாழும் ஈழத்தமிழர்களின் வாழ்வியல் சிக்கல் பற்றியும், அவர்களின் படைப்புகள், சந்தித்த நண்பர்கள், அந்தந்த நாடுகளின் பண்பாட்டு வேறுபாடுகள் பற்றியும், இலக்கிய, திரைப்பட முயற்சிகள் பற்றியும் அத்தொகுப்பு பேசியது.தற்சமயம் வந்துள்ள கட்டுரைகளின் தொகுப்பு 'படைப்பு மனம் '.
இந்நூலின் கட்டுரைகளை இரு பிரிவுகளாகப் பிரிக்கலாம். திருப்பூர் நகரம் 6000 கோடி ரூபாய் அந்நியச் செலவாணி தரும் பின்னலாடை உற்பத்தி நகரத்தின் பூதாகரத்தோற்றத்தின் பின் உள்ள சிதைவுகளையும், சுற்றுச்சூழல் பாதிப்பு பற்றியும் பேசுகிறது. இரண்டாம் பகுதி படைப்பாளியின் படைப்பு மனம் செயல்படும் விதம், ஆழ்மனம் படைப்பாக்கத்தில் செயல்படும் தன்மை பற்றியும் பேசுகிறது.
உலகமயமாக்கல் அனைத்திலும் பண ஆசை, அதிகாரவெறி, உள்நாட்டுக்கலவரங்கள், இனப்பிரச்சினைகள் மனிதர்களை இடம் பெயரச் செய்கின்றது இதற்கிடையில் உலகமயமாக்கல் ஒரு புறம் மனிதர்களை அகதிகளாக்கிக் கொண்டிருக்கிறது.நவீனத்தொழிற்பெருக்கம், வறுமையின் காரணமாக குறைந்த சம்பளத்தில்
தற்காலிகத் தொழிலாளர்கள் உருவாதல், குறைந்த கூலியில் சில சலுகைகள் கொடுத்து அடிமைப்படுத்துதல் முதலியன மக்களை கொத்தடிமைகளாக்குகின்றன. தாராளமயமாக்கல் மனித வாழ்க்கையை நெருக்கடிக்குள்ளாக்கி உள் நாட்டிற்குள்ளேயே மக்கள் அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.உலக மயமாக்கலின் விளைவுகள் ஒரு பக்கம் வளர்ச்சியின் உச்சத்திற்கு கொண்டு போனாலும் அதன் பாதிப்பு மனித வாழ்வின் தன்மையை கேள்விகுறியாக்குவதைப் பற்றி இக்கட்டுரைகள் பேசுகின்றன.
இயற்கையில் மனிதனுக்குக் கிடைக்காத வியப்பூட்டும் அதிசயங்களுடன் வாழ்பவை கானக உயிர்கள். அவற்றின் இயல்பிற்கேற்ப வாழ்கிற போது மனிதன் தனக்கெதிரானதாக அவற்றை கற்பிதம் செய்து கொள்கிறான். கிராபிக்ஸ் உலகில் ஊடகங்களும் பல உயிரினங்களை எதிரிகளாக சித்தரிக்கின்றன.சமச்சீரான வாழ்க்கையைத் தருபவை கான் உயிர்கள். இதனைப்புரிந்து கொள்ள , உயிரினங்கள் குரூரமானவை என்ற தவறானக் கருத்தாக்கங்கள் மாற புதிய கல்விக்கொள்கையில் மாற்றங்கள் நிகழ வேண்டும் .இயற்கையுடன் இயைந்த வாழ்வு அமையும் போதுதான் வாழ்க்கை பாதுகாப்பானதாக அமையும் என்பதையும் இவர் கட்டுரைகளில் வலியுறுத்துகிறார்.
நாகரிக வளர்ச்சி, தொழில் பெருக்கம் இவற்றால் மனிதன் தன் தேவைகளை அதிகரிக்க பணத்தேடல் என்றத் தளத்தில் சமூகச்சீர்கேடு நிகழ்கின்றது.பணவெறியில் நகரத்தில் முகமற்ற மனிதர்களாய் வாழும் மக்களிடையே குழந்தைகள், இளம் பெண்கள்
கடத்தல் கலாச்சாரம் வேகமாகப் பரவி வருவதை விரிவாகப் பேசுகிறார். அன்பும்,ஆதரவும் இல்லாத நிலையில் குழந்தைகள் கொத்தடிமைகளாக விற்கப்படுகின்றனர். நவீன கணிப்பொறிசாதனங்களுடே இக்கடத்தல் மிகச் சாதாரணமாக நடைபெறுதலையும் சுட்டிக்காட்டுகிறார்.உலக மயமாக்கல் வாழ்க்கையை ஆட்டிப்படைப்பதில் குழந்தைகளும், பெண்களும் சந்தைப்பபொருளாகிவிட்டனர் என்பதையும் தெளிவாக்குகிறார்.
படைப்பு மனம் செயல்படும் விதம்பற்றிக் குறிப்பிடும் ஆசிரியர் ஒரு படைப்பாளன் தனக்கு நேரிடும் அனுபவங்களை படைப்பாக்குவது பற்றி விளக்கிச் சொல்கிறார். சந்தித்த அனுபவங்கள், ஆழ்மனக்கருத்துக்கள் இவற்றிற்கு மொழியும், கற்பனையும் கைகொடுக்க படைப்பு அழுத்தம் பெறுகிறது. விரிவான வாசிப்பு அனுபவம், சமூக முரண்பாடுகள் பற்றிய புரிதல் படைப்பிற்கு அடித்தளமாகவும், முக்கியத்தன்மையானதாகவும் அமைகிறது.வேறு வேலையில் இருந்து கொண்டு சண்டே எழுத்தாளர்களாக இருப்பவர்களின் மன நெருக்கடி
பற்றின கட்டுரை நிதர்சனமானது.
கனவில் தோன்றிய காட்சி உறக்கம் கலைந்த நனவில் பதட்டத்தை உண்டாக்குகிறது. இந்தப்பதட்டமே தினசரி வாழ்க்கையாகவும் அமைந்து விடுகிறது.மனிதனை மனிதனாக வாழ விடாத நெருக்கடிகள். இயல்பு மீறிய வாழ்க்கை.பதட்டத்தின் புள்ளியிலிருந்து படைப்பு ஆரம்பமானாலும் சூழ்நிலை மனதிலிருந்து சட்டென உறைந்து போனதிலிருந்து கிளம்பும் பதட்டம் பற்றிப் பேசுகிறார்.
தன்னை எழுத்தாளனாகப்பிரகடனப்படுத்திக் கொள்ளும் எழுத்தாளர்கள் உருவாகிவிட்ட நிலையில் மேலோட்டமாக எழுதப்படும் அவர்கள் படைப்புகள் பாராட்டுக்குறியதாகின்றன. இது ஒரு வகை இலக்கிய அரசியல். இலக்கியக்குழுக்களிடையே முரண்பாடுகள், எழுத்துக்கும் வாழ்க்கைக்கும் போராட்டங்கள் நடந்து கொண்டேதான் இருக்கும். இலக்கிய வாசிப்பும், அனுபவமும் உலகத்தை, வாழ்தலைக் கற்றுக்கொள்ளச் செய்யும் விரிந்தத் தளத்தில் அது தரும் தரிசனம் ஆறுதல் தருவது. வாசிப்பு அனுபவத்தை உயிர்ப்புள்ளதாக ஆக்குவதே படைப்பின் வெற்றியாக அமைகிறது.
வணிக நகரம் சார்ந்த வாழ்க்கை மதிப்பீடுதான் இந்தத் தொகுப்பின் பலம். ஆசிரியரின் அனுபவ வெளிப்பாடுகளை அவரின் அனுபவங்களோடும் போராடும் மக்களின் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வதோடும் அமைவதால் நெருக்கத்தைத் தருகிறது.உலக மயமாக்கலின் விளைவுகளையும் அதனூடே படைப்பாளிகளின் சிதைவுறும் மனதையும் இத்
தொகுப்பு காட்டுகிறது.
நூல் விமர்சனம்
கல்பனா சோழன்
அரசியல், மத கலவரங்கள், சாதாரண மக்களின் அன்றாட வாழ்க்கையை புரட்டிப் போடும் கலவரத்தைக் கண்முன் காட்டுவதில் கை தேர்ந்தவர் சுப்ரபாரதிமணியன். அதற்கு 'நகரம் - 90 ' இன்னொரு சான்று. ஹூசேன் சாகர் ஏரி பழைய, புதிய நகரங்களை பரபரப்பிலும், சாவிலும் பிரித்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த தருணங்களில் ஒன்றை சித்தரிக்கிறது நகரம்-90. வேறு வேலைகள் அற்று புரளிகளும் பயமுமே ஆக்ரமித்த கர்ஃப்யூ காலத்து வாழ்க்கையின் பயங்கரத்தை மிக துல்லியமாக உணர்த்துகிறது.
'அரசியல்வாதியோட உயிர் வாழ்க்கையோட சுகபோகங்களையெல்லாம் அனுபவிக்கப் பொறந்தது. சாமான்ய ஜனங்களோட உயிர் அவங்களோட பீடங்களுக்குப் படிக்கட்டுகள் ' என்ற நிதர்சனத்தை, அழுத்தந்திருத்தமாய், உரத்துச் சொல்கிறது நகரம்-90.
குமுதம் ஏர் இந்தியா இலக்கியப் போட்டியில் பரிசு பெற்ற இந்தக் குறு நாவலோடு, கொசுறாய் சில சிறுகதைகளும் நகரம் - 90 என்ற இந்தத் தொகுப்பு நூலில் இடம்பெற்றுள்ளன.
விதவிதமான ஹேர்ஸ்டைலில் வழுக்கையை மறைக்கும் மனிதன் மனைவியின் மனதைப் புரிந்து கொண்டபின் 'விக் 'கை விட்டு விடும் 'தோற்றங்கள் ', ஒற்றை ஆளாகக் குடும்பத்தை சுமக்கும் குடும்பத் தலைவி யார் கண்ணுக்கும் படாமல் போய் விடத் தவிக்கும் 'தொலைதல் ' போன்ற சிறுகதைகள் இவற்றில் உண்டு.
மத்திய தர மக்களது போராட்ட வாழ்க்கை மற்றும் மனப்போராட்டங்களை, எளிய நடையில், இயல்பாய் விவரிக்கும் சுப்ரபாரதி மணியனின் ஆற்றலுக்கு நகரம்-90 ஒரு சான்று. 108 பக்கங்கள் கொண்ட இந்த தொகுப்பு நூல் குமரிப் பதிப்பக வெளியீடு.
சுப்ரபாரதிமணியன் கவிதைகள்
ரொம்ப நாட்களாகிவிட்டன.
காக்கை கூட தென்படுவதில்லை
கழுதை என்பது ஒரு பிராணியா
மகள் கேட்டாள்.வீட்டிற்கு செல்வது
துயரமானதுவெளியில் அலைந்து
திரிவது இன்னமும்.அடையாளம்
காணமுடியாதபடிசாயம் அரிித்துவிட்டது
முகத்தை.முகத்தில் மரணம் சரியாக
முத்திரை குத்தியிருக்கிறதுஎன்
கண்களின் உயிர் அற்ற ஒளியை
வாங்கிகுருடாக்கிகொண்டவர்கள்பயந்தபடி
விலகி போகிறார்கள்.நினைவுகளை
தழுவியபடிநண்பர்கள் கடந்து போகிறார்கள்.
மரணம் எதேச்சையானது என்று நழுவுகிறார்கள்
மரணத்தின்மூலம் யாவருக்கும்
துணுக்குறச் செய்கிறவை.சுற்றிலும்
சமாதிகளின் மீதான வெட்டுப்படாத
செடிகளின் பச்சையம்.2.முன்பிருந்த
நகரத்துத் தெருக்களில்நாய்களும்
கழுதைகளும் தென்பட்டதில்லை.
வாகன இரைச்சல் தலைக்குள்
புகுந்தயானையின் ஆட்டமாய்.
நாயின் குறைப்பைக் கேட்கக்கூட
வலிமையான வீடுகளுக்குதான்
போகவேண்டும்.தெருக்களில்
என்னோடு கை கோர்க்க ஆளில்லா
விட்டாலும் இணை செல்ல நாயாவது
அகப்படாதா என அலைந்ததுண்டு.
வாகனம் அரைத்த மாவாய்
வீதிகளில்உயிர்களை அவ்வப்போது
கண்டதுண்டுஇந்த ஊருக்கு வந்த
புதிதில்நாய்களும், கழுதைகளும்
தெருவில் நடமாடும் காட்சிமகிழ்ச்சி
தந்ததுஆனால் விரையும் வாகனங்களின்
இரைச்சல் இல்லாமலில்லைமிரளும்
சிறு மிருகங்களாய் மனிதர்கள்
சட்சட்டென வாகனங்கள் அறைந்து
எலும்புகள் குவிந்துமலமும்
ரத்தமுமெனஉருத்தெரியாமல்.
நாய்களையும்,பூனைகளையும்
கழுதைகளைகளையும் காண்பது
சமீபமாய் போயிற்றுஇன்னும்
நாய்களும், கழுதைகளும்
விரைந்து பறக்கும் சேவலும்
தெருவோடு காட்சி என்பது
ஆறுதல்தான்வாகனம் அறைய
அவை காத்திருக்கின்றன என்றாலும்.
========================================
வரிசையிலிருந்துதள்ளி நிற்பதுதான்
சுவாரஸ்யமாயிருக்கிறது
தாறுமாறாய் நிற்பதில்
இன்னும் மகிழ்ச்சி.
வரிசை அடையாளத்திற்கான
அங்கீகாரத்தை வேண்டிக்
கொண்டே நிற்கிறேன்.
உறுமி அதிகார வார்த்தைகளைத்
துப்பும்எவனும் பக்க மில்லை
இப்படி இருப்பது ஒழுங்குதான்
அது எனக்குச் சில சமயம்
பிடித்தும்சில சமயம் பிடிக்காமலும்.
என்னை மிருகமாக்கிவிடமுடியாது
ஒரு வரிசையின் ஒழுங்குற்குள்
என்னைக் கொண்டு வருவதின் மூலம்.
வரிசை சென்றடைகிற இடத்தில்
இருப்பவன்அசல் மிருகம் போலத்தான்.
அடைபட்ட கம்பிகளுக்குப்
பின்னால் இருக்கிறான்.
உறுமலில் பொறி பறக்கிறது
அவன் இடத்தை அடைவதற்காய்
ஒவ்வொருவரும் போட்டி போடுகின்றனர்.
இது போல் பல வரிசைகள்பல
கட்டிடங்களில் பல தெருக்களில்.
இந்த உருவத்துடன் வரிசைகளில்
நிற்பதுசிரமமாய் இருக்கிறது.
உங்கள் உருவத்துடன்யாராவது
நிற்கக்கூடும்.அடையாளம் கண்டும்
நகர்ந்து விடுங்கள்
அதுதான் சுவாரஸ்யம்.
மணல் வீடு :
-------------------------------------------------------------------------
எஸ் எ பாலகிருஸ்ணன்
-------------------------------
சுப்ரபாரதிமணியனின் முப்பது புத்தகங்களில் ஒன்று நாடக நூல் என்பது குறிப்பிடத்தக்கது. சிறுகதை, நாவல் , கட்டுரை என்று எல்லாத்தளங்களிலும் தடம் பதித்திருக்கிறார்.
தமிழில் நாடக நூல்கள் வெகு குறைவு. எழுத்தாளர்களும் ஆர்வம் காட்டுவதில்லை.தி ஜானகிராமன், இந்திரா பார்த்தசாரதி, பி.எஸ். இராமையா, ஜெயந்தன், பிரபஞ்சன், இன்குலாப் போன்ற எழுத்தாளர்கள் சில நாடகங்களை எழுதியிருக்கிறார்கள். மற்றபடி நவீன நாடகங்களை நாடகக்காரர்களே படைத்துக் கொள்கிறார்கள். நவீன நாடகங்கள் உருவானபிறகு எழுத்தாளர்கள் நாடகத்துறையைத் திரும்பிப்பார்ப்பதில்லை. அவைகளும் மக்களை நெருங்குவதில்லை.
கோமல் சுவாமிநானின் சட்டகவடிவ நாடகங்கள் மக்களின் போராட்டங்களைச் சித்தரித்தன. அதனால் மக்களின் பெரும் வரவேற்பைப்
பெற்றன.
கோமலுக்குப்பின் சில நல்ல நாடகங்களை தஞ்சை ராமசாமி உருவாக்கி வெற்றி பெற்றார். அமைப்புகள் பின்னணி இல்லாததால் மக்களை அதிகம் சென்றடையவில்லை.
நாடகங்கள்தான் இடதுசாரி கட்சிகள் கேரளத்தில் ஆட்சிக்கு வர முக்கியப் பங்காற்றின.தமிழகத்தில் சுதந்திரப்போராட்டகாலத்தில் நாடகங்கள் மக்களிடையே சுதந்திர உணர்வையூட்டின, அதன்பின் திராவிட இயக்கங்கள் நாடகங்களிலும், திரைப்படங்களிலும் பெற்ற பலன் நாடறியும்.
பிரிட்டிசு அரசாங்கம் நாடகங்களுக்கு விதித்த சட்டத்தை இன்றைக்கும் நமது அரசுகள் கவனமாகப் பாதுகாக்கின்றன.
"மணல் வீடு" தொகுப்பில் மூன்று நாடகங்கள் உள்ளன.இவை வானொலிநாடகங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
முதல் நாடகத்தில் ( மணல் வீடு ) மூன்று தலைமுறைகள் இடம் பெறுகின்றன. முதலிரண்டு தலைமுறைகள் முந்தையத் தலைமுறைகள் குறித்து பற்றும் மதிப்பும் மூதாதியாருக்கான சடங்கு முறைகளில் ஈடுபாடும் கொண்டுள்ளன.
இன்றைய தலைமுறையின் பொறுப்பு, அல்லது பொறுப்பற்றத்தன்மை குறித்து கவலையும் விரத்தியும் அடைகின்றனர். ஆயினும் அவரவர் வாழ்க்கையை அலுப்பும் சலிப்புமாய் சுமப்பதைவிட அனுபவித்து தீர்ப்பதே நன்றென உணர்கின்றனர். இது முழுமையாக வாசிப்பிற்கான நாடகமாக இருப்பினும் இது வானொலி வடிவம் பெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.
" பசுமை எனும் தாய்மை " எனும் நாடகம் பிரசாரத்தன்மை வாய்ந்த நடிப்பதற்கான நாடகம்.சுற்றுச்சூழல் குறித்தது. திருப்பூர் பனியன் தொழில் காரணமாக அதன் சாயக் கழிவுகளால் மாசுபட்ட வரலாற்றுப் புகழ் பெற்ற " காஞ்சிமாநதி " யெனும் நொய்யல் நதிகரையில் வாழும் ஒரு கிராம மக்களின் எழுச்சியை விவரிக்கிறது. மக்கள் இயக்கம் என்றும் முதன்மையான து என்பதை பிரச்சாரத்தொனியில்தான் சொல்ல முடியும்.
" முளைப்பாரி" எனும் மூன்றாவது நாடகம் மத நல்லிணக்கம் பற்றிப் பேசுகிறது. இந்துக்களும், இசுலாமியரும் காலம் காலமாய் அனுசரித்துதான்
வாழ்ந்து வருகிரார்கள். அவர்களின் ஒர்றுமை திட்டமிடப்பட்டு குலைக்கப்படுகிறது. ஆனாலும் அந்த கிராம மக்கள் தங்களுக்குள் இருக்கும் அர்த்தமற்ற பயத்தை உதறிவிட்டு திருவிழாவில் ஒன்றுபடுகிரார்கள். திருவிழாவில் வீசப்பட்ட கல் யாரால் வீசப்பட்டது என்பது சுசகமாக விவரிக்கப்படுகிறது. அந்த தீய சக்திகள் யார் என்பதினை நாடகமாக நடிக்கப்பட்டால் மக்களும் புரிந்து கொள்வார்கள். இதுவும் ஒரு நவீன அம்சம்தான்.
( மணல் வீடு= சுப்ரபாரதிமணியனின் நாடகங்கள்: விலை ரூ 30/ .
கௌதமராஜன் வெளியீடு. 24, பாட்டை வீதி; மீனாட்சிப்பேட்டை, குறிஞ்சிப்பாடி 607 302 )
எஸ் எ பாலகிருஸ்ணன்.




